search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிகாரம்"

    ஆகாச கருடன் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.
    ஆகாசக் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

    மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு.

    இந்தக் கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. வீட்டிற்கும் நமக்கும் ஏற்படும் திருஷ்டி, தோஷங்களைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் முதலான மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் இந்த கிழங்கை திருஷ்டிக்காக வீடுகளில் கட்டி தொங்க விடுகின்றனர். வராந்தாவின் மேல் தளத்திலோ அல்லது நிலவரையின் நடுப்பகுதியிலோ இதனை கட்டி வைப்பதால் வீட்டிற்குள் எந்தவித விஷமுள்ள ஜந்துக்களும், சிறிய பூச்சிகளும் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இதன் வாசம் அவைகளுக்கு பிடிப்பதில்லையாம். உங்கள் வீட்டில் எந்த வகையான விஷ பூச்சிகளும் வராமல் இருப்பதற்கு இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    முக்கியமாக பில்லி, சூனியம், ஏவல் போன்ற எத்தகைய தீய சக்திகளும் உங்கள் வீட்டில் இருக்கும் பட்சத்தில் இந்த கிழங்கு அதனை உட்கிரகித்து தன்னை தானே தற்கொலை செய்து கொண்டு அழிந்து விடும். அதாவது கொடிகள் வளராமல் காய்ந்துவிடும். இதனால் அந்த வீட்டில் இருப்போர் பல பிரச்சனைகளில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளலாம். பின்னர் அதற்குரிய பரிகாரங்கள் மேற்கொண்டு அல்லது பூஜைகள் செய்து விட்டு புதியதாக ஒரு கிழங்கை வாங்கி இதே போல் கட்டி வைத்து விடலாம்.

    மாறாக உங்கள் வீட்டில் தீய சக்திகளன்றி நல்ல சக்திகள் இருக்குமேயானால் இந்த கிழங்கு முளைவிட்டு பசுமையான கொடிகளாக வளரக்கூடியது. மிகவும் அழகாக காட்சியளிக்கும். பசுமை தன்மை இருக்கும் வரை உங்கள் இல்லம் மகிழ்ச்சிகரமான இல்லமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இதன் விசித்திரமான தோற்றம், வித விதமான தோற்றம் காரணமாக இதனை கட்டி தொங்க விட்டால் அதன் நிழல் கருடன் பறப்பது போன்ற பிம்பத்தை உருவாக்கும். இதனால் பாம்புகள் பயந்து ஓடி ஒளிந்து கொள்ளும். ஆகாயத்தில் கருடன் பறப்பது போன்ற தோற்றமுடையதால் இந்த பெயர் பெற்றது என்று கருதப்படுகிறது.

    வீட்டில் திருஷ்டி முழுவதும் கழிந்துவிடும். இல்லத்தில் பொன்னும் பொருளும் சேரும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
    பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.
    ஒருவருக்கு ஜோதிட ரீதியாக திருமணமாகும் காலம் பற்றி பார்க்கலாம்.

    1. ஒருவருக்கு ஏழாம் அதிபதி தசாபுத்திகள் நடப்பில் இருந்து, கோச்சாரத்தில் குரு ஏழாம் இடத்தை, ஏழாம் அதிபதியை பார்க்கும் பொழுது திருமணமாகும்.
     
    2. இரண்டாம் அதிபதியின் தசாபுத்திகள் நடைபெறும் காலத்தில், களத்திர ஸ்தானத்தோடு குரு தொடர்பு கொள்ளும்பொழுது திருமணமாகும்.

    3. எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் சுக்கிர தசா, புத்திகளில் திருமணமாகும். சாத்தியக் கூறுகள் மிகுதி.

    4.ஏழாம் அதிபதி ராகு ,கேதுக்களின் நட்சத்திரங்களில் அமர்ந்திருந்தால், ராகு, கேதுக்களின் தசா புத்திகள் திருமணத்தை நடத்தித் தரும்.
     
    5. ஏழாமிடத்தில் ராகு கேதுக்கள் இருந்தால், தான் நின்ற களத்திர ஸ்தானத்து பலன்களை ராகு ,கேதுவே எடுத்துச் செய்யும்.

    6. விரைவில் குழந்தை பெற்று குடும்பம் அமையக்கூடிய, நட்சத்திர சாரத்தை, ராகு கேது பெற்றிருந்தாலும், அந்த காலகட்டங்களிலும் சிலருக்கு திருமணம் நடக்கும்.
     
