என் மலர்
நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"
- சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது.
- டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவின் தொடக்க விழாவில் பிரபல பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்கள் தந்தை பெரியார் குறித்து உணர்ச்சி பொங்க பாடல் பாடினார்.
பெரியார் குறித்து டி.எம். கிருஷ்ணா பாடல் பாடியதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து பாராட்டினார்.
- MGNREGS என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும்.
- தமிழ்நாட்டில் சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் இந்த திட்டப் பணிகளில் பங்கேற்று வருகின்றனர்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் (MGNREGS) என்பது கிராமப்புற இந்தியாவிற்கான ஒரு முக்கியமான ஊதிய வேலைவாய்ப்புத் திட்டமாகும். இது கிராமப்புற குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக செயல்படுத்துவது மட்டுமல்லாமல், கிராமியப் பகுதிகளில் நீடித்த மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடங்கப்பட்ட நாள் முதல் தேசிய அளவில் செயல்படுத்துவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பல்வேறு அளவுகோல்களில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர் என்றும், 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில், 06.01.2025 வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே 23.36 கோடி மனித உழைப்பு நாட்களை எட்டியுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கனவே 23.11.2024 அன்று ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்து விட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது என்பதை தாம் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும், இத்திட்டத்தின் கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமரை தாம் கேட்டுக்கொள்வதாகவும், தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போன்று ஒப்புதல் அளிக்கவேண்டும் என்றும் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
சென்னை நகரில் பல வகையான கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் திருவிழாவின்போது 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவை கலை பண்பாட்டுத் துறை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டின் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகள் இன்று தொடங்கியுள்ளது. இதனை கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத் திடலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முரசு கொட்டி தொடங்கி வைத்தார்.
இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற வடிவங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்துவார்கள்.
இத்துடன் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்களும் கலை நிகழ்ச்சிகள் வழங்க உள்ளனர். இவற்றுடன் கேரளாவின் தைய்யம் நடனம், மகாராஷ்டிராவின் லாவணி நடனம், ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் தனுச்சி நடனம், கோவாவின் விளக்கு நடனம், உத்ராகண்ட்டின் சபேலி நடனம் ஆகிய அயல் மாநில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
சென்னை சங்கமம் திருவிழா ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, ராஜா அண்ணாமலைபுரம், அரசு இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா சந்திப்பு, ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத் திடல், தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் மாநகராட்சி விளையாட்டுத் திடல், எழும்பூர் அரசு அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பெரியார் ஈ,வெ,ரா நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுரப் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே. நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் நடைபெறுகிறது. திருவிழா மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.
- தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
- உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா.
உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர் முக்கொடி கொண்ட தமிழரின் தனிப்பெரும் பண்பாட்டு விழாவான பொங்கல் திருநாள் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது.
நானிலம் போற்றும் இந்த நன் நாளினை எழுச்சியோடு இந்தப் புத்தாண்டில் கொண்டாட எதிர்நோக்கியுள்ள உலகத் தமிழர் அனைவருக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்! பொங்கல் விழா என்பது உழவை, உழைப்பை, சமத்துவத்தை, இயற்கையின் சிறப்பைப் போற்றும் விழா!
தமிழரின் பண்பாட்டை, நாகரிகத்தை, வீரத்தைப் பறைசாற்றும் பெருவிழா! விளைச்சலின் இன்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் விழா!
உற்றார், உறவினர், சுற்றம், நட்பு, ஊரார் உடன் கொண்டாடிக் களித்திடும் விழா!
பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வனர், வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி அவர்தம் ஆற்றலையும் அறிவிளையும் பெருக்கிட நாள் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி மாணவக் கண்மணிகளுக்குத் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வளர மூன்றாண்டுகளில் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்துள்ளது தமிழ்நாடு! பத்தாண்டு காலமாக உறங்கியிருந்த தமிழ்நாடு, இன்றைக்கு வீறநாட போட்டு, அனைத்துத் துறைகளிலும் உயர்ந்து நிற்கிறது.
