என் மலர்
நீங்கள் தேடியது "Aarti"
- மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல்.
- நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் அறிவித்தார். ஒருகட்டத்தில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி அறிக்கை வழியாக சண்டை போட்டுக்கொண்டனர். பின்னர் ஐகோர்ட் உத்தரவின்பேரில் இருவரும் அமைதியாகி, தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனிக்க வைத்துள்ளது. அதில், "மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல். சண்டைகள் இல்லை, வார்த்தைகள் இல்லை, வாலை ஆட்டி அன்பு காட்டும் செல்லப்பிராணிகள் மட்டும் எனக்கு போதும். நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது. பதில்களை தேட விருப்பமில்லாத எனக்கு அமைதியே ஆறுதல். இது என் கல்லூரிக் காலத்தில் நான் கற்றுக்கொண்டது. வாழ்க்கை வெள்ளை காகிதம் போன்றது. ஆனால் அதில் கருப்பு நிறத்தால் மட்டுமே எழுத முடிவது வேதனை. பல சோதனைகளை கடந்தாலே பிரகாசிக்க முடிகிறது'' என்று ஆர்த்தி ரவி குறிப்பிட்டுள்ளார்.
- கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார்.
- இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனீஷா பகிர்ந்துள்ளார்
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.
இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ரவிமோகன் விவகாரத்தில் தன்மீது அவதூறு பரப்பும் வகையிலும், ஆபாசமாகவும் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாடகி கெனிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான நோட்டீசை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கெனிஷா பகிர்ந்துள்ளார்
- ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
- ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவியான ஆர்த்தி இடையே உள்ள பிரச்சனையே நெட்டிசன்கள் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் ரவி மோகன், மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டதை தொடர்ந்து மத்தியஸ்தம் முன்னிலையில் மூன்று முறை பேச்சு வார்த்தை நடந்தது.
நடிகர் ரவி மோகன்- ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது ஆர்த்தியிடம் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை, அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும்.
இதனிடையே, நடிகர் ரவி மோகனை பிரிவதற்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் இனி எந்த அறிக்கையும் விடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கிடையேயான பிரச்சனை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடக் கூடாது என உத்தரவு விடுத்துள்ளது. மனு மீதான விசாரணையின் போது இருதரப்பும் அமைதியாக இருக்க ஒப்புதல் அளித்துள்ளனர்.
- ரவி மோகனின் மாமியார் வெளியிட்ட அறிக்கை பரபரப்பாக பேசப்பட்டது.
- இந்த காலத்தில்.கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது.
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இருவரும் ஒன்றாக சுற்ற தொடங்கியதில் இருந்து அவர்களை பற்றிய சர்ச்சைகள் பெரியளவில் வெடித்துள்ளது.
ஒருபக்கம் மனைவி ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட, மறுபுறம் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து ரவி மோகன் மற்றொரு அறிக்கை வெளியிட்டார்.
அதேவேளை ரவி மோகனின் மாமியார் வெளியிட்ட அறிக்கையும் பரபரப்பாக பேசப்பட்டது. அதில், ரவிமோகனும், ஆர்த்தியும் சேர்ந்து வாழ வேண்டும் என தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு நடுவில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ''இந்த சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை ஒன்று காத்திருக்கிறது. எனது ஆன்மாவின் கஷ்டம் தனியாகத்தான் நிற்கிறது. அதேசமயம் அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கின்றன.
இப்போதுள்ள சூழலில் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன். நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது'', என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாடகி கெனிஷாவை மறைமுகமாக சுட்டிக்காட்டி ரவி மோகனின் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
* உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் எங்கள் வாழ்வில் இருளை கொண்டுவந்தார் என்பதே உண்மை.
* சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே 3-வது நபர் எங்கள் வாழ்வில் வந்துவிட்டார்.
* எங்கள் வாழ்வில் 3-வது நபரின் வருகையை வெற்றுக் குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரத்துடன் தான் கூறுகிறேன்.
* கண்ணியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை விட நாடகம் போடுபவர்களுக்கே அதிக இடம் உள்ளது இந்த காலத்தில்.
* என்னை சுற்றி நடக்கும் சமீபத்திய சூழ்ச்சிகளால் வேறு வழியின்றி என்னை மீண்டும் பேசும்படி செய்துவிட்டது.
* என் பிடியிலிருந்து தப்ப நினைத்தால் அவர் தொலைத்ததாக கூறும் பெற்றோர்கள் வீட்டிற்கு அல்லவா சென்றிருக்க வேண்டும்.
* எங்கள் வாழ்வில் அதிக சேதத்தை உண்டாக்கியவர் வீட்டின் கதவை ஏன் தட்டினார்.
