என் மலர்
நீங்கள் தேடியது "DMDK Demonstration"
- சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூரை இணைக்ககோரி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெ–ரும் கண்டன ஆர்பாட் டம் மாவட்டச் செயலாளர் திருவேங்கடம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய அம்சமாக காவிரி தண்ணீரை திறக்க வேண்டும், மகளிர் உரிமை தொகை ரூ.1,000 அனைத்து மகளிருக்கும் வழங்க வேண்டும், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் சிங்கம்புணரி, எஸ்.புதூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதி–களை இணைத்திட வேண்டும்.
சிங்கம்புணரி சீரணி அரங்கத்தை இடிக்கக் கூடாது, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்தும், விவ–சாயிகளின் நிலத்தை என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து மீட்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட் டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில உயர்மட்டகஙகுழு உறுப்பி–னர் ஜாகிர் உசேன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணா கண்ணன் மற்றும் நிர்வா–கிகள் துரை பாஸ்கரன், ராமதாஸ், பைசூர் ரஹ்மான், சிவக்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளைக்கழக நிர்வாகி–கள் கலந்துெகாண்டனர்.
கொளுத்தும் வெயிலை–யும் பொருட்படுத்தாமல் மாவட்ட அளவில் நடை–பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்ற–னர்.
சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.






