search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central minister"

    • பா.ஜ.க. ஏற்பாடு செய்த போராட்டத்தில் மத்திய மந்திரி ஷோபா தமிழர்கள் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
    • அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா பேசினார். பா.ஜ.க. சார்பில் பெங்களூரில் நடந்த போராட்டத்தின் போது அவர் இந்த சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.

    அவரது இந்தக் கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரி ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தி.மு.க. புகார் அளித்துள்ளது.

    இதற்கிடையே, கிருஷ்ணகிரியில் பயிற்சி பெற்ற பெங்களூரு உணவக குண்டுவெடிப்பில் தொடர்பு கொண்டவர்கள் குறித்து மட்டுமே எனது கருத்து இருந்தது. தமிழ்நாட்டில் யாரேனும் எனது கருத்தால் வருத்தம் அடைந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது கருத்தை வாபஸ் பெறுகிறேன் என மத்திய மந்திரி ஷோபா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

     இந்நிலையில், கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார் கூறியதாவது:

    அமைதியாக வளர்ச்சியை நோக்கிச் செல்லும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பற்றி மத்திய மந்திரி ஷோபா கரந்தலஜே கூறியது கடும் கண்டனத்திற்கு உரியது.

    அமைதியை விரும்பும் கிருஷ்ணகிரி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வேலையாகவே பா.ஜ.க. மந்திரியின் இந்த செயலை நான் பார்க்கிறேன்.

    அன்று கோட்சே எப்படி தேசத்தந்தை காந்தியை கொலை செய்து நாட்டில் கலவரத்தைத் தூண்ட முயற்சித்தானோ, அதே திட்டத்தை தான் இன்று பா.ஜ.க. எனது கிருஷ்ணகிரி தொகுதியில் திட்டமிட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • தமிழ் தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது
    • சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார்

    முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தீல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இது நாளை நிறைவடையும்.

    இதில் சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார்.

    தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய மாநாட்டில் டி.ஆர்.பி. ராஜா வரவேற்புரை ஆற்றினார். 

    நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பங்கேற்று உரையாற்றினார்.

    "வணக்கம்" என தமிழில் தொடங்கி தனது உரையில் அவர் தெரிவித்ததாவது:

    10 ஆண்டுகளுக்கு முன் நலிவடைந்த பொருளாதாரத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்தியாவின் 100-வது சுதந்திர தின விழாவில் பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியா திகழும். காஞ்சி பட்டு போல் பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. 1 ட்ரில்லியன் பொருளாதார இலக்கு நிர்ணயித்து பயணிக்கும் தமிழகத்திற்கு வாழ்த்து. ஆதித்யா-எல்1 திட்ட இயக்குனர் தமிழகத்தை சேர்ந்தவர். நாடு வலிமையடைய அனைத்து பகுதிகளும் சீரான வளர்ச்சி அடைய வேண்டும். தரமான கல்வி, சுகாதாரம், குடிநீர் வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வளர்ந்த நாடாக நமது நாட்டை மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கனவாக இருக்க வேண்டும். ஊழலில்லாத இந்தியாவை உருவாக்கவும், பெண்களின் சக்தியை வலிமைப்படுத்தவும் நாம் செயல்படுவோம்.

    இவ்வாறு அமைச்சர் பியூஷ் கூறினார்.

    • மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.
    • நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

    சென்னை:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்று காலையில் டெல்லியில் உள்ள வீட்டில் சந்தித்து பேசினார். அவருடன் துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவும் உடன் சென்றிருந்தார்.

    காவிரியில் தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் மத்திய மந்திரியிடம் வழங்கினார். அந்த கடிதத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் எழுதி இருப்பதாவது:-

    காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமாக உள்ள நிலையில், இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 2018 பிப்ரவரி 16-ம் நாளிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர அட்டவணையின்படி, நீர் சேமிப்பு மற்றும் பிலிகுண்டுலுவில் அடையப்பட வேண்டிய நீரோட்டத்தைக் கருத்தில் கொண்டு இது செய்யப்பட்டது.

