search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் சொத்துவரி உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
    X

    கோவில்பட்டியில் சொத்துவரி உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவில்பட்டி:

    தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்டப் பொருளாளர் மோகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

     ஒன்றியச் செயலாளர்கள் பீக்கிலிபட்டி முருகேசன், சின்னப்பாண்டியன், கருப்பசாமி , ராமகிருஷ்ணன், செல்வராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர். மாவட்ட அமைப்பாளர்கள் ராமசந்திரன், ராஜகுரு, ராதாகிருஷ்ணன், நகர நிர்வாகிகள் காளியப்பன், அன்பழகன், செல்வரத்தினம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×