search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMDK Demonstration"

    • சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.

    சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.

    கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.

    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில தொண்டரணி துணைச் செயலர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும். அமைதி பேரணியில்  பங்கேற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். 

    இச்சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரை, சிவா ,ஐயப்பன், பொன். சாமிதுரை, மலர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுடர்செல்வன், சங்கர், மேகலா ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பஸ் நிலையம் அண்ணாசிலை அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் தலைமை தாங்கினார். 

    வடக்கு மாவட்ட செயலாளர் குமார்,தெற்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தொழிற் சங்க துணை செயலாளர் முஜிபு ரஹ்மான் கண்டன உரையாற்றினார். 

    இதில் திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் அலங்கராஜ், பொருளாளர் மில்டன் குமார், துணை செயலாளர்கள் வி.கே.ஜெயராமன், திருச்சி ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ராமு, பெருமாள், பகுதி செயலாளர்கள் நூர் முகமது, உறையூர் மோகன், பொறுப்பாளர் கருணாகரன், குமாரசரவணன், தொழிற் சங்கம் திருப்பதி, தமிழ் செல்வன், உறையூர் சாதிக், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சன்னாசிபட்டி பாரதிதாசன், பொருளாளர் லட்டு வைத்தியநாதன், வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் முகேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×