என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Alliance"

    • கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
    • கடந்த சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு தொகுதியை ஒதுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குறைந்தது 2 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

    ஆனால் ஒரு தொகுதி தான் தருவதாக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு அவரிடம் கூறி உள்ளது. இதில் வேல்முருகன் எம்.எல்.ஏ. அதிருப்தி அடைந்து உள்ளார்.

    இதனால் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை உயர்நிலை குழு அவசர கூட்டத்தை வேல்முருகன் எம்.எல்.ஏ. சென்னையில் கூட்டி இருந்தார். விருகம்பாக்கம் சின்மையா நகர் ஐயப்பா நகரில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேல்முருகன் எம்.எல்.ஏ., கட்சியின் துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், உயர்நிலை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் தொடர்பாகவும், அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. தி.மு.க. கூட்டணியில் ஒரு தொகுதி தருவதை ஏற்க கூடாது என்றும், 2 தொகுதியாவது ஒதுக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.

    ஒரு தொகுதியை ஒதுக்கினால் அதை ஏற்க வேண்டாம். அதற்கு பதில் தனியாகவே தேர்தலை சந்திக்கலாம் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

    இதனால் தி.மு.க. கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை.
    • மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.

    சென்னை:

    LPG சிலிண்டர் தட்டுப்பாட்டை குறிப்பிட்டு மத்திய அரசைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டனம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

    தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கண்டன போராட்டத்தை மேற்கொள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

    இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, மத்திய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

    • மதிமுக 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடவுள்ளது.
    • 1 தொகுதியில் மட்டும் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டி போடவுள்ளது

    தமிழக சட்டசபை தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள், தே.மு.தி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர மேலும் சில சிறிய கட்சிகளும் கூட்டணியில் பங்கு பெற உள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான மதிமுக கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் 3 தொகுதிகள் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் சின்னத்திலும் போட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் மதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • எந்த முடிவு எடுத்தாலும் சுமூக தீர்வு காணப்படும்.
    • தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி.

    சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எங்களால் எந்த பிரச்சனையும் வராது. நிபந்தனையற்ற ஆதரவை தி.மு.க.விற்கு வழங்கி வருகிறோம். எங்கள் பேச்சுவார்த்தை குழுவினர் தி.மு.க.விடம் பேசி வருகிறார்கள்.

    எந்த சின்னம், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். அவர்களின் சூழ்நிலையை சொல்லி இருகிறார்கள். அது பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

    எந்த முடிவு எடுத்தாலும் சுமூக தீர்வு காணப்படும். தி.மு.க. கூட்டணி வலுவான கூட்டணி. நாங்கள் கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். இந்த முறை கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால் கூட்டணி மேலும் வலிமை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

    ம.தி.மு.க நலனை விட தமிழக நலன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொது நோக்கில் செயல்படுகிறது. இரு முறை மத்திய மந்திரி பதவியை வைகோ வேண்டாம் என்றார்.

