என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய நிதி அமைச்சர்"

    • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கம்.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.

    2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

    பின்னர் அவர் உரையாற்றியதாவது:-

    பாராளுமன்றம், சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் நடக்கும் தேர்தல் முறையே ஒரே நாடு ஒரே தேர்தல்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் புதிய ஐடியா இல்லை. அது ஏற்கனவே நடைமுறையில் இருந்ததுதான்.

    அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் இருப்பது நல்லது.

    2029 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் ஜனாதிபதி ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை தொடங்குவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
    • நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று முன்தினம் தொடங்கியது அப்போது தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, திமுக எம்.பி.க்களின் கடும் கண்டனத்தை அடுத்து தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

    இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் உரையாற்றிய தர்மேந்திர பிரதான், "யாருடைய மனதும் புண்படும்படி பேசி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "தமிழ்நாட்டின் கல்வித்தரம் கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு பின்தங்கியுள்ளது. 3 ஆம் வகுப்பு மாணவர்களால் 1 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்க முடியவில்லை.

    திமுக எம்பிக்கள் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என தர்மேந்திர பிரதான் பேசியதை திரும்பபெறக் சொல்கிறீர்கள். ஆனால், தமிழ் படித்தால் பிச்சைக்கூட கிடைக்காது என்றும் தமிழை காட்டுமிராண்டி மொழி எனக் கூறியவரின் (பெரியார்) படத்திற்கு மாலை போடுகிறீர்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

    நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ், திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி கூறியதாவது:-

    பாஜக அரசு, தினமும் தமிழ்நாட்டையும், எதிர்க்கட்சியினையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் இழிவு செய்கிறது. இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் இழிவுப்படுத்தப்பட்டார். நேற்று தமிழ்நாடு எம்.பி.க்கள் இழிவுப்படுத்தப்பட்டனர்.

    நிதியமைச்சரும் அனைத்து அமைச்சர்களும் ஒரு நிகழ்ச்சி நிரலைப் பெற்று, தமிழக அரசை அவமதிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    நேற்று, நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் தர்மமாக வழங்கியது போல் காட்டினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்?

     கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சமபத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக , நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    நாளை அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். தமிழக பாஜக சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன், காங்கிரஸ் இந்த சம்பவத்துக்கு எதிராக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சியளிக்கிறது.

    லைசன்சுடன் மாநில அரசால் டாஸ்மாக் நடத்தப்பட்டு வரும் நிலையில் காலக்குறிச்சி ஊருக்கு நடுவில் கெமிக்கல் விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? உயிரிழந்தவர்களில் 40 பேர் தலித்துகள் ஆவர், தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்? இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை விலக்கியதற்காகவும் அமைச்சருக்கு சக்திவேல் நன்றி தெரிவித்தார்.

    திருப்பூர்:

    இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்தார்.அப்போது, அவர்ஆயத்த ஆடை உற்பத்தி மூலப்பொருட்களான பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதி கொள்கையில் மறு சீரமைப்பு அவசியம்.

    பருத்தி விலையின் ஸ்திரத்தன்மைக்கு, யூக வணிகம் பெரும் தடையாக உள்ளது. எனவே யூக வணிகத்தில் இருந்து பருத்தியை நீக்கவேண்டும் என நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரும்பு துறை சார்ந்த மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு வரி விதித்ததற்கும், சில முக்கியமான மூலப்பொருட்களுக்கான இறக்குமதி வரியை விலக்கியதற்காகவும் அமைச்சருக்கு சக்திவேல் நன்றி தெரிவித்தார்.

    ×