search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Civil Law"

    • மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது.
    • தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம்.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் மந்திரி அர்ஜூன் ராம்மேக்வால் கலந்து கொண்டு பேசுகையில், "பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள், பொது சிவில் சட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்த தொடங்கி உள்ளன.

    நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மத்தியில் வலுவான கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதில் கவலைப்பட ஒன்றுமில்லை" என்றார்.

    பொது சிவில் சட்டம் இன்னும் பா.ஜ.க.வின் திட்டத்தில் உள்ளது என்று மேக்வால் கடந்த வாரமும் கூறியிருந்தார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.க. கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, எங்கள் கட்சி பொது சிவில் சட்டத்துக்கு எதிரானது அல்ல. எனினும் இது போன்ற எந்த நடவடிக்கையும் கருத்தொற்றுமை மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என விரும்பு கிறோம்.

    மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து விமர்சித்த மத்திய சட்ட மந்திரி, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்ப வங்கள், சட்டத்தின் ஆட்சி நடக்கும் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.

    தேர்தல் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கம். எந்த ஒரு தேர்தல் முடிவுக்குப் பிறகும் வன்முறை நிகழக்கூடாது. மேற்கு வங்க வன்முறை சம்பவங்கள் குறித்து மத்திய அரசு விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயலாற்றுகிறது' என்றார்.

    வன்முறை சம்பவங்களை கவனத்தில் கொண்ட கொல்கத்தா ஐகோர்ட்டு, தேர்தலுக்காக மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்ட மத்திய ஆயுதக் காவல் படையினரின் பாதுகாப்பு பணியை வருகிற 21-ந்தேதி வரை நீட்டித்து உள்ளது.

    இந்த விவகாரம் குறித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எந்தவொரு நட வடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, வன்முறைகள் குறித்து விசாரிக்க 4 பேர் கொண்ட குழுவை பா.ஜ.க. அமைத்தது குறிப்பிடத்தக்கது.

    உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்திருந்த உத்தராயணி கவுதிக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் ஒரு மாநிலம் முதலிடம் பெறப்போகிறது என்றால் அது உத்தரகாண்டாக தான் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றார்.

    2022ம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலின்போது பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று பொது சிவில் சட்டம். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, தனது தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பொது சிவில் சட்டம் உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஒரு குழுவை அமைத்து ஒப்புதல் அளித்தார்.

    கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவுகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களுக்கும் இடையே தீர்க்கப்படாத பல பிரச்னைகள் இருந்து வருகிறது. ஆனால் உத்தரபிரதேசம் பிரிக்கப்பட்ட பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் நடக்கவில்லை என்றார்.

    உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் இடையேயான உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த அமைச்சர் ராஜ்நாத் சிங், இரு மாநிலங்களிலும் வசிக்கும் மக்களுக்கு இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் உறவுகள் வலுபெற்று வருகிறது என்றார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
    • ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவையில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2014 முதல் பிரதமர் நரேந்திர மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் அனைத்துத் தரப்பினரும் பயனடைந்துள்ளனர். முத்ரா கடனுதவித் திட்டம், மருத்துவ காப்பீடுத் திட்டங்களால் கோடிக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் திட்டங்களால் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என அனைத்துத் தரப்பினரும் பயனடைந்து வருவதால் வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வே அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடியே மீண்டும் பிரதமராவார்.

    உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக அவர் உள்ளார். அவருக்கு நிகரான தலைவராக ராகுல்காந்தி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் மோடியையே மட்டுமே மீண்டும் பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.

    அவரை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளில் அனைத்துக்கட்சித் தலைவர்களுமே தங்களை பிரதமராக எண்ணிக்கொள்கின்றனர்.

    புதுச்சேரியில் இலவச கியாஸ் இணைப்பு திட்டம், காப்பீடு திட்டங்களில் தலா 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் இணைந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பல மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த ஏராளமானோர் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். நாட்டில் பலரும் கோரி வருகின்றனர்.

    எனவே அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல. அந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது.

    எனவே அச்சட்டம் குறித்து இஸ்லாமியர்கள் உட்பட யாரும் அச்சப்பட தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×