என் மலர்
நீங்கள் தேடியது "பரிகார தலம்"
- குருபகவான் கைகளை கூப்பிய நிலையில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
- தல தீர்த்தமாக ‘தாயார் குளம்’ உள்ளது.
கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ளதைப் போலவே காஞ்சிபுரத்திலும் பழமையான நவகிரக தலங்கள் அமைந்துள்ளன. அத்தகைய தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, காஞ்சி மாநகரின் தென்திசையில் வேகவதியாற்றின் வடகரையில் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

தல வரலாறு
கோவில்களின் நகரமான காஞ்சியில் அமைந்துள்ள எண்ணற்ற சிவத்தலங்களுள் மிக்க சிறப்புடைய தலங்கள் மூன்று. அவை திருவேகம்பம், கச்சபேசம் மற்றும் காயாரோகணம் ஆகும். இத்தலங்கள் முப்பெருந்தேவியராகிய காமாட்சி, சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் தவம் செய்து வழிபட்ட பெருமை உடையவை.
இவற்றுள் காஞ்சிக்கு உயிரென சிறந்த உத்தம கோவிலாக தவத்திரு மாதவச் சிவஞான சுவாமிகள் உரைப்பது காயாரோகணம். காயம் என்றால் 'உடம்பு'. ஆரோகணம் என்றால் 'ஏற்றிக் கொள்ளுதல்'.
ஈசன் ஒரு சமயம் பிரம்மன் மற்றும் திருமால் ஆகியோரின் இறுதிக்காலத்தில் அவர்களை ஒடுக்கி, அவர்களின் திருஉடலைத் தம் தோள்மீது தாங்கி நடனம் செய்ததால், இத்தலம் காயாரோகணம் என்ற பெயரைப் பெற்றது என்கிறது இத்தல வரலாறு.
லட்சுமி தேவி, காயாரோகணேஸ்வரரை வில்வத்தால் அர்ச்சனை செய்து திருமாலைத் தன் கணவனாகப் பெற்றாள். குரு பகவான் வேகவதி ஆற்றின் தென்கரையில் உள்ள 'தாயார்குளம்' என வழங்கப்படும் காயாரோகணத் தீர்த்தத்தில் நீராடி காயாரோகணேசுவரரை வழிபட்டு, தேவர்களுக்குக் குருவாகும் வரம் பெற்றார்.
இதனால் இக்கோவிலில் லட்சுமி மற்றும் குரு பகவான் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. எமன், காயாரோகணேசுவரரை பூஜை செய்து தென்திசைக்குத் தலைவனாகும் பேறு பெற்றான். இத்தலத்திற்கு வந்து வழிபடுவோர் செல்வம், அறிவு மற்றும் வீடுபேறும் பெறுவர் என்பது ஐதீகம்.

கோவில் அமைப்பு
இத்தலம், நுழைவு வாசலுடன் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசலில் குரு பகவான், பிரம்மா, சிவபெருமான், விஷ்ணு, பார்வதி தேவி சிற்பங்கள் அமைந்துள்ளன.
நுழைவுவாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் காணலாம். உள்ளே பலிபீடமும், நந்தியும் தரிசனம் தருகின்றன.
கருவறையில் மூலவர் காயாரோகணேஸ்வரர் கிழக்கு திசை நோக்கி அமைந்து, லிங்க சொரூபத்தில் காட்சி தருகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பம் காட்சி தருகிறது.
கோட்டங்களில் விநாயகப்பெருமான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா மற்றும் துர்க்கை ஆகிய தெய்வங்கள் காட்சி தருகின்றனர். துர்க்கைக்கு எதிரில் சண்டிகேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது.
கருவறை கஜப்பிருஷ்ட வடிவத்தில் அமைந்துள்ளது. இத்தகைய வடிவமைப்பு, தொண்டை மண்டலத்திற்கே உரிய சிறப்பாகும். தெற்கு திசை நோக்கி அமைந்த தனிச் சன்னிதியில் கமலாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பாள் காட்சி தந்து அருள்கிறார்.
சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீகற்பக விநாயகர், வள்ளி தேவசேனா சமேத ஆறுமுகன், ஸ்ரீமகாலட்சுமி, நவகிரகங்கள், ஸ்ரீபைரவர், சூரிய பகவான் ஆகியோரின் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறத்தில் காணப்படும் மண்டபத்தில் நால்வர் சன்னிதி, நாகர்கள் சன்னிதி உள்ளன.

மேலும் 'மாவிரத லிங்கங்கள்' என அழைக்கப்படும் ஆறு சிவலிங்கத் திருமேனிகள் உள்ளன. அதில் இரண்டு ஆவுடையாருடனும், நான்கு ஆவுடையார் இன்றியும் காணப்படுகின்றன.
