search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "district magistrate"

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    • புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.

    இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும்.

    இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    சென்னையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், திருவள்ளூர் மாட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 18 குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்மந்திரி, மாவட்ட மாஜிஸ்திரேட்டை நீக்கி உத்தரவிட்டுள்ளார். #DeoriaShelterHomeIncident #Uttarpradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா என்ற பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் இருந்து 10 வயது சிறுமி தப்பிச் சென்று அப்பகுதியின் பெண்கள் காவல்நிலையத்தை அடைந்து, தங்களது காப்பகத்தில் நடந்துவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

    தினமும் மாலை நேரத்தில் விலை உயர்ந்த கார்களில் வருபவர்களுடன், சிறுமிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் நள்ளிரவில் மீண்டும் காப்பகத்திற்கு அழைத்துவரப்படுவதாகவும் அந்த சிறுமி தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து, அந்த காப்பகத்துக்கு விரைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 18 சிறுமிகள் மாயமானது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காப்பகத்தை நடத்தி வந்த கிரிஜா திரிபாதி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மாநில அரசு பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், டியோரியா மாவட்ட மாஜிஸ்திரேட் உள்பட சில அதிகாரிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் காப்பகம் குறித்து 12 மணி நேரத்துக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாஜிஸ்திரேட்டுகளுக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக பெண்கள் நலத்துறை செயலாளர் ரேனுகா குமார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 2007-ம் ஆண்டு இந்த காப்பகத்தின் மீது வந்த புகாரின் அடிப்படையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கிரிஜா மற்றும் அவரது கணவர் தொடர்ந்து இந்த காப்பகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பீகார் மாநிலத்திலும் காப்பகத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூறத்தக்கது. #DeoriaShelterHomeIncident #Uttarpradesh #YogiAdityanath
    உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை இருப்பதை நிரூபிக்காவிட்டால் மே மாத சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Sitapur #submittoiletproof
    லக்னோ:

    இந்தியாவில் பல்வேறு கிராமங்களில் மின்வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. அவற்றை சீர்திருத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. குறிப்பாக திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களை உருவாக்க அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது.

    அதன் ஒருபகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, அரசு அதிகாரிகள் தங்கள் வீட்டில் கழிவறை கட்டியதற்கான ஆதாரத்தையும், அந்த கழிவறை அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



    அவ்வாறு அதிகாரிகள் சமர்ப்பிக்க மறுத்தால், மே மாதத்துக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Sitapur #submittoiletproof
    ×