search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram"

    • கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் ‘விருச்சிக மாதம்‘ என்பர்.
    • காஞ்சீபுரத்தில் உள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும்.

    கார்த்திகை மாதத்தை ராசியின் பெயரால் 'விருச்சிக மாதம்' என்பர்.

    இந்த வீடு அனல் கிரகமான செவ்வாயின் வீடாகும்.

    சூரியனுக்கு இம்மாதத்தில் வழிபாடு செய்வதால் பரம்பரை சொத்துக்களால் பயன் உண்டாகும்.

    அவை நம்மை விட்டுப் போகாது. கண் சம்பந்தமான நோய்கள் அணுகாது. பார்வையின் சக்தி மேம்படும்.

    கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனை வழிபடுவது, ஜோதிர் லிங்கங்களை வழிபடுவது முதலானவை மிகுந்த புண்ணியத்தை அளிக்கின்றன.

    காஞ்சீபுரத்தில் உள்ள ஜோதி லிங்கமான கச்சபேசப் பெருமானை வழிபடுவது, மிகுந்த பலன் தரும்.

    கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் முழ்கி, அதன் கரையிலுள்ள

    இஷ்டலிங்கப் பெருமானையும், கசபேசப் பெருமானையும் வழிபட்டால், நினைத்த காரியம் நல்லபடியே நடக்கும்.

    • மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது.
    • மணிகண்டீஸ்வரர் குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே தேவரியம்பாக்கம் ஊராட்சி தோண்டான்குளம் கிராமத்தில் உள்ள மணிகண்டீஸ்வரர் லிங்கம் 1350 வருடங்கள் பழமையானது. இந்த லிங்கம் வெட்ட வெளியில் இருப்பதை கண்டு, கிராம மக்கள் கோவில் கட்டமுடிவு செய்தனர். இதற்காக கால்கோள் பூஜை திருவாரூர் சிவ நடராஜன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய திருப்பணிக் குழுவினர், தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் மற்றும் தோண்டான்குளம் கிராமம், தேவரியம்பாக்கம் ஊராட்சி மக்கள் செய்து இருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    தலவரலாறு

    பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் மணிகண்டீஸ்வரரை வழிபட்டு உள்ளனர். மணிகண்டீஸ்வரர் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு பொதுவாக காணப்படுகிறது. திருப்பாற்கடலை கடைந்த போது தோன்றிய நஞ்சுவால் துயரம் அடைந்த, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்ந நஞ்சை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரம்மன், திருமால் ஆகியோர் தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் `மணிகண்டம்' எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனர் என்பது தல வரலாறாகும்.

    சிவன் அருள் பெற்ற இங்குள்ள குளம் மனிதர்களால் தோண்டப்படாமலே சுவையான நீரூற்று பெற்று இயற்கையாகவே அமைந்ததன் பொருட்டு தோண்டாகுளம் என்றும் பின் தோண்டாங்குளம் என்றும் மருவியது.

    • பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது
    • மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகை

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் கீழ்கண்ட 5 இடங்களில் வெள்ள மீட்பு ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.

    மாவட்டத்தில் ஒத்திகை பயிற்சி நடைபெற்ற இடங்கள்

    1. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம், மகாலட்சுமி நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை செய்து அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் ஒத்திகை பயிற்சியினை உதவி ஆணையர் (கலால்) காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது

    2. குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம் - புவனேஸ்வரி நகர் பகுதியில் வெள்ளத்தால் நீர் சூழ்ந்த பகுதியில் மாட்டிக்கொண்ட மக்களை காப்பற்றி நிவாரண முகாம்களுக்கு கொண்டு செல்லுதல் அவர்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை மேற்கொள்ளுதல் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல் போன்ற மீட்பு மற்றும் நிவாரண ஒத்திகையினை கோட்டாட்சியர் திருபெரும்புதூர் தலைமையில் நடைபெற்றது.


