search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk demonstration"

    • இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    • ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    நெல்லை:

    இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத்தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர்-மாணவரணி சார்பில் நாளை (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    நெல்லை-வள்ளியூர்

    நெல்லையில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட செயலாளர் ஆவுடை யப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர்-மாணவரணி சார்பில் வள்ளியூா் பழைய பஸ் நிலையம் அருகில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இக்கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளா்கள் முன்னிலை வகிக்கிறாா்கள். இந்த ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை, வாா்டு செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் இளைஞரணி, மாணரவணி நிா்வாகிகள், தோழா்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-

    இந்தி திணிப்பை கண்டித்து நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இதில் இளைஞரணி, மாணவரணி, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கிளை, வாா்டு செயலாளா்கள், மாவட்ட பிரதிநிதிகள், நகா்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இந்தியைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்ற திணிப்பு எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.
    • நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. உயர் கல்வி நிறுவனங்களில் இந்தி மட்டுமே பயிற்று மொழி என்ற திணிப்பு எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. யார் எந்த மொழியையும் பயில்வதற்கு தி.மு.க. தடையாக இருந்ததில்லை. அரசு மிருகப்பலத்தை கொண்டு திணிப்பதைத்தான் தி.மு.க. எதிர்க்கிறது.

    நுழைவுத் தேர்வு முறை என்பது, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். இது அனைவருக்குமான சமஉரிமை-சமவாய்ப்பு ஆகிய கோட்பாடுகளை அழிக்கக்கூடியது என்பதால் தி.மு.க. இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கிறது.

    மத்திய பா.ஜனதா அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணையேற்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன போராட்டங்களை நடத்த அறிவிப்பு செய்துள்ளார்கள்.

    அதன்படி மாநில தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் 9 மணியளவில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் நமது மாநில தி.மு.க. நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைப் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தி.மு.க. தொண்டர்கள் என அனைவரும் திரளாக தி.மு.க. கொடியுடன் அணிவகுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கம்மாபுரத்தில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
    கம்மாபுரம்: 

    நெய்வேலியை தலைமை இடமாக கொண்டு என்.எல்.சி. இந்தியா நிறுவனம், அதன் சுற்று வட்டார பகுதியில் திறந்தவெளியில் சுரங்கம் அமைத்து, ராட்சத எந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டியெடுத்து மின்சாரம் தயாரித்து வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரம், தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இதுபோக தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரியும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது திறந்தவெளி சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 40 கிராமங்களில் 12 ஆயிரம் ஏக்கர் நிலங்களையும், வீடுகளையும் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க. சார்பில் கம்மாபுரத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்தக்கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பேசினார்.

    இந்த போராட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் துரை.கி.சரவணன், தனியார் கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், புவனகிரி ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன், கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் கணேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமசாமி, சாந்தி சுந்தரபாண்டியன், இளவரசன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், தி.மு.க. நிர்வாகிகள், விவசாயிகள் சங்கத்தினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
    ஓசூரில் சட்ட விரோத லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஓசூர்:

     கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நகர தி.மு.க. சார்பில், சட்ட விரோத லாட்டரி விற்பனை மற்றும் கர்நாடக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மற்றும் மாவட்ட நிர்வாகம், ஓசூர் நகராட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஓசூர் நகர தி.மு.க. பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். 

    நகர, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கண்டன உரையாற்றினார். மற்றும் வேப்பனபள்ளி எம்.எல்.ஏ. முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்கள்.
    வாழப்பாடியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #dmkdemonstration

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குடிநீர் தேவைக்கு மேட்டூர் காவிரி நதிநீரையே நம்பியுள்ளனர். மாதத்திற்கு இரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேட்டூர் காவிரி குடிநீருக்கு மாதந்திர குடிநீர் கட்டணமாக ரூ.72 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து ரூ.152 ஆக குடிநிர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, சொத்து வரி, தொழில்வரியும் உயர்த்தப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி, தொழில்வரி உயர்த்தியதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கூடுதல் கட்டணத்தை ரத்து செய்யவும், தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், வாழப்பாடியில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச் செல்வன் தலைமை வகித்தார். வாழப்பாடி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, நகர செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிர்வாகிகள் சந்திரா ராயர், கலைசெல்வி மாதேஸ்வரன், அழகரசன், தும்பல்கணேஷ், உமாபதி, குறிச்சி பெரியசாமி, ஆட்டோ சுரேஷ், தனசேகரன், மணி மற்றும் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர்கள் முல்லை வாணன், வேல்முருகன் மற்றும் காலிக்குடங்களுடன் திரண்டு வந்த ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சூர்யமூர்த்தி, காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். #dmkdemonstration

    குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும் தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசே‌ஷன், கே.திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாதிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.சேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், பிஎம்.குமார், தசரதன், அபுசாலி, அப்துல்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியம், மாதவரம் சுதர்சனம், ஆவடி நாசர், தா.மோ. அன்பரசன், காஞ்சீபுரம் சுந்தர், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 63 மாவட்ட செயலாளர்கள் மற்றும் 88 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒவ்வொரு தொகுதியிலும் கடுமையாக உழைக்க வேண்டும், அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

    மேலும் தற்போது குட்கா ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் பற்றி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

    வாக்காளர் பட்டியலில் தி.மு.க. உறுப்பினர்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதற்கு நாளை நடைபெறும் சிறப்பு முகாமில் ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க. பிரதிநிதிகள் அமர்ந்து வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இது தவிர அரசியல் நிகழ்வுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * தமிழக அரசின் ஊழலை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந்தேதி தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது.

    * காவி மயமாக்கும் மத்திய பா.ஜ.க.வின் கனவுகளை வீழ்த்துவோம்.

    * வாக்காளர் பட்டியலை தூய்மைப்படுத்தும் பணியை பின்பற்றுவோம்.

    * காவிரி நீர் கடைமடை பகுதிக்கு செல்லவும், கடலில் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை தேவை.

    * பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும்.

    * பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து 10-ந்தேதி நடைபெறும் பந்த் வெற்றி பெற ஒத்துழைப்போம்.

    * குட்கா ஊழலுக்கு காரணமான அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



    தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டத்தில் வேலூர் மாவட்டம் சார்பில் தேர்தல் நிதியாக ரூ.1 கோடி மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. #DMK #MKStalin

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் சொத்துவரி உயர்வைக் கண்டித்தும், தமிழக அரசு அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதுபஸ் ஸ்டாண்டில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

    ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, நல்ல தம்பி, மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ஜெகதீசன், பாடாலூர் சோமு. மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில நிர்வாகிகள் துரைசாமி, டாக்டர் வல்லபன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன் உட்பட பலர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், நூருல்ஹிதா இஸ்மாயில், பாஸ்கர், ரவிச்சந்திரன், வக்கீல் மாரிக்கண்ணன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் வக்கீல் செந்தில் நாதன், மகாதேவி, ஹரிபாஸ்கர், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்டப் பொருளாளர் மோகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

     ஒன்றியச் செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி , ராமகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்ட அமைப்பாளர்கள் ராமசந்திரன், ராஜகுரு, ராதாகிருஷ்ணன், நகர நிர்வாகிகள் காளியப்பன், அன்பழகன், செல்வரத்தினம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி அலுவலகங்களின் முன்பு 30-ந்தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
    தென்காசி:

    நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரியை 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

    ஊழலில் ஊறித்திளைக்கும் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் மத்திய அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்க வேண்டிய ரூபாய் 3500 கோடிக்கும் அதிகமான நிதி இதுவரை தமிழகத்திற்கு வழங்கப்படவில்லை. அந்த பணத்தை மத்திய அரசிடம் கேட்டுப்பெறுவதற்கு இன்றைய தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை.

