search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur"

    • அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள்.
    • இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்து கொண்டு இருக்கிறார்.

    திருவள்ளூர்:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் (தனி)தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் எங்கள் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் செயல் மறவர்கள் தொண்டர்கள் நிறைந்த கட்சியாக உள்ளது. ஆனால், தி.மு.க.வும், காங்கிரசும் பணக்கார கட்சி. ஆடை கலையாமல் வாக்கு கேட்கிற தலைவர்கள் தி.மு.க.விலும், காங்கிரசிலும் இருக்கிறார்கள்.

    அவர்கள் திட்டமெல்லாம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து, கொள்ளையடிக்க வேண்டும். இதனாலேயே இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் அங்கம் வகித்து கொண்டு இருக்கிறார்.

    ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியே பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினோம். சுயநலத்தோடு யோசித்திருந்தால் அந்த கூட்டணியில் தொடர்ந்திருப்போம். அ.தி.மு.க. கூட்டணி ஆட்சி, அதிகாரத்திற்கு அடி பணியாத கட்சி. தேசிய கட்சியோடு கூட்டணி வைத்து எந்த பிரயோ ஜனமும் இல்லை. தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக அ.தி.மு.க. தேசிய கட்சியோடு கூட்டணி வைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தீர்களோ அதை சொல்லி ஓட்டு கேளுங்கள். என்னைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்.

    நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. தான். ஆனால் மீண்டும் அவர்களே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்வது மக்களை ஏமாற்றும் செயல். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என்பதை நாங்கள் சொல்கிறோம். உங்களால் சொல்ல முடியுமா? சொன்னதையும் சொல்லாததையும் நாங்கள் செய்து வருகிறோம். இனிமேலாவது வாக்களித்தவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 520 தேர்தல் வாக்குறுதியில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை, விவசாயிகளுக்கு எந்த உதவியும் செய்யாத அரசாக தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது தான் தி.மு.க.வின் சாதனை. 11 அரசு மருத்துவ கல்லூரிகளை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. 3 ஆண்டுகளில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை. திமுக ஆட்சி இருண்ட ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி. அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், திருத்தணி கோ.அரி,மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன், அலெக்சாண்டர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை விடுமுறை.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

    இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    • புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.

    இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும்.

    இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சிவன் கோவில் கருவறையில் உள்ள கிரீவகோஷ்டத்தில் யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது.
    • கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் அழகிய சிங்கரின் சன்னதி உள்ளது.

    திருவள்ளூர் நகரில் வீரராகவப் பெருமான் என்ற பிரம்மாண்டமான கோவில் உள்ளது. இக்கோவிலின் தென் மேற்குப் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மரின் சன்னதி உள்ளது.

    சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு அருகில் திருமழிசை என்ற புராதனமான ஊர் உள்ளது.

    திருமழிசை ஆழ்வார் பிறந்த இவ்வூரில் ஜகநாதர் என்ற விஷ்ணுகோவில் உள்ளது. இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் அழகிய சிங்கரின் சன்னதி உள்ளது. பெயருக்கேற்ப எழிலுடன் இப்பெருமான் உள்ளார்.

    மதுராந்தகம் கோதண்டராமர் கோயில் என்ற ஏரி காத்த ராமர் கோயில் புகழ்மிக்க கோயிலாகும். இக்கோயிலின் உள்பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மருக்குத் தனியாக சன்னதி உள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புளியங்குடி என்ற தொன்மையான ஊர் உள்ளது.

    இவ்வூரில் சிவன் கோயில், விஷ்ணு கோயிலுடன் திருவாவடுதிறை ஆதீனத்தின் கிளை மடமும் உள்ளது. அஷ்டாங்க விமானத்துடன் கூடிய விஷ்ணு கோயிலில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    பழைய சீவரம் போன்று செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூரில் முக்தீஸ்வரர் என்ற சிவன் கோயிலும் கல்யாண விரதவிண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலும் உள்ளன.

    சிவன் கோயில் கருவறையில் உள்ள கிரீவகோஷ்டத்தில் யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நரசிங்கமங்கலம் என்னும் புராதனமான ஊர் உள்ளது. இவ்வூரில் நரசிம்மர் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுகளும் விஜயநகரப் பேரரசர் காலக் கல்வெட்டுகளும் உள்ளனர்.

    செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பழைய சீவரம் என்ற பழைய ஊர் உள்ளது. ஊர்ப் பெயரிலேயே பழைய என்ற முன்னொட்டு உள்ளது.