    7. களத்திர ஸ்தானாதிபதியின், நட்சத்திர சாரம் வாங்கிய கிரகத்தின் தசா,புத்திகளும் திருமணத்தை நடத்தி தரும்.

    8. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியின் தசா புத்திகளும் சிலருக்கு திருமணம் நடத்தும்.

    - இந்த விதிகளின்படி பெரிய பாதிப்பு இல்லாத களத்திர தோஷத்திற்கு திருமணம் நடக்கும்.திருமண வாழ்க்கை பாதிப்பைத் தராது. பெரிய பாதிப்பு இருந்து தசா புக்தியும் சாதகமாக அமையாதவர்களுக்கு கால தாமத திருமணம் நடக்கும் அல்லது திருமணம் நடக்காது அல்லது திருமண வாழ்க்கையில் தோல்வியை சந்திப்பார்கள்.

    பாரிகாரங்கள்

    பொதுவாக எந்த தோஷமாக இருந்தாலும் எல்லா காலகட்டங்களிலும் பாதிப்பை தராது. தோஷத்துடன் தொடர்புடைய கிரகங்களின் தசா, புக்தி காலங்களில் மட்டுமே பாதிப்பைத் தரும். வீரியம் கடுமையாக இருந்தால் திருமணம் நிச்சயமான நாள் முதல் சிறு சிறு பிரச்சினை தோன்றி முடிவில் எதிர்பாராத பின் விளைவுகளைத் தரும். எனவே ஜாதகத்தில் களத்திர தோஷம் இருந்தால், அந்தக் களத்திர தோஷம் எந்த காலகட்டங்களில் செயல்படும், என்பதை அறிந்து, அதற்கேற்ற தசா புத்தி அமைப்புள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.

    அதாவது திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தது 25 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சாதகமான தசா புத்திகள் நடக்க வேண்டும். மேலும் திருமணத்திற்கு முன்னரே சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய வழிபாட்டு பரிகார முறைகளை மேற்கொள்வது நல்லது.

    களத்திர தோஷமுடைய ஜாதகத்திற்கு அதே அமைப்புடைய ஜாதகத்தை பொருத்துவதே நிரந்தர தீர்வு. அத்துடன் திருமண வாழ்வில் எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்வதே மிகச் சிறந்த பரிகாரமாக அமையும்.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.

    ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் நெருங்கிய குடும்பத்து உறவாக இருப்பார்கள்.தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் மேல் அன்பும் அதிக அக்கறையும் இருக்கும்.கணவன், மனைவி இருவருக்குமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள். திருமணம் முடிந்தவுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள்.
     
    ஏழாம் அதிபதி குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். பாவகிரகங்கள் சம்பந்தம் இருந்தால் போராட்டமான வாழ்க்கை, அவமானம், பிரிவு அல்லது இழப்பு ஏற்படும்.
     
    ஏழாம் அதிபதி சகாய ஸ்தானமான மூன்றில் நின்றால் வாழ்க்கைத் துணை வீட்டின் அருகில் இருப்பார். தெய்வ பக்தியும், ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பார். வாலிப வயதில் சீக்கிரமே திருமணம் நடக்கின்றது. சிலர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றவர்களை எதிர்த்து சுய விருப்ப விவாகம் புரிகின்றனர்.
     
    ஏழாம் அதிபதி சுக ஸ்தானமான நான்கில் இருந்தால் தாய் வழி உறவில் திருமண வாய்ப்பு அதிகம். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள். கணவனால் மனைவிக்கு மனைவியால் கணவனுக்கு ஆதாயம் உண்டு. குறிப்பாக குடும்ப சொத்து வெளியில் சென்று விடக் கூடாது என்பதற்காக நடக்கும் திருமணமாகும். உபய லக்னமாக இருந்தால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு உண்டு. எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக்குடையவன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.

    5, 7-ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும்.
     
    ஏழாம் அதிபதி ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணைக்கு நோய் பாதிப்பு உண்டாகும் அல்லது கடனால் அவஸ்தை உண்டாகும். வாழ்க்கைத்துணை ஊதாரியாக வாழ்வார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மிகுதியான கருத்து வேறுபாடு உண்டு. விவாகரத்தில் முடியும் வாய்ப்பு அதிகம்.

