என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    • சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது.
    • செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

    இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.

    மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.

    அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
    • சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.

    வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
    • இந்த உத்தரவு போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வன்கொடுமை தடுப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செம்மல், காஞ்சீபுரம் சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதில் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு அரசு தரப்பில் முறையிடப்பட்டது.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாவட்ட நீதிபதிக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஏற்கனவே முன்பகை உள்ளது. அதில்தான் இப்படி ஒரு உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்றார்.

    இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், முன்பகை விவகாரத்தில் டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மேலும், நீதிபதி செம்மல் உட்பட 6 மாவட்ட நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி கவுரவிக்க உள்ளார்.
    • தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு அவர் தி.மு.க.வினரை சந்தித்து ஊக்கப்படுத்த உள்ளார்.

    மேலும் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட தி.மு.க. தொண்டர்களை துணை முதலமைச்சர் உதயநிதி கவுரவிக்க உள்ளார்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. ஒன்றிய, நகர, கிளைக்கழக மற்றும் பாக முகவர்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க உள்ளார். காஞ்சிபுரத்தில் இருந்து உதயநிதி இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார். 

    • எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
    • சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

    பூச்சிவாக்கம் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவத்தில் சிமெண்ட் முருகன் கொடுத்த புகார்; ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எஸ்சி, எஸ்டி வழக்குபடி வரும் 22ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு நீதிபதி காரில் வைத்து அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், காவல்துறை வாகனத்திலேயே கிளைச்சிறைக்கு வருகை தந்தார். 

    • எஸ்.சி/எஸ்.டி. சட்டப்படி காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
    • சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

    பூச்சிவாக்கம் பேக்கரியில் நடந்த அடிதடி சம்பவத்தில் சிமெண்ட் முருகன் கொடுத்த புகார்; ஒரு மாதமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எஸ்சி, எஸ்டி வழக்குபடி வரும் 22ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிபதி செம்மல் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டு நீதிபதி காரில் வைத்து அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிறை வாசலில் இருந்து டிஎஸ்பி தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎஸ்பி சங்கர் கணேஷ் சக காவலர்கள் உதவியுடன் தப்பியோடியதாக கூறப்படுகிறது. 

    • வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்த சரஸ்வதிக்குளம் பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன.
    • அத்தி வரதர் 10 அடி உயரமும் நான்கு 4 அகலமும் கொண்டவர் முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர்.

    வரதராஜ பெருமாள் கோவில் சிறப்புகள்

    வரதராஜர்

    பிரம்மா தன்னுடைய மனம் தூய்மை பெறுவதற்காக காஞ்சிபுரம் சென்றார். அப்போது அவர் தனது மனைவி சரஸ்வதியை விட்டுவிட்டு மற்ற மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோரை வைத்து அந்த யாகத்தை செய்தார். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி யாகத்தை அழிப்பதற்காக வேகவதி என்ற ஆறாக உருவெடுத்து பாய்ந்தோடி வந்தால் இதையடுத்து பிரம்மதேவன் மகாவிஷ்ணுவான பெருமாளிடம் வேண்டினார். வெள்ளப்பெருக்கு வரும் வழியில் மகாவிஷ்ணுவான பெருமாள் சயனித்து படுத்து கிடந்தார். இதனால் அவரை தாண்டி ஆற்று நீர் செல்ல முடியவில்லை எப்படி பிரம்மன் வேண்டியதும் வரம் தந்தவர் என்பதால் இந்த கோவில் பெருமாள் வரதராஜர் என பெயர் பெற்று உள்ளார்.