* துன்புறுத்தப்பட்டதாக தனிமைப்படுத்தப்பட்டதாக கூறும் ரவி ஏன் ஒவ்வொரு வருடமும் திருமண நாளை கொண்டாடினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.
- என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன் என்று நடிகர் ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து, கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, நாங்கள் எப்போதும் உங்களை கதாநாயகனாகவே பார்த்து வருகிறோம். நீங்கள் சொல்லும் அடுக்கடுக்கான பொய்களால் அந்த நிலையில் இருந்து தரம் தாழ்ந்து போகவேண்டாம். இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன் என்று நடிகர் ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்து இருந்தார்.
இப்படி இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு முன்வைத்து வரும் நிலையில், பாடகி கெனிஷா மீதும் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், பாடகி கெனிஷா சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், எல்லா இரைச்சல்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையில் ஒரு அமைதி நிலவுகிறது; என் ஆன்மாவுக்குள் தனிமையும் ஒரு அமைதியான போராட்டமும் நடக்கிறது.
என் மீது நீங்கள் குச்சிகளும் கற்களும் வீசினாலும் அது என்னை காயப்படுத்தாது. நான் அதிலிருந்து மீண்டு வந்துவிடுவேன்.
நான் இசையைப் பற்றிக்கொள்ள விரும்புகிறேன், தழும்புகளை ஞானமாக மாற்றுகிறேன்.நாளைய விடியல்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கு ஆழமான துயரங்களிலிருந்து, என் ஆன்மா பாடுகிறது என கூறியுள்ளார்.
- அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா என்று ரவி மோகன் தெரிவித்தார்.
- என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார்.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் தெரிவித்தார். மேலும், தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், ரவி மோகனின் மாமியாரும், பட தயாரிப்பாளருமான சுஜாதா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணக்கம், கடந்த 25 வருடங்களாக திரைப்படத்துறையில் ஒரு தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். ஒரு பெண்ணாக இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருப்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்களுக்குத் தெரியும்.
இத்தனை ஆண்டுகளில் பட வெளியீட்டின் போது அந்தப் படம் சம்பந்தமில்லாமல் வேறு எதற்காகவும் நான் மீடியா முன்பு வந்தது இல்லை. இப்பொழுது முதல்முறையாக என்னைப் பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.
கடந்த சில காலமாகவே கொடுமைக்காரி. குடும்பத்தை பிரித்தவள், பணப் பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. அப்பொழுதே இதற்கு விளக்கம் தர வேண்டும் என விரும்பினேன். ஆனால் என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மௌனமாய் இருந்து விட்டேன். இப்பொழுதும் நான் பதில் சொல்லவில்லை என்றால் என்னைப் பற்றி திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு வரும் பொய்கள் உண்மையாகிவிடும் என்பதனால் இந்த விளக்கம்.
கடந்த 2007 ஆம் ஆண்டு வீராப்பு என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன் ஆனாலும் உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும் பொழுது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்கள் கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.
இந்த காலத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் பணி அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தின் போது கேமராக்களுக்கு முன் கை கூப்பி நிற்பதும், பட வெளியீட்டின் போது பைனான்சியர்களின் முன் கைகட்டி நிற்பது என்று ஆகிவிட்டது. இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
அடங்க மறு, பூமி மற்றும் சைரன் என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவி அவர்களை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ஜெயம் ரவி அவர்களுக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது.
இப்பொழுது ஜெயம் ரவி அவர்கள் இந்தப் படங்களின் வெளியீட்டின் போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன்.
அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை கவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன் இன்று வரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்.
சைரன் பட வெளியீட்டின் போது கூட ஜெயம் ரவி அவர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. மேலும் ஜெயம் ரவி அவர்கள் எனக்கு நடித்துக் கொடுப்பதாக சொன்ன அடுத்த படத்திற்கு அவரே ஒரு இயக்குனரை தேர்வு செய்து அவருக்கு முன் பணம் கொடுக்கச் சொன்னார் எந்தவித மறுப்பும் இல்லாமல் அதையும் நான் செய்தேன்.
ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும் எங்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ஜெயம் ரவி அவர்களை இதை சாக்காக வைத்து சந்தித்து பேசி குடும்பத்திற்குள் சமாதானத்தை எட்டலாம் என்பதற்காக மட்டுமே ஒரு தயாரிப்பாளராக அல்ல தாயாக பத்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன் மாறாக அவர் சொன்னது போல் அவரை நிர்பந்தப்படுத்துவதற்காக அல்ல.
ஜெயம் ரவி அவர்கள் சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான, வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றும் நான் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம்,ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை,
இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள் அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
- அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா.