    ஏழாம் அதிபதி ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் பலருடைய கணிப்பு. ஆனால் ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையின் கை ஒங்கும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். அதனால் மிகுதியான ஈகோவால் தம்பதிகள் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன.

    ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். பலருக்கு முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து, கோர்ட், கேஸ் என அழைந்து மன நோயாளியாகுவார்கள். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும் ஏழாம் அதிபதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்றால் பூர்வ ஜென்ம பாக்கிய பலத்தால் ஆதர்ஷன தம்பதியாக வாழ்வார்கள். வாழ்க்கை துணை தைரியமானவர். அவரின் சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

    ஏழாம் அதிபதி பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணை சுய தொழில் செய்பவராக இருப்பார் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். சுய கவுரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில் உத்தியோகம் உண்டு.

    சொத்து ககம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. ஏழாம் அதிபதி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு.7 ம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்திவிடும்.

    ஏழாம் அதிபதி பனிரென்டாம் இடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் வாழ்க்கைத் துணையால் நிறைய விரயங்களை சந்திப்பார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள்.

    கடுமையான திருமணத் தடையை தருகிறது. பலருக்கு திருமணம் நடப்பதில்லை. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக வாழ்க்கைத் துணையை நம்பியே பிழைக்கிறார்கள்.
    களத்திர தோஷமும் திருமண காலமும்

    குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. குருபலம் வந்தால் மட்டுமே திருமணம் ஆகாது என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
     
    ஒருவருக்கு இரண்டு வருடத்திற்கு, ஒருமுறை குருபலம் வரும். குரு பலம் இருந்தால் திருமணம் நடந்து விடும் என்றால் தசா புக்திக்கு வேலையே கிடையாது. அத்துடன் குரு பலம் மட்டுமே திருமணத்தை நடத்தி வைத்தால் 40 வயதை கடந்தும் திருமண வாழ்க்கையை சுவைக்காத முதிர்கன்னிகள், காளையர்களுக்கு ஏன் திருமணம் நடைபெறவில்லை. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.
    சிலருக்கு திருமணத்தை நடத்தி தராமல் தோஷத்தை உமிழும் இந்த கருணையற்ற களத்திர தோஷம் பலருக்கு திருமணம் நடந்த பிறகு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
    திருமணம் தொடர்பான பாவகங்களான 1 ,2,7,8 ஆகிய ஸ்தானங்களில் அசுப கிரகங்களான சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது அமர்வது அல்லது ஏழாம் இடத்தில் நீசம், அஸ்தமனம் அடைந்த கிரகங்கள் அமர்வதாகும்.

    இந்த தோஷ அமைப்பை பெற்றவர்களுக்கு தாமதத் திருமணம் அல்லது திருமணமே நடக்காத நிலை இருக்கும் அல்லது குடும்ப சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாதவருடன் வாழ்வது.

    அல்லது சமமான அழகு, படிப்பு, அந்தஸ்து, படிப்பறிவு இல்லாதவர்களுடன் வாழ்வது அல்லது ஒரே வீட்டில் சதா சண்டை சச்சரவுடன் வாழ்வது அல்லது ஒருவர் குறையை மற்றவர் பெரிதுபடுத்தி நிம்மதியை இழப்பது அல்லது தம்பதிகள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்வது அல்லது தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக கருத்து வேறுபாடு இல்லாமல் பிரிந்து வாழ்வது அல்லது கருத்து வேறுபாடு காரணமாக நிரந்தரமாக பிரிந்து வாழ்வது அல்லது விவாகரத்து பெறுவது அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடுவது போன்ற ஏதாவது இடரைத் தந்து கொண்டே இருக்கும்.

    உளவியல் ரீதியாக ஆயிரம் ஜாதகத்தை ஆய்விற்கு எடுத்துக் கொண்டால் 900 ஜாதகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கவே செய்யும். பலருக்கு களத்திர தோஷ பாதிப்பு இருந்தாலும் களத்திர ஸ்தானம் எனும் 7மிட அதிபதி நின்ற நிலைக்கு ஏற்பவே திருமண வாழ்க்கை அமையும். 7-ம் அதிபதியை கருத்தில் கொண்டு களத்திர தோஷ பாதிப்பை முடிவு செய்ய வேண்டும். ஏழாம் அதிபதி ஜாதகத்தில் கெட்டால், திருமணம் கேள்விக்குறியாகும் அல்லது சில நேரங்களில் மிக மிக தாமதமாக திருமணம் அமையும்.

