என் மலர்
நீங்கள் தேடியது "DMK Alliance"
- அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் பொது எதிரியாக தி.மு.க.வை கருதுவதால் பொதுவேட்பாளரை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
- எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் எல்லா கட்சிகளும் உணர்ந்து உள்ளன.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது.
குறுகிய கால இடைவெளியே இருப்பதால் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க, கூட்டணிகளில் எந்த கட்சியை போட்டியிட வைப்பது? யாரை வேட்பாளராக நிறுத்துவது? என்பதில் மும்முரமாக ஆலோசித்து வருகிறார்கள்.
இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினை செல்வப்பெருந்தகை இன்று மாலை அல்லது நாளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
காங்கிரசை பொறுத்தவரை 5 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளார்கள். இடைத்தேர்தலை பொறுத்தவரை பொதுத்தேர்தலை விட செலவு மிக அதிகம் ஆகும். அதை காங்கிரஸ் வேட்பாளர்களால் ஈடுகட்டுவது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே தி.மு.க.வே நேரடியாக களம் இறங்கலாம் என்று தெரிகிறது.
பெரும்பாலும் இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.
இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.
இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் ஜி.கே.வாசன் சந்தித்து பேசி இருக்கிறார். அந்த சந்திப்பின்போது நாளை மறுநாள் (11-ந்தேதி) அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் ஆலோசித்து தெரிவிப்பதாக கூறினார் என்று கூறப்படுகிறது.
கடந்த இடைத்தேர்தலின் போது த.மா.கா., அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தது. அப்போது அந்த கூட்டணியில் த.மா.கா.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலில் த.மா.கா. வேட்பாளரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று பேசப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமியின் சம்மதத்தை இரு கட்சிகளும் எதிர் பார்க்கின்றன.
அ.தி.மு.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் பொது எதிரியாக தி.மு.க.வை கருதுவதால் பொதுவேட்பாளரை ஆதரிக்கலாம் என்று கூறப்படுகிறது. எல்லா கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும் என்பதையும் எல்லா கட்சிகளும் உணர்ந்து உள்ளன.
கடந்த தேர்தலில் த.மா.கா. சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோல்வி அடைந்தார். ஏற்கனவே காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விடியல் சேகரும் அந்த பகுதியை சேர்ந்தவர்.
இருவரும் வாசனிடமும் நெருக்கமானவர்கள். எடப்பாடி பழனிசாமியிடமும் நல்ல நட்புடன் இருப்பவர்கள். எனவே இருவரில் ஒருவரை வேட்பாளராக்கலாம் என்று த.மா.கா. கருதுகிறது.
இது தொடர்பாக நாளை ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாகிகளோடு ஜி.கே.வாசனும் ஆலோசனை நடத்துகிறார். இந்த தேர்தலில் பொது வேட்பாளருக்கு அ.தி.மு.க. உடன்பட்டால் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
- சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
- மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப்போட்டி நிலவியது. ஆனால், எந்த கட்சியில் யார் கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்கிற கூட்டணிப் பேச்சுவார்த்தையில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
அதன்படி, அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், பார்வர்ட் ப்ளாக் கட்சிகள், தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.
பாஜக கூட்டணியில் தமாகா, பாமக, புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இணைந்தன.
ஆனால், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியில் இணைவதற்கான முடிவு எடுப்பதில் இழுப்பறியாக இருந்தது.
தி.மு.க. தவிர அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித் தனியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. ஆனால், சரத்குமார் யாரும் எதிர்பாராத வகையில் தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த கட்சியின் தலைவர் சரத்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தனது கட்சியை கடந்த மார்ச் 12ம் தேதி திடீரென பாஜகவுடன் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளராக விருதுநகர் தொகுதியானது சரத்குமாரின் மனைவி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து அவர் போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் ராதிகா சரத்குமார் தோல்வியடைந்தார்.
இதேபோல், 2024 மக்களவை தேர்தலுக்கான கூட்டணியில் திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்தது.
இந்த தேர்தலில் போட்டியிட தென் சென்னை, கோவை ஆகிய தொகுதிகளை கமல் கேட்டதாகவும் அதற்கு திமுக மறுத்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு பதிலாக மக்கள் நீதி மய்யத்திற்கு 2025 மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.
இதற்கு மக்கள் நீதி மய்யம் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தேர்தலில் பரப்புரை மேற்கொண்டது.
கடந்த 2018ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யத்தைத் தொடங்கிய கமல், அதிமுக, திமுக இரு கட்சிகளையும் விமர்சித்து வந்தார்.
இறுதியில் திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.
- 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது.
- தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்தியாவின் 18வது பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பின்னர், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, நாடு முழுவதும் முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்கம், பீகார், மேகாலயா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவுகள், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய 21 மாநிலங்களுக்கு உள்பட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தொடர்ந்து, ஏப்ரல் 20ம் தேதி அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
மூன்றாவது முறையாக வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.
- எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.
- திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.
சென்னையில் நடைபெற்ற 'என் பெயர் அம்பேத்கர்' என்ற நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்துக்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
திராவிட கட்சிகளுடன் முரண்பாடு, மாறுபட்ட கருத்துக்கள், விமர்சனங்கள் எங்களுக்கும் உண்டு.
ஆனால், திராவிட கட்சிகளை பலவீனப்படுத்திவிட்டு சனாதன கட்சிகள் உள்ளே வர அனுமதிக்க முடியாது.
அதிமுக பாஜகவை விட்டு வெளியே வந்தால் தான் எங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என ஏன் சொல்கிறோம் என புரியாமல் அவதூறு பரப்புகிறார்கள்.
எங்களின் கவலை அதிமுக பலவீனப்பட்டால் அந்த இடத்தில் பாஜக வந்து அமர்ந்துவிடும் என்பது தான்.
திமுக தேர்தல் கட்சி, ஆண்ட கட்சி, ஆளுகின்ற ஆட்சி அதை விமர்சிக்கலாம், விமர்சிக்காமல் இருக்க முடியாது.
திமுகவை விமர்சிப்பது என்ற போர்வையில் ஒட்டுமொத்த திராவிட அரசியல் சித்தாந்தத்தையே விமர்சிப்பது ஆபத்தானது.
எந்த பதவிக்கும் ஆசைப்படாமல், எதிர்பார்க்காமல் செயல்பட்டு வருகிறோம்.
திமுகவுக்கு முட்டு கொடுக்கிறீர்களா என்று கேட்கிறார்கள், திமுக திராவிட அரசியலை பேசுகின்ற ஒரு அரசியல் கட்சி.
திராவிட அரசியல் என்பது திமுக அரசியலோடு மட்டுமே சுருங்கி விடக் கூடியது அல்ல.
திராவிட அரசியல் என்பது ஒரு நொடிய பாரம்பரியம் உள்ள ஆரிய எதிர்ப்பு அரசியல். அதனால்தான் என்ன பாதிப்பு, விமர்சனங்கள் வந்தாலும் திமுக கூட்டணியில் விசிக நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது.
- அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.
காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வலிமையாக, உறுதியாக உள்ளது. அதனை யாரும் உடைக்க முடியாது. கலைக்க முடியாது.
அடுத்த தேர்தலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும். அதில் சந்தேகம் வேண்டாம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியல் சாசனத்தை திருத்த வேண்டும்.
அரசியல் சாசனத்தை திருத்தாமல் அதைப்போன்று ஒரு சட்டம் நிறைவேற்ற முடியாது. இதனை திருத்த ஒவ்வொரு அவையிலும் அதாவது மக்களவை, மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.
பா.ஜ.க.விற்கு மக்களவையிலும் பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையிலும் பெரும்பான்மை இல்லை. அரசியல் சாசனத்தை திருத்தும் சட்ட மசோதவை கொண்டுவந்தால் அதை நிச்சயம் நாங்கள் தோற்கடிப்போம். ஒரேநாடு ஒரே தேர்தல் நடைபெறாது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது.
- திமுக கூட்டணியில் விரிசல் விழாத என அதிமுக, பாஜக துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சைக்கு சென்றுள்ளார். அங்கு
தஞ்சை மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு அவர்களின் மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் சிறிது நேரம் உரையாற்றினார். அதில் திமுக-வை அழிப்பேன் என்று பலர் கிளம்பி உள்ளனர். அதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் உள்ளனர். இதுதான் நம் எதிரிகளுக்கு எரிச்சலை தருகிறது. தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாம் பெருகின்ற தொடர் வெற்றிதான் அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை தருகிறது.
அதிமுக அணி தற்போது பல்வேறு அணியாக பிரிந்துள்ளது. இப்படி தனித்தனியாக நிற்கும் அதிமுகவும் யாருமே சீண்டாத பாஜவும், எப்படியாவது திமுக கூட்டணியில் விரிசல் விழாத என துண்டை விரித்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்று நம் தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கூறியுள்ளனர்.
2026-ல் கழகம் மீண்டும் வென்றது. கழக தலைவர் 2-வது முறையாக முதலமைச்சர் ஆனார். திமுக 7-வது முறையாக ஆட்சியை அமைக்கிறது என்ற வரலாற்றை உருவாக்குவோம் என கூறினார்.
- கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம், திருச்செந்துறை கோவிலுக்கு தமிழக பாஜகவை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளரும் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா வந்தார்.
சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்ற ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சோ்ந்து கொள்வதாக முன்னாள் தலைமைச்செயலர் ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தார். இப்போது, பின் வாங்குகின்றனா்.
பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தில் இணைந்தால்தான் மத்திய அரசால் நிதி வழங்க முடியும்.
கோவில் சொத்துகளில் குடியிருப்போர் அது கோவில் சொத்து என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோவில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்த வேண்டும். ஸ்ரீரங்கம் அடிமனைப் பிரச்சனை விவகாரத்தில் அத்தகைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதால் வக்ஃபு வாரிய புதிய சட்ட மசோதா நிச்சயம் நிறைவேறும். தி.மு.க. கூட்டணியில் தற்போது கொந்தளிப்பான சூழல் இருப்பதை காண முடிகிறது. தி.மு.க. கூட்டணியில் எது நடந்தாலும் அது பா.ஜ.க.வுக்கு தேவையற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் சாதனை திட்டங்களையும், பா.ஜ.க. தொண்டர்களையும் நம்பியே நாங்கள் தோ்தலை சந்திப்போம். கூட்டணி குறித்து எப்போதும் நான் கருத்து கூறுவது இல்லை என்றார்.
- கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.
- கமல்ஹாசன் தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக இருப்போம் என்று தேர்தல் களத்தில் பேசி வந்த கமல்ஹாசன் தற்போது தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கமல்ஹாசன் விரைவில் மேல்சபை எம்.பி.யாக டெல்லி செல்ல உள்ளார்.
தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கும் கமல்ஹாசன் இனி வரும் காலங்களிலும் தி.மு.க. கூட்டணியிலேயே இணைந்து செயல்பட திட்ட மிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வேலைகளை அந்த கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருவதால் தி.மு.க. கூட்டணியில் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுவது என மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்திருக்கிறது.
மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க இடங்களை கேட்டு பெற்று அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.
சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பங்கேற்று வரும் கமல்ஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இதன்படி டிசம்பர் மாதத்திற்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் விரிவான ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் கணக்காக உள்ளது.
இதன் மூலம் நிச்சயம் சட்ட மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காலடி எடுத்து வைக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது
அதிமுக 8 தொகுதிகளிலும் பாமக 3 தொகுதிகளிலும் தேமுதிக 2 தொகுதிகளிலும் மட்டும் தான் அதிக வாக்கு வாங்கியுள்ளது.
எடப்பாடி, குமாரபாளையம், சங்ககிரி, பரமத்திவேலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
பெண்ணாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் பாமக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
திருமங்கலம், அருப்புக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் தேமுதிக அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள பாஜக 1 தொகுத்தியில் கூட அதிக வாக்குகளைப் பெறவில்லை.
கோவை தெற்கு, நெல்லை, மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் பாஜக எம்.எல்.ஏ உள்ள இந்த 4 இடங்களிலும் கூட பாஜகவால் அதிக வாக்குகள் பெற முடியவில்லை.
பாஜக எம்.எல்.ஏ.க்கள் உள்ள தொகுதியிலேயே பாஜக அதிக வாக்குகள் பெறாத நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என அக்கட்சியினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
- விஜய பிரபாகரனை விட சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.
மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 233 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் தற்போது முன்னிலையில் உள்ளது.
குறிப்பாக விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. சொற்ப வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரன் வெற்றிபெற வேண்டி, விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்.
- மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
- இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டனர்.
ராமநாபுரம் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் ஆர்.எஸ். மங்கலம் மற்றும் மண்டபம் பகுதியில் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தபோது பெண்கள் திரண்டு குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்போம் என்று உறுதியளித்தனர். அப்போது வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பேசியதாவது:-
நான் சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்தவன். கிராம மக்களின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவேன்.
கடந்த முறை பொய் வாக்குறுதி கூறி வெற்றிபெற்ற எம்.பி.யை அடையாளம் தெரியுமா, பார்த்திருக்கிறீர்களா? மக்களை ஏமாற்றி ஓட்டுக்களைப் பெற்று உல்லாச வாழ்க்கை வாழ்கின்றவர்கள் மீண்டும் ஓட்டுகேட்டு வந்தால் விரட்டி அடியுங்கள். மக்களின் பிரதிநிதிதான் எம்.பி., அதனை மறந்து மக்கள் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உங்களிடமே மீண்டும் ஓட்டுகேட்டு வருகிறார். மக்களை ஏமாற்றிய தி.மு.க. கூட்டணிக்கு தக்கபாடம் புகட்ட இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள். விவசாயிகள் மற்றும் மீனவர்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவேன். இங்கு மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியதே காங்கிரஸ், தி.மு.க. கட்சிகள்தான்.
கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கும் முன்பு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடி தொழில் நடைபெற்றது. இந்திய பாராளுமன்ற அனுமதி இல்லாமல் கச்சத்தீவை தாரைவார்த்துவிட்டனர். பாராளுமன்ற முதல் கூட்டத்திலேயே தச்சத்தீவு பிரச்சனையை எழுப்புவேன். மக்கள் பிரச்சினையாக இருந்தாலும், அரசு ஊழியர்கள் கோரிக்கையாக இருந்தாலும், ஆசிரியர்களின் போராட்டமாக இருந்தாலும் கோரிக்கையை நிறைவேற்ற உடனிருப்பேன். இரட்டை இலைக்கு வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினர்.
வேட்பாளருடன் ஜெயபெருமாளுடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
- கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலோடு ஏப்ரல் 19-ந்தேதி குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகள் செல்வாக்கு பெற்ற இந்த தொகுதியில் கடந்த 3 தேர்தல்களில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த விஜயதரணி.
இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதோடு தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினமா செய்தார். இதனை தொடர்ந்தே இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படும் என தெரிகிறது.
இதனை கருத்தில் கொண்டு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் காய் நகர்த்தி வருகின்றனர். காங்கிரஸ் சார்பில் இங்கு யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி உறுதி என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே மாவட்டத்தின் முக்கிய தலைவர்கள் டெல்லி மற்றும் சென்னையில் முகாமிட்டு முக்கிய தலைவர்களின் ஆதரவை பெற முயன்று வருகின்றனர்.
காங்கிரஸ் சார்பில் குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், ஜவகர்பால் மஞ்ச் அமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் சீட் பெறுவதில் முனைப்பு காட்டி வரு கின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த தொகுதியில் மகளிர் வேட்பாளர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.
எனவே விளவங்கோடு தொகுதியில் மீண்டும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலருமான சர்மிளா ஏஞ்சல் உள்ளிட்ட பலரும் தேர்தல் களத்தில் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளும் உள்ளதால் விளவங்கோடு தொகுதியில் வெற்றி உறுதி என்பதால், காங்கிரஸ் நிர்வாகிகள் தொகுதியை பெறுவதில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
கடந்த தேர்தலில் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இணைந்து இந்த தொகுதியில் போட்டியிட்டன. இந்த முறை கூட்டணி இல்லாததால் 2 கட்சிகளும் தனித்து களம் காண்கின்றன. பாரதிய ஜனதா சார்பில் கடந்த முறை போட்டியிட்ட ஜெயசீலனே மீண்டும் போட்டியிடுவார் என தெரிகிறது. அ.தி.மு.க. சார்பில் நாஞ்சில் டொமினிக் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.