என் மலர்

    புதுக்கோட்டை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்இருதய நோய் பரிசோதனை முகாம்
    • எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்தார்.

    புதுக்கோட்டை, 

    இருதய தினத்தை முன்னிட்டு டீம் மருத்துவமனை சார்பில் உலக இருதய நோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. டீம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கே.எச்.சலீம் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் இருதய நோய் சிறப்பு மருத்துவர் எம்.ஆர்.வெங்கடேசன் இருதய எக்கோ ஸ்கேன் பரிசோதனை செய்தார்.

    இருதய நோய் தின சிறப்பு சலுகையாக இசிஜி, எக்கோ(இருதய ஸ்கேன்), ஹீமோகுளோபின், இரத்தத்தில் சர்க்கரை, யூரியா, கிரியாட்டினன், கொலஸ்ட்ரால், ட்ரைகிளசரைடு, சிறுநீரில் சர்க்கரை மற்றும் அல்புமின் போன்ற ரூ.3000 மதிப்புள்ள பரிசோதனைகள் ரு.750க்கு செய்யப்பட்டது. ஏராளமான பேர் இதனால் பயன்பெற்றனர். இந்த முகாம் திங்கட்கிழமை வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொகைமாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்
    • நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது.

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 2 விசைப்படகுகள் மற்றும் 1 நாட்டு படகு இலங்கை அரசினால் கைப்பற்றப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 3 படகு உரி மையாளர்களுக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவித்தொ கைக்கான காசோலைகளை, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வழங்கினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமை ச்சரால், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் விசைப்ப டகுகள் இலங்கை அரசினால் கைப்ப ற்றப்பட்டு, இலங்கையின் பல்வேறு கடற்ப டை த்தளங்களில் பயன்படுத்த இயலாத நிலையில் நிறுத்தி வைக்க ப்பட்டுள்ளதற்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 2 விசைப்படகு உரிமை யாளர்களுக்கு ரூ.10 லட்சமும், நாட்டுப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1,லட்சத்து 50 ஆயிரமும் வழங்கிட ஆணையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணமேல்குடி வட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, மரிய சாமுவேல் ஆகியோரின் 2 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் மற்றும் ஜெயஇருதயம் என்பவரின் 1 நாட்டுப்படகு உரிமையாளருக்கும் என மொத்தம் 3 படகு உரிமையாளர்களுக்கு, ரூ.1,லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான முதலைமச்சரின் பொது நிவாரண நிதி உதவித் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மு.செய்யது முகம்மது, துணை இயக்குநர் (மீன்வளத்துறை) சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரும் பேருந்துகளும் ஒரு நிமிடம் கூட நின்று செல்வதில்லை
    • பேருந்துகள் வரவில்லை என்று பொதுமக்கள் புகார்

    ஆலங்குடி 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில், பேருந்துகள் முறையாக வருவதில்லை. வரும் பேருந்துகளும் ஒரு நிமிடம் கூட நின்று செல்வதில்லை. இதனால் பயணிகள் பேருந்தில் பயணம் செய்வதற்கு பேருந்து நிலையத்திற்கு வராமல் வேறு சில பஸ் ஸ்டாப்புகளை தேடிச் செல்கின்றனர். இதனால் ஆலங்குடியில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியாக பேருந்து நிலையம் பகுதி மாறிவிட்டது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாததால் பேருந்து நிலையத்தில் கடைகள் நடத்தி வரும் கடை உரிமையாளர்கள் வியாபாரம் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதனால் பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் பேருந்துகள் இப்பகுதிக்கு இரவு பகல் எந்த நேரத்திலும் வந்து செல்ல வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் கட்டிடத்தின் தரம் மற்றும் மின் வயர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பேருந்துகள் பஸ் நிலையத்திற்கு வராதது குறித்து அமைச்சரிடம் பொதுமக்களும் கடைவியாபாரிகளும் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய அமைச்சர் மேலும் பேருந்து நிலையத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து வியாபாரிகளிடம் கலந்தாலோசனை செய்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.
    • காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அதன்பிறகு பல்வேறு தரப்பு மக்களின் வேண்டுகோளை ஏற்று கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது.

    ஆனால் பெயரளவிற்கே அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனை கண்டித்து பல போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கே. கே. செல்லபாண்டியன் மற்றும் கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியனை சந்தித்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையின் தற்போதைய நிலையைப் பற்றி எடுத்து கூறினார்.

    தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியான பிறகு, அந்த நடைமுறைகள் செயல்படுத்த மூன்று மாத காலமாகும் அதன் பின்னரே தாலுக்கா மருத்துவமனைக்கு தேவையான டாக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் முருகேசன் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக சங்கம் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகளிடம் இதனை தெரிவித்தார். இந்நிலையில் மருத்துவமனை மீட்பு குழுவினர் மற்றும் வர்த்தக வியாபாரிகள் சங்கத்தினர் திட்டமிட்டபடி வரும் 3-ந்தேதி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தர கோரி கடையடைப்பு போராட்டமும் காத்திருப்பு போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கந்தர்வகோட்டை அருகேமர பட்டறையில் தீவிபத்து
    • ரூ.1.50 லட்சம் பொருள்கள் சேதம்

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை கறம்பக்குடி சாலையில் திருநாவுக்கரசு என்பவர் மர இழைப்பு பட்டறை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு பட்டறையை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். அதிகாலை வந்து பார்த்தபோது பட்டறையில் இருந்த மின்சாதன பொருட்கள் மற்றும் பலகைகள் எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொ டுத்தார். கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து பெரும் விபத்தை தவிர்த்தனர். தீ விபத்தினால் பட்டறையில் இருந்த சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் சாதனங்கள் மற்றும் மர பலகைகள் எரிந்து நாசமாகின.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை அருகே கோர விபத்து 2 பேர் பலி சிறுவர் உட்பட 3 பேர் படுகாயம்
    • விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை,  

    புதுக்கோட்டை அருகே நடந்த கோர விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். சிறுவர்கள் உட்பட 3 ே பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்,

    மதுரையில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுக்கோ ட்டை நோக்கி வந்து கொண் டிருந்தது.

    புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி 5 பேருடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரை சந்தோஷ் என்பவர் ஓட்டிவந்தார்.

    புதுக்கோட்டை அருகே திருமயம் சாலை செபஸ்தியார் புரத்தில் வந்து கொண்டி ருந்த போது அந்த தனியார் பேருந்து கார் மீது மோதி ஏறியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் டிரைவர் சந்தோஷ் உள்பட 2 பேர் உடல் நசுங்கி ரத்த ெவள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

    கார் மீது பஸ் சாய்ந்து கிடந்ததால் பயணிகள் சிலபேர் காயங்களுடன் கதறினர். அவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கார் மீது ஏறிய பஸ்சை தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் அப்புறப்டுதினர்.

    மேலும் இந்த இந்த விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிதிலமடைந்த கட்டிடம் இடிப்பு: தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது
    • பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கான பயணிகளும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளும் வந்து செல்கி ன்றனர்.

    இந்த பேருந்து நிலைய த்தின் கட்டடங்கள் சிதல மடைந்து மேற்கூரைகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடிந்து விழுந்து வந்ததால் பொதுமக்களும் பயணிகளும் பெரும் அச்ச த்தோடு அந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இதற்கிடையே இந்த புதிய பேருந்து நிலையத்தில் காரைக்குடி பேருந்து நிற்கும் இடத்தில் உள்ள கடையின் முன்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த தஞ்சையை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செ ல்வம் மற்றும் அவரது தாயார் வெள்ளையம்மாள் ஆகியோர் படுகாயமடைந்த னர்.

    இதையடுத்து சிதிலமடை ந்துள்ள பேருந்து நிலைய கட்டங்களை அசம்பாவி தங்கள் ஏற்படுவதற்கு முன்பு இடித்து அப்புற ப்படுத்திவிட்டு புதிய கட்ட டம் கட்ட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த னர்.

    இந்நிலையில் சம்பவ இடத்தை நகராட்சி அதிகாரி கள் மற்றும் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சிதல மடைந்த கட்டடத்தை இடி த்து அப்புறப்படுத்த நட வடிக்கை மேற்கொண்டனர்.

    மேலும் புதிய பேருந்து நிலையம் அமைக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்ப ட்டுள்ளது. இதையடுத்து தற்போது மேற்கூரை இடிந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அங்கிருந்து காலி செய்யப்பட்டு கட்டி டத்தை சுற்றி பாதுகாப்பி ற்காக பச்சைத் துணியால் தடுப்புகள் அமைத்து ஜேசிபி டிரில்லர் உள்ளிட்ட இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியு ள்ளது.

