தியேட்டரில் சிறுமி பாலியல் வன்கொடுமை- திருப்பூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர்.வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தியேட்டரில் சிறுமி பாலியல் வன்கொடுமை- திருப்பூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை
Published on

மேலசொக்கநாதபுரம்:

திருப்பூரை சேர்ந்தவர் முகமதுரியாஸ் (வயது27). இவர் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகில் உள்ள மறையூரை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.

இவர்கள் நட்பு அதிகரித்த நிலையில் தனது குடும்ப சூழ்நிலையை சிறுமி தெரிவித்து ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளார். அப்போது திருப்பூருக்கு வந்தால் வேலை வாங்கி தருவதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் சிறுமியை வரவழைத்து கூட்டம் அதிகம் இல்லாத தியேட்டருக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் தன்னுடனே அவர் தங்க வைத்துள்ளார். இதனிடையே சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரது பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில் திருப்பூரில் பதுங்கி இருந்தது தெரிய வரவே அவரை மீட்டு விசாரித்தனர். அப்போது தன்னை வேலைக்கு வரச்சொல்லி முகமது ரியாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கேரள போலீசார் முகமது ரியாசை கைது செய்தனர். இந்த வழக்கு இடுக்கி போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் 35 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு 41 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விசாரணை முடிந்த நிலையில் முகமது ரியாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட சேவை வாரியம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com