என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "avinashi"
- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.
- மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.
திருப்பூர் :
அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
அவினாசி :
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (5ந் தேதி) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பச்சாம்பாளையம், பரமசிவம் பாளையம்,பெரியாயிபாளையம்,பள்ளிபாளையம், பொங்கு பாளையம்,காளம்பாளையம்,ஊஞ்சபாளையம்,புது ஊஞ்சபாளையம்,குபாண்டம் பாளையம், துலுக்க முத்தூர், நல்லாத்துப்பாளையம்,வ.அய்யம்பாளையம்,ஆயிக் கவுண்டம்பாளையம்,வேலூர்,மகாராஜா கல்லூரி பகுதி, எஸ் எஸ் நகர்,வீதிக்காடு முட்டியங்கிணறு, திருமலை நகர்,சிட்கோ,பெ.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் 5 ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
இந்த தகவலை அவினாசி துணை மின் நிலைய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அவினாசி :
அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வருகிற 3-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.
- 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவினாசி :
அவினாசி புது பஸ் நிலையம் பின்புறம் திருமலை ஸ்ரீவெங்கடேஸ்வரா சிற்பக் கலைக்கூடம் நடத்தி வருபவர் ஸ்தபதி கன்னியப்பன்.
இவரது தலைமையில் சரவணகுமார், ரமேஷ் உள்ளிட்ட சிற்பிகள் கடந்த ஒரு மாதமாக கருங்கற்களால் 10 அடி உயரம் கொண்ட ஆண் முனி மற்றும் பெண் முனி சிலைகளை கலைநயத்துடன் உருவாக்கி உள்ளனர். இது குறித்து சிற்பி கூறுகையில், "ஈரோடு மாவட்டம் பாசூரில் புதிதாக கட்டப்பட்ட கோவிலுக்கு கன்டெய்னர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
- தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது .
- அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்து நம்பியம்பாளையத்தை சேர்ந்தவர் பூவேஸ். இவர் அந்தப் பகுதியில் காய்கறி மற்றும் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் தொழில் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் நேற்று சந்தோஷ் அந்த கடைக்குள் புகுந்து பூவேசை திட்டியும் அங்கு இருந்த காய்கறி ,பழம் ஆகியவற்றை எடுத்து வீசி எறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாலை மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் கன மழை பெய்தது.
- ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அவினாசி :
அவினாசியில்கடந்த இரண்டு நாட்களாகபகல் வேளையில்சுட்டெரித்த வெயிலால் மக்கள் அவதி ப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் அரை மணி நேரம் கன மழை பெய்தது. ரோட்டில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்த போது பலத்த காற்று வீசியதால் அவினாசி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பி ருந்த மரம் முறிந்து விழுந்த து. அதில் அங்கு நிறு த்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது மரக்கி ளைகள் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தன. மேலும் மின் கம்ப வயர்க ளில் மரக்கிளை கள் உரசி யபடி இருந்ததால் அப்பகு தியில் மின் இணைப்பு துண்டிக்க ப்பட்டது. அவினாசி முத்து செட்டிபா ளையத்தில் உள்ள அங்க ன்வாடி மையத்திற்குள் மழைநீர் புகுந்தது.
முறிந்து விழுந்த மரத்தை பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் அப்புறப்ப டுத்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவினாசி பகுதியில் நேற்று மாலை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி யானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- பருத்தி ஏலத்திற்கு 1938 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தது.
- ரூ 2ஆயிரம் முதல் ரூ.7600வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
அவினாசி :
அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு 1938 பருத்தி மூட்டைகள் ஏலத்துக்கு வந்திருந்தது. இதில் ஆர்சிஎச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ. 6000 முதல் ரூ.7600வரையிலும் மட்டரகப்பருத்தி குவிண்டால் ரூ.2ஆயிரம் முதல் ரூ.3500 வரையிலும் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர்.
பருத்தி ரூ. 38 லட்சத்து 68 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
- காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது.
- மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அவினாசி :
அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி செய்தி குறிப்பில் கூறியதாவது :- பழங்கரை துணை மின் நிலையத்தில் (நாளை) 8-ம்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அவினாசிலிங்கம் பாளையம், அனைத்துதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம்,
டி.பப்ளிக்ஸ்கூல்,ஸ்ரீராம்நகர்,நல்லிக்கவுண்டன்பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி,ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்டிஓ அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரை சாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி ஜி வி கார்டன், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்ஜிஆர் நகர்,மகாலட்சுமி நகர், முல்லை நகர்,தன் வர்ஷினி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை விநியோகம் இருக்காது இதே போல் பெருமாநல்லூர் துணை மின் நிலையத்தில் 8.ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளி பாளையம், புதுப்பாளையம், சடையம்பதி,பூலுகப்பட்டி ,பாண்டியன் நகர், எம் தொட்டிபாளையம், மேற்குப்பதி, வலசுபாளை யம்,கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டி பாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபா ளையம், தொரவலூர், ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது இவ்வாறு செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- செந்தில்குமார் காவிலிபாளையத்தில் சொந்த கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
- ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சென்டிங் சீட்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தார்.
அவினாசி :
அவினாசியை அடுத்து வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது51) .இவர்காவிலிபாளையத்தில் சொந்த கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சென்டிங் சீட்டுகளை வாங்கி அடுக்கி வைத்திருந்தார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது அந்த சீட்டுகளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்உத்தரவின் பேரில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
- சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அவினாசி :
அவினாசியில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்டம் அவினாசி புது பஸ் நிலையம் அருகில் அனைப்புதூர், மங்கலம் ரோடு, தெக்கலூர், நரியம்பள்ளி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்குமாறு சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு அலுவல் நியமித்து அனைவரும் தொய்வின்றி பணி செய்ய தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் மாவட்டம் முழுவதும் தணிக்கை செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்.