search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    திருமண தடையை ஏற்படுத்தும் கால சர்ப்ப தோஷமும்... பரிகாரமும்...
    X

    நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில்

    திருமண தடையை ஏற்படுத்தும் கால சர்ப்ப தோஷமும்... பரிகாரமும்...

    • இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது.
    • இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது.

    முன் ஜென்மங்களில் ஒரு பாம்பை துன்புறுத்தி இருந்தாலோ அல்லது கொன்றிருந்தாலோ கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. முன்ஜென்மத்தில் மட்டுமல்ல தற்போது உள்ள ஜென்மத்திலும் பாம்பை தொந்தரவு செய்தால் இந்த தோஷம் ஏற்படுகிறது. மேலும் 2 பாம்புகள் பின்னி கொண்டிருக்கும் போது அதனை கொல்வது தொந்தரவு செய்வது போன்றவற்றால் மிகுந்த கால சர்ப்ப தோஷம் ஏற்படும்.

    இந்த சர்ப்ப தோஷத்தால் திருமண தடை ஏற்படுகிறது. லக்கினத்தில் ராகு இருந்தால் அதிலிருந்து 7 வைத்து இடத்தில் தான் கேது அமர்வார். ராசிக்கட்டத்தில் 7-வது இடமானது திருமணத்தை குறிக்கும். இதனால் தான் திருமண தடை ஏற்படுகிறது.

    லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் ராகு-கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம்.இத்தகைய அமைப்பை பெற்ற ஜாதகருக்கு 33 வயது வரை வாழ்க்கை போராட்ட களமாக இருக்கும்.

    திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும். காலதாமதமாக திருமணம் செய்வதே நல்ல தீர்வு. தசாபுத்திகள் சாதகமாக இருந்தால் திருமணம் தடைபடாது.

    பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணம் தடைபடுபவர்கள் நாகர்கோவில் ஸ்ரீ நாகராஜா கோவில் சென்று வருவது சிறப்பு.

    கால சர்ப்ப தோஷத்திலிருந்து விடுபட சில வழிபாடுகள் உள்ளன. சிவ வழிபாட்டின் மூலம் காலசர்ப்ப தோஷத்தை நீக்கலாம். திங்களன்று சிவா பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் நன்மை கிட்டும்.

    செவ்வாய் கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி மஞ்சள் மற்றும் குங்குமம் சாற்றி வழிபட்டால் தோஷம் விலகும். மீனாட்சி அம்மனை தினமும் தரிசித்து வந்தால் நன்மை கிட்டும்.

    Next Story
    ×