என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேரக்கட்டுப்பாடு"

    • சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறியதாக 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் அபராதம் விதித்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 12 மணிக்கு மேல் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. 

    • பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.
    • விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    சென்னை பெரம்பூரில் நேற்று லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    * பள்ளி மாணவர்கள் வரும் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கக்கூடாது.

    * பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் இருக்க வேண்டும்.

    * விபத்தை உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை 100 நாட்களுக்கு ஒப்படைக்கக்கூடாது.

    * காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை பள்ளிகள் உள்ள பகுதிகளில் கனரக வாகனங்களை அனுமதிக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.
    • போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரில் உள்ள சாலைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றிவரும் வாகனங்கள் அதிகளவு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, மருத்துவமனைக்கு மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அதிவேகத்தில் வரும் கனரக வாகனத்தால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது.

    இதனை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் திருவள்ளூர் நகரத்துக்குள் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.

    அதில், "திருவள்ளூர் நகர பகுதிக்குள் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது" என்று தெரிவித்து உள்ளார்.

    ×