வீரபத்திரர் அவதார கதை-ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன்

அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர். இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார்.
வீரபத்திரர் அவதார கதை-ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன்
Published on

வீரபத்திரர் அவதார கதை-ஆட்டுத்தலை பொருத்தப்பட்ட தட்சன்

அப்போது திருமால், வீரப்பத்திரரை எதிர்த்தார்.

அப்போது திருமாலின் சக்கரத்தை வீரபத்திரர் அணிந்திருந்த கபால மாலையில் உள்ள ஒரு முகம் கவ்விக் கொண்டது.

இதன் மூலம் தட்சனோடு சேர்ந்திருந்த எல்லா தேவர்களும் தண்டிக்கப்பட்டனர்.

வீரபத்திரரின் ஆவேசத்துக்கு முன்பு இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் அடி பணிந்தனர்.

தாங்கள் செய்த தவறை மன்னித்து பொறுத்து அருளும் படி வேண்டினார்கள்.

இதையடுத்து அங்கு சிவபெருமான், ரிஷப வாகனத்தில் தோன்றினார்.

அவர் அருளால் முப்பத்து முக்கோடி தேவர்களும் மீண்டும் உயிர் பெற்றனர்.

தலை இழந்த தட்சனுக்கு ஆட்டுத்தலை பொருத்தப்பட்டது.

அப்போது தட்சன், யாகசாலை இருந்த இடத்தில் தோன்றிய ஈசன், அங்கு இருந்தபடியே மக்கள் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

இது தான் வீரபத்திரரின் அவதார கதை.

இந்த அவதார நிகழ்வு எங்கு நடந்தது?

அதன் பிறகு வீரபத்திரர் மக்களுக்கு எப்படி அருள் புரிகிறார்?

வீரபத்திரரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

அவர் வீற்றுள்ள தலங்கள் எங்கெங்கு உள்ளன?

என்பன போன்ற தகவல்கள் இந்த பதிவில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் வீரபத்திரரை வழிபட்டால் வீரம், விவேகம், வெற்றிகள் தேடி வரும்.

வீரபத்ர மூர்த்தியார் வீர மனம்கொடுப்பார்

தீராசெவ் வாய்தோஷம் தீர்த்திடுவார்-ஊரெல்லாம்

நீர்மழை பெய்வார் நிறைந்திடும் செல்வங்கள்

ஏர்வளம் காணும் நிலம்!

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com