என் மலர்

    நீங்கள் தேடியது "rainfall"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
    • குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழகத்தில் 2-வது பெரிய மண் அணையாகும். பவானி ஆற்றின் நடுவில் கட்டப்பட்டுள்ள இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர அணையில் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலை பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பொழிவு இல்லாததாலும், அணையில் இருந்து அதிகளவில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 77.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1305 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 41.75 அடியாகும். தற்போது 32.44 அடியாக நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இதே போல் 30.84 அடியாக உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.72 அடியாகவும், 33.46 அடியாக உள்ள வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் தற்போது 22.11 அடியாகவும் குறைந்து காணப்பட்டது.

    நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர்.
    • யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் சுற்றித் திரிந்து 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர்.

    அங்கிருந்து வெளியேறிய அரிசி கொம்பன் மேகமலை வனப்பகுதியில் சுற்றித் திரிந்தது. கடந்த 27-ந் தேதி கம்பம் நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய அரிசி கொம்பன் அதன் பிறகு சுருளிப்பட்டி வழியாக கூத்தநாச்சியம்மன் கோவில் பகுதிக்கு வந்தது.

    நாராயணத்தேவன் பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டங்களில் இருந்த பயிர்களை சேதப்படுத்தி அங்கிருந்த வேலிகளை சேதப்படுத்தியதில் அதன் துதிக்கையில் காயம் ஏற்பட்டது.

    மேலும் தற்போது வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. அதற்கு விரும்பிய உணவு கிடைக்கச் செய்யும் வகையில் வனத்துறையினர் அது சுற்றித் திரியும் இடங்களில் பலாப்பழம், அரிசி, கரும்பு ஆகியவற்றை வைத்து வருகின்றனர்.

    தற்போது அது முகாமிட்டுள்ள இடம் வாழை, தென்னை, கொய்யா, கரும்பு, திராட்சை தோட்டங்கள் சூழ்ந்த பகுதியாகும். இந்த வாசனை யானைகளுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அரிசி கொம்பன் கடந்த 4 நாட்களாக அங்கேயே உள்ளது.

    யானையை பிடிக்க ஊட்டி தெப்பக்காட்டில் இருந்து பயிற்சி பெற்ற 20க்கும் மேற்பட்டோர் கம்பம் வந்துள்ளனர். அரிசி கொம்பன் உணவு சாப்பிடும் போது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சிறிது நேரம் உணவு சாப்பிட்டு விட்டு அது மின்னல் வேகத்தில் மறைந்து விடுகிறது.

    சண்முகா நதி அணையை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொழிலதிபரின் வாழைத் தோட்டத்தில் புகுந்து 50க்கும் மேற்பட்ட செவ்வாழைத்தார்களை சாப்பிட்டது. பின்னர் சின்ன ஓவுலாபுரம் மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் அருகே நின்றது. இன்று காலை வரை அதே இடத்தில் இருப்பதால் யானையின் நகர்வினை கம்பம் வனச்சரக அலுவலகத்தில் உள்ள ரேடியோ காலர் ரிசவர் மூலம் உறுதி செய்து வருகின்றனர். கம்பம் வனச்சரக அலுவலகத்தில் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு சென்னை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகம், மதுரை மண்டல தலைமை வனப்பாதுகாவலர் அலுவலகங்களுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

    யானை முகாமிட்டுள்ள பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் அதனை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. யானை ஒரே இடத்தில் இருப்பதால் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளி அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களையும் வேலைக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    தேனி மாவட்டம் அரசரடி, சோலைத்தேவன்பட்டி, முந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் காட்டு யானையைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். இவர்கள் யானையின் போக்கு மற்றும் நடமாட்டத்தை அறிந்து அதனை விரட்டும் தன்மை கொண்டவர்கள். மேலும் ஓரிரு நாட்களில் யானையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வல்லமை படைத்தவர்கள். அது போன்ற பழங்குடி இன மக்கள் மற்றும் முதுமலைப்பகுதியில் இருந்து வரழைக்கப்பட்ட மக்களை யானை முகாமிட்டுள்ள பகுதிக்கு வரவழைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பிட்ட இடத்துக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்குள் விரட்டவும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இயற்கை காரணிகள் பாதகமாக இருப்பதால் மயக்க ஊசி செலுத்தும் முயற்சி தொடர்ந்து தோல்வியடைந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக. நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், மேலூர், தொளார். புத்தேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.அதன்படி அறுவடை எந்திரங்கள் விவசாய நிலங்களில் நிற்கும் நிலையில், 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும், இந்த மழையினால் நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை அடைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டியது.

