search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் - திருவள்ளூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
    X

    காஞ்சீபுரம் - திருவள்ளூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும் தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசே‌ஷன், கே.திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாதிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.சேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், பிஎம்.குமார், தசரதன், அபுசாலி, அப்துல்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×