    அனந்தசரஸ் திருக்குளம்

    வரதராஜ பெருமாள் கோவிலில் அனந்த சரஸ்வதிக்குளம் பொற்றாமரை திருக்குளம் என 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. மேற்கு ராஜகோபுரத்தில் வடகிழக்கிலும் நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கேயும் அனந்த சரஸ்வதி குளம் இருக்கிறது. இந்த குளத்தில் விமானத்துடன் கூடிய 4 கால் நீராடி மண்டபத்தின் அடியில் தான் அத்திவரதர் சயன கோலத்தில் அருள் பாலிக்கிறார் அத்தி வரதர் 10 அடி உயரமும் நான்கு 4 அகலமும் கொண்டவர் முழுவதும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவர். இவர் திருக்குளத்தின் உள்ளே இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வெளியே வந்து கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். 30 நாட்கள் சயன கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த அற்புதமான நிகழ்வு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது

    தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி

    சிருங்கி பேரார் என்ற முனிவரின் இரண்டு மகன்கள் கவுதம முனிவரிடம் சீடர்களாக இருந்தனர். ஒருமுறை பூஜைக்கு அவர்கள் இருவரும் தீர்த்தம் கொண்டு வந்தனர். அந்த தீர்த்தத்தில் பல்லி கிடந்தது. இதனால் கோபம் கொண்ட கவுதம முனிவர் அவர்கள் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சபித்தார். பிறகு சீடர்களை காஞ்சிபுரம் சென்று வழிபட்டால் மோட்சம் உண்டு என்று கூறினார். இதையடுத்து இருவரும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

    இறைவன் உங்கள் ஆன்மா வைகுண்டம் செல்லும் அதே நேரம் உங்களின் சரீரம் பஞ்சலோகங்களால் எனக்கு பின்புறம் இருக்கட்டும் என அருள்பாளித்தார். மேலும் தன்னை தரிசிக்க வருபவர்கள் உங்களையும் தரிசித்து சகல தோஷங்களும் நீங்க பெறுவார்கள் என அருளினார். அதன்படி இந்த கோவிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன பல்லிகளை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.

    • ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதற்கான விழா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த திருக்குளத்தில் இன்று காலை நடந்தது.

    சன்னியாச தீட்சை

    சுப்பிரமணிய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர மடத்தின் தற்போதைய 70-வது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

    புதிய இளைய பீடாதி

    பீடாதிபதியாக பொறுப்பேற்ற கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோர் கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசனம் செய்தனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி

    இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் சுதா சேஷய்யன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

    பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு இளைய மடாதிபதி ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவில் வளாகம், காஞ்சி சங்கர மடம் ஆகியவை வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.
    • ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.

    காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக 20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட் தேர்வாகியுள்ளார்.

    ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.

    2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர்.

    ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் கணேச சர்மா டிராவிட் பணிபுரிந்து வந்தவர்.

    • குருபகவான் கைகளை கூப்பிய நிலையில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
    • தல தீர்த்தமாக ‘தாயார் குளம்’ உள்ளது.

    கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளதைப் போலவே காஞ்சிபுரத்திலும் பழமையான நவகிரக தலங்கள் அமைந்துள்ளன. அத்தகைய தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, காஞ்சி மாநகரின் தென்திசையில் வேகவதியாற்றின் வடகரையில் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.


    தல வரலாறு

    கோவில்களின் நகரமான காஞ்சியில் அமைந்துள்ள எண்ணற்ற சிவத்தலங்களுள் மிக்க சிறப்புடைய தலங்கள் மூன்று. அவை திருவேகம்பம், கச்சபேசம் மற்றும் காயாரோகணம் ஆகும். இத்தலங்கள் முப்பெருந்தேவியராகிய காமாட்சி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் தவம் செய்து வழிபட்ட பெருமை உடையவை.

    இவற்றுள் காஞ்சிக்கு உயிரென சிறந்த உத்தம கோவிலாக தவத்திரு மாதவச் சிவஞான சுவாமிகள் உரைப்பது காயாரோகணம். காயம் என்றால் 'உடம்பு'. ஆரோகணம் என்றால் 'ஏற்றிக் கொள்ளுதல்'.