    பேருந்து நிலைய கட்டடம் இடித்து அப்புறப்படுத்து வதால் அங்கு கடைகள் வைத்துள்ளவர்கள் வாழ்வாதாரம் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஆகவே அவர்களுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி தர கோரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது.

    அதை தொடர்ந்து எழில் நகரில் 6 ஏக்கர் இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டுள்ளது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யும் பணி கள் தொடங்க ப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அறந்தாங்கி அருகே10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
    • காலாண்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் விபரீத முடிவு

    அறந்தாங்கி,  

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆதித்தன்பட்டி பகு தியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகள் அனுஸ்ரீ (வயது15).

    இவர் பிள்ளைவயல் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10- வகுப்பு பயின்று வந் தார். தந்தை முருகேசன் விபத்தில் உயிரிழந்ததை யடுத்து தாயின் அறவணை ப்பில் அனுஸ்ரீ வாழ்ந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் கணித பாடத்தில் அனுஸ்ரீ குறைந்த மதி ப்பெண் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இதனால் யாருடனும் ேபசாமல் சோகமாக காண ப்பட்ட மாணவியிடம், டியு சன் சென்டருக்கு சென்று படித்து அடுத்த பரீட்சையில் தேர்ச்சி பெற லாம் என அவரது தாய் ஆறுதல் கூறி யுள்ளனர்.

    ஆனால் மாணவி தான் தேர்வில் தோல்வி அடை ந்ததை எண்ணி மன வே தனை அடைந்து வீட்டிற்குள் சென்று வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவுடையார்கோவில் காவல்த்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடல் பிரேத பரிசோத னைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த 10-ம் வகுப்பு மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்ப வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி 5 பேருடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • கார் மீது பஸ் சாய்ந்து கிடந்ததால் பயணிகள் சில பேர் காயங்களுடன் கதறினர்.

    புதுக்கோட்டை:

    மதுரையில் இருந்து இன்று காலை ஒரு தனியார் பேருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    புதுக்கோட்டையில் இருந்து சிவகங்கை நோக்கி 5 பேருடன் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. காரை சந்தோஷ் என்பவர் ஓட்டிவந்தார்.

    புதுக்கோட்டை அருகே திருமயம் சாலை செபஸ்தியார் புரத்தில் வந்து கொண்டிருந்தபோது அந்த தனியார் பேருந்து கார் மீது மோதி ஏறியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் டிரைவர் சந்தோஷ் உள்பட 2 பேர் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவர்கள் உட்பட 3 பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

    கார் மீது பஸ் சாய்ந்து கிடந்ததால் பயணிகள் சிலபேர் காயங்களுடன் கதறினர். அவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    கார் மீது ஏறிய பஸ்சை தீயணைப்பு துறை மற்றும் பொதுமக்கள் நீண்ட போராட்டத்திற்கு பின் அப்புறப்படுத்தினர்.

    மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுக்கோட்டை அரசு முன்மாதிரிப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
    • வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர்

    புதுக்கோட்டை 

    1974-77 ஆம் வருட முன்னாள் மாணவர்கள், குடும்பத்துடன் கலந்து கொண்ட 5-வது மகாசங்கமம், குடும்பவிழா இருநாட்கள் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தின் வெவ்வெறு பகுதியிலிருந்தும், நாட்டின் வெளி மாநிலங்களில் இருந்தும் முன்னாள் மாணவர்கள் இந்த 35 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அரசு பள்ளியில் படித்து, வெவ்வேறு அரசு, தனியார் மற்றும் பொதுதுறைகளில் பணியாற்றி, ஒய்வு பெற்ற பின் நடைபெறும் இந்த குடும்ப நிகழ்ச்சியில், தாங்கள் பள்ளியில்பயின்ற நாட்களின் நினைவுகள் மற்றும் தங்களுக்குள்ள வாழ்நாள் அனுபவங்களை பள்ளித் தோழர்களுடன் பகிர்ந்து கொண்டனர். திருமயம் கோட்டை, குடுமியான்மலை ஈஸ்வரன்கோவில், சித்தன்னவாசல் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை நேரில் பார்வையிட்டு, வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, 1974-7-ம் வருட புதுக்கோட்டை முன்மாதிரிப் பள்ளி மாணவர்களான அக்ரிஎன்.சர்புதீன், டாக்டர்எம்.கல்யாணகுமார், வெங்கட கோபாலகிருஷ்ணன், கோவிந்தன் மற்றும் உத்தமன் முதலானோர் செய்திருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print