என் மலர்
திருப்பூர்
- போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.
இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
- சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ந்தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது.
இந்நிலையில் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் கலந்து கொள்ளும் ஒரு எழுச்சிமிகு மாநாடாக கழகத்தின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்கள்.
இந்த மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்பது வரலாற்று சிறப்புமிக்க மகளிரணி மாநாடாக அமைய உள்ளது.
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கணக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவதற்கான ஒரு முன்னேற்பாடாக, முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
நிச்சயம் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை. முதலமைச்சரின் எஃகு கோட்டையாக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பை தருவதற்கு மக்கள் தயாராக உள்ளார்கள்.
முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். மாநாட்டில் மகளிர் மட்டும் இடம் பெறுவார்கள்.
அரசு நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும், முடிந்த திட்டங்களுக்கான திறப்பு விழா, தொடக்க விழா இருக்கும்.
இது இயக்கத்தின் மாநாடு, மகளிரணி மாநாடு. ஏற்கனவே திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் இளைஞரணி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எங்கள் தி.மு.க.வின் பக்கம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து இப்போது மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.
எந்த பகுதி யாருடைய கோட்டை என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது.
- தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையாக உள்ளது. மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் மலைமேலுள்ள பஞ்சலிங்கம் சுவாமி கோவில் மற்றும் அருவி உள்ளது.
இங்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் காரணமாக திருமூர்த்திமலை மலை மேலுள்ள பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் அருகில் செல்லும் தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருக்கோவில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்கின்றது. இதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தொடர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
- ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
இந்தியாவின் ஆயத்த ஆடை கடந்த நவம்பர் மாதம் ரூ.11,320 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 11.3 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு உள்பட பல்வேறு தடைகள் இருந்த போதிலும் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சமீபத்திய ஏற்றுமதி புள்ளிவிபரங்கள் இந்திய ஆடைகள் முக்கிய சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து செல்வாக்கு பெற்று வருவதை குறிப்பிடுகிறது.
நவம்பர் மாதத்தில் ஆடை ஏற்றுமதிகள் ஆண்டு கணக்கில் குறிப்பிடத்தக்க அளவில் ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற முக்கிய வர்த்தகர்களுடன் ஏற்பட்ட வளர்ச்சி இதற்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
பாரம்பரிய வர்த்தகர்களை தாண்டி புதிய சந்தைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம், அமெரிக்க சந்தையில் பருவகாலம் மற்றும் சுங்க வரி தொடர்பான சவால்களை சமநிலைப்படுத்த உதவி செய்து, மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் வட்டி சமநிலைப்படுத்தும் திட்டம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகியவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இது மட்டுமல்லாது சந்தை அணுகல் தொடர்பான கடன் வசதிகள் போன்ற பிற வர்த்தக நிதி ஆதரவு நடவடிக்கைகளும் காலதாமதமின்றி அமல்படுத்தினால் ஏற்றுமதியாளர்களின் நிதிச்சுமை குறிப்பிடத்தக்க அளவில் குறையும். அதன்மூலம் மொத்த ஏற்றுமதி வளர்ச்சி வேகம் மேலும் அதிகாரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
- உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்ப கவுண்டன்வலசு,
வெள்ளகோவில்:
வெள்ளகோவில், ராசாத்தா வலசு, தாசநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி வட்டமலை, ஊதியூர், பொத்திபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், முத்துக்காளிவலசு, வடசின்னாரிபாளையம், வெள்ளகோவில், நடேசன் நகர், கரூர் ரோடு, கோவை ரோடு, குறுக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகர், கே.பி.சி. நகர், சேரன் நகர், காமராஜபுரம், ராசாத்தா வலசு, பாப்பினி, அஞ்சூர், தாசநாயக்கன்பட்டி, நாகம்மா நாயக்கன்பட்டி, புதுப்பை, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்ப கவுண்டன்வலசு,
வேலம்பாளையம், கம்பிளியம்பட்டி, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையாம் பூண்டி, கும்பம்பாளையம், அய்யம்பாளையம், மங்கலப்பட்டி, மாந்தபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், கே.ஜி.புதூர். என்.ஜி. வலசு, வரக்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை, காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.
- இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை (டிஏ) சரண்டா், உயா்க்கல்விக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள், சத்துணவு ஊழியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், செவிலியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் மற்றும் ஊா்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளா்கள், ஆசிரியா்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியா்கள் ஆகியோா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியன், பாண்டியம்மாள், வேலுமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களாக, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்தது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 534 கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை 90 அடி உயரம் கொண்ட அணையில் 87.11 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 356 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில் உள்ள அமராவதி அணை தற்போது கடல் போல் காட்சி அளிக்கிறது. அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1993ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பணிக்கொடை வழங்க வேண்டும், மேலும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அகவிலைபடியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிகளை போல மே மாதம் முழுவதும் அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியப்படி திருப்பூர் பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலை கைவிட மறுத்ததை தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருடன் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது.
- விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
திருப்பூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநகர மாவட்ட செயலாளர் விசாலாட்சி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை பழக்கத்தால் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. அப்படி இருந்தும் தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் வெற்றி பெற்றது உறுத்திக்கொண்டுள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிளவுபட்டுள்ளது. த.வெ.க. வரவு என எல்லாவற்றையும் ஆலோசித்து தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் இதனை கண்காணிக்காவிடில் தி.மு.க.வை வீழ்த்த முடியாது.
த.வெ.க. தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால் இந்தியா கூட்டணியை 3-வது இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. தி.மு.க., ஆட்சியில் பல துறைகளில் ஊழல் முறைகேடு உள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தார்கள். தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
தி.மு.க.வை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தங்களை சுயபரிசோதனை செய்தால் தான் மிருக பலத்துடன் உள்ள தி.மு.க.வை வீழ்த்த முடியும். வெற்று விளம்பர ஆட்சியாக உள்ளது. அதனை எதிர்க்கட்சிகள் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஒரு சிலரின் சுயநலத்தால் விழுதுகள் போன்ற பலரை நீக்கி விட்டு நாங்கள் துரோகி என்கிறார்கள். 99 சதவீத தொண்டர்கள் மன வருத்தத்திலும் வேதனையிலும் உள்ளனர். சரியான முடிவு எடுக்காவிடில் தேர்தல் பாடம் தரும். செங்கோட்டையன் எங்களோடு நட்பாக உள்ளார். அதற்காக எங்களுடன் தான் பயணிக்க வேண்டும் என்பதில்லை. அவர் விருப்பம் போல் த.வெ.க.வில் இணைந்துள்ளார்.
நான் எதார்த்தத்தை நாட்டு நடப்பு பற்றி பொறாமை இல்லாமல் சொல்கிறேன். த.வெ.க. வளர்ந்து வரும் கட்சியாக தெரிகிறது. விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் பல மக்கள், பெண்கள் ஆதரவை பெற்றவர். முதலில் எங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறோம். விஜய் தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் ஆளும் தி.மு.க.விற்கு போட்டியாக அமையும்.
3-வது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால் தான் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் என்பதால் தான் அவர்கள் கூட்டணிக்கு சென்றோம். தொண்டர்களின் முடிவால் தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளோம். பா.ஜ.க. எங்களிடம் நட்போடு பேசினாலே மிரட்டுவது போல பரப்பி வருகின்றனர். அ.ம.மு.க. எந்த கூட்டணியில் இருந்தாலும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் மேயர் விசாலாட்சி போட்டியிடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை.
- தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும்.
திருப்பூர்:
அ.ம.மு.க., பொது ச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருப்பூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் போன்ற நீண்ட அனுபவம் உள்ளவர்கள் த.வெ.க.வில் சேர்கிறார்கள் என்றால் அந்தந்த கட்சிகள் தங்களை சீர்படுத்திக்கொள்ள வேண்டும். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகள் எங்களுடன் பேசி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஒன்றாக இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்து செல்ல முடியும். சட்டமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு தூங்கிக்கொண்டு இருப்பவர்கள், தூங்குவது போல நடிப்பவர்கள் ஒருங்கிணைவார்கள் என எதிர்பார்க்கிறேன்.
பதவி ஆசை, சுயலாபத்திற்காக பிரித்து விட்டார்கள். அவர்களாக திருந்த வேண்டும். அல்லது அவர்களை யாராவது எழுப்ப வேண்டும். அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என பா.ஜ.க., தலைவர்கள் முயற்சி செய்தார்கள். இப்போதும் செய்கிறார்கள்.
