search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundar"

    • சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.

    சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.

    கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.

    • கமுதி அருகே குண்டாற்றில் அழகர் இறங்கினார்.
    • திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை தெற்குதெரு பெருமாள் கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் அந்த பகுதி மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் நடந்தது.

    3 நாட்களாக தெற்குதெரு முழுவதும் குதிரை வாகனத்தில் அழகர் வீதி உலா வந்தார். கடைசி நாளான நேற்று மொட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, சிராய்குத்து நேர்த்திக் கடன்கள் செலுத்தினர்.

    பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன், குதிரை வாகனத்தில் அழகர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, குண்டாற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். 

    ×