    இவ்வூர் மலை மேல் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய வாயில். ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என இக்கோவில் முதலில் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சை வல்லத்தில் உள்ள நரசிம்மர் தலத்துக்குரிய தலபுரணாம் கி.பி.1799-ல் இயற்றப்பட்டது. இத்தல புராணத்தில் கவுதம முனிவர் தம்பெயரில் தீர்த்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு நாள்தோறும் நீராடி நரசிம்மப் பெருமானை வழிபட்டு வர நரசிம்மரும் அவருக்குக் காட்சி தந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

    • அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
    • போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் உள்ள சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றிவரும் வாகனங்கள் அதிகளவு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, மருத்துவமனைக்கு மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    அதில், "திருவள்ளூர் நகர பகுதிக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

    • காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது. இந்த காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள், கடைகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காக்களூர் சாலை சந்திப்பினை விரிவாக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்கு இடையூறாக காக்களூர் ஏரிக்கரையில் ஆக்திரமித்து கட்டப்பட்ட வீடுகள் இருந்தன. இதையடுத்து அந்த  ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன் தலைமையில் இன்று காலை ஆக்கிரமிப்ப வீடுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றும்பணி தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.
    • திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் 8.48 ஏக்கர் பரப்பளவில், ரூ.308.14 கோடி மதிப்பில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 7 தளங்கள் கொண்ட மருத்துவமனை கட்டிடம், 84 உள்ளிருப்பு மருத்துவர்கள், 114 பயிற்சி மருத்துவர்கள், 68 செவிலியர்கள் தங்கும் குடியிருப்பு மற்றும் விடுதிகள் ஆகியவை அமைக்கும் பணி நடைபெற்று வந்தன. அப்பணி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 500 படுக்கைகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை, அதிதீவிர சிகிச்சை, விபத்து மற்றும் அவரச சிகிச்சை, முடநீக்கியல் உள்ளிட்ட 18 பிரிவுகளுடன் கூடிய இந்த புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவ சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இவ்விழாவில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்து, மருத்துவ சேவையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவான, மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்பதை நனவாக்கும் வகையில் ஏற்கெனவே திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தற்போது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான மருத்துவ சேவையை ஆற்றும்.

    தமிழக முதல்வர், திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்து, அதற்காக ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளன.

    அதே போல், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சியில் 14 இடங்கள் உட்பட 17 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், ஆவடி மாநகராட்சியில் புதிதாக ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.

    ஆவடி மற்றும் பொன்னேரி அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.4.20 கோடி மதிப்பில் சிடி ஸ்கேன் வாங்கித் தரப்பட உள்ளது. அதே போல், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு ரூ.34.50 லட்சம் மதிப்பில் அதிநவீன வாங்கித் தரப்பட உள்ளது.

    அதே போல் பெரியபாளையம், மீஞ்சூர் மற்றும் பீரகுப்பம் ஆகிய பகுதிகளில் வட்டார பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரிக்கை.

    இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று திமுகவினர் கருப்பு உடை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும்,திருத்தணி எம்,எல்,ஏ.வுமான எஸ்.சந்திரன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தராஜன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், பூந்தமல்லி எம்.எல்.ஏ ஆ.கிருஷ்ணசாமி, மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஜெரால்டு, திருத்தணி பூபதி,திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பொன்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


    மேலும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் டி.கே.பாபு, திருவள்ளூர் நகரச் செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூண்டி மோதிலால்,மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆர்.டி.இ. ஆதிசேஷன்,டாக்டர் குமரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் முழக்கமிட்டனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் உள்ள ஜெ.என்.சாலையில் தினமும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் அப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

    இந்தநிலையில் பெரியபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் தனியார் தொழிற்சாலை பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட ராட்சத தூண்கள் திருவள்ளூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது தலைமை அரசு மருத்துவமனை அருகே லாரியின் சங்கிலி அறுந்து ராட்சத தூண்கள் சாலையில் விழுந்து சிதறின. இதில் அதிர்ஷ்டவசமாக அந்த லாரியின் அருகே சென்ற மற்ற வாகனங்களில் சென்றவர்கள் எந்த ஒரு காயமும் இல்லாமல் தப்பினார்கள்.

    தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து வந்து உடனடியாக போக்கு வரத்தை நிறுத்தினார்கள். பின்னர் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் அனுப்பபட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது.

    திருவள்ளூர் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த திருகோவில்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாதமுனி. விவசாயி. இவரது மனைவி அனிதா (49). இவர் வீட்டின் அருகே உள்ள கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க தாலி சரடு மற்றும் செயினை 2 பேர் பறித்தனர்.

    இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். திருடன்... திருடன்... என கூச்சலிட, அந்த 2 பேரும் பைக்கில் தப்பி ஓடினார்கள். அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அனிதா சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, செயினை பறித்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    திருவள்ளூர் அருகே பஸ் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். (வயது 88). தொழிலாளி.

    இன்று காலை அவர் அதே பகுதியில் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது கோயம்பேட்டில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென்ற முருகேசன் மீது மோதியது.

    இதில் பலத்த காயம் அடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்த போது டிரைவர் திடீர் பிரோக் போட்டதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து மாணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×