    ஈசன் ஒரு சமயம் பிரம்மன் மற்றும் திருமால் ஆகியோரின் இறுதிக்காலத்தில் அவர்களை ஒடுக்கி, அவர்களின் திருஉடலைத் தம் தோள்மீது தாங்கி நடனம் செய்ததால், இத்தலம் காயாரோகணம் என்ற பெயரைப் பெற்றது என்கிறது இத்தல வரலாறு.

    லட்சுமி தேவி, காயாரோகணேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சனை செய்து திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள். குரு பகவான் வேகவதி ஆற்றின் தென்கரையில் உள்ள 'தாயார்குளம்' என வழங்கப்படும் காயாரோகணத் தீர்த்தத்தில் நீராடி காயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவர்களுக்குக் குருவாகும் வரம் பெற்றார்.

    இதனால் இக்கோவிலில் லட்சுமி மற்றும் குரு பகவான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. எமன், காயாரோகணேசுவரரை பூஜை செய்து தென்திசைக்குத் தலைவனாகும் பேறு பெற்றான். இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் செல்வம், அறிவு மற்றும் வீடுபேறும் பெறுவர் என்பது ஐதீகம்.


    கோவில் அமைப்பு

    இத்தலம், நுழைவு வாசலுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலில் குரு பகவான், பிரம்மா, சிவபெருமான், விஷ்ணு, பார்வதி தேவி சிற்பங்கள் அமைந்துள்ளன.

    நுழைவுவாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் காணலாம். உள்ளே பலிபீடமும், நந்தியும் தரிசனம் தருகின்றன.

    கருவறையில் மூலவர் காயாரோகணேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அமைந்து, லிங்க சொரூபத்தில் காட்சி தருகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம் காட்சி தருகிறது.

    கோட்டங்களில் விநாயகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.

    கருவறை கஜப்பிருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தகைய வடிவமைப்பு, தொண்டை மண்டலத்திற்கே உரிய சிறப்பாகும். தெற்கு திசை நோக்கி அமைந்த தனிச் சன்னிதியில் கமலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பாள் காட்சி தந்து அருள்கிறார்.

    சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகற்பக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன், ஸ்ரீமகாலட்சுமி, நவகிரகங்கள், ஸ்ரீபைரவர், சூரிய பகவான் ஆகியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறத்தில் காணப்படும் மண்டபத்தில் நால்வர் சன்னிதி, நாகர்கள் சன்னிதி உள்ளன.


    மேலும் 'மாவிரத லிங்கங்கள்' என அழைக்கப்படும் ஆறு சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அதில் இரண்டு ஆவுடையாருடனும், நான்கு ஆவுடையார் இன்றியும் காணப்படுகின்றன.

    இந்த சிவலிங்கங்களை 'மாவிரத முனிவர்கள்' என்று அழைக்கப்படும் ஆறு முனிவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மாவிரத லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீபாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.

    'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்வார்கள். நவகிரகங்களில் குருபகவான் அதிக நன்மைகளை தருபவர். ஆங்கிரஸ மகரிஷியின் மகனாக பிறந்தவர் குருபகவான். சிறந்த அறிவாற்றலால் 'பிரகஸ்பதி' என்ற பட்டத்தை பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர்.


    கோவிலுக்குள் மேற்கு திசை நோக்கி அமைந்த ஒரு தனி சன்னிதியில் தேவகுரு, பிரகஸ்பதி, நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் கைகளைக் கூப்பிய நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.

    குரு பகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது சிறப்பானதாகும். இத்திருக்கோவில், பக்தர்களால் 'குரு கோவில்' என்று அழைக்கப்படுகிறது.

    குரு பகவான் வருடந்தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இது 'குரு பெயர்ச்சி' எனப்படுகிறது. இந்ந நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.

    இந்த கோவிலின் தல விருட்சமாக 'வில்வ மரம்' உள்ளது. வில்வத்தின் இலை, காய், பழம் முதலானவை நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாகும். இக்கோவிலின் தல தீர்த்தமாக 'தாயார் குளம்' உள்ளது.