    மத்திய அரசின் மானிய உதவித்தொகையினை பெற்று உள்ளாட்சி அமைப்புக்களை வலுப்படுத்த முடியாத எடப்பாடி அரசு வாடகைதாரர்கள், வணிகப்பெருமக்கள், ஏழை எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கும் வகையில் சொத்துவரியை உயர்த்தி இருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

    இதனை கண்டித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வருகிற 30-ந்தேதி காலை 10 மணிக்கு நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய நகராட்சி அலுவலகங்களின் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள தி.மு.க. மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தொண்டர்களுடன் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    சொத்து வரி உயர்வை கண்டித்து கடலூரில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி பங்கேற்றார். #dmkprotest
    கடலூர்:

    நகராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்பப் பெறக் கோரியும் கடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இதில் மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் வக்கீல் சிவராஜ், துணை அமைப்பாளர் வனராசு, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், வி.ஆர். அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் பாலாஜி, அகஸ்டின், நகர இளைஞரணி அமைப் பாளர் இளையராஜா, துணை அமைப்பாளர்கள் பிரசன்னா, ஜெயசீலன், ஒன்றிய துணைத்தலைவர் குணா, ஒன்றிய பொருளா ளர் மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் திரைப்பட சங்க பொதுச்செயலாளர் மாருதி ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர செயலாளர்கள் பழனிவேல், அங்கமுத்து, நகர அவைத்தலைவர் ஷேக் மொய்தீன், துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், நிர்வாகிகள் ராமு, கோபாலகிருஷ்ணன், வேலு, முகமது யாசின், பூபாலன், பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். #dmkprotest
    அதிமுக அரசை அகற்றும்வரை ஓயமாட்டோம் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ.பேசினார். #dmkprotest

    திருச்சி:

    தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிக்குமார், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜான்சன் குமார், அபூர்வாமணி,

    பகுதி செயலாளர்கள் மதிவாணன், கண்ணன், பாலமுருகன், மோகன்தாஸ், ராமதாஸ்,காஜாமலை விஜி, மண்டிசேகர், ராம்குமார் இளங்கோ, கொட்டப்பட்டு தர்மராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, வரதராஜன், மல்லியம்பத்து கதிர்வேல், சிங்காரம், வட்ட பிரதிநிதி பந்தல்ராமு, கிராப்பட்டி செல்வம், துர்காதேவி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் மற்றும் லீலாவேலு, என்ஜினீயர் நித்தியானந்த், குமரேசன், மார்சிங்பேட்டை செல்வராஜ்,

    சில்வியா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேசு அடைக்கலம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மூக்கன், ஜெயக்குமார், கருணைராஜா, துரைராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் வாளாடி கார்த்திக், பொன்னகர் ஜெரால்டு, மாவட்ட பிரதிநிதி வரகனேரி ரவிச்சந்திரன், மன்னார்புரம் ராஜேந்திரன்,

    வட்ட செயலாளர்கள் துபேல் அகமது, சிவசக்தி குமார், குமரேசன், வக்கீல் ரெங்கன், ராமமூர்த்தி, சுருளி ராஜன், ஸ்ரீரங்கம் ஜனா, பி.ஆர்.பால சுப்பிரமணியன், தாமு சேகர், பொதுக்குழு உறுப்பினர் மூவேந்திரன், தி.மு. ரெங்கா, கோபால்ஜி உள் பட பலர் கலந்து கொண் டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சொத்து வரி உயர்வு தனி மனிதனை பெரிதும் பாதிக்கும். எனவே சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    எந்த பிரச்சினைக்கும் சட்டமன்றத்தில் முதல்வர் சரியாக பதில் அளிப்பதில்லை. பொத்தாம் பொதுவாக பேசுகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாத நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் இந்த அரசை அகற்றும் வரை ஓய மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் துறையூரில் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திருச்சி துவாக்குடி நகர தி.மு.க. சார்பில் துவாக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். துவாக்குடி நகர செயலாளர் காயம்பு, முன்னாள் எம்.எல். ஏ., சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம். எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் மத்திய அரசின்ரூ. 5 ஆயிரத்து 500 கோடி நிதி மானியமாக கிடைத்திருக்கும். அது தற்போது கிடைக்கவில்லை

    ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு தற்போது வரலாறு காணாத சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதனை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அப்துல்குத்தூஸ், தனசேகர், வி.பி.குமார், ஜெயலட்சுமி குமார், செல்வமணி, மணிமாறன், குணாநிதி, பன்னீர்செல்வம், அப்பு என்ற கருணாநிதி, பொன்மலை தி.மு.க. இளைஞரணி சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmkprotest

    ×