எந்தப் பிரிவிளரும் ஒதுக்கப்படவில்லை; எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை; எந்தத் துறையும் பின்தங்கி நிற்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவுக்குப் பாவலான சமத்துவமான வளர்ச்சியை அடைந்து காட்டியிருக்கிறோம். நெருக்கடிகள் இல்லாமல் இல்லை: சோதனைகளை எதிர்கொள்ளாமல் இல்லை; இயற்கைப் பேரிடர்கள் தாக்காமல் இல்லை: பாரபட்சத்தால் பாதிக்கப்படாமல் இல்லை! அத்தனையையும் எதிர்கொண்டு சாதித்து வருகிறோம் என்பதுதான் நம் பெருமை! இன்றைக்கு மக்களின் பேராதரவோடு, கருத்தியம் காத்திலும், தேர்தல் களத்திலும் தொடர் வெற்றிகளைக் குவித்து, எதிரிகளின் கனவுகளைத் தவிடுபொடி ஆக்கி வருகிறோம்.
திராவிட மாடல் எனும் பாதுகாப்பு வளையம் அமைதி, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், முற்போக்குச் சிந்தனை, முன்னேற்றப் பாதை, கல்வி வளர்ச்சி எனத் தமிழ்நாட்டை இந்திய அளவில் முன்னணி மாநிலமாக மாற்றி வருகிறது.
வெறும் கொண்டாட்ட நிகழ்வாக இருந்த பொங்கல் திருநாளைப் பண்பாட்டுப் படைக்கலளாகவுமே மாற்றிப் பண்படுத்திய இயக்கத்தின் வழிவந்த அரசு நமது அரசு. ஒற்றாமபோடும், வரலாற்று ஓர்மையோடும் நாம் ஒன்றிணைந்து நிற்கும் வரை தமிழ்நாட்டின் தனித்துவமும் மகத்துவமும் இந்திய ஒன்றியத்தில் தொடர்ந்து மின்னிடும். 'எழில் திராவிடம் எழுக! என்று எழுபதாண்டுகளுக்கு முன் முழங்கினார் தமிழ்நாட்டின் தலைமகள் அண்ணா! அத்தகைய எழுச்சியை இன்றைய திராவிட மாடல் அரசு உருவாக்கியுள்ளது.
அவ்வெழுச்சி எந்நாளும் தொடர, தமிழ்நாடு எல்லா நிலையிலும் ஏற்றம் பெற உழைப்போம்! உள்ளபெங்கும் இல்லமெங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும். தங்கட்டும்!
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார் இதை உணர்ந்த நமது அரசு, "உழவுத் தொழில் போற்றுதும்; உழவாளப் போற்றுதும்!" என்ற அடிப்படையில், உழவர்களின் பயர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் தொடர்ந்து துணை நிற்கும். இச்சிறப்புமிகு நன்னாளில் விவசாய பெருங்குடி மக்கள் அனைவரையும் வாழ்த்தி வணங்குவோம். அனைவருக்கும் எனது உளம் நிறைந்த பொங்கல் தமிழர் திருநாள் -திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறு பாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும்.
- பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
சென்னை:
தமிழக உள்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண், பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும். சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் "தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்" வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறு பாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400, பிப்ரவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும்.
மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு "தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்" வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும்.
மேற்கண்ட அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு பதக்க அணிவகுப்பு விழாவில் முதலமைச்சரின் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
- முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மதுரையை சேர்ந்த தமிழ் அறிஞர் மற்றும் பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் அரசரடி பகுதியில் உள்ள ஞானஒளிபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜெயபாய் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சாலமன் பாப்பையா மனைவியின் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "தமிழறிஞரும் பிரபல பேச்சாளருமான பேராசிரியர் திரு. சாலமன் பாப்பையா அவர்களின் துணைவியார் திருமதி. ஜெயபாய் அவர்கள் மறைந்த செய்தியறிதது மிகவும் வருத்துகிறேன்."