    3. வாலாஜாபாத் வட்டம், வில்லிவலம் கிராமம் பாலாற்று கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் மற்றும் பாலாற்றில் அடித்துச்செல்லும் நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் கால்நடைகளை பாலாற்று வெள்ளத்திலிருந்து காப்பாற்றி மருத்துவ உதவி செய்யும் ஒத்திகையானது கோட்டாட்சியர் காஞ்சிபுரம் தலைமையில் நடைபெற்றது

    4. காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் கீழ் தளத்தில் ஏற்படும் வெள்ளத்திலிருந்து நோயாளிகளை மீட்டு முதல் தளத்திற்கு கொண்டு செல்லும் ஒத்திகையினை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

    5. காஞ்சிபுரம் வட்டம் சிட்டியம்பாக்கம் குறுவட்டம் சிங்காடி வாக்கம் தி/ள் ஸ்டால் இந்தியா தொழிற்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தொழிற்சாலை ஆய்வாளர் அவர்கள் திருப்பெரும்புதூர் மூலம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சைலேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

    தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா கூறினார். #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் அமலில் உள்ளது.

    சில நாட்களாக கட்சி தலைவர்களின் கூட்டங்கள், 2-ம் கட்ட தலைவர்களின் பிரசாரங்களில் 2-ம் கட்ட தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்களால் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4122 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 236 பதற்றமான வாக்குசாவடிகள். 1357 வாக்குசாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    வாக்குசாவடிகளில் நடைபெறும் வாக்குபதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலில் 20,500 வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 4122 வாக்குசாவடிகளுக்கும் தலா 4 பேர் வீதம் பணிபுரிவர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 6 பேர் பணியில் இருப்பர்.

    அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரிய உள்ளனர். 3298 வாக்குசாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்படுவர்.

    வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் 578 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    வெளி மாவட்ட கட்சியினர் அவரவர் ஊர்களுக்கு வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133 வது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமண மண்டபம், தங்கும்விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கி கட்சிப்பணியில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை துண்டாகி வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #BabyBeheaded
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவ வலியுடன் சேர்க்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலியர், அவருக்கு பிரசவம் பார்த்தார். பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறிய அவர், சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்துள்ளார்.

    குழந்தையின் தலை திரும்பியதும், குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் தலை மட்டும் துண்டாகி வெளியே வந்தது. உடல் தாயின் கருப்பையில் சிக்கிக்கொண்டது. இதனால் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மேல்சிகிச்சைக்காக அந்தப் பெண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து, குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #BabyBeheaded

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் கலெக்டர் பொன்னையா தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார். #RepublicDay
    திருவள்ளூர்:

    திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற 70-வது குடியரசு தினவிழாவில் திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து வண்ண பலூன்களை பறக்கவிட்டு காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவித்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார். அரசின் பல்வேறு துறைகளின் வாயிலாக 115 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

    மேலும் விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 34 போலீசாருக்கும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    தொடர்ந்து கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் போலீஸ் சூப்ரெண்ட் பொன்னி மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் லோகநாயகி, மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் குமார், சுகாதார துறை இணை இயக்குனர் தயாளன்,முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரன், கூடுதல் போலீஸ் சூப்ரெண்ட் சிலம்பரசன், சப்-கலெக்டர் ரத்தினா, திருவள்ளூர் துணை சூப்ரெண்ட் கங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடியரசு விழா நடைபெற்றது. தேசியக்கொடியை கலெக்டர் பொன்னையா ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையினை ஏற்றுக்கொண்டார், பின்னர் ஊர்க் காவல் படையினர், தேசிய மாணவர் படையினர், சாரண சாரணியர்கள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார். பின்னர் உலக அமைதியை குறிக்கும் வகையினில் புறாக்களையும் தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்களையும் பறக்கவிட்டார்.

    பின்னர் முன்னாள் படை வீரர் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு திருமண மானிய உதவித் தொகை, விலையில்லா மூன்று சக்கர மற்றும் சக்கர நாற்காலிகள், சலவைப் பெட்டிகள், எம்ப்ராய்டிங் தையல் மிஷின்கள், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் மற்றும் மாவட்ட அளவில் நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் என 35 லட்சத்து 16 ஆயிரத்து 284 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 159 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, சப்-கலெக்டர் சரவணன், தாசில்தார் காஞ்சனமாலா, மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார் மற்றும் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #RepublicDay

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
    காஞ்சீபுரம்:

    108 திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள்கோவில், அஷ்டபுஜம் பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலை வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், காஞ்சீபுரம் உதவி ஆணையர் ரமணி, கோவில் செயல் அலுவலர்கள் குமரன், கவிதா உள்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவிலில் உள்ள புகழ் பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

    இதேபோல் 108 திவ்யதேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி குலசேகரஆழ்வார் ராமானுஜா அறக்கட்டளை சார்பில் வைணவ பக்தர் கிருஷ்ணராமானுஜர் தாசர் விழாவில் கலந்து கொண்ட 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சங்கர் செய்திருந்தார்.

    திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பள்ளிப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதநாராயண சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    108 திவ்யதேசங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதே போல திருவள்ளூர் பூங்காநகரில் உள்ள ஜலநாராயண சாமி கோவில் மற்றும் பேரம்பாக்கம் கமலவள்ளி சமேத வைகுண்ட பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. #Rain #Lakes
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 916 ஏரிகள் உள்ளன. இவை அனைத்தும் நீர் இன்றி வறண்டு காணப்பட்ட நிலையில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் வரத் தொடங்கியுள்ளது.

    நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 916 ஏரிகளில் 45 ஏரிகள் 100 சதவீதமும் நிரம்பி உள்ளன. 52 ஏரிகளில் 75 சதவீமும், 179 ஏரிகளில் 50 சதவீதமும் மீதமுள்ள ஏரிகளில் 25 சதவீதம் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான தாமல் ஏரி, தென்னேரி ஏரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, மணிமங்கலம், மானாம்பதி, மதுராந்தகம் ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்தால் ஏரிக்கரைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் வரும் அபாயம் உள்ளது.

    எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலவீனமாக உள்ள ஏரிக்கரைகள், மதகுகள், நீர்வரத்து கால்வாய் போன்றவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Rain #Lakes

    குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும் தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருவள்ளூர்:

    குட்கா ஊழல், சி.பி.ஐ. விசாரணையில் சிக்கிய அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது.

    திருவள்ளூர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூர் ரெயில்வே நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. ஆ.கிருஷ்ணசாமி, இ.பரந்தாமன், ஆர்.டி.இ.ஆதிசே‌ஷன், கே.திராவிட பக்தன், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் தலைமையில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவாலான் கேட் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்.எல்.ஏ.க்கள் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாதிகள் சன்பிராண்ட் ஆறுமுகம், சிவிஎம்.சேகரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவேடல் செல்வம், பிஎம்.குமார், தசரதன், அபுசாலி, அப்துல்மாலிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்காக வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பது என்று மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாள் விழா நடக்கிறது. இதையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சின்ன காஞ்சீபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் ரங்கசாமி குளம் பகுதியில் காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான கல்வெட்டினை திறந்து வைத்து அதிமுக கொடியேற்றுகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிகாக கட்டப்பட்ட பல்நோக்கு கூட்ட அரங்கத்தினை திறந்து வைக்கிறார். மாலையில் காஞ்சீபுரம் பஸ் நிலையம் எதிரே நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகை குறித்து ஆலோசனைக் கூட்டம் காஞ்சீபுரத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத்.பா.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

    அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் முழுவதும் சிறப்புறக் கொண்டாடப்பட வேண்டும். முதல்வருக்கு காஞ்சீபுரம் நகர எல்லையில் மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் அமைச்சர் பெஞ்சமின், அமைப்புச் செயலாளர்கள் வி.சோம சுந்தரம், மைதிலி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம், நிர்வாகிகள் காஞ்சி பன்னீர்செல்வம், அத்திவாக்கம் ரமேஷ், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, அக்ரி நாகராஜன், குண்ண வாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் மாணிக்கம், ராஜசிம்மன், பாலாஜி, ஜெயராஜ், மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னையில் மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். #TN #TNDraftRoll
    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

    வரைவு வாக்காளர் பட்டியல்படி தமிழ்நாட்டில் 5 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் 2 கோடியே 88 லட்சத்து 76 ஆயிரத்து 791 பேர் ஆண்கள். 2 கோடியே 94 லட்சத்து 7 ஆயிரத்து 404 பேர் பெண்கள். 5184 பேர் மூன்றாம் பாலினத்தவர்.