    களத்திர தோஷம் உள்ள ஆண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் சுக்ரனும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது.
    அதேபோல் களத்திர தோஷம் உள்ள பெண் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியும் செவ்வாயும் வலுப்பெற்றால் திருமண வாழ்க்கை பாதிக்காது. இதுவே ஜோதிட சூட்சமம். இந்த சூட்சமத்தை பின்பற்றாமல் 7-ம் இடத்தில் நிற்கும் அசுப கிரகங்களை மையப்படுத்தி களத்திர தோஷம் என பலரின் திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்குவது நியாயமா? ஏழாம் அதிபதியும் திருமண வாழ்க்கைக்கு முக்கியம்.

    மேலும் களத்திர தோஷம் பெண்ணிற்கு மட்டும் பார்க்க வேண்டும். ஆண்களுக்கு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    புதன்கிழமைகளிலும் நம்முடைய நட்சத்திர நாளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கல்வி அறிவில் ஜொலிக்கலாம்.
    திருவெண்காடு திருத்தலத்தில் புதன் பகவானுக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது. இந்தத் தலத்தில் உள்ள இறைவனின் திருநாமம் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்.

    புதன்கிழமைகளிலும் நம்முடைய நட்சத்திர நாளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவெண்காடு திருத்தலத்துக்கு வந்து, ஸ்வேதாரண்யேஸ்வரரையும் புதன் பகவானையும் வழிபட்டுப் பிரார்த்தனை செய்தால், கல்வி அறிவில் ஜொலிக்கலாம். பேச்சு வன்மை பலப்படும். ஜோதிடத்தில் வல்லுநராகலாம். நடனம், நாட்டியம், இசை வாத்தியக்கருவிகள், பாடுதல் முதலான கலைகளில் சிறந்து விளங்கலாம். எந்த வித்தையைக் கற்றுக் கொண்டாலும் அதில் தேர்ந்தவர் எனப் பேரெடுக்கலாம் என்கிறார்கள் ஆச்சாரயப் பெருமக்கள்.

    இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்தத் தலத்தில் மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இந்தத் தீர்த்தங்களில் நீராடி வணங்கினால், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    சீர்காழிக்கு அருகில் 19 கி.மீ. தொலைவில் உள்ள திருவெண்காடு புதன் பரிகாரத் திருத்தலத்துக்கு வந்து சிவனாரையும் புதன் பகவானையும் வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டிய வரங்களைத் தந்தருள்வார் ஸ்வேதாரண்யேஸ்வரரும் புதன் பகவானும்!
    வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூட இங்கு பரிகாரம் செய்தால் விரைவில் நிறைவேறும்.
    தலைநகர் சென்னைக்கு அருகில் சாஸ்திர நூல்கள் ‘நகரேஷீ காஞ்சி’ எனச் சிறப்பித்துக் கூறுகின்ற காஞ்சி மாநகருக்குச் செல்லும் வழியில் உள்ள அழகிய கிராமம்தான் முடிச்சூர். ஆதியில் மணமுடிச்ச நல்லூர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ள இவ்வூரில் ஈசனும் இறைவியும் திருமணக் கோலத்தில் காட்சி தந்தமையால் அப்பெயர் விளங்கியது. நாளடைவில் முடிச்சூர் என்று மருவியது. மேலும், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை ஸ்ரீஅப்பாரியார் சுவாமிகள் என்ற மகான் ஓலைச் சுவடிகளிலிருந்து எடுத்து அச்சில் கோர்த்து இவ்வூரில் இருந்து முடித்தமையால் முடிச்சூர் என்ற பெயரைப் பெற்றது என்பர்.

    நல்லோர் பலர் நாவின் மூலம் நனி சிறந்த வார்த்தைகளின் படியும் முன்னோர்களின் சான்றின் படியும், தொல் பொருள் ஆய்வாளர்களின் பார்வையின்படியும் இத்திருக்கோயில் சுமார் 1300 ஆண்டுக்கு முற்பட்ட தென்றும், இதுவே பல்லவர் காலக் கட்டடக் கலைக்குச் சான்று பகரும் ஆலயம் என்றும் சொல்லப்படுகிறது.ஸ்ரீஎன்றால் லட்சுமி, வித்யா என்றால் சரஸ்வதி. இந்த இரண்டு ஸ்வரூபமும் சேர்ந்து அருள்காட்சி புரிபவள்தான் ஸ்ரீவித்யாம்பிகை.