"உற்ற துணையான வாழ்விணைரை இழந்து தவிக்கும் திரு. சாலமன் பாப்பையா அவர்களுக்கு எனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- மூன்று நிமிடங்களில் திரும்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
- ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் கூறியிருந்தார்.
தமிழக சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவது மரபு. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 6ஆம் தேதி துவங்கியது. இந்தக்கூட்டத்தில் தேசிய கீதம் பாடவில்லை என்று குற்றச்சாட்டிவிட்டு ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து வெளியேறினார்.
ஆளுநர் உரையை வாசிக்காமல் மூன்றே நிமிடங்களில் அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநரின் செயலுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதுகுறித்து பேசும் போது, ஆளுநரின் செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று முதல்வர் கூறியிருந்தார்.
முதலமைச்சரின் கருத்து பதில் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்."
"பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர் கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி."
"இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்," என்று கூறப்பட்டுள்ளது.
- எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று (ஷஜனவரி 12) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. இன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற எட்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களது இரண்டு மீன்பிடி விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இலங்கை கடற்பாடயினரால் நமது மீனவர்கள் அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதால் மீனவ சமுதாயத்தினரிடையே அச்சமும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்களது பாரப்பரிய வாழ்வாதார வருவாய் ஆதாரங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு உரிய தூதாக நடவடிக்கைகள் மூலம் நிரந்தர தீர்வு காண வேண்டியது அவசியம். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும். அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிப்பதை உறுதி செய்வதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலம் வலுவான மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
- வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
- நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் தினம் 2025 நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
நான் முதலமைச்சரானதில் இருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா-என்று உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள்.
நாடு, நில எல்லைகள், கடல் என்று புறப்பொருட்கள் நம்மைப் பிரித்தாலும் தமிழ்மொழி தமிழினம் என்ற உணர்வில் நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. அந்த உணர்வோடு உறவோடு தாய் மண்ணாம் தமிழ் நாட்டுக்கு வந்திருக்கும் உங்கள் எல்லோரையும், உங்களில் ஒருவனாக வருக... வருக... என்று வரவேற்கிறேன்.
இங்கு கூடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக தாய் மண்ணில் இருந்து சென்று இருப்பார்கள். இந்தப் பூமிப்பந்தின் வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். அவர்களால்தான், பாலைகள் சோலைகள் ஆனது! கட்டாந்தரைகள் தார்ச்சாலைகள் ஆனது! அலை கடல்களில் துறைமுகங்கள் உருவானது! தேயிலைத் தோட்டங்கள்-ரப்பர் தோட்டங்கள்-கரும்புப் பயிர்கள் செழித்து வளர்ந்தன; அந்த நாடுகளும் வளம் பெற்றது.
நான் இதைச் சொல்லும் போது, நீங்கள் கடந்து வந்த பாதை, பட்ட துன்பங்கள் அடைந்த உயரங்கள் என்று உங்களின் நினைவுகள் நிச்சயம் உங்கள் குடும்ப வரலாற்றை எண்ணிப் பார்க்கும். அப்படிப்பட்ட தமிழ்த்தியாகிகளின் வாரிசு களான உங்களை உறவாக அரவணைத்துக் கொள்ள தமிழ்நாடு இருக்கிறது.
தமிழ்நாடும் உங்களை மறக்கவில்லை! இதுதான் தமிழினத்தின் பாசம்! அதனால்தான், அயலக மண் ணில் குடியேறினாலும், உங்கள் முன்னோர்களும்-நீங்களும் தமிழை வளர்க்கிறீர்கள்!
இப்படி அயலக மண்ணிலும் தமிழுக்காகப் பாடுபட்ட சான்றோர்களின் வழித் தோன்றல்கள் மற்றும் அண்மைக்காலங்களில் வெளிநாடுகளுக்கு சென்று இந்தியா வளமாக வாழ அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும்தான் நம்முடைய திராவிட மாடல் அரசு அயலகத் தமிழர் நாளைக் கொண்டாடுகிறோம்.
