search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sriperumbudur constituency"

    • 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார்.
    • ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர்

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இவர் 1996-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 5 முறை எம்.பி.யாக உள்ளார்.

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அண்ணன் என்று உரிமையோடு அழைப்பார்.

    தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்படும் டி.ஆர்.பாலு எம்.பி.க்கு டெல்லி அரசியல் அத்துபடி என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு அகில இந்திய தலைவர்கள்-மத்திய மந்திரிகளுக்கு பரிச்சயம் ஆனவர்.

    83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. இப்போதும் சுறுசுறுப்புடன் கட்சி பணியாற்றி வருகிறார். டெல்லி அரசியல் நகர்வு முழுவதையும் அவரே பார்த்துக் கொள்கிறார்.

    இந்த நிலையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட அவர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி கலந்து கொண்டு தொகுதியை தக்க வைத்து வருகிறார்.

    இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

    அந்த வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான புதுமுகங்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கட்சியில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கிவிட்டு அந்த இடங்களில் புதுமுகங்களை நிறுத்தலாமா? என்று ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    இந்த வகையில் 83 வயதாகும் டி.ஆர்.பாலு எம்.பி. ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அவ்வாறு ஒரு சூழல் அமைந்தால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாற்று ஏற்பாடாக காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் முன் நிறுத்தப்படுவார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

    கட்சியில் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் படப்பை மனோகரன் தி.மு.க.வில் ஆரம்ப காலம் முதல் கடுமையாக உழைப்பவர் என்று பெயர் எடுத்தவர். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர்.

    கட்சி நடத்தும் அனைத்து பொதுக்கூட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் இரவு-பகல் பாராமல் முன்னின்று நடத்துபவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாவட்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோரின் அன்பை பெற்றவர்.

    பொதுமக்கள் மத்தியிலும் நன்மதிப்பும், செல்வாக்கும் பெற்றவர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி.ஆர்.பாலு எம்.பி. மீண்டும் போட்டியிட்டால் அவருக்காக கடுமையாக உழைக்கக்கூடியவர். படப்பை மனோகரனை முன் நிறுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கத்தை தி.மு.க. வேட்பாளர் டிஆர் பாலு தோற்கடித்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    தமிழ்நாட்டில் உள்ள 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 39 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.

    நேற்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னணிலை பெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 22,53,041, மொத்த வாக்காளர்கள் ஆவர். இதில் 13,88,666 வாக்குகள் பதிவானது.

    ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு 4,91,220 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பா.ம.க. வேட்பாளர் வைத்தியலிங்கம் 1,69,469 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 53,027, அமமுக வேட்பாளர் தாம்பரம் நாராயணன் 25,804, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீதர் 80,058 வாக்குகள் பெற்றுள்ளனர். 
    தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா கூறினார். #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் அமலில் உள்ளது.

    சில நாட்களாக கட்சி தலைவர்களின் கூட்டங்கள், 2-ம் கட்ட தலைவர்களின் பிரசாரங்களில் 2-ம் கட்ட தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்களால் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4122 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 236 பதற்றமான வாக்குசாவடிகள். 1357 வாக்குசாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    வாக்குசாவடிகளில் நடைபெறும் வாக்குபதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலில் 20,500 வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 4122 வாக்குசாவடிகளுக்கும் தலா 4 பேர் வீதம் பணிபுரிவர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 6 பேர் பணியில் இருப்பர்.

    அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரிய உள்ளனர். 3298 வாக்குசாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்படுவர்.

    வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் 578 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    வெளி மாவட்ட கட்சியினர் அவரவர் ஊர்களுக்கு வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133 வது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமண மண்டபம், தங்கும்விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கி கட்சிப்பணியில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    ×