    இருப்பினும், ஜூன் 1 முதல் ஜூலை 17 வரை பிலிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர் இருப்பு 3.78 டி.எம்.சி மட்டுமே இந்தக் காலகட்டத்தில் பெறவேண்டிய தண்ணீர் அளவு 26.32 டி.எம்.சி. என உள்ள நிலையில், 22.54 டி.எம்.சி., நீர் பற்றாக்குறையாக உள்ளது. பிலிகுண்டுலுவில் இந்த 3.78 டி.எம்.சி நீர்வரத்துகூட கே.ஆர்.எஸ் மற்றும் கபினி நீர்த்தேக்கங்களுக்கு கீழே, கட்டுப்பாடற்ற இடைநிலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து பிலிகுண்டுலு வரை பாய்கிறது.

    தென்மேற்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், 2 அணைகளில் இருந்தும் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருகிறது. தற்போதைய நீர் இருப்பு, 20 நாட்கள் மட்டுமே பாசனத்திற்குப் பயன்படும்.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடி, மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே நம்பியுள்ளதாகவும், குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து ஆரம்பத்தில் வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அது 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    எனவே, நியாயமான நீர் மேலாண்மை மூலம் நெருக்கடியைச் சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தண்ணீர் தேவைக்கும், நீர்வரத்திற்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதால், கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்திட இயலும்.

    தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் கடந்த 5.7.2023 அன்று ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்தித்து, இந்த முக்கியமான பிரச்சனையில் தலையிட்டு, தண்ணீர்ப் பற்றாக்குறையை ஈடுசெய்ய கர்நாடகத்திற்கு அறிவுறுத்துமாறு கேட்டிருந்தார்.

    3.7.2023 தேதியிட்ட கடிதத்தின்படி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டங்களிலும் இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுத்துச் சென்றதாகவும் கூறினோம். காவிரி நீர் மேலாண்மை ஆணையம், 4.7.2023 தேதியிட்ட தனது கடிதத்தில், உச்சநீதிமன்றத்தால் திருத்தப்பட்ட, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி பிலிகுண்டுலுவில் நீரோட்டத்தினை உறுதி செய்யுமாறு கர்நாடகாவுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையிலும், கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே, தமிழ்நாட்டில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும் என்பதால், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய ஜல்சக்தித் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள மாதாந்திர அட்டவணையைப் பின்பற்றவும், பற்றாக்குறையை ஈடு செய்யவும் கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்கிடவும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் எழுதியுள்ளார்.

    ஜல் சக்தி துறை அமைச்சர் , கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும் மற்றும் நீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்கு தேவையான முறையை செயல்படுத்து வதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
    • ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.

    உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

    அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.

    புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.

    எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

    எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார்.
    • குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி, தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் பகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் திருப்பூரில் பி.எப்., மண்டல அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது திருப்பூர் - பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே, சிறிய வாடகை கட்டிடத்தில் மாவட்ட பி.எப்., அலுவலகம் செயல்ப டுகிறது. மண்டல அலுவலக த்தை செயல்படுத்து வதற்காக வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து பி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:-

    தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருப்பூரில் மண்டல பி.எப்., அலுவலகம் அமைக்க ப்படுகிறது. தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளை திருப்பூர் மண்டலத்துடன் சேர்க்க கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. வரும் 27ல், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார். அப்போது, மண்டலத்துடன் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம் வெளியிடப்படும்.மண்டல அலுவலகம் அமைவதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் கணக்குகள் திருப்பூரிலேயே நிர்வகிக்கப்படும். கடன் வழங்கல், ஓய்வூதியம் வழங்கல் பணிகளும் இங்கிருந்தே மேற்கொ ள்ளப்படும்.குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி. தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மணவெளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஓராண்டில் செய்த பணிகள் குறித்த சாதனை மலரை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.
    • தொகுதி மக்கள் அறியும் வகையில் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஓராண்டில் செய்த பணிகள் குறித்த சாதனை மலரை மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஓராண்டு காலத்தில் தொகுதி மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகள் குறித்து தொகுதி மக்கள் அறியும் வகையில் ஓராண்டு சாதனை மலர் வெளியீட்டு விழா சின்ன வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்றது.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி எல் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஓராண்டு சாதனை மலரை வெளியிட்டார். பின்னர் தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் தொகுதி முக்கிய பிரமுகர்கள் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டால், மத்திய அரசு பரிசீலிக்கும்.
    • தமிழகத்தில் அரசியலுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்படுகிறது.

    கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 33வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்க்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். 


    நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையில் தொழில்நுட்பம் சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார். அது இன்றைய தேவையாக உள்ளதாகவும், பட்டம் பெறும் மாணவர்கள் கல்வியறிவு மட்டுமின்றி நமது பாரம்பரியம் கலாச்சாரம் குறித்த அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி சுபாஷ் சர்கார் கூறியுள்ளதாவது:

    தமிழக அரசும், மாநில கல்வி கொள்கையின் மூலம் தேசிய கல்விக் கொள்கையையே பின்பற்றியே வருகிறது. தேசிய கல்விக் கொள்கை ஆவணம் பொது மக்களின் பார்வைக்காக இணையதளத்தில் உள்ளது. 65 பக்கங்கள் கொண்ட அதனை படித்துப் பார்த்தால் தமிழக அரசின் கல்விக் கொள்கையிலும், தேசிய கல்விக் கொள்கையிலும் ஒற்றுமை இருப்பது தெரியவரும்.

    தமிழகத்தில் அரசியல் நோக்கங்களுக்காகவே தேசிய கல்வி கொள்கை எதிர்க்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கை மேலும் தரமாக இருந்தால் அதன் நல்ல அம்சங்களை தேசிய கல்விக் கொள்கையில் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது.

    மத்திய கல்வித்துறை ஏற்கனவே சிறந்த கல்வி முறைகள் குறித்து பரிந்துரைக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் சிறந்த கல்வி முறைக்கான பரிந்துரைகளை மத்திய கல்வித்துறை பெற்று வருகிறது.

    நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளின் கல்வி முறையாக மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டால் கண்டிப்பாக மத்திய அரசு பரிசீலிக்கும். அனைத்து உயர்கல்வியும் தாய் மொழியில் கற்பிக்கப்பட வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம்.

    அதை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 12 மாநில மொழிகளில் பொறியலுக்கான கேள்வி தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு புத்தகங்கள் அனைத்தும் தமிழ் உட்பட 12 மாநில மொழிகளில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், செயல்படுத்த வேண்டிய திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

    இதில் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களில் வருவாய்த்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் முடிவுற்று மக்கள் பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க செய்ய வேண்டும். நடைபெற்று வரும் பணிகள் அனைத்தையும் அதிகாரிகள் சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என பேசினார்.

    • பின்னலாடை தொழிலை, நேரிடையாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.
    • ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பின்னலாடை தொழில் மேம்பாட்டிற்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய மத்திரி எல்.முருகனிடம், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு கொடுத்துள்ளனர். திருப்பூரில் நடைபெற்ற தொழில்மேம்பாட்டிற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மத்தியமந்திரி எல்.முருகனிடம், திருப்பூர் ரைசிங் உரிமையாளர்கள் சங்க தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி, செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் தீப்தி சுப்பிரமணியம் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    திருப்பூர் பின்னலாடை தொழிலை, நேரிடையாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 10 லட்சம் பேரும் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் ஏற்றுமதியும், ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பில் உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சார்பில் சிறந்த ஏற்றுமதி நகரம் என்ற விருதினையும் பெற்றுள்ளது. திருப்பூருக்கு மேலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி கொடுத்தால் வாழ்வாதார நன்மைகள் கிடைக்கும்.

