என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Brahmotsava festival"
- சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா.
- 35 பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.
திருமலை:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான நேற்று காலை சூரியபிரபை, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை நடந்த சூரிய பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் `வேத நாராயணசாமி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகிய நறுமண பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை நடந்த சந்திர பிரபை வாகனச் சேவையில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
காலையில் நடந்த சூரிய பிரபை, இரவு நடந்த சந்திர பிரபை வாகனச் சேவைகளுக்கு முன்னால் கலாசாரக் குழுவினர் நடனம் மற்றும் சங்கீர்த்தனங்களை வழங்கி பக்தர்களை கவர்ந்தனர். அதில் சூரியகாந்தி பூக்கள் போல வேடமிட்டும், ஏழு குதிரைகள் பூட்டிய சூரிய பிரபை வாகனத்தில் துணைவியார்களுடன் சூரிய நாராயணமூர்த்தி எழுந்தருளி இருப்பதுபோல் வேடமிட்ட ராஜமுந்திரியைச் சேர்ந்த ௩௫ பேர் கொண்ட குழுவினர் சூரிய தில்லானா நடனம் ஆடினர்.
அதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், அன்னமாச்சாரியார் கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரிணி பகுதியில் நடந்த பக்தி இசை மற்றும் நாட்டிய கலை நிகழ்ச்சிகள் உள்ளூர் மக்கள், பக்தர்களை கவர்ந்தன.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
- வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
- பத்மாவதி தாயார் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் `மோகினி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதைத்தொடர்ந்து காலை 11.30 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு சாஸ்திர பூர்வமாக மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய நறுமண திரவியங்களால் திருமஞ்சனம் நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து 5 மணி வரை வசந்தோற்சவம் நடந்தது.
அதைத்தொடர்ந்து கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், சந்திரகிரி எம்.எல்.ஏ. செவிரெட்டி பாஸ்கர்ரெட்டி, இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி, உதவி அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா நடக்கிறது.
- கல்ப விருட்ச வாகன வீதிஉலா.
- கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.
திருப்பதி:
திருச்சானூர் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் 'ராஜமன்னார்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வாகன வீதி உலாவுக்கு முன்னால் எஸ்.வி. இசை மற்றும் நடனக் கல்லூரி மாணவ-மாணவிகள் ஆடிய 'கோயா நடனம்' பக்தர்களை கவர்ந்தது. இதுதவிர லட்சுமி கூடம், மேள வின்யாசம், கோபிகா நாட்டியம், மயூர நிருத்தியம், ரிப்பன் நடனம் ஆகியவை பிரம்மாண்டத்தை மேம்படுத்தியது. மேலும் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடன கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கேரள செண்டை மேளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. வாகன வீதிஉலாவுக்கு முன்னால் 3 ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.
அதைத்தொடர்ந்து இரவு அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அனுமந்த வாகன வீதிஉலா முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவை பக்தர்களை கவர்ந்தன. அதில் பத்ம நிருத்யம், தீப நிருத்யம், புராணக் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு மற்றும் அன்னமாச்சாரியார் சங்கீர்த்தனங்களுக்கான நடனம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.
மேலும் ராமச்சந்திரா புஷ்கரணி, ஆஸ்தான மண்டபம், மகதி, அன்னமாச்சாரியார் கலையரங்கம் ஆகிய இடங்களில் நடந்த பக்தி கலாசார நிகழ்ச்சிகள் பக்தர்களை கவர்ந்தன.
வாகன வீதிஉலாவுக்கு முன்னால் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி கோவிந்தராஜன், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் 5-வதுநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பல்லக்கு வாகன வீதிஉலா (மோகினி அலங்காரம்), மாலை வசந்தோற்சவம், இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.
- 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
- இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலைப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாகனவீதி உலாவுக்கு முன்னதாக கோலாட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.
- 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும்.
- கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
சித்தூர்:
சித்தூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று காணிப்பாக்கத்தில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில். கோவிலுக்கு சித்தூர் மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும். மற்ற கோவில்களில் 9 நாட்கள், 11 நாட்கள், 15 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கும். ஆனால், காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 21 நாட்கள் நடக்கும்.
பிரம்மோற்சவ விழாவின் 13-வது நாளான நேற்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காலை ராவணாசூர வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர் வரசித்தி விநாயகர் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மாலை யாளி வாகனத்தில் உற்சவர் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முன்னதாக அகரம்பள்ளி, சின்னகாம்பள்ளி உள்பட 5 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் காணிப்பாக்கம் கோவிலுக்கு வந்து பூஜைகளை செய்து யாளி வாகன வீதிஉலாவை தொடங்கி வைத்தனர். வாகன வீதிஉலாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர மற்றும் நெய் தீப ஆரத்தி காண்பித்தும் சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக அன்னதானம், குடிநீர், மோர் வழங்கப்பட்டது.
- மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ 7-வது நாளான நேற்று காலை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
8-வது நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மாட வீதிகளில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் மற்றும் தீபம் ஏற்றி வழிபட்டனர். இன்று இரவு அஸ்வ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.
பிரம்மோற்சவ நிறைவு நாளான நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தீர்த்தவாரி நடைபெறுவதையொட்டி கோவில் அருகே உள்ள புஷ்கரணியில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு புதியதாக தண்ணீர் நிரப்பப்பட்டது. மேலும் புஷ்கரணி முழுவதும் தேவஸ்தான ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
திருப்பதியில் நேற்று 66,598 பேர் தரிசனம் செய்தனர். 25,103 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
திருப்பதியில் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது.
இதனால் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம் செய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பிரம்மோற்சவ விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசியில் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி 5-வது நாளான இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் பட்டாச்சாரியார்கள் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது.
பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கும் ஸ்ரீ ரங்கநாயகிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்த சிறப்புமிக்க திருக்கல்யாண உற்சவத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