    மாநிலத்திலேயே அதிக அளவு வாக்காளர்கள் உள்ள தொகுதி சோழிங்கநல்லூர் ஆகும். இங்கு 6.07 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 1.64 லட்சம் வாக்காளர்களுடன் குறைந்த தொகுதியாக துறைமுகம் உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்னை மாநகராட்சி துணை கமி‌ஷனர் லலிதா வெளியிட்டார்.

    சென்னையில் மொத்தம் 37 லட்சத்து 92 ஆயிரத்து 126 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 18 லட்சத்து 71 ஆயிரத்து 638 பேர் ஆண்கள். 19லட்சத்து 19 ஆயிரத்து 582 பேர் பெண்கள். இதர வாக்காளர்கள் 906 பேர் ஆவார்கள்.

    இதில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 508 வாக்காளர்களுடன் பெரம்பூர் அதிகபட்ச பேரை கொண்ட தொகுதியாக இருக்கிறது. துறைமுகம் குறைந்தபட்ச தொகுதியாக உள்ளது. அங்கு 1 லட்சத்து 64 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 13 மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

    பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2019 அன்று 18 வயதை நிறைவு அடைபவர்கள் (1.1.2001 தேதிக்கு முன்பு பிறந்தவர்கள்) படிவம் 6-யை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-யையும், திருத்தம் தொடர்பாக படிவம் 8-யையும் சட்டமன்ற தொகுதிக்கு உள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயர்வு விவரத்தை படிவம் 8ஏ-யையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஆவண நகலையும் இணைத்துக் கொடுக்க வேண்டும்.

    சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அக்டோபர் 31-ந்தேதி வரை உள்ள காலத்துக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் வருகிற 9,24 மற்றும் அக்டோபர் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் வாக்குசாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

    மேலும் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    சென்னை மாவட்டத்தில் கடந்த முறை 3768 வாக்கு சாவடிகளும், 2 துணை வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது வாக்குசாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு சென்னை மாவட்டத்தில் 3754 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 169 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. #TN #TNDraftRoll

    சென்னை
    சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்:-


    காஞ்சீபுரம்
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 36,35,231. இதில் ஆண் வாக்காளர்கள் 17,99,395. பெண் வாக்காளர்கள் 18,35,497. இதர வாக்காளர்கள் எண்ணிக்கை 336. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய வாக்காளர்களின் விவரம் வருமாறு:-


    திருவள்ளூர்



    காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
    காஞ்சீபுரம்:

    சென்னையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    எழும்பூர், அயனாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை சாரல் மழையாக நீடித்தது.

    இதேபோல காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், மணலி புதுநகர், தச்சூர், பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, காட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த காற்றினால் தடப்பெரும்பாக்கம், வேன் பாக்கம், வஞ்சிவாக்கம், கோளூர், அண்ணாமலைச் சேரி, திருப்பாலைவனம் ஆவூர் காஞ்சி வாயல் ஆகிய பகுதிகளில் இரவு மின்சாரம் தடைபட்டது. பொது மக்கள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

    ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 25.30
    செங்கல்பட்டு - 5.50
    மதுராந்தகம் - 3.00
    ஸ்ரீபெரும்புதூர் - 9.50
    தாம்பரம் - 7.00
    திருக்கழுக்குன்றம் - 11.00
    மாமல்லபுரம் - 5.20
    உத்திரமேரூர் - 8.00
    திருப்போரூர் - 8.80
    வாலாஜாபாத் - 7.40
    சோழிங்கநல்லூர் - 11.50
    ஆலந்தூர் - 33.00
    கேளம்பாக்கம் - 12.40

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    செம்பரம்பாக்கம்- 30
    பொன்னேரி-23
    ஊத்துக்கோட்டை-17
    திருத்தணி-15
    பூந்தமல்லி-15
    அம்பத்தூர்-15
    ஆர்.கே.பேட்டை - 15
    சோழவரம்-14
    திருவாலங்காடு-14
    தாமரைப்பாக்கம்-13
    திருவள்ளூர்-12
    பூண்டி - 9.6
    புழல் - 8.4
    ×