- தனது பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கிய தகவலே ஒரு மாதத்திற்கு பின்னர் தான் தனக்கு தெரிய வந்தது.
பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனுடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்தது இணையத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை.
* மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல.
* இவ்வளவு நாள்களாக முதுகில் குத்தப்பட்டேன், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன்.
* அனைத்தையும் இழந்தபோது என்னோடு உடன் இருந்தவர் கெனிஷா.
* என் பிரச்சனைகள் அனைத்தும் கெனிஷாவுக்கு தெரியும்.
* எனது குழந்தைகளை வைத்து நிதி ஆதாயம் அடைய முயற்சி செய்கின்றனர்.
* தனது குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் தடுக்கின்றனர்.
* மனைவியை பிரிந்ததில் இருந்து குழந்தைகளிடம் இருந்து வேண்டுமென்றே ஒதுக்கப்படுகிறேன்.
* தனது பிள்ளைகள் கார் விபத்தில் சிக்கிய தகவலே ஒரு மாதத்திற்கு பின்னர் தான் தனக்கு தெரிய வந்தது.
* காரை பழுதுபார்க்க இழப்பீட்டிற்கு எனது கையெழுத்து தேவைப்பட்ட பொழுதே விபத்து குறித்து தெரிய வந்தது.
* பொன் முட்டையிடும் வாத்தாகவே நான் பார்க்கப்பட்டேன், ஒரு கணவனாக நான் மதிக்கப்படவில்லை.
* காதல் என்ற போர்வையில் பெற்றோர், குழந்தைகளுடான பந்தம் என அனைத்தும் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது.
* ஆர்த்தி செய்த ஆடம்பர செலவுகளால் தான் கடனாளி ஆனேன். 5 ஆண்டாக நான் சம்பாதித்த தொகை பெற்றோருக்கு தரப்படவில்லை.
* தனது காயங்களை உணராமல் பலர் தனது கண்ணியத்தை இழிவுபடுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி).
- சமீபத்தில் நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி). கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார். இவருடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் கலந்துக் கொண்டது இணையத்தில் வைரலானது. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்தினர். இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி இதற்கு ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டார்.
தற்பொழுது அதற்கு பதிலளிக்கும் வகையில் ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தோழியாக அறிமுகமான கெனிஷா என் வாழ்வின் அழகான துணை. எனது மகன்களை நான் பிரியவில்லை, மனைவியை மட்டுமே பிரிகிறேன்." என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.
- இன்று நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி மோகன் (ஜெயம் ரவி). கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியது. தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைப்பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் ரவி மோகன் கலந்துக் கொண்டார். இவருடன் பாடகி கெனிஷா பிரான்சிஸ் கலந்துக் கொண்டது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து வந்து மணமக்களை வாழ்த்தினர். இதற்கு ரவி மோகனின் மனைவியான ஆர்த்தி ரவி இதற்கு ஆதங்கம் தெரிவிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக, நான் மௌனமாக இருந்ததால் நான் பலவீனமாக இருந்ததால் அல்ல, ஆனால் என் மகன்களைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு கொடுமையான குற்றச்சாட்டு மற்றும் புண்படுத்தும் பொய்யையும் உடைத்து எறியவே அவ்வாறு செய்தேன்.
என் பிள்ளைகளுக்கு அவர்களது தந்தையைப் பற்றிய உண்மையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இருக்கிறது, ஆனால் பெற்றோர்களாகிய நாங்கள் அதைச் செய்யவில்லை.
இன்றைய என் பேச்சு, ஒரு மனைவியாகவோ காயமடைந்த ஒரு பெண்ணாகவோ அல்ல. என் குழந்தைகளின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்ட ஒரு தாயாகவே நான் பேசுகிறேன். இன்று நான் எழவில்லை என்றால், அவர்களை நான் என்றும் தொலைத்துவிடுவேன்.
நீங்கள் இன்று தங்க நிறத்தில் பட்டு உடையில் நடந்து செல்லலாம். உங்கள் பொதுவாழ்க்கையில் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் உண்மையை நீங்கள் மாற்ற இயலாது. "தந்தை" என்பது வெறும் ஒரு பட்டமல்ல. அது ஒரு பொறுப்பு.
எங்கள் கதையில் சுதந்திரமாக நடமாடும் மற்றவர்களுக்கு—குழந்தைகளின் கண்ணீர்கள் காணாத இடங்களில் ஒலிக்கின்றன. என் வார்த்தைகளில் நீங்கள் தப்பிக்கலாம், ஆனால் பிரபஞ்சம் அமைதியாக நினைக்கும் உண்மையிலிருந்து தப்பிக்க முடியாது.
