என் மலர்
திருப்பூர்
- ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.
- சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
திருப்பூர் :
திருப்பூர் கே. செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழாவும், ஆசிரியர் பண்புப் பயிற்சி முகாமின் நிறைவு விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் செயலாளர் எக்ஸ்லான். கே. ராமசாமி வரவேற்புரை ஆற்றினார். மணிப்பூர், மேகலாயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் அவர் 10 ம்வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி காவ்யா மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்ற மாணவி பிரதிக்ஷாவிற்கும் சிறப்பிடம் பெற்ற பிற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவேகானந்தா சேவா அறக்கட்டளையின் தலைவர் வீனஸ். குமாரசாமி நன்றி கூறினார்.
- 352 கிலோமீட்டர் தூரத்திற்கு குடிநீர் இணைப்பு விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
- ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை மேயர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு கமிஷனர் பவன் குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த தெரு விளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக முதல் கட்டமாக 3 மற்றும் 4 வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4755 தெரு விளக்குகளுக்கு டெண்டர் விடப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி., விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.இந்தப் பணிகள் அனைத்தும் நாளை தொடங்கப்பட உள்ளது.மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் பொருத்தப்பட உள்ளது.
இதே போல் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் நான்காவது கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோமீட்டர் தூரத்திற்கு வீடுகள்இ வணிக வளங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது மற்றும் குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூன் இறுதிக்கு முன்பாக இந்த பணிகள் தொடங்கப்படும்.மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
மாநகர் பகுதிகளில் பாதாள திட்டப்பணிகள் 89 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினை இல்லாத வகையில் நான்கு நாட்களுக்கு ஒரு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்திலேயே நமக்கு நாமே திட்டத்தில் அதிக நிதியை திருப்பூர் மாநகராட்சி பெற்றுள்ளது தற்போது ரூ.1கோடியே 80 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் பிரச்சனைக்கு தீர்வாக தண்ணீர் தேங்கும் இடங்களில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டது என்றார்.
- பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது.
- வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் பேசியதாவது:- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் பெயரை வைத்துள்ளோம். ஆனால் பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது. அதனைமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மண்டல தலைவர் நிதி தற்போது வழங்குவது போதுமானதாக இல்லை. எனவே வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கான்கிரீட் சாலை பழுதடைந்து உள்ளது .அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.
அதேபோல் நான்காவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 11,459 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது .எனவே அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 41, 51, 53 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது .எனவே விடுபட்டுள்ள அந்த பகுதிகளிலும் உடனடியாக பாதாள சாக்கடை பணியை தொடங்க வேண்டும் என்றார்.
- மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடி வழியாக பில்லூர் அணைக்கு வருகிறது.
- சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி பேசியதாவது:- திருப்பூர் மாநகர் மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நான்காவது குடிநீர் திட்டத்திற்காக நிதி 1350 கோடி ரூபாய் ஒதுக்கி தந்து திருப்பூர் மக்களின் தாகம் தீர்த்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்,முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி.வேலுமணி,அதற்காக முழு முயற்சி எடுத்த சட்டமன்ற உறுப்பினர்கே.என்.விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் ஆகியோருக்கு திருப்பூர் மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இதே போல் இந்த மாபெரும் திட்டத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுஇரவு, பகல் பாராமல் உழைத்திட்டஅதிகாரிகளுக்கும், அதற்கு உறுதுணையாகவும், ஊக்கமும், ஆக்கமும்ஆலோசனையும் வழங்கிய மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் மக்களின்சார்பாகவும், அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் சார்பாகவும் நன்றியினைதெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்த சிறப்பான திட்டத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா மாநிலம் அட்டப்பாடிவழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. இச்சூழலில் பவானிக்குசெல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது .இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் நமது திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சூழல் உள்ளது.
எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்புதீர்மானம் கொண்டுவர வேண்டும். மேலும் மத்திய மாநில அரசு கவனத்திற்கு கொண்டு சென்று போர்க்கால அடிப்படையில் உடனடியாக தடுத்துநிறுத்த மேயர் மற்றும் ஆணையாளர் அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சிஅதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து நேரில் சென்று மேற்படி இடத்தை ஆய்வுசெய்து தடுப்பணை கட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும் என்றார்.
- பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த சக பயணி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
- இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் தனது 8 வயது குழந்தையுடன் கேரளாவில் நடைபெற்ற தோழியின் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் திருப்பூர் திரும்பினார். பொள்ளாச்சி வந்த அவர் அங்கிருந்து திருப்பூருக்கு பேருந்தில் புறப்பட்டார். அவருடன் பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த சக பயணி ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். எச்சரித்தும் அந்த நபர் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண் பேருந்து நடத்துனரிடம் புகார் தெரிவித்து சத்தமிட தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த சக பயணிகள் அந்த நபரை பிடித்து தாக்கினர்.
பின்னர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் வந்ததும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.
- இடை நிற்றல் மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்படுவர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. குடும்பச்சூழல், கற்றலில் ஆர்வ மின்மை, பொதுத்தேர்வுகளில் தோல்வி போன்ற காரணங்களால் பள்ளி இடை நிற்றல் அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து காரணங்களை ஆராய்ந்து, தீர்வு காணும் விதமான நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு மேயர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:- தொழில் நகரமாக உள்ளதால் திருப்பூரில் அதிக அளவு வெளி மாவட்ட, வெளி மாநிலத்தினர் அதிகம் வசிக்கின்றனர். குடும்பச்சூழல் காரணமாக பள்ளிகளில் சேர்க்க முடியாமல் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தவிக்கும் நிலை உள்ளது. இது குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டு இது போல் இடை நிற்றல் மாணவர்கள் கண்டறிந்து பள்ளியில் சேர்க்கப்படுவர்.
பல மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பின் கல்வியைத் தொடர்வது தவிர்க்கும் நிலை உள்ளது. இவர்கள் பயனடையும் விதமாக வடக்கு பகுதியில் அரசு ஐ.டி.ஐ., துவங்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும். குறுகிய கால தொழிற்பயிற்சிகள் வழங்கி சுய வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்படும்.வெளி மாநில குழந்தைகள் படிக்கும் விதமாக பிற மொழி ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். ஆத்துப்பாளையம், வெங்கமேடு பகுதியில் 84 வெளி மாநில குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தாய் மொழி பயிலும் வகையில் சிறப்பு ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இது போல் மற்ற பகுதிகளிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.
- இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூரில் இருந்து ஆண்டுக்கு 34 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்களும், தொழில் நிமித்தமாக இங்கு வந்து செல்கின்றனர். இருப்பினும், கட்டமைப்பு வசதிகளில் சற்று பின்தங்கியுள்ளது.தற்போது வேகமாக வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன.
இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் தொழிலை நம்பியுள்ளனர். திருப்பூர், பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதியில் மட்டும் 1.60 லட்சத்துக்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
வடமாநில தொழிலாளர்கள் தினமும் ஆயிரக்கணக்கானோர் ரெயில்கள் வழியாக வந்து செல்கின்றனர். அத்துடன் ஆயிரக்கணக்கான பயணிகள், தினமும் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இருப்பினும் கோவை, ஈரோடு ரெயில்வே சந்திப்புகளுடன் ஒப்பிடுகையில் திருப்பூர் ரெயில் நிலையம் வசதிகளில் பின்தங்கியுள்ளது.மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் திருப்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்திட ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் முழுமையாக ஆலோசித்து மேம்பாட்டு திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் தொழில் அமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- திருப்பூர் ரெயில் நிலையம் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில் மேம்படுத்தப்படுமென தெரிவித்துள்ளனர். தெற்கு பகுதியில் உள்ளது போலவே வடக்கு பகுதியிலும், இரு சக்கர வாகன நிறுத்தம், டிக்கெட் கவுன்டர், புக்கிங் சென்டர் போன்ற வசதிகள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ெரயில்வே பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கப்படும். ரெயில்வே சந்திப்பில் உள்ள அனைத்து வசதிகளும் திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு கிடைக்கும். அம்ரூத் திட்டத்தில் ரெயில் நிலையம் மேம்பாடு செய்வது தொடர்பாக விரைவில் தொழில் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
- பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்கள் பெறப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவைஅனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கபசுரகுடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மணிமேகலை விருது வழங்குவதற்கானஅறிவிப்பை அரசாணை எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
- விண்ணப்பங்கள் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
திருப்பூர் :
2022-23ம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கானவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கிராம ஊராட்சி பகுதிகளில் சிறப்பாகசெயல்படும் சுய உதவிக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டாரஅளவிலான கூட்டமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில்உள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதிஅளவிலான கூட்டமைப்பு ஆகியோர்களுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்கானஅறிவிப்பை அரசாணை (நிலை) எண் 133-ல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மணிமேகலை விருது தேர்வுக்கான மதிப்பீட்டு காரணிகள் பின்வருமாறு :- வார மற்றும் மாதாந்திர கூட்டங்களை முறையாக நடத்தியிருக்க வேண்டும். குழுவில் சேமிக்கப்படும் சேமிப்புத்தொகையினை சரியான முறையில் பயன்படுத்தியிருக்க வேண்டும்.குழுக்கள் / கூட்டமைப்புகள் தகுதியான அனைத்து குழுக்களுக்கும்வங்கியிலிருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.குழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பொருளாதார நடவடிக்கைகளில்ஈடுபட்டிருக்க வேண்டும்.திறன் வளர்ப்புப் பயிற்சி மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பயிற்சிகள்அனைத்து உறுப்பினர்களும் பெற்றிருக்க வேண்டும்.
சமூக மேம்பாட்டு பணிகளில் மக்கள் அமைப்புகள் ஈடுபட்டிருக்க வேண்டும். எனவே மேற்கண்ட காரணிகளின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள்முடித்த சுய உதவிக்குழுக்கள், தர மதிப்பீட்டில் ஏ அல்லது பி தகுதி உள்ள பஞ்சாயத்துஅளவிலான கூட்டமைப்பு, ஏ அல்லது பி தகுதி உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் ஏ அல்லது பி தகுதி உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்ப்புறங்களில்தகுதிவாய்ந்த 4 ஆண்டுகள் முடித்த சுய உதவிக் குழுக்கள், ஏ அல்லது பி தகுதி உள்ள பகுதிஅளவிலான கூட்டமைப்பு மற்றும் ஒரு ஆண்டு நிறைவு செய்த நகர அளவிலானகூட்டமைப்பு ஆகிய மக்கள் அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விண்ணப்பங்களை ஊரக பகுதிகளில் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்திலும், நகர்ப்புற பகுதிகளில் தகுதியான விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட பேரூராட்சி-நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் 25.6.2023-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.மேலும் தொடர்புக்கு - உதவி திட்ட அலுவலர் (கூடுகை மற்றும் கூட்டாண்மை),அறை எண்.305 மூன்றாவது தளம், மகளிர் திட்ட அலுவலகம், திருப்பூர் என்ற முகவரியையும் 9444094396, 8825552321, 0421-2971149 என்ற செல்போன்-தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் எள் அறுவடை நடைபெற்று வருகிறது.
- சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது.
காங்கயம் :
முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜூன் 3-ந் தேதிமுதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் எள் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா் தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- முத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது எள் அறுவடை நடைபெற்று வருகிறது. அருகிலுள்ள மூலனூா், வெள்ளக்கோவில், கொடுமுடி, சிவகிரி ஆகிய பகுதிகளிலும் பல விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளனா். முத்தூா் விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமையன்று தேங்காய், கொப்பரை ஏல விற்பனை நடத்தப்படுகிறது. இத்துடன் எள் விற்பனையும் நடத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து வணிகா்கள், உயரதிகாரிகளுடன் கலந்து பேசி நடப்பு எள் அறுவடைப்பருவம் முடியும் வரை ஜூன் 3 -ந் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் முத்தூா் விற்பனைக்கூடத்தில் எள் மறைமுக ஏலம் நடத்தப்படும். இதில் எள் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.