என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வீரபத்திரர் அவதார கதை-தட்சணின் யாகம்
    X

    வீரபத்திரர் அவதார கதை-தட்சணின் யாகம்

    • அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான்.
    • திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

    வீரபத்திரர் அவதார கதை-தட்சணின் யாகம்

    இந்த பராக்கிரம கதை உங்களுக்குத் தெரிந்ததுதான்.

    நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சாவித்திரி நடித்த "திருவிளையாடல்" படத்தில் இந்த கதை இடம் பெற்றுள்ளது.

    பிரம்மனின் மகன் தட்சன். இவனது மகள் தாட்சாயினி. இவளை உலகை ஆளும் சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார்.

    இதனால் ஈசனுக்கு தட்சன் மாமனார் ஆனான், இது தட்சனை கர்வம் கொள்ள வைத்தது.

    அதோடு நாளடைவில் சிவனை விட தானே உயர்ந்தவன் என்று தட்சன் அகந்தை கொண்டான்.

    ஒரு தடவை அவன் மிக பிரமாண்டமான யாகம் நடத்தினான்.

    30 ஆயிரம் மகரிஷிகளைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த வேள்விக்கு ஈசனைத் தவிர தேவர் உலகத்தில் உள்ள அனைவரையும் அவன் அழைத்தான்.

    சிவபெருமானை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை அழைக்காமல் இந்த யாகத்தை நடத்தினான்.

    திருமால், இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்கள் அந்த யாகத்தில் பங்கேற்றனர்.

    Next Story
    ×