    விடிய விடிய மழை பெய்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் 1202.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    அதிகபட்ச மாக அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    அதிராம்பட்டினம்-153, திருக்காட்டுப்பள்ளி -127.60, பூதலூர் -114.60, மதுக்கூர் -90.29, பட்டுக்கோட்டை -83, வெட்டிக்காடு -64.60, தஞ்சாவூர் -41 ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது.
    • இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதை குளிர்விக்கும் வகையில் நேற்று இரவு 3 மணி நேரம் தொடர்ந்து இடி மின்னலுடன் கனமழை பெய்தது.நேற்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மழை பெய்ததால் மழை நீர் சாலையில் ஓடியது. இத னால் கல்லாங்காட்டுவலசு, குமா ரவலசு, உப்புபா ளையம் ரோடு குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.உப்புப்பா ளையம் ரோட்டில் வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது.வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் பாதுகாப்பிற்காக ஒரு சில குடும்பத்தினர் இரவோடு இரவாக மேடான பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.மழைநீர் வீட்டிற்குள் சென்றதால் வீட்டிற்குள் இருந்த கழிவறையில் நீர் புகுந்து சுகாதாரக் கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கனமழையின் காரணமாக சேனாபதிபாளையம் கிராமம் சக்திபாளையத்தில் உள்ள நல்லசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று இடி தாக்கி இறந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கும். தீத்தாம்பாளையத்தில் வேப்ப மரம் விழுந்தன. இதனால் அப்பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் சாய்ந்தன.

    சேரன் நகரில் இடி தாக்கி டிரான்ஸ்பார்மர் பழுதடைந்தன. இதனால் நேற்று இரவு 8 மணி முதல் நடுஇரவு 1 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்களால் டிரான்ஸ்பார்மர் சரி செய்யப்பட்டு மீண்டும் வினியோகம் செய்யப்பட்டது.நேற்று வெள்ளகோவில் பகுதியில் 76 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது.

    கடலூர்:

    அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் 5 -ந் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு பகுதி இந்திய பெருங்கடல் வழியாக தமிழக பகுதி நோக்கி இரண்டாவது வாரத்தில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை யொட்டி கடந்த சில தினங்களாக மிக கனமழை பெய்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெள்ளகாடானது. அவ்வப்போது மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. இந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அண்ணாமலை நகர், தொழுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வந்தது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு மேல்ப ட்டாம்பாக்கம் திருவந்திபுரம் கூத்தப்பாக்கம் பாதிரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை லேசான சாரல் மழையுடன் தொடங்கி மழையாக மாறியது. இதனை தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திடீர் மழையால் மழையில் நனைந்தபடியும், குடைப்பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது. மேலும் திடீர் மழை காரணமாக காலையில் வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்தது காண முடிந்தது. மேலும் சாலை ஓரத்தில் உள்ள கட்டிடத்தில் மழைக்கு ஒதுங்கி இருந்ததையும் காணமுடிந்தது. கடலூர் மாவட்டத்தில் மழை அளவு பின்வருமாறு:- தொழுதூர் - 9.0, பரங்கிப்பேட்டை - 2.0, சிதம்பரம் - 1.4, கடலூர் - 1.1, அண்ணாமலைநகர் - 1.0 என மொத்தம் - 14.50 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அந்தியூரில் இருந்து தாமரைக்கரை பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலை உள்ளது.
    • இந்த பிரதான சாலையில் ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் மற்றும் மண் சாலை ஓரங்களில் ஆங்காங்கே உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து தாமரைக்கரை பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்ல பிரதான சாலை உள்ளது.