என் இன்ஸ்டாகிராம் பெயரைப்பற்றி அதிக கவலைக்குள்ளாகும் ஆர்வமுள்ள மனங்களுக்கும் தங்களையே நல்வாழ்த்துப்பவர்கள் என நினைப்பவர்களுக்கும்—நான் இன்னும் 'ஆர்த்தி ரவி' என்றே இருக்கிறேன், நான் மற்றும் சட்டம் மாறாக தீர்மானிக்கும் வரை.
மீடியா நண்பர்களுக்கு—சட்ட நடைமுறை முடியும் வரை என்னை "முன்னாள் மனைவி" என அழைப்பதைத் தவிர்க்கவும்.
இது பழிவாங்கல் அல்ல. இது ஒரு தாய் தீக்குள் செல்வது—போராட அல்ல, பாதுகாக்க.
நான் அழவில்லை. நான் கத்தவில்லை. நான் உறுதியாக நின்றுள்ளேன், ஏனெனில் எனக்கு வேண்டியது அது.
இன்னும் உங்களை "அப்பா" என்று அழைக்கும் அந்த இரண்டு சிறுவர்களுக்காக.
அவர்களுக்காக, நான் ஒருபோதும் பின்னடைய மாட்டேன்.
ஆர்த்தி
From the Desk of #AartiRavi !#RaviMohan #Aarti #Galatta pic.twitter.com/X7xzot0VQs
— Galatta Media (@galattadotcom) May 9, 2025
- காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது.
- இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.
திருவையாறு:
அகில பாரத துறவிய ர்கள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ஆகிய அமைப்பினர் 12வது ஆண்டு காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரையை கர்நாடக மாநிலம் குடகு மலையிலிருந்து துவங்கி ஒவ்வொரு காவிரி தீர்த்தக் கட்டத்திலும் காவிரி அன்னை விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடு செய்து 'காவிரிக் கழிமுகமாம் பூம்புகாரை அடைகிறார்கள்.
இத்துலாம் மாதத்தில் காவிரி அன்னையை துலாக்கட்டத் துறைதோறும் வழிபாடு செய்யும் பொருட்டு நேற்று மாலை திருவையாறு வந்தடைந்த.
காவிரி வழிபாட்டுக் குழுவினர் மற்றும் திருவையாறு அன்னைக் காவிரி பௌர்ணமி வழிபாட்டுக் குழுவினர் ஆகியோர் திருவையாறு காவிரி புஷ்யமண்டபத்துறையில் காவிரி அன்னை விக்ரஹ த்திற்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் வழிபாடுகள் செய்து, காவிரி ஆற்றுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. பின்னர் காவிரி பக்தர்களால் அல் தீபங்கள் ஆற்று நீரில் வரிசையாக மிதக்கவிட்டு ஒளிரச் செய்யப்ட்டது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரி அன்னையை வழிபட்டார்கள்.
- கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா நடைபெற்றது.
- இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் எழுந்தருளி உள்ள சாய்பாபாவிற்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 4 கால ஆரத்தி விழா மற்றும் நித்ய அன்னதானம் நேற்று நடைபெற்றது. இதில் காலை 6 மணிக்கு ஆரத்தி, 7 மணிக்கு புனித தீர்த்த நீராடல் நிகழ்ச்சி, 8 மணிக்கு நெய்வேத்தியம், சங்கல்ப பூஜை, சிறப்பு ஆராதனை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு நித்ய அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை நாமக்கல் ராமலிங்கம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இந்த அன்னதானம் தினந்தோறும் காலை முதல் இரவு வரை 3 வேளையும் நடைபெறும். நித்ய அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மதியம் மற்றும் மாலையிலும் ஆரத்தி நடைபெற்றது. இந்த விழாவில் நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தொட்டிபட்டி சாய் தபோவன கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.
- கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
வேதாரண்யம்:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவிலில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர், புனிதநீர் அடங்கியகடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்க ப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
இதேபோல், வேதாரண்யம் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகத்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்திநாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல், வேதார ண்யம் அருகே வேம்ப தேவன்காட்டில் மவுனமகான் சித்தர் பீடம் அமைந்துள்ளது. இந்த சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மேலும், ஒவ்வொரு மாத பவுர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பலகாரங்கள், பொங்கல் வைத்து படையல் செய்து பின் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர்.
மேலும், பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.
இதேபோல், கோடிய க்காடு குழகர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்து வந்து பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகக்கடவுள், மேலகுமரர் மற்றும் நாகை சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆறுகாட்டுத்துறையில் உள்ள முருகன் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.