ஒரு கட்சியில் பிரச்சனையை சரி செய்ய மத்தியஸ்தர் தேவை. மற்ற கட்சியில் இருந்து வந்து கூட்டணிக்காக பேசுவதை தவறாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க., அதிகாரத்தை வைத்து மிரட்டுவதாகவும் நான் நினைக்கவில்லை. இது நட்பு ரீதியானது.
53 ஆண்டாக அ.தி.மு.க.வில் இருந்த செங்கோட்டையன் ஒற்றுமையை வலியுறுத்தி முயற்சி எடுத்தார். அது பிடிக்காமல் கட்சியை விட்டு நீக்கினால் வீட்டில் போர்வை போர்த்தி உறங்க முடியாது. தேனீ போன்று சுறுசுறுப்பானவர். அவர் கோபத்தில் த.வெ.க.வுக்கு சென்றிருக்கமாட்டார். சிந்தித்து நிதானமாகவே முடிவெடுத்திருப்பார்.
செல்லூர் ராஜூ காமெடியாக ஏதாவது பேசுவார். இலை உதிர்ந்தால் பிரச்சனை இல்லை. விழுதுகளாக உள்ளவர்கள் சென்றது அவருக்கு புரியவில்லை. 16-ந்தேதி ஈரோடு விஜய் பிரசாரத்திற்கு வழிமுறைகளை பின்பற்றினால் அனுமதி வழங்குவார்கள்.
தமிழகம் அமைதி பூங்கா. இங்கு சாதியை கடந்து மதத்தை கடந்து வாழ்ந்து வருகிறோம். மத நல்லிணக்கம் அடிப்படையானது. பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மூலம் எல்லோரும் சமம் என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கடவுளின் பெயரையோ மதத்தின் பெயரையோ சாதியின் பெயரையோ கூறி தேவையற்ற பிரச்சனைகள் கலவரங்கள் உருவாகாமல் அனைத்து கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்போடு செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. இதனை அரசும் நீதிமன்றமும் சரியாக செய்வார்கள் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் இந்த தேர்தலில் 4 முனை போட்டி தான் இருக்கும். நான் சொன்னதை புரிந்து கொள்ளாமல் தினகரன் 5-வது அணி அமைப்பார் என பேசினார்கள். ஆனால் அது உண்மை இல்லை. தமிழகத்தில் 4 முனை போட்டி தான் இருக்கும். வெற்றியை நோக்கி எங்கள் கூட்டணி அணிவகுக்கும்.
சீமான் தனித்துப்போட்டியிடுவார். தி.மு.க., அ.தி.மு.க., விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைய உள்ளதாக எனக்கு செய்திகள் வருகிறது. நான் யாருடன் செல்கிறேன் என இதுவரை முடிவு எடுக்கவில்லை.
கூட்டணிக்கு தலைமை ஏற்று இருக்கும் சில கட்சிகள் எங்களோடு பேசி வருகின்றனர். இறுதி வடிவம் அடைந்த பிறகு உறுதியாக தெரிவிக்கிறேன். எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை. நட்பு ரீதியாக பேசி உடன்பாடு எட்டப்படும். அ.ம.மு.க., இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும். அ.ம.மு.க.வில் தேர்தலுக்காக அனைத்து நிலை உறுப்பினர்களையும் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
- தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது.
- பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை.
திருப்பூர்:
திருப்பூரில் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) கலந்துரையாடல் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறுகுறு தொழில்களில் ஜாப் ஒர்க்கிற்கான பணத்தை 45 நாட்களுக்குள் வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.
அதேபோல் ரீடெய்லர்களும் பணத்தை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் தற்போது உற்பத்தி செலவு, பணியாளர்கள் சம்பளம் என செலவு அதிகரித்து உள்ளது. மேலும் பனியன் ஆடைகளின் விலையை உயர்த்தி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை விலையை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
பனியன் ஆடைகளை வாங்கும் வியாபாரிகள் சிலர் அதற்கான தொகையை சரிவர கொடுப்பதில்லை. அவர்களை பிளாக் லிஸ்ட்டில் (கருப்பு பட்டியல்) கொண்டு வருவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.