    மகாலட்சுமித் தாயார் அமைத்த தீர்த்தம் என்பதால் 'தாயார் குளம்' என்று அழைக்கப்படுகிறது. இது லட்சுமிகுண்டம், குருவார தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

    பொதுவாக குளங்கள் நான்கு மூலை அமைப்புடையதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தின் தீர்த்தம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு செல்வமும் ஞானமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதர்மராஜன் நிறுவி வழிபட்ட தருமலிங்கேசர் கோவில் அமைந்துள்ளது. நெய்தீபம் ஏற்றி தருமலிங்கேசரை வழிபட மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.

    திருப்பணிகள்

    சோழர்களின் காலம் தொடங்கி தற்போது வரை அவ்வப்போது இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கச்சிப்பலதனியும் ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணலாகும் என்ற அப்பர் பெருமானின் பதிகத்தாலும், புராண வரலாறுகளாலும் இத்தலம் மிகப்பழமையான தலம் என்பது தெரிகிறது.இங்கு சோழர்கள் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன.

    முக்கிய விழாக்கள்

    இத்தலத்தில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனையும், அர்ச்சனையும், குருப் பெயர்ச்சி விழாவும் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தனுர்மாத அபிஷேகங்களும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.

    பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி முதலான விழாக்களும் வழக்கமாக நடைபெறுகின்றன. இக்கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிள்ளையார்பாளையம். இந்த பகுதியில் முடங்கு வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள்.
    • போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் கோவில்கள் நிறைந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும், பட்டுச்சேலைக்கு பிரபலமானதாகவும் திகழ்கிறது. இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில், அத்திவரதர் உற்சவம் பிரசித்தி பெற்றது.

    இதனால் காஞ்சிபுரத்திற்கு சுற்றுலாவாக தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். அவர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்வது வழக்கம். இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தினந்தோறும் லட்சக்கணக்கான வியாபாரம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா வேன், பஸ்கள் நகருக்குள் வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பஸ், வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை சுமார் 2 கி.மீட்டர் தூரத்திற்கு முன்பே நிறுத்தி விட்டு நடந்து வரும் நிலை உள்ளது.

    தற்போது வெயில் அதிகரித்து வரும் நிலையில் மதியம் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சுற்றுலா பயணிகள் சிரமத்துடன் நடந்து செல்கிறார்கள்.

    இதில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் நிலைமை மோசமாக உள்ளது.

    மேலும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஒவ்வொரு கோவில்களுக்கும் நடந்து செல்லும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பட்டுச்சேலை வாங்கி செல்ல விரும்புவார்கள். தற்போது உள்ள போக்குவரத்து புதிய விதியால் பட்டுச்சேலை கடைகளில் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் கூறும்போது, இந்த புதிய போக்குவரத்து விதிமுறையால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரத்துக்கு சுற்றுலா வருபவர்கள் கோவில்களை பார்த்து விட்டு நெசவு பட்டுச்சேலைகள் வாங்கிச் செல்ல ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது பட்டுச்சேலை கடைகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    அவர்கள் கார் அல்லது ஆட்டோவை கூடுதலாக வாடகைக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதனால் நகருக்குள் மேலும் போக்குவர்தது நெரிசல் அதிகம் ஆகும்.

    சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தை தேர்வு செய்து வர இனி தயங்குவார்கள். போக்குவரத்து புதிய விதி மீறல்களால் ஏற்படும் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது' என்றார்.

    சுற்றுலா பயணிகள் கூறும்போது, 'காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சுற்றுலா பயணிகளை பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியானால் தான் காஞ்சிபுரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும், வியாபாரமும் பாதிக்காது' என்றார்.

    • குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
    • நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (8-ந்தேதி) காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜாபாத் வட்டத்தில் பூசிவாக்கம், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    கிராமங்களில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×