எந்த தூரமும் நம்மை தமிழில் இருந்து தூரப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அயலகங்களில் தமிழ் வளர்க்கும் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் சிலவற்றைக் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், தமிழ்ப் பரப்புரைக் கழகம், தமிழ்ப் பண்பாட்டைக் காக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழுக்காகப் பாடுபடும் தமிழ்ச்சங்கங்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம், இலவச சட்ட மையங்கள், அயலக தமிழர்களின் குழந்தைகள் நமது தாய்மொழியை கற்க, தமிழ் இணையக் கல்விக் கழகம் வழியாக, தமிழ்ச் சங்கங்களோடு இணைந்து தமிழ் கற்றுக் கொடுக்கிறோம்.
இதில் தன்னார்வலர்களாகச் செயல்படும் ஆசிரியர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் தமிழ்நாடு அரசின் சான்றிதழ் வழங்குகிறோம். புலம்பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு விருது, தங்களின் நாட்டில், சமூக நலனுக்கும், தாயக வளர்ச்சிக்கும் பங்களிக்கும் தமிழர்களுக்கு விருதுகள், போர் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் தாயகத்துக்கு அழைத்துவரும் சிறப்பு விமானங்களுக்கு உதவி, அயலகங்களில் இருந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு உதவி செய்கிறோம். இது மூலமாக, வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்!
இப்போது, இந்த மேடையில், ஆறு முக்கிய துறைகளில் முத்திரை பதித்த சாதனைத் தமிழர்களுக்கு நான் விருதுகளை வழங்கியிருக்கிறேன். அதற்கு மணிமகுடமாக, அயலகத் தமிழர்களில் பன்முகத்தன்மையோடு விளங்கும் ஒரு தமிழரைத் தேர்ந்தெடுத்து, "தமிழ்மாமணி" விருதும் பட்டயமும் வழங்கியிருக்கிறோம். அயல்நாட்டுத் தமிழர்கள் மற்றும் தமிழ்ச்சங்கங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே உறவுப்பாலமாக செயலாற்றும் அயலகத் தமிழ் இளைஞர் ஒருவருக்கு, "சிறந்த பண்பாட்டுத் தூதுவர்" என்ற விருதையும் இந்த ஆண்டு முதல் வழங்கியுள்ளோம்! இந்த விருதுகளை எல்லாம், இந்தாண்டு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இங்கே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!
அயல்நாடுகளில் மட்டுமல்ல; வெளி மாநிலங்களில் தமிழர்கள் தவித்தாலும், இந்த அரசு விரைந்து செயலாற்றி, தேவையான உதவிகளை செய்து வருகிறது.
வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்முடைய தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
என்னுடைய ஸ்டைல் சொல் அல்ல செயல்'! அப்படித்தான், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனைகளை நம்முடைய திராவிட மாடல் அரசில் செய்திருக்கிறோம்.
இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன்.
பல்வேறு நாடுகளில் இருந்து நம் தமிழ் மொழி, நாட்டுபுறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது. உங்களின் கோரிக்கைகளை தீர்ப்பது என் கடமை!
நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.
இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இதற்கு ஆகும் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிக்கிறேன்.
உங்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் எல்லாம், பூமிப்பந்தில் எங்கு இருந்தாலும் உங்கள் அடையாளத்தை விட்டுவிடாதீர்கள்! உங்கள் வேர்களை மறக்காதீர்கள்! மொழியை மறக்காதீர்கள்! இந்த மண்ணையும் மக்களையும் மறக்காதீர்கள்! உங்கள் உறவுகளை மறக்காதீர்கள்! தாய்த்தமிழ் உறவுகளாக உங்களை நெஞ்சில் சுமந்துகொண்டு, நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதற்கான அடையாளம்தான் இந்த விழா!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
- இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
* தை மகளை வரவேற்போம்; தாய் தமிழைப் போற்றிடுவோம்.
* உழைப்புக்கு மரியாதை செலுத்தி, உழவுக்கு துணை நின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் திருவிழாதான் பொங்கல்.
* பொங்கலை பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடி மகிழும் வண்ணம் சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா நடைபெற உள்ளது.
* சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை ஜன.13-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை சீரும் சிறப்புமாக அவரவர் ஊர்களில் நடத்த வேண்டும்.
* கலை, இலக்கியம், விளையாட்டுப்போட்டி நடத்தி பரிசுகளை அளித்து மக்களை மகிழ்வித்து மகிழ்ந்திட வேண்டும்.
* இல்லத்தின் முன்பு இன்பம் பொங்கும் தமிழ்நாடு என்று வண்ணக்கோலமிட்டு தை மகளை வரவேற்போம்.
* அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் ஆண்டு 2056 நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
- அமெரிக்காவில் அயலகத் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் என்றைக்கும் மறக்க முடியாது.
- அயலகங்களில் தமிழை வளர்க்கும் பல்வேறு திட்டங்களை திராவி மாடல் அரசு செயல்படுத்துகிறது.
சென்னை நத்தம்பாக்கத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழா 2025 - தாய்த் தமிழ்நாட்டில் தமிழர் திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அயலகத் தமிழர் தினவிழாவில் கணியன் பூங்குன்றனார் விருதுகளை முதலமைச்சர் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழர்களின் பெருமையை விளக்கும் வகையில் வீடியோ உடன் பாடல் ஒளிபரப்பட்டது.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* உலகின் எந்த பகுதிக்கு போனாலும் தாய்த் தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர்.
* அமெரிக்காவில் அயலகத் தமிழர்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் என்றைக்கும் மறக்க முடியாது.
* ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் என எங்கு போனாலும் தாய் மண்ணில் உள்ள உணர்வை அயலகத் தமிழர்கள் ஏற்படுத்தினர்.
* தமிழ்தான் நம்மை இணைக்கும் தொப்புள்கொடி. தாய் மண் தமிழ்நாட்டின் பொங்கல் விழாவில் உங்களை காணும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
* பல்வேறு நாடுகளிலும் உழைப்பால் பாலைகளை சோலைகளாக மாற்றியவர்கள் தமிழர்கள்.
* வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டை மறக்கவில்லை. தமிழ்நாடும் உங்களை மறக்காது.
* 6 அயலக தமிழ் ஆளுமைகளுக்கு விருதுகளை இன்று வழங்கி சிறப்பித்துள்ளோம்.
* அயலகங்களில் தமிழை வளர்க்கும் பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்துகிறது.
* உலகம் முழுவதும் இன்னலுக்கு ஆளாகும் அயலக தமிழர்களை காத்து வருகிறது அயலக தமிழர் நலத்துறை.
* வேர்களை தேடி என்ற திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் மைல் கல்.
* அல்லல்படுவோரின் கண்ணீரை துடைத்து, இன்னலுக்கு ஆளாவோரின் புன்னகையை மீட்டுள்ளோம் என்று பேசிய முதலமைச்சர் அயலக தமிழர்களுக்காக புதிய திட்டத்தை அறிவித்தார்.
- கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
- அப்போது, மக்களுக்கு பணியாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு வருவோம் என தெரிவித்தார்.
சென்னை:
கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
என்னையும், உங்களையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதேபோல் தி.மு.க.வையும் பொங்கலையும் பிரிக்க முடியாது. உணர்வோடும் உற்சாகமாகவும் கொண்டாடக் கூடிய பண்டிகை தான் இந்த பொங்கல்.
நம்முடைய ஆட்சி மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கும், அதற்கு நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் சட்டமன்றத்திலேயே கூறி இருக்கிறேன். ஏற்கனவே 5 முறை கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வந்துவிட்டோம். 6-வது முறை என் தலைமையில் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். 7-வது முறையும் ஆட்சிக்கு நாம்தான் வருவோம் என்று சொல்லி இருக்கிறேன்.
உறுதியாக சொல்கிறேன்... மக்களுக்கு பணியாற்றவே, தொண்டாற்றவே 7-வது முறை ஆட்சிக்கு ஆட்சிக்கு வருவோம் என்று கூறுகிறேன் என தெரிவித்தார்.