search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக அரசை அகற்றும்வரை ஓயமாட்டோம்: கே.என்.நேரு பேச்சு
    X

    அதிமுக அரசை அகற்றும்வரை ஓயமாட்டோம்: கே.என்.நேரு பேச்சு

    அதிமுக அரசை அகற்றும்வரை ஓயமாட்டோம் என்று திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு எம்.எல்.ஏ.பேசினார். #dmkprotest

    திருச்சி:

    தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிக்குமார், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், தொழிலதிபர் ஜான்சன் குமார், அபூர்வாமணி,

    பகுதி செயலாளர்கள் மதிவாணன், கண்ணன், பாலமுருகன், மோகன்தாஸ், ராமதாஸ்,காஜாமலை விஜி, மண்டிசேகர், ராம்குமார் இளங்கோ, கொட்டப்பட்டு தர்மராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, வரதராஜன், மல்லியம்பத்து கதிர்வேல், சிங்காரம், வட்ட பிரதிநிதி பந்தல்ராமு, கிராப்பட்டி செல்வம், துர்காதேவி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்துசெல்வம், விஜயா ஜெயராஜ் மற்றும் லீலாவேலு, என்ஜினீயர் நித்தியானந்த், குமரேசன், மார்சிங்பேட்டை செல்வராஜ்,

    சில்வியா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சேசு அடைக்கலம், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் மூக்கன், ஜெயக்குமார், கருணைராஜா, துரைராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் வாளாடி கார்த்திக், பொன்னகர் ஜெரால்டு, மாவட்ட பிரதிநிதி வரகனேரி ரவிச்சந்திரன், மன்னார்புரம் ராஜேந்திரன்,

    வட்ட செயலாளர்கள் துபேல் அகமது, சிவசக்தி குமார், குமரேசன், வக்கீல் ரெங்கன், ராமமூர்த்தி, சுருளி ராஜன், ஸ்ரீரங்கம் ஜனா, பி.ஆர்.பால சுப்பிரமணியன், தாமு சேகர், பொதுக்குழு உறுப்பினர் மூவேந்திரன், தி.மு. ரெங்கா, கோபால்ஜி உள் பட பலர் கலந்து கொண் டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய சொத்து வரி உயர்வு தனி மனிதனை பெரிதும் பாதிக்கும். எனவே சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.

    எந்த பிரச்சினைக்கும் சட்டமன்றத்தில் முதல்வர் சரியாக பதில் அளிப்பதில்லை. பொத்தாம் பொதுவாக பேசுகிறார். உள்ளாட்சி தேர்தல் நடத்தாத நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் இந்த அரசை அகற்றும் வரை ஓய மாட்டோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதேபோல் துறையூரில் ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ., தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. வினர் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசிற்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திருச்சி துவாக்குடி நகர தி.மு.க. சார்பில் துவாக்குடி நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். துவாக்குடி நகர செயலாளர் காயம்பு, முன்னாள் எம்.எல். ஏ., சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கருணாநிதி, மாரியப்பன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம். எல்.ஏ. பேசியதாவது:-

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தியிருந்தால் மத்திய அரசின்ரூ. 5 ஆயிரத்து 500 கோடி நிதி மானியமாக கிடைத்திருக்கும். அது தற்போது கிடைக்கவில்லை

    ஏற்கனவே விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக அரசு தற்போது வரலாறு காணாத சொத்து வரியை உயர்த்தியுள்ளது. அதனை கண்டித்து தான் இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் அப்துல்குத்தூஸ், தனசேகர், வி.பி.குமார், ஜெயலட்சுமி குமார், செல்வமணி, மணிமாறன், குணாநிதி, பன்னீர்செல்வம், அப்பு என்ற கருணாநிதி, பொன்மலை தி.மு.க. இளைஞரணி சுரேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். #dmkprotest

    Next Story
    ×