search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரரே  சரபேஸ்வரர்
    X

    வீரபத்திரரே சரபேஸ்வரர்

    • இந்த வரலாறு மூலம் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தது நமது வீரபத்திரர்தான் என்பது தெரியும்.
    • நிறைய சிவாலயங்களில் சரபேஸ்வரர் சிலை தூண்களில் உள்ளது.

    வீரபத்திரரே சரபேஸ்வரர்

    இரணியன் என்ற அரக்கனைத் திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்துக் கொன்றார்.

    இரணியனின் குடலை மாலையாக்கிக் ரத்தம் குடித்துச் கோபத்தில் ஆரவாரித்தார்.

    அவருடைய கோபத்தைச் சிவபெருமானே தீர்க்க வேண்டும் என்று தேவர்கள் முறையிட, சிவன் தன்சார்பில் வீரபத்திரரை அனுப்பினார்.

    வீரபத்திரர் எட்டுக் கால்களும், இரண்டு பெரிய சிறகுகளும், சிங்க முகமும், நீண்டு வளைந்த மூக்கும் கொண்ட சரபப் பட்சியானார்.

    திருமாலுடன் போரிட்டு வென்றார். திருமாலின் கோபத்தை அடக்கினார் என்கிறது சரப புராணம்.

    இந்த வரலாறு மூலம் சரபேஸ்வரராக அவதாரம் எடுத்தது நமது வீரபத்திரர்தான் என்பது தெரியும்.

    நிறைய சிவாலயங்களில் சரபேஸ்வரர் சிலை தூண்களில் உள்ளது.

    ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் சரபேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் இந்த வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது.

    Next Story
    ×