search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "quantity"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
    • அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை கொட்டியது.

    விடிய விடிய மழை பெய்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரே நாளில் 1202.40 மி.மீ. மழை பெய்துள்ளது.

    அதிகபட்ச மாக அதிராம்பட்டினத்தில் 153 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-

    அதிராம்பட்டினம்-153, திருக்காட்டுப்பள்ளி -127.60, பூதலூர் -114.60, மதுக்கூர் -90.29, பட்டுக்கோட்டை -83, வெட்டிக்காடு -64.60, தஞ்சாவூர் -41 ஆகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கான உணவு அளவு குறைப்பு திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. #IRCTC #Rajdhani #ShatabdiTrains
    புதுடெல்லி:

    ரெயில்களில் வழங்கப்படும் உணவு குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    உணவின் தரம் போதுமான அளவுக்கு இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதை மாற்றி அமைக்க ரெயில்வே இலாகா பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளுக்கு உணவு வழங்கும் பொறுப்பை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டுள்ளது. சைவம், அசைவம் இரு வகை உணவுகளையும் பயணிகளுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பொதுவாக பயணிகளுக்கு 750 கிராம் உணவு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சராசரியாக 900 கிராம் உணவுகளை வழங்கி வருகிறது.

    இதன் காரணமாக பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் இழப்பு ஏற்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி. கூறுகிறது. அதாவது ஒரு மதிய உணவுக்கு ரூ.112 வசூல் செய்கிறார்கள். ஆனால் அதற்கான செலவு ரூ.150 வரை ஆகிறது.


    என்றாலும் உணவு வகைகளில் தரம் இல்லை என்ற குற்றச்சாட்டு நீடிக்கிறது. இந்த குறையை நிவர்த்தி செய்ய அளவை குறைத்து தரத்தை உயர்த்த ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி இனி உணவு வகைகளில் தற்போது வழங்கப்படும் 150 கிராம் பருப்பை 100 கிராமமாக குறைக்க முடிவு செய்துள்ளனர். இதுபோல எலும்பு இல்லாத கோழிக்கறி அளவையும் குறைக்க உள்ளனர்.

    இதற்கான ஒப்புதல் கிடைத்ததும் முதல் கட்டமாக 27 ராஜ்தானி மற்றும் சகாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உணவு அளவு குறைப்பு திட்டம் அமலுக்கு வர உள்ளது. #IRCTC #Rajdhani #ShatabdiTrains
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவு குறைந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் எடை அளவு குறைவாக இருப்பதாக அடிக்கடி பொதுமக்கள் புகார் தெரிவித்து கொண்டிருக்கின்றனர்.

    இதுதொடர்பாக அங்குள்ள ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், பொருட்களின் அளவு சரியாக இருப்பதற்காகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி ரேஷன் கடை முறைகேடுகள் குறித்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குறைதீர்க்கும் அலுவலரான, மாவட்ட வருவாய் அதிகாரி அலுவலகத்திற்கு எழுத்து மூலமாகவும், தொடர்பு எண்ணுடனும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

    மேலும், 99809-04040 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி புகார் செய்யலாம். இதுபோல் இலவச தொடர்பு எண்ணான 1967, 1800 425 5901 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை மாவட்ட வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். 
    ×