search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem collector office"

    • வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார்.
    • எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் 6-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மேகலா. அ.தி.மு.க. வை சேர்ந்த இவர் இன்று காலை தனது 10 வயது மகள் மற்றும் 3 வயது மகனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் தனது குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே தரையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    எனது வார்டில் பொது குடிநீர் குழாய் அமைப்பது தொடர்பாக பேச செயல் அலுவலரிடம் சென்றால் அவர் என்னிடம் பேச விருப்பம் இல்லை என்று கூறுகிறார். மேலும் எங்களது கோரிக்கைகளை மாதந்தோறும் மன்ற கூட்டத்தில் மனுக்களாக கொடுத்து வருகிறோம், ஆனால் எதையும் நிறைவேற்றுவதில்லை. எனக்கு வாக்களித்த மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறார்.

    ஏனென்றால் நான் கீழ் சாதியை சேர்ந்தவர், இதனால் எனது குழந்தைகளை இனி பள்ளிக்கு அனுப்ப மாட்டேன், பேரூராட்சியில் அனைத்து மக்களின் அடிப்படை தேவைகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் தள்ளாத வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம்.
    • கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா டேனீஸ்பேட்டை பெரியவடகம்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 90). இவருடைய மனைவி பொன்னம்மாள் ( 82).

    இவர், தன்னுடைய மகள் கமலா (60) என்பவருடன் கலெக்டர் அலுவலகம் வந்து ஒரு பரபரப்பு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் பழனியப்பனுக்கு 90 வயதாகிறது. எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் உடல் நலக்குறைவால் இறந்து விட்டாார்.

    எனது கணவர் ஏற்கனவே குப்பாயி (70) என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த தொடர்பை கைவிடுமாறு நாங்கள் பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை.

    தற்போது 3-வதாக பழனியம்மாள் (70) என்பவருடன் தொடர்பு வைத்துள்ளார். எங்களுக்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்பு உள்ள 6.5 ஏக்கர் நிலத்தை கணவர், ஆசைநாயகி பழனியம்மாளுக்கு எழுதி வைத்துள்ளார்.

    மேலும், நாங்கள் பேரனுடன் வசித்து வந்த வீட்டை இடித்து விட்டு எங்களை மிரட்டுகிறார்.

    கூலி வேலைக்கு சென்று பிழைப்பை நடத்த முடியாமல் இந்த வயதில் கடும் சிரமம்பட்டு வருகிறோம். கணவரிடம் இருந்து சொத்தை மீட்டு, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் என்னை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் அதில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு கலெக்டர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் தம்மநாயக்கன் பட்டி ஊராட்சி ரைஸ்மில் தெருவில் 7 குடும்பங்கள் உள்ளன. இந்த 7 குடும்பங்களுக்கும் தெரு குழாய் மூலம் பஞ்சாயத்து சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், கடந்த ஒரு மாதகாலமாக தெரு குழாயில் குடி தண்ணீர் வரவில்லை. இதனால் அவதிப்பட்டு வந்த அவர்கள் இது குறித்து ஆபரேட்டர் பழனிசாமியிடம் முறையாக தண்ணீர் திறந்து விடுமாறு கூறினர். இருப்பினும், குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. 

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, அவரது மனைவி ஜீவா, இவர்களது 2 குழந்தைகள் மற்றும் கூலி தொழிலாளி கிருஷ்ணன், அவரது மனைவி கிஷ்ணவேணி, இவர்களது மகன் மற்றும் மூதாட்டி ஆராயி, வசந்தி ஆகியோர் குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக இன்று மதியம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் கேனில் மண்ணெண்ணை வைத்திருந்தனர். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு நின்று அவர்கள் திடீரென தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதை பார்த்த அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மரத்தில் ஏறி ரவுடி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை கார்பெட் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). பிரபல ரவுடி.

    இவர் இன்று காலை திடீரென கொசு மருந்து வி‌ஷத்தை குடித்து விட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் ராணுவ பீரங்கியை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்க வருகைதர உள்ளதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதனால் ராஜசேகர், தான் வி‌ஷம் குடித்துள்ளதை நுழைவு வாயிலில் இருக்கும் போலீசார் கண்டுபிடித்து, தன்னை கைது செய்து விடுவார்கள் என கருதி கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்லவில்லை.

    நுழைவு வாயில் எதிரே உள்ள சாலையில் ராஜசேகர் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார். காலை சுமார் 9 மணி அளவில் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளியே இருக்கக்கூடிய பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு பெரிய புளியமரத்தில் திடீரென ஏறினார்.

    பின்னர் மரத்தின் நடுவில் நின்று கொண்டு ‘‘நான் கீழே விழப் போகிறேன். தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’’ என சத்தம் போட்டு கூறினார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக புளியமரம் அருகே ஓடி வந்தனர்.

