search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kanchipuram"

    • இந்து வாழ்வியலே சனாதானம்.
    • இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

    சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

    சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.

    இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். 

    • அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகதப் பூஞ்சோலையை பார்வையிட்டனர். பின்னர் அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்தும், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வன அலுவலர் ரவி மீனா,வேளாண்மை இணை இயக்குநர் (பொ)ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
    • பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே உள்ள அய்யம்பேட்டை, நடுத்தெருவை சேர்ந்தவர் ருத்திரகோட்டி. இவரது மனைவி மோகன பிரியா. நெசவு தொழில் செய்து வருகிறார்கள்.

    பட்டு ஜரிகை அடகு கடையும் வைத்து உள்ளனர். இவர்களது மகன் தனுஷ் (வயது21). பி.எஸ்.சி கணிதம் படித்து உள்ள அவர் அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு அரசு பணிக்கான தேர்வும் எழுதி இருந்தார்.

    கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த தனுஷை அவருடைய நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர். அப்போது வெளியே சென்ற தனுஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர். மேலும் தனுஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தனுசின் நண்பர்களிடம் கேட்ட போது அவர்களும் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் வலது கால் ஒன்று தனியாக கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த காலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பாலாற்று பகுதி முழுவதும் கால் துண்டிக்கப்பட்டவரின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதா? என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


    அப்போது பாலாற்றில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இடத்தை தோண்டிய போது அழுகிய நிலையில் தனுசின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தனுஷ் மாயமான அன்று கார் ஒன்று அவ்வழியே செல்வது பதிவாகி இருந்தது. அது அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கொலையுண்ட தனுஷின் நண்பரான விஷ்வாவின் கார் என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது நண்பரான சுந்தர் என்பவருடன் சேர்ந்து தனுசை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு உடலை பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து விஷ்வா, சுந்தர் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    விஷ்வா புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கவும் வீட்டை பழுது பார்க்கவும் சிறுக, சிறுக தனுஷின் பெற்றோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று இருக்கிறார். இந்த பணத்தை விஷ்வா திருப்பி கொடுக்கவில்லை. மேலும் பணத்திற்கான வட்டியும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தனுஷ் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி நெருக்கடி கொடுத்து இருக்கிறார்.

    இதனால் கோபம் அடைந்த விஷ்வா நண்பரான தனுசை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த தனுசை காரில் அழைத்து சென்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தார். இதற்கு உடந்தையாக மற்றொரு நண்பர் சுந்தர் இருந்தார்.

    பின்னர் தனுசின் உடலை பாலாற்றில் மணலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு மூடிச்சென்று உள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் அந்த பகுதியில் இருந்த மணல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றிய நாய்கள் புதைக்கப்பட்ட தனுசின் காலை கடித்து துண்டாக்கி தனியாக இழுத்து வந்து உள்ளன.

    இதன்பின்னரே தனுஷ் நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் வாலாஜாபாத் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
    • நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.

    காஞ்சிபுரம்:

    விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.

    • போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
    • போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

    சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள்.
    • நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகள் கொண்டது. இதில் 31 வார்டு பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ளன. மீதமுள்ள 20 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த முடியாமல் உள்ளது. இதற்கும் நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்க முடியாத சூழ்நிலையில் 51 வார்டுகளில் சுமார் 4 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் தினம்தோறும் சுமார் 100 டன் குப்பைகள் சேக ரிக்கப்படுகிறது. இந்த குப்பைகள் நத்தப்பேட்டை கிடங்கில் கொட்டி அதனை மக்கும் குப்பை மக்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கிறார்கள். தற்போது மக்கள்தொகை பெருக்கம் மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லை விரிவு காரணமாக குப்பைகள் அதிக அளவில் சேகரிக்கப்படுகின்றன. இதனால் குப்பைகளை தரம் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மாநகராட்சி ஊழியர்கள் பலர் குப்பைகளை நத்தப்பேட்டை ஏரிக்கரை பகுதியில் கொட்டி வருகிறார்கள்.

    மேலும் வீடுகளில் இருந்து கழிவு நீர் அனைத்துமே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகின்றன. வழக்கமாக மழைக்காலங்களில் நத்தப்பேட்டை ஏரி, கொலவாய் ஏரி, ரெட்டேரி முழுமையாக நிரம்பினால் உபரி நீர் அருகில் உள்ள வையாவூர், கலியனூர், நெல்வாய் முத்தியால்பேட்டையில் உள்ள சிற்றேரி, தென்னேரிக்கு செல்லும். குப்பை கழிவுகளால் நத்தப்பேட்டை ஏரி மாசு அடைந்து வருவதால் அதன் அருகே உள்ள வையாவூர் ஏரியும் தற்போது மாசு அடைந்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாநகராட்சி மையப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள மஞ்சள் நீர் கால்வாய் வழியாக வெளியேறும் கழிவு நீர் அங்கிருந்து நத்தப்பேட்டை பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றடையும். அங்கு கழிவு நீரை சுத்திகரித்து நத்தப்பேட்டை ஏரியில் தண்ணீர் கலப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

    ஆனால் இந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக கால்வாயில் வரும் கழிவு நீர் அனைத்தும் அப்படியே நத்தப்பேட்டை ஏரியில் கலந்து வருகிறது. இதனால் நத்தப்பேட்டை ஏரிக்கரை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஏரியின் தண்ணீர் வையாவூர் ஏரிக்கும் செல்வதால் அந்த ஏரி தண்ணீரின் நிலையும் மோசமடைந்து உள்ளது.

    நத்தப்பேட்டை ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய நீர் பச்சை மற்றும் கருப்பு நிறமாக மாறி வருவதால் அந்த தணணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மாநகராட்சி குப்பை கிடங்கில் உரிய பராமரிப்பு செய்யவில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பசுமை தீர்ப்பாயம் ரூ.93 லட்சம் அபராதம் விதித்தனர். ஆனால் இதுவரை அதனை செலுத்த முடியாமல் மாநகராட்சி காலதாமதம் செய்து வருகிறது. மேலும் அபராதம் விதித்தும் தற்போது வரை ஏரியை அசுத்தம் செய்யும் பணியிலேயே மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. ஏரிநீர் மாசடைந்து வருவதால் பறவையின் வரத்தும் குறைந்து உள்ளது. இந்த ஏரியை ஒரு சுற்றுலாத்தலமாகவோ, படகு சவாரி தலமாகவோ மாற்றினால் பொழுதுபோக்குக்காக பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றனர்.

    மேலும் இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் கேட்டபோது, மஞ்சள் நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டு அதன் மீது சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    நத்தப்பேட்டை மாநகராட்சி குப்பைக்கிடங்கு அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ரூ.60 கோடிநிதி ஒதுக்கப்பட்டு

    உள்ளது. இதற்கான பணி விரைவில் நடைபெறும் என்றனர்.

    • பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.
    • வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் என அழைக்கப்படும் அத்தி வரதர் கோவிலில் கோடை காலத்தை குறிக்கும் வகையில் வசந்த உற்சவம் நடைபெற்று வருகிறது. வசந்த உற்சவத்தின் 7-ம் நாளான இன்று குதிரை வாகன வீதி உலாவும், அனந்த சரஸ் திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.

    தீர்த்தவாரி உற்சவத்தை யொட்டி வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளுக்கு மஞ்சள், சந்தனம், துளசி, உள்ளிட்டவைகளால் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு பஞ்சவர்ண மலர் மாலைகள் அணிவித்து சிறப்பு தூப தீப ஆராதனைகள் செய்யப்பட்டது.

    வசந்த மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட வரதராஜ பெருமாளை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து மேளதாள வாத்தியங்கள் முழங்க சன்னதி வீதி, நான்கு மாடவீதியில் வீதி உலா வந்தனர். தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா வந்த வரதராஜ பெருமாளுக்கு திரளான பக்தர்கள் வழியெங்கும் கற்பூர ஆரத்தி எடுத்து தரிசனம் செய்து வழிபட்டனர்.

    இதைதொடர்ந்து கோவிலுக்கு திரும்பிய வரதராஜ பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்துக்கு அருகே எழுந்தருளியதை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் வேதங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. தீர்த்தவாரி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    • தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.
    • பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தென் னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங் களில் லேசான மழை பெய்யும்.

    புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை இன்று பெய்யக் கூடும்.

    கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை செய்யக்கூடும். இடி, மின்னலுடன் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. 5 மாதத்திற்கு பிறகு சென்னையில் 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது.
    • வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பட்டுச்சேலைகள் உலகப்புகழ் பெற்றது. இங்குள்ள பட்டுச்சேலைகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை விற்கப்படுகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமானோர் வந்து பட்டுச்சேலைகளை வாங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனை குறைந்து உள்ளது. தற்போது, பட்டுச்சேலை விற்பனையில் தொடர்ந்து ஏற்படும் மந்தம் காரணமாக, பட்டு கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறி வருகின்றன. கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கங்களில் விற்பனை குறைந்ததால் சுமார் ரூ.110 கோடி அளவிற்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டுச்சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக கைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களிலும் ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனை ஆகாமல் குவிந்து கிடக்கின்றன.

    பட்டு ஜரிகை மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு காரணமாக, பட்டுச்சேலைகளின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் அதன் விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறை, மற்றும் போலி பட்டுகள் விற்பனையும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

    மேலும் விற்பனை மந்தம் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தியும் காஞ்சிபுரத்தில் குறைக்கப்பட்டு உள்ளது. மூன்று சேலைகளை ஒரு மாதத்தில் நெய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், தற்போது 2 மாதங்களுக்கு ஒருமுறை தான் பணி வழங்கப்படுவதாக நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    வழக்கமாக 2 அல்லது 3 ஆண்டுகளைக் கடந்த பட்டுச்சேலைகள் 65 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும். தற்போது அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும், ஆயிரக்கணக்கான பட்டுச்சேலைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளதால், அவற்றை தள்ளுபடியில் விற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே கூட்டுறவு சங்கங்களில் விற்பனை ஆகாமல் தேங்கி கிடக்கும் பட்டுச்சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கைத்தறி சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து கைத்தறித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், ஆண்டுதோறும் பட்டுச்சேலைகளை கொள்முதல் செய்து வருகிறது. அடிக்கடி பட்டுச்சேலை கண்காட்சி நடத்தி விற்பனை செய்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், ஊழியர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கும்போது, கைகளால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள், கைத்தறி பொருட்களை வாங்கி வழங்கும்படி தொழிற்சாலைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.

    இதுகுறித்து காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஜி விஸ்வநாதன் கூறும்போது, தங்கம், வெள்ளி விலைவாசி உயர்வின் காரணமாக பட்டுச்சேலை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் ஜரிகை விலை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக ரூ.30 ஆயிரம் விற்க வேண்டிய ஒரு பட்டுச்சேலையின் விலை ரூ.50 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. மேலும் கடும் வெயில் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காரணமாக பட்டுச்சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    முக்கியமாக காஞ்சிபுரத்தில் போலி பட்டு சங்கங்கள் அதிகமாக தொடங்கப்பட்டுள்ளன. அரசு சங்கங்கள் பெயர் பலகை போலவே போலி சங்கங்கள் பெயர் மற்றும் பட்டுச்சேலை கொடுப்பதற்காக அட்டைப்பெட்டி, பை ஆகியவை ஒரிஜினல் சங்கங்கள் போலவே தயாரித்து வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் ஏமாற்றுகிறார்கள்.

    இதுகுறித்து அரசு பட்டு கூட்டுறவு சங்கங்களின் சார்பில் பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பட்டுச்சேலைகள் தேக்கம் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக புதிய சேலைகளை நெய்வதற்கு நெசவாளர்களுக்கு தொழில் சரிவர கொடுக்க முடியவில்லை. காரணம் ஏற்கனவே பல ரக சேலைகள் சொசைட்டிகளில் தேங்கியுள்ள காரணத்தினால் புதிதாக தொழில் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக நெசவாளர்கள் நெசவுத்தொழிலை விட்டுவிட்டு பல்வேறு வேலைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

    • சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள்.
    • வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.

    சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதாக கூறி உள்ளனர். 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 366 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120-ன்படி வீட்டில் இருந்த படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

    வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் இன்று முதல் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதன்படி, சென்னையிலும் இன்று முதல் தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர்.

    அதன்படி, தபால் வாக்குபதிவு இன்று (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இந்த பணிக்கா

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச் சீட்டு உள்ள பெட்டியை 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கபடுகிறது.

    மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    ×