search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி பகுதியில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்
    X

    மழைநீரில் மூழ்கி முளைக்கும் தருவாயில் உள்ள நெற்பயிர்களை படத்தில் காணலாம்.

    திட்டக்குடி பகுதியில் 50 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்

    • திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
    • 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக. நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    கடலூர்:

    திட்டக்குடி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 350 ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமானதால் மீள முடியாத சோகத்தில் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர், மருதாத்தூர், ஆதமங்கலம், மேலூர், தொளார். புத்தேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெலிங்டன் நீர்த்தேக்க பாசனத்தை கொண்டு நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.அதன்படி அறுவடை எந்திரங்கள் விவசாய நிலங்களில் நிற்கும் நிலையில், 3 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக அறுவடை செய்ய முடியாமல் உள்ளது. மேலும், இந்த மழையினால் நெற்பயிர்கள் நிலங்களில் சாய்ந்தது. இதில் 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி உள்ளது.

    இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்த விவசாயிகள் மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திட்டக்குடி பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால் மழையை பார்த்து மகிழ்ச்சி அடைய வேண்டிய விவசாயிகள் வேதனை அடைய வேண்டிய அவல நிலை தொடர்கிறது.

    Next Story
    ×