    இந்த மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு ஏற்பட்டு வந்த காரணத்தினால் இந்த பிரதான சாலையில் ஓரங்களில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பெரும் பாறைகள் மற்றும் மண் சாலை ஓரங்களில் ஆங்காங்கே இருப்பதினால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகவும் சிரமப்பட்டு சென்று வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் இந்த மண் சரிவை அகற்றி அந்தப் பகுதிகளில் மீண்டும் மண் சரிவு ஏற்படாத வண்ணம் வழிவகை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தொட்டியத்தை அடுத்த கொளக்குடியில் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக கொளக்குடி ஏரி அமைந்துள்ளது.
    • இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பெய்த மழையின்ேபாது நிரம்பியது. அதன்பிறகு தற்போது வரை ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றியே காணப்படுகிறது.

    திருச்சி

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கொளக்குடியில் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய ஏரியாக கொளக்குடி ஏரி அமைந்துள்ளது. சுமார் 360 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பெய்த மழையின்ேபாது நிரம்பியது. அதன்பிறகு தற்போது வரை ஏரிக்கு தண்ணீர் வரத்தின்றியே காணப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. பற்றாக்குறைக்கு பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உபரிநீர் கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனாலும் இந்த கொளக்குடி ஏரி இன்றளவும் பாலைவனமாகவே காட்சி தருகிறது. இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர கடந்த மாதம் 12-ந்தேதி கொளக்குடியில் இருந்து நடைபயணமாக சென்று அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரிடமும் இது குறித்து கொளக்குடி பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொளக்குடி பகுதிகளில் விளையும் மிளகாய், தமிழகத்தின் பிரபலமான ஒன்றாகும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்து அதனை வாங்கிச் செல்வது வழக்கம். தற்பொழுது மிக சொற்ப அளவே மிளகாய் பயிரிடப்படுகின்றது.

    மேலும் இப்பகுதியில் நெல், வாழை, கரும்பு மற்றும் காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. கொளக்குடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர இப்பகுதி விவசாயிகள் அருகில் உள்ள முள்ளிப்பாடி வாய்க்காலை தூர்வாரி அதிலிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் கால்வாய் அமைத்து கொளக்குடி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவது மிக எளிதான ஒரு வழி வகையாக தெரிவித்துள்ளனர்.

    இல்லையெனில் காவிரியில் துணை வாய்க்கால் அமைத்து இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்தால் இப்பகுதியில் உள்ள சுமார் 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், இந்த ஏரியை சுற்றியுள்ள ஊராட்சிகளின் குடிநீருக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும்.

    அத்துடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து விவசாயிகளுக்கும் பயனளிக்கும் இந்த ஏரிக்கு நீர் கொண்டுவர கொளக்குடி மற்றும் அப்பண்ணநல்லூர் ஊராட்சிகளில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். தற்பொழுது மழையினால் இரண்டு லட்சத்திற்கு மேலான கனஅடி நீர் வீணாக காவிரியில் கலந்து வரும் சூழலில் கொளக்குடி விவசாயிகளின் கோரிக்கையான ஏரிக்கு தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

    விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுத்து விவசாயிகளையும், விவசாயத்தையும் காக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமேசுவரத்தில் 98 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.
    • கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    இதன் காரணமாக ராமநாதபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை வெ ள்ளம் சூழ்ந்தது. தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாய பணிகளை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளனர்.

    இந்த மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. உப்பள பாத்திகள் மழை நீரில் மூழ்கின. கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    ராமநாதபுரம்-35.40, மண்டபம்-12, ராமேசுவரம்-98.20, பாம்பன்-59.40, தங்கச்சிமடம்-50.30, பள்ளமோர்க்குளம்-7, திருவாடானை -15.20, தொண்டி-0.20, முதுகுளத்தூர்-20, கடலாடி-65,வாலி நோக்கம் -42.40.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print