    போலீசார், அவரிடம் நீ கீழே இறங்கி வா, எந்த பிரச்சினையாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம் என தெரிவித்தனர். ஆனால், அதனை ராஜசேகர் கேட்கவில்லை.

    தொடர்ந்து மரத்தில் நின்று கொண்டு நான் கீழே விழப் போகிறேன் என தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் வேறு வழியின்றி போலீசார், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீஸ் உயர் அதிகாரிகள் அங்கு வந்து ராஜசேகரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். நாங்கள் உன்னை எதுவும் செய்ய மாட்டோம் என உறுதி அளிக்கிறோம், நீ கீழே இறங்கி வா? என்றனர்.

    அதற்கு ராஜசேகர், தேவையில்லாமல் என் மீது புகார் கூறி போலீசார் விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள். எனது வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதனால் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. என் மீது எந்த வழக்கும் போடக்கூடாது. நான் வி‌ஷம் குடித்துள்ளேன். என்னால் மரத்தில் இருந்து இறங்கி வர முடியாது. நான் கீழே குதிக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதனால் அதிர்ந்து போன போலீஸ் அதிகாரிகள், ராஜசேகருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. வி‌ஷம் குடித்துள்ளதால் அவரை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என அங்கிருந்த போலீசாருக்கும், தீயணைப்பு நிலைய வீரர்களுக்கும் உத்தரவிட்டனர். மேலும் அவரை காப்பாற்றுவதற்கான ஆலோசனைகளும் வழங்கினர்.

    அதன்பேரில் முன்எச்சரிக்கையாக மரத்தின் கீழே தீயணைப்பு நிலைய வீரர்களும், போலீசாரும் சேர்ந்து பெரிய வலை ஒன்றை விரித்து கையில் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து அருகே உள்ள சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அங்கு வரவழைக்கப்பட்டது.

    பின்னர் மரத்தில் 2 போலீசார் ஏறி ராஜசேகர் தவறி கீழே விழுந்து விடாமல் இருக்க வேண்டி அவரை பிடித்து இடுப்பில் கயிறை கட்டினார்கள். இதையடுத்து மரத்தின் மீது ராட்சத ஏணியை வைத்து 2 போலீசார் மரத்தில் ஏறினார்கள்.

    அதன் பிறகு 4 போலீசாரும் சேர்ந்து ராஜசேகரை பத்திரமாக ஏணி படிக்கட்டு வழியாக இறக்கினர். பின்னர் போலீசார், அவரை முதலில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு சென்றனர்.

    ராஜசேகர் அனுமதியின்றி வெளியே இருந்து மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்று வந்தார். இது பற்றி பொதுமக்கள் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்து ராஜசேகரை சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளது. ரவுடி பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.

    ஜாமீனில் வெளிவந்த ராஜசேகர் மீண்டும் மது விற்பனையை தொடங்கினார். இதனால் போலீசார் ராஜசேகரிடம் மது விற்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அவர் இன்று காலை கொசுமருந்து குடித்து மரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு தறி தொழிலாளி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். தறித்தொழிலாளி. இவர் இன்று காலை கலெக்டர் அலுவலகம் மனு கொடுக்க வந்த அவர் தடீரென அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் எனக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என நினைத்து கயிறு திரிக்கும் தொழில் நடத்துவதற்காக கருப்பூர் மின்சார அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு மனு வழங்கினேன்.

    கடந்த 6 மாதம் ஆகியும் மின் இணைப்பு கோரிய மனுவிற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அதிகாரியிடம் மின் இணைப்பு கேட்டு புகார் தெரிவித்தேன்.

    இதையடுத்து மின் ஊழியர்கள் மின் இணைப்புக்காக அளவீடு செய்தனர். அளவீடு செய்து 3 மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து அதிகாரிகள் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் மின் இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன்.

     இவ்வாறு அவர் கூறினார்.

    இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இன்று விடுமுறை என்பதால் கலெக்டர் இல்லை. ஆகவே அங்கு தர்ணாவில் ஈடுபட்டார். போலீசார் ஆறுமுகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதியளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விடுமுறை நாளில் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சேலம்:

    தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

    அப்பேது அவர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சொத்துவரியை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சுபாசு, சூடாமணி, அவை தலைவர் கலையமுதன், செல்வகணபதி, துணை செயலாளர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் அண்ணாமலை, ரகுபதி, தாமரை கண்ணன், லலிதா சுந்தரராஜன், பகுதி செயலாளர்கள் சாந்த மூர்த்தி, குமரவேல், முருகன், ராமச்சந்திரன், நாசர்கான், கிச்சிப்பாளையம் ஜெய், கே.டி.மணி, பச்சியப்பன், ஜபீர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடியில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுந்தரம், ஒன்றிய செயலாளர் நிர்மலா, அம்மாசி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முல்லை பன்னீர் செல்வம், நகர செயலாளர் பால சுப்பிரமணி, வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் செழியன், முருகேசன், சக்கரவர்த்தி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம் மற்றும் பழனிசாமி, அகிலன், இளைஞர் அணி அமைப்பாளர் சந்திர மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம், கருப்பூர், சாமி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி சாவித்ரி (வயது 35). மாற்றுதிறனாளி. இவர் இன்று காலையில் தனது 2 குழந்தைகள் அகில், அக்ஷிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று சாவித்ரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தலையில் திடீரென ஊற்றினார்.

    இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஓடி வந்து சாவித்ரி தலையில் தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரிடம் சாவித்ரி கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனது கணவர் அருண்குமார் கிரானைட்டில் கல் உடைக்கும் கூலி வேலை செய்து வருகிறார். அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்டு என்னையும், குழந்தையும் வீதியில் விட்டு விட்டார். சாப்பாடுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறேன். இது பற்றி சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் விசாரணை நடத்தி விட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் என்னை சாகவிடுங்கள்.

    இவ்வாறுஅவர் கூறினார்.

    இதையடுத்து விசாரணைக்காக சாவித்ரியை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதேபோல் சேலம், வீராணம் அருகே உள்ள பெருமானூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30). இவர் இன்று காலை மனு கொடுக்க வேண்டி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது நுழைவு வாயில் முன்பு நின்று தீ குளிப்பதற்காக திடீரென தலையில் மண்எண்ணையை ஊற்றினார். இதை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியதாவது:-

    நான் மேட்டூர் பகுதியை சேர்ந்த 2 பேரிடம் டாரஸ் லாரி ஒன்றை வாங்குவதற்கு விலை பேசினேன். இதற்கு முன்பணமாக ரூ.2½லட்சம் கொடுத்தேன். மீதி பணம் 15 லட்சம் அவர்களது கணக்கில் வங்கி மூலம் செலுத்தினேன்.

    இதையடுத்து லாரியை தருமாறு கேட்டபோது, அவர்கள் லாரியை தராமல் காலம் இழுத்தடித்து வருகிறார்கள். மேலும் அடிக்கடி கேட்டதால் அடியாட்டிகள் வைத்து என்னை மிரட்டுகின்றனர். இது பற்றி பல முறை அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதி கிடைக்காததால் உயிரை விடுவதே தவிர வேறு வழியில்லை.

    இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்துகழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அரசு போக்குவரத்துகழக பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி மண்டலங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு கோட்ட செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். தலைவர்கள் மாரப்பன், ராஜா, துணை தலைவர் மயில்சாமி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உண்ணாவிரதத்தை மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்.சி., ஆர்.டி. என்ற பெயரில் நியமனம் செய்த ஓட்டுநர், நடத்துனர்களை பணியில் சேர்ந்த நாளில் இருந்து 240 நாட்கள் பணி செய்து முடித்தவர்களை நிரந்தர செய்ய வேண்டும். நடத்துனர் இல்லாமல் பேருந்து இயக்கத்தை கைவிட்டு ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போதுமான உதிரிபாகங்கள் வாங்க வேண்டும். போதுமான பணி நியமனங்கள் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    முடிவில் பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.
    3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர், மேல்சிந்தாமணியூர் அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவர் டி.வி.மெக்கானிக் வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை இவர் மனு கொடுப்பதற்காக சேலம் கலெக்டர் அலுவலத்திற்கு வந்தார். அப்போது அவர், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு நின்று பையில் இருந்து ஒரு கேனை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை திடீரென தலையில் ஊற்ற முயன்றார்.

    இதை பார்த்ததும் போலீசார் அங்கு ஓடி வந்து தடுத்து நிறுத்தி பெட்ரோல் கேனை வாங்கி அப்புறப்படுத்தினார்கள். பின்னர் கோபிநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளியான நான், டி.வி.சரிபார்க்கும் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வருகிறேன். 3 சக்கர மோட்டார் சைக்கிள் கேட்டு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தேன். இது சம்பந்தமாக இரண்டு முறை நேர்காணலிலும் பங்கேற்றேன். இதுவரை எனக்கு மோட்டார் சைக்கிள் தரவில்லை. எந்த பலனும் இல்லாததால் எனக்கு வாழ விருப்பமில்லை. எனவே நான், தீக்குளித்து சாக போகிறேன்.

    இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

    இது பற்றி தகவல் தெரிவித்து போலீசார், மாற்றுத்திறனாளி நல அலுவலரை அங்கு அழைத்து வந்தனர். அவர், கோபிநாத்திடம் கூறுகையில், பட்டியலில் உங்களது பெயர் உள்ளது. எனவே, முன்னுரிமை அடிப்படையில் வரிசையாக 3 சக்கர மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உங்களுக்கு மோட்டார் சைக்கிள் நிச்சயம் கிடைக்கும் என்றார்.

    மேலும் போலீசார், கோபிநாத்துக்கு அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×