search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம், மண்டல அலுவலகமாக தரம் உயர்வு - 27-ந் தேதி மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம், மண்டல அலுவலகமாக தரம் உயர்வு - 27-ந் தேதி மத்திய அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

    • மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார்.
    • குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி, தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர், அவிநாசி, பல்லடம், காங்கயம் பகுதிகளை உள்ளடக்கி, திருப்பூர் மாவட்ட பி.எப்., அலுவலகம் இயங்குகிறது. தொழிலாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் திருப்பூரில் பி.எப்., மண்டல அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது திருப்பூர் - பல்லடம் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் எதிரே, சிறிய வாடகை கட்டிடத்தில் மாவட்ட பி.எப்., அலுவலகம் செயல்ப டுகிறது. மண்டல அலுவலக த்தை செயல்படுத்து வதற்காக வேறு இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இது குறித்து பி.எப்., அதிகாரிகள் கூறியதாவது:-

    தொழில் நிறுவனங்கள், தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் திருப்பூரில் மண்டல பி.எப்., அலுவலகம் அமைக்க ப்படுகிறது. தாராபுரம், பொள்ளாச்சி பகுதிகளை திருப்பூர் மண்டலத்துடன் சேர்க்க கருத்துரு அனுப்பப்பட்டிருந்தது. வரும் 27ல், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் காணொலி வாயிலாக மண்டல அலுவலகத்தை துவக்கி வைக்கிறார். அப்போது, மண்டலத்துடன் சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம் வெளியிடப்படும்.மண்டல அலுவலகம் அமைவதன் வாயிலாக, தொழில் நிறுவனங்களின் கணக்குகள் திருப்பூரிலேயே நிர்வகிக்கப்படும். கடன் வழங்கல், ஓய்வூதியம் வழங்கல் பணிகளும் இங்கிருந்தே மேற்கொ ள்ளப்படும்.குறைகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனாளி. தொழிலாளர் பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×