என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நேரக்கட்டுப்பாட்டை மீறிய 207 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
    X

    நேரக்கட்டுப்பாட்டை மீறிய 207 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு

    • சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    • 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை பெரம்பூரில் லாரி ஏறி 10 வயது பள்ளி சிறுமி சௌமியா உயிரிழந்ததையடுத்து, பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் கனரக வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்து மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டு இருந்தார்.

    சென்னையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னையில் விதிகளை மீறியதாக 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள் மற்றும் 87 கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கக்கூடாது என்ற உத்தரவை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் அபராதம் விதித்தும், வழக்கு பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் 12 மணிக்கு மேல் மாநகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டது.

    Next Story
    ×