    அபய வரத ஹஸ்தம் காட்டி நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறாள். இந்த வித்யாம்பிகை ஆலயச் சிறப்பு என்னவென்றால் திருமணமாகாத கன்னிப் பெண்கள் நாக தோஷமிருப்பின் திருமணம் விரைவில் கை கூடவும், தோஷம் நீங்கவும் இங்குள்ள நாகர் மேடையை வலம் வந்து அன்னையின் சந்நதியில் ஒரு விரலி மஞ்சளைக் கயிற்றில் கட்டி விட்டு வழிபாடுகள் நடத்தி விட்டுச் சென்றால் உடனே நல்ல இடத்தில் அப்பெண் வாழ்க்கைப் படுகிறாள் என்பது ஐதீகம். அத்தோடு அனுபவித்தவர்களும் எடுத்துச் சொல்கிறார்கள். விரைவில் விவாகம் நடைபெற வரம் அருளும் இந்த வித்யாம்பிகையை திருமணமாகாத ஆண்களும் பெண்களும் நம்பிக்கையுடன் வழிபடுகிறார்கள்.
    உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷ பாதிப்பு உள்ளது. இந்த தோஷம் ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்பட காரணம் பலர் சர்ப்பங்களை துன்புறுத்தியவர்கள், கொலை செய்தவர்கள், களவியலில் ஈடுபடும் போது பார்த்தவர்கள், களவியலில் ஈடுபடும் போது பிரித்தவர்கள் என்று பலவிதமான காரணங்களை கூறுகிறார்கள். இதில் 10 சதவீதம் உண்மை இருக்கலாம்.

    உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்பத்தை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோ‌ஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.

    காரணமே இல்லாமல் ஒருவரின் வாழ்க்கையை பொறாமையால் கெடுப்பது. நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தம்பதிகளைப் பிரிப்பது, ஒரு குடும்பத்தை கெடுப்பது, உழைத்த கூலியை கொடுக்காமல் ஏமாற்றுவது, வாங்கிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவது, பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது, திருடுவது, கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தவறுவது, தவறான வைத்தியம் செய்வது, பொய்யான வதந்தியை பரப்புவது, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கோவில் சொத்தை அபகரிப்பது பசுக்களை, விலங்குகளை வதைப்பது இயற்கையை மாசுபடுத்துவது நோயை பரப்புவது, வீண் வதந்தியை கிளப்புவது போன்ற காரணங்களால் தான் சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.
    கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.
    உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்பத்தை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோ‌ஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோ‌ஷம் ஏற்படுகிறது.

    ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.

    தோ‌ஷம் பரம்பரையாக தொடர்ந்து வரும். ஜாதகருக்கு பழி வாங்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி தப்பித்து விடுவார்கள். குற்ற உணர்வு குறைவுபடும். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பியவர்களை சார்ந்தே வாழ்வார்கள்.

    மன குழப்பம் அல்லது பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தானும் குழம்பி மற்ற வர்களையும் குழப்புவார்கள். ஜீரணக் கோளாறு மிகுதியாக இருக்கும். எந்த முடிவையும் உடனடியாக எடுக்க மாட்டார்கள் அல்லது முடிவு எடுக்கும் திறன் குறைவாக இருக்கும் கூண்டுக்கிளியாக வீட்டில் அடைபட்டு இருப்பதை விரும்புவார்கள்.
    தேய்பிறை அஷ்டமியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை செய்து பைரவரை வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
    தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும். பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    இழந்த பொருட்களை மீண்டும் பெற:- பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளைத் துணியில் சிறு மூட்டையாகக் கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாள் வழிபட்டால் இழந்த பொருட்களும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.

    குழந்தைச் செல்வம் பெற:- திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப் பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபடின் விரைவில் அத்தம்பதியருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டும்.

    சனி பகவானின் அருள் கிடைக்க, தோஷம் நீங்க:- சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களைத் தரமாட்டார். எனவே, நாம் சனிக்கிழமைகளில் பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் யாவும் நீங்கும்.

    தடைபெற்ற திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும்:- ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும். அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம், ஏவல் அகலும். திருமணம் கைகூடும்.

    6 சனிக்கிழமைகளில் 6 எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தடைபட்ட திருமணம் கைகூடும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். குடும்ப ஒற்றுமை நிலைக்கும்.
    ×