    அதன்படி சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மறு சுழற்சி மூலம் மீண்டும் சுத்திகரிப்பு செய்து திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தங்கள் பொறுப்பில் எடுத்து கொண்டு, குறைந்த கட்டணத்தை வசூல் செய்து மறுசுழற்சி முறையை செயல்படுத்தினால் இங்குள்ள தொழில் துறையினருக்கு உற்பத்தி செலவினங்கள் குறையும். மேலும் கடைசி நிலை கழிவுநீரை கடலில் சேர்க்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தினால் திருப்பூரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலப்படுத்த முடியும். குழாய் மூலம் எரிவாயு திட்டத்தை திருப்பூரில் உடனடியாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும். திருப்பூரில் பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தனி பாதுகாப்பு குடியிருப்பு வசதியை மத்திய அரசு மேம்படுத்தி தர வேண்டும். திருப்பூர் ரெயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்தி பயணிகளுக்கு அதிநவீன வசதிகளை உருவாக்கித்தந்தால், வெளிமாநில வர்த்தகர்களின் வருகை அதிகரிக்கும். அதேபோல் சரக்கு பெட்டக வசதியையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    அத்தியாவசிய பட்டியலில் பஞ்சு நூல் பொருட்களை சேர்த்து, உள்நாட்டு தேவைக்கு போக மீதமுள்ள பஞ்சு நூலை மட்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு வழிவகை செய்ய வலியுறுத்த வேண்டும். முறைகேடாக பஞ்சு நூலை பதுக்கி வைத்து செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோருக்கு மின்சார கட்டண மானிய சலுகை வழங்க வேண்டும். திருப்பூருக்கு வரும் வௌிமாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறைப்படுத்த தனி அதிகாரி மூலம் கண்காணிப்புத்துறை ஏற்படுத்த வேண்டும். உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சரக்குகளை நகர பகுதியில் இருந்து துறைமுகங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல புதிய ரிங் ரோடுகள் திருப்பூரில் அமைக்க வேண்டும். திருப்பூரில் இ.எஸ்.ஐ.மருத்துவமனை அமைய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
    • முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூரில் இன்று பின்னலாடை துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் இந்தியாவின் முக்கிய ஊர். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் நலன்கருதி 80 கோடி மதிப்பில் 100 படுக்கை கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை மே 23-ந்தேதி பணி முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். பஞ்சாயத்து தலைவர்கள் தான் அரசின் திட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள். அவர்களுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். சின்னேரிபாளையம் பஞ்சாயத்து சுகாதாரத்திற்கு சிறந்த விருது பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதததை மக்கள் ஏன் என கேட்கிறார்கள். தேர்தலுக்காக வேல் ஏந்தி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் .எனவே திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும்.ராகுல் காந்தி நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது இல்லை. கொரோனாவிற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட சிக்கி தவிக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் பணி செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  

    தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமாரை மத்திய அமைச்சர் என குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடப்பதற்கு முன்பாகவே கடந்த 16-ந்தேதி சின்னமனூர் அருகே குச்சனூரில் வைக்கப்பட்ட கோவில் கல்வெட்டில் ரவீந்திரநாத்குமார் எம்.பி என பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

    இதனால் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே எப்படி பாராளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டில் பெயர் போடலாம் என எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    அதன்பிறகு அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டது. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது தேனி நகர் முழுவதும் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத்குமார் என பெயர் குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தேனி நகரில் பல பகுதிகளில் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ரவீந்திரநாத்குமார் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில் ரவீந்திரநாத்குமார் பெயரோடு மத்தியஅமைச்சர் என சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்களில் வைரலாகும் சர்ச்சைக்குரிய அழைப்பிதழ்.

    இதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யனார்குளம் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழில் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு அருகில் மத்திய அமைச்சர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    கிராம மக்கள் சார்பில் அச்சடிக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பாராளுமன்ற உறுப்பினர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை சிலர் மாற்றி மத்திய அமைச்சர் என சேர்த்து போலியாக சமூக ஊடகங்களில் பரவவிட்டுள்ளனர்.

    இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பதவி வருவதற்கு முன்பாகவே மத்திய அமைச்சர் என பெயரிட்டு போஸ்டர் ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையில் ரவீந்திரநாத்குமார் சிக்கியுள்ளார்.
    8 வழிச்சாலை திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை கண்டித்து, சேத்துப்பட்டு அடுத்த பெரணமல்லூர் அருகே விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேத்துப்பட்டு:

    சேலத்தில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் விவசாயிகளின் ஆதரவு பெற்று 8 வழிச்சாலை திட்டம் குறிப்பிட்ட தேதியில் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நம்பேடு கிராமத்தில் சென்னை- சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது 8 வழிச்சாலை திட்டம் தொடரும் என பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர்.

    விவசாயிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×