search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property tax hike"

    • ராஜபாளையத்தில் வருகிற 28, 29-ந் தேதிகளில் சொத்துவரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.
    • இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தேர்வு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் பஞ்சாலைகள், விவசாயம் ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது.

    இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100 கிராமங்களுக்கு ராஜபாளையமே தாய் நகரமாகவும், தினமும் ராஜபாளையம் நகரத்தில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் கிராம மக்கள் வந்து செல்லும் நகராட்சியாகவும் உள்ளது.

    இந்த நகராட்சியில் மாநில அளவில் மிகவும் அதிகபட்சமாக சொத்து வரி, குடிநீர்வரி உயர்த்தி இருப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் வைத்து செயலாளர் எம்.சி.வெங்கடேஸ்வரராஜா தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பத்மநாதன், செயலாளர் ஆடிட்டர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சுகந்தம் ராமகிருஷ்ணன், ராஜவேல், டைகர் சம்சுதீன், வாசுதேவ ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக் களை தெரிவித்தனர்.

    முடிவில் வருகிற 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் ராஜபாளையம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் வரி உயர்வை கண்டித்து கதவடைப்பு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை காட்ட முடிவு செய்தனர்.

    • திருமங்கலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    திருமங்கலம்

    தமிழக முழுவதும் தி.மு.க. அரசின் மின், பால் விலை உயர்வு மற்றும் சொத்து வரி உயரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் ராஜாஜி சிலை முன்பு இன்று நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் நகரச்செயலாளர் ஜே.டி.விஜயன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சதீஷ் சண்முகம், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர், மாவட்ட எம்.ஜி.ஆர். அணி இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, நகர்மன்ற உறுப்பினர் பேரவை பாண்டி, ஒன்றிய செயலாளர் அன்பழகன், யூனியன் சேர்மன் லதா ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் உச்சப்பட்டி செல்வம், ஒன்றிய பொருளாளர் சுவாமிநாதன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், நகர் முன்னாள் யூனியன் துணை சேர்மன் முருகன், மன்ற உறுப்பினர்கள் போது ராஜன், அமலிகிரேஸ், கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் வாசிமலை, துரைப்பாண்டி, முத்துராஜ், வெங்கடேஸ்வரன், விசாகன், பாலகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

    கோவை, ஆக.18-

    கோவை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சியில் 60 சதவீத சொத்துவரி உயர்வை கைவிட வேண்டும், இதர உயர்த்தப்பட்ட வரிகள், கட்டணங்களை குறைக்க வேண்டும், மோசமான சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். தனியார் நிறுவனத்திற்கு விடப்பட்ட குடிநீர் வினியோக உரிமையை ரத்து செய்ய வேண்டும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • கடலூரில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந் திரளாக கலந்து கொள்ள வேண்டும்: முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் வலியுறுத்தினார்.
    • பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்றார்.

    கடலூர்:

    அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாதிரிக்குப்பம் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். மீனவர் அணி செயலாளர் தங்கமணி, பேரவை துணை செயலாளர் ஆர்.வி.ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார், ஒன்றிய செயலாளர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் முதன்முதலாக தமிழக மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக ெஜயலலிதா வழங்கினார். மேலும் வீட்டு மின் இணைப்புகளுக்கு பல சலுகைகளை கொடுத்த அரசு அதிமுக அரசு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது.கள்ளக்குறிச்சி சம்பவமே இதற்கு சாட்சி. உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது. இதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இப்போது மின்தடை மாநிலமாக உள்ளது. நமது இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் பேசினார்

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் பக்கிரி, மணிமேகலை தஷ்ணா, வர்த்தக பிரிவு வரதராஜன், இலக்கிய அணி ஏழுமலை, பகுதி கழக செயலாளர்கள் வெங்கட்ராமன், வக்கீல் பாலகிருஷ்ணன், கெமிக்கல் மாதவன், வினோத்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வி ஆதிநாராயணன், கல்யாணி ரமேஷ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பரணிமுருகன், அலமேலு ராஜி, ஒன்றிய கவுன்சிலர்கள் வேல்முருகன், கிரிஜா செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுப் புத்தூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உள்ளிட்ட வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பட்டத்திற்கு கிளைச்செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ரெங்கசாமி, ராஜீ, அய்யாச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் சிறப்புரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு உயர்வை ரத்து செய்ய வேண்டும், குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றை தடையின்றி வழங்க உத்திரவாதம் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். பகுதி செயலாளர்கள் புத்தூர் நடராஜன், சிவமணி, சிவக்குமார், அவினாசியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    சொத்துவரி உயர்வை கண்டித்து நகராட்சி அலுவலகங்கள் முன்பு இன்று தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனகாபுத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் மகாதேவன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதுபோல பம்மல் நகராட்சி முன்பு நகர செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சொத்து வரி உயர்வை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, மக்களின் நலனுக்காக போராடும் இயக்கம் திமுக என்றார். #dmkprotest
    ஆறுமுகநேரி:

    தமிழக அரசின் சொத்து மற்றும் வீட்டு வரி உயர்வை கண்டித்து நகர தி.மு.க. சார்பில் காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் முத்துமுகமது, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், பாலப்பா, கணபதி, வழக்கறிஞர் ஜெபராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது, மருத்துவ அணி மாநில துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கும் நிலையிலும்கூட மக்களின் நலனுக்காக இன்றைக்கு வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது தி.மு.க. தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும், மத்தியில் மோடி ஆட்சியிலும் மக்கள் படும் துன்பத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது. வீட்டு வரியை அ.தி.மு.க. அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளதால் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள் தான். இந்த வரி உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியையும், மோடி ஆட்சியையும் துரத்தி அடிக்கும் கடமை மக்களுக்கு உள்ளது. ஸ்டாலினை தமிழக முதல்வர் ஆக்க அனைவரும் உறுதி எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச் செயலாளர் முகமது அப்துல் காதர், ஒன்றிய செயலாளர்கள் உடன்குடி பாலசிங், ஆழ்வை கிழக்கு நவீன்குமார், சாத்தான்குளம் ஜோசப், ஸ்ரீவைகுண்டம் மேற்கு கொம்பையா, கருங்குளம் வடக்கு மகாராஜன், ஓட்டபிடாரம் மேற்கு சண்முகையா,நகர செயலாளர்கள் ஆறுமுகநேரி கல்யாணசுந்தரம், திருச்செந்தூர் சுடலை, ஆத்தூர் முருகப்பெருமாள், சாத்தான்குளம் இளங்கோ, ஸ்ரீவைகுண்டம் பெருமாள், ஆழ்வார் திருநகரி முத்து ராமலிங்கம், உடன்குடி ஜான் பாஸ்கர், நாசரேத் ரவி செல்வகுமார் உள்பட திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். #dmkprotest
    சொத்து வரி உயர்வை கண்டித்து கடலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி பங்கேற்றார். #dmkprotest
    கடலூர்:

    நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வக்கீல் சிவராஜ், துணை அமைப்பாளர் வனராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின், நகர இளைஞரணி அமைப் பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர்கள் பிரசன்னா, ஜெயசீலன், ஒன்றிய துணைத்தலைவர் குணா, ஒன்றிய பொருளா ளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் திரைப்பட சங்க பொதுச்செயலாளர் மாருதி ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் பழனிவேல், அங்கமுத்து, நகர அவைத்தலைவர் ஷேக் மொய்தீன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், நிர்வாகிகள் ராமு, கோபாலகிருஷ்ணன், வேலு, முகமது யாசின், பூபாலன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmkprotest
    சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்பேது அவர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சொத்துவரியை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சுபாசு, சூடாமணி, அவை தலைவர் கலையமுதன், செல்வகணபதி, துணை செயலாளர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் அண்ணாமலை, ரகுபதி, தாமரை கண்ணன், லலிதா சுந்தரராஜன், பகுதி செயலாளர்கள் சாந்த மூர்த்தி, குமரவேல், முருகன், ராமச்சந்திரன், நாசர்கான், கிச்சிப்பாளையம் ஜெய், கே.டி.மணி, பச்சியப்பன், ஜபீர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடியில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுந்தரம், ஒன்றிய செயலாளர் நிர்மலா, அம்மாசி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முல்லை பன்னீர் செல்வம், நகர செயலாளர் பால சுப்பிரமணி, வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் செழியன், முருகேசன், சக்கரவர்த்தி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம் மற்றும் பழனிசாமி, அகிலன், இளைஞர் அணி அமைப்பாளர் சந்திர மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிதம்பரத்தில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #propertytaxhike

    சிதம்பரம்:

    நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும், சிதம்பரம் நகராட்சி சீர் கேட்டை கண்டித்தும் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் தென்னவன் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், நகர துணைச்செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கடலூர் கிழக்கு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ., புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

    மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தியது கண்டிக்கத்தக்கது. இதை உடனடியாக திரும்ப பெறவேண்டும்.

    மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத அரசாக இந்த அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. சிதம்பரம் நகராட்சியை பொறுத்தவரை மக்கள் குடியிருக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. சாலை, குடிநீர் வசதி மற்றும் சுகாதாரம் ஆகியவை சீர்கெட்டு உள்ளது.

    மக்களுக்கு எந்தவித திட்டப்பணிகளும் நடைபெறவில்லை. இந்த அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஜாபர்அலி, ஒன்றிய செயலாளர்கள் மனோகர், சபாநாயகம், வாக்கூர் முருகன், ராயர், சோழன், முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் நகர துணை செயலாளர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார். #propertytaxhike

    சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. #DMK
    கோவை:

    சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், பொறுப்புகுழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தகுமார், மெட்டல் மணி, குமரேசன், குப்புசாமி,உமா மகேஸ்வரி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, கோவை லோகு, பகுதி பொறுப்பாளர்கள் மார்க்கெட் மனோகரன், சேதுராமன், கோவிந்தராஜ், மற்றும் மகளிர் அணி மீனா லோகு, நிர்வாகிகள் முருகவேல், கார்த்திக் செல்வராஜ், மகுடபதி, இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், துணை அமைப்பாளர்கள் திருமலை ராஜா, கேபிள் மணிகண்டன், இலக்கிய அணி அமைப்பாளர் திராவிட மணி, தினேஷ், டாக்டர் கணேஷ், கோபிநாத், உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் சொத்துவரி உயர்வுக்கு எதிராககோ‌ஷம் எழுப்பபட்டது. முன்னதாக கார்த்திக் எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறியதாவது-

    தமிழகம் முழுவதும் சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் படி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சொத்துவரி உயர்வை 50 சதவீதமாக குறைத்தாலும் கூட வரி உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சொத்துவரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லைஎன்றால் மக்களுக்காக தி.மு.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தும் என்றார்.

    சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜன், முன்னாள் செயலாளர் மேங்கோ பழனிசாமி, இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், வெங்கடேஷ் உள்பட 300-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். #DMK
    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஈரோடு:

    சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலை வர் ஈ.பி. ரவி தலைமை தாங்கினார். 

    துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், ஜாபர் சாதிக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் முகமது அர்சத், பாஷா, மகிளா காங்கிரஸ் தலைவி புவனேஸ்வரி, நிர்வாகி கே.சி. பழனிச்சாமி உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×