இந்த சிவலிங்கங்களை 'மாவிரத முனிவர்கள்' என்று அழைக்கப்படும் ஆறு முனிவர்கள் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மாவிரத லிங்கங்களுக்கு அருகில் ஸ்ரீபாலமுருகன் நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார்.
'குரு பார்க்க கோடி நன்மை' என்று சொல்வார்கள். நவகிரகங்களில் குருபகவான் அதிக நன்மைகளை தருபவர். ஆங்கிரஸ மகரிஷியின் மகனாக பிறந்தவர் குருபகவான். சிறந்த அறிவாற்றலால் 'பிரகஸ்பதி' என்ற பட்டத்தை பெறக்கூடிய அளவிற்கு உயர்ந்தவர்.

கோவிலுக்குள் மேற்கு திசை நோக்கி அமைந்த ஒரு தனி சன்னிதியில் தேவகுரு, பிரகஸ்பதி, நவகிரகங்களில் ஒருவரான குருபகவான் கைகளைக் கூப்பிய நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.
குரு பகவானின் அருள் இருந்தால் ஒருவருக்கு திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானை வழிபடுவது சிறப்பானதாகும். இத்திருக்கோவில், பக்தர்களால் 'குரு கோவில்' என்று அழைக்கப்படுகிறது.
குரு பகவான் வருடந்தோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். இது 'குரு பெயர்ச்சி' எனப்படுகிறது. இந்ந நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
இந்த கோவிலின் தல விருட்சமாக 'வில்வ மரம்' உள்ளது. வில்வத்தின் இலை, காய், பழம் முதலானவை நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த ஒரு மருந்தாகும். இக்கோவிலின் தல தீர்த்தமாக 'தாயார் குளம்' உள்ளது.
மகாலட்சுமித் தாயார் அமைத்த தீர்த்தம் என்பதால் 'தாயார் குளம்' என்று அழைக்கப்படுகிறது. இது லட்சுமிகுண்டம், குருவார தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.
பொதுவாக குளங்கள் நான்கு மூலை அமைப்புடையதாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இத்தலத்தின் தீர்த்தம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு செல்வமும் ஞானமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தாயார் குளத்தின் மேற்குக் கரையில் எமதர்மராஜன் நிறுவி வழிபட்ட தருமலிங்கேசர் கோவில் அமைந்துள்ளது. நெய்தீபம் ஏற்றி தருமலிங்கேசரை வழிபட மரண பயம் நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்பணிகள்
சோழர்களின் காலம் தொடங்கி தற்போது வரை அவ்வப்போது இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கச்சிப்பலதனியும் ஏகம்பத்தும், கயிலாய நாதனையே காணலாகும் என்ற அப்பர் பெருமானின் பதிகத்தாலும், புராண வரலாறுகளாலும் இத்தலம் மிகப்பழமையான தலம் என்பது தெரிகிறது.இங்கு சோழர்கள் காலத்திய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன.
முக்கிய விழாக்கள்
இத்தலத்தில் நாள்தோறும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. குரு பெயர்ச்சி காலத்தில் லட்சார்ச்சனையும், அர்ச்சனையும், குருப் பெயர்ச்சி விழாவும் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தனுர்மாத அபிஷேகங்களும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி முதலான விழாக்களும் வழக்கமாக நடைபெறுகின்றன. இக்கோவில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 07.30 மணி வரையும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பெரிய காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பிள்ளையார்பாளையம். இந்த பகுதியில் முடங்கு வீதியில் இக்கோவில் அமைந்துள்ளது.
- இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.
- மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.
நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற ராகு-கேது நிவர்த்தி தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக கூறப்படும் நாகூர் நாகநாத சாமி கோவில் காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் உள்ளது.
ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் நாகநாத சாமியையும், நாகவல்லி தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால் ராகு-கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகி குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். ராகுபகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாக கூறப்படுகிறது.
காசிக்கு இணையானதாக குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலம் ஆகும்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தானம் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் என கூறப்படுகிறது. இங்கு கிருத்திகை நட்சத்திர தினத்தில் சாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாகூர் நாகநாத சாமி கோவில் இறைவன் நாகநாதர், நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. மேலும் இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச்சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் உள்ளன.
நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை. இக்கோவிலின் கன்னி பகுதியில் நாககன்னி, நாகவல்லி சமேதராக ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது மிகவும் சிறப்புக்குரியது ஆகும்.
நாகப்பட்டினம் அருகே உள்ள நாகூரில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள நாகூர் நாகநாதர் கோவிலை அடையலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.
- களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும்.
- 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஏழாம் வீடு மனைவி குறிப்பதாகும் 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும். ஜோதிடரிடம் பெரியோர்கள் மிக ஆர்வமாக கேட்கும் கேள்விகள் மனைவி எவ்வாறு அந்நியமா, எந்தத் திசை, கருப்பா சிவப்பா என்று தான் கேட்பார்கள் இந்த களத்திரகாரகன் சுக்கிரனும் அல்லது களத்திர ஸ்தானாதிபதி இவரில் ஒருவர் நிறத்துக்கு எதுவோ அதுதான் மனைவி இருக்கும் ஒரு ஆக அமையும் மூல நூல்கள் அனைத்திலும் திருமணம் செய்ய வேண்டிய பையனுக்கு அமையக்கூடிய பெண் எந்தத் திசையில் அமைவாள் என்று கூறப்பட்டுள்ளது பெண்ணிற்கு மணமகன் திசை குறித்து குறிப்பு இல்லை. இது ஓரளவுக்கு ஒத்துவரும்.
களத்ரதோஷம்:
1. திருமணம் காலதாமதமாக நடைபெறும் .
2.திருமணம் செய்ய பல ஆண் பெண் ஜாதகங்களைப் பார்த்து அவர்களிடம் அலைந்து பின்னர் நிச்சயமாகும்.
3. நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போகும் அமைப்பு
4. கூடிவரும் திருமணம் நின்று போகும் அளவிற்கு அல்லது மன வருத்தம். களத்ர தோஷம் ஏற்படக் காரணம்:
1.லக்னத்திற்கு ஏழில் சனி செவ்வாய் சேர்ந்திருத்தல்.
2. லக்னத்திற்கு ஏழில் சுக்ரன் நீசம் பெற்று இருந்து சுக்ர தசை நடத்தல்.
3. லக்னத்திற்கு ஏழுக்குடையவன் , 6,8,12 -ல் தனித்து இருந்தாலும் , பாபக்கிரஹங்களுடன் சேர்ந்து இருப்பதும்.
4. லக்னத்தில் இருந்து 2,7,9 ல் பாபக் கிரஹங்கள் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.
5. லக்னத்தில் இருந்து 7 – க்குடையவன் தசை நடப்பது.
6 . ஏழில் சனி , செவ் , ராகு அல்லது கேது சேர்ந்திருப்பது.
7. நான்காம் இடத்தில் சனி , செவ்வாய் , ராகு அல்லது கேது இருத்தல்.
களத்ர தோஷ பரிகாரங்கள் :
`பெற்ற தாயாருக்கு உடுத்த துணி இல்லை. பையன் காசியில் சென்று வஸ்திர தானம் செய்தானாம். இது பழமொழி. பெற்ற தாயாருக்கு எதுவும் கொடுக்காமல், கோடி கோடியாகத் தானம் செய்தாலும் பலன்தருமா? இதுபோல், திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ளவர்கள் உள்ளூர் தெய்வம் மற்றும் குலதெய்வம் ஆகியவைகளை வணங்காமல், தோஷ பரிகாரம் என்று திருமணஞ்சேரி, காளகஸ்தி, சூரியநானார் கோவில் என்று வழிபாடுகள் நடத்துவதில் என்ன பிரயோசனம்?
எனவே குலதெய்வம் கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் வீட்டில் சுமங்கிலியாக இறந்த முன்னோர்களுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி சுமங்கிலி பூஜை செய்ய வேண்டும். ஸ்ரீ மஹாலெஷ்மி, கௌரி பூஜைகள் செய்யலாம்.
தீர்க்க சுமங்கலிகளாக வீட்டிற்கு வரும் பெண்களுக்கு நல்ல மஞ்சள் குங்குமம் கொடுத்து அவர்கள் ஆசிர்வாதம் பெற வேண்டும். எந்தெந்த கிரஹத்தால் களத்ர தோஷம் ஏற்பட்டுள்ளதோ அந்த கிரஹங்களுக்குரிய கடவுளை வழங்க வேண்டும்.
- பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இன்று ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், விடுமுறை தினத்தையொட்டியும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விடுமுறை நாட்களில் ஏராளமான கூட்டம் அலைமோதுவது வழக்கம். அந்த வகையில் இன்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை வரும் கூட்டத்தை விட சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால் தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரம் ஆகியது.
வழக்கம் போல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டது. 4.30 விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலிசார் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலை ஓரத்திலும், கோவில் அருகில் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் இடத்திலும் ஏற்பாடு செய்திருந்தனர்.






