search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Rains"

    • மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு.
    • திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர்.

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் (காலை 10 மணி வரை) 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அநேக இடங்களில் நாளைமறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு, 23-ம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னை புறநகர் பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    இன்று அதிகாலை தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை உள்பட பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய பத்து மாட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    அதன்படி நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக இருப்பதை ஒட்டி தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    காலை முதலே மழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 2-வது வாரம் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.
    • இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை அக்டோபர் இரண்டாவது வாரம் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது.

    இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக என வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    • சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
    • மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சென்னையில் நேற்றிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இன்று காலையிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால் நகரில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை நேரில் சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி அவர்கள் நகரில் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கொட்டித் தீர்க்கும் கன மழையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் களத்தில் இறங்கி மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார்.

    வடசென்னை பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள யானைக்கவுனி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார்.

    யானைக்கவுனி மேம்பாலம் செல்லக்கூடிய பகுதியில் அங்குள்ள கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார்.

    ஏற்கனவே அந்த கால்வாய் தூர்வாரப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிக மழை பெய்வதால் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு தடை ஏற்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தது. அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அது மட்டுமின்றி அங்குள்ள பகுதிகளையும் நடந்து சென்று பார்வையிட்டார்.

    அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் அங்கு நடைபெறும் பணிகளை விவரித்து கூறினர்.

    அதன் பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசின்பிரிட்ஜ் மேம்பாலம் பகுதிக்கு சென்று பார்த்தார். தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை விரைந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பிறகு புளியந்தோப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள கால்வாயை பார்வையிட்டார். அங்கு பணியாற்றி வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடமும் சகஜமாக பேசினார்.

    அப்போது அங்குள்ள ஒரு டீக்கடைக்கு அவர்களை அழைத்து சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தூய்மை பணியாளர்களுக்கு பிஸ்கட், டீ வாங்கி கொடுத்தார். அந்த கடையில் அமர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டீ குடித்தார்.

    இதைத் தொடர்ந்து கொளத்தூர் திரு.வி.க.நகர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது.
    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து இருக்கிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரையோரம் அடுத்த 2 தினங்களுக்கு நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
    • சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.

    சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, எழும்பூர், புரசைவாக்கம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது சென்னையின் பல இடங்களில் கனமழை பெய்ய துவங்கியுள்ளது.

    இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்ததை அடுத்து, சென்னை உள்பட நான்கு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சென்னையில் காலை முதலே கனமழை பெய்ய துவங்கி இருக்கிறது.

    டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

    • நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது. அது இன்று (திங்கட்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்) மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் தென் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

    அதன் நகர்வை பொறுத்து தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    வங்கக் கடலில் தென் மத்திய பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.

    இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். பின்னர் அது வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும்.

    மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதியில் வீசும் நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும்.

    இதற்கிடையே வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கனமழை தொடங்கி உள்ளது.

    இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

    நாளை (15-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.

    மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 16-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி), நாளை மறுநாள் (16-ந்தேதி) ஆகிய 2 நாட்களும் 20 சென்டி மீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 17-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

    வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மத்திய அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று அதிகாலை 8.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டு இருந்தது.

    இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • சென்னையில் அதிகாலை முதல் மழை பெய்து வந்ததால் ஆட்டம் தொடங்குமா? என்ற சந்தேகம்.
    • மைதானம் முழுமையாக மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டதால் ஆட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மழை பெய்து வந்தது. இதனால் போட்டியில் சரியான (காலை 9.30 மணி) நேரத்திற்கு தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது.

    அதேவேளையில் ஆடுகளம் மற்றும் மொத்த மைதானமும் மூடப்பட்டிருந்தது. போட்டி தொடங்குவதற்கு முன் மழைச்சாரல் முற்றிலுமாக நின்றது. இதனால் போட்டி சரியாக 9.30 மணிக்கு தொடங்கியது.

    லேசான மழை பெய்து கொண்டிருக்கும்போது ரசிகர்கள் அதிக திரண்டு வந்து டிக்கெட் வாங்கினர்.

    நேற்று முன்தினம் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் இந்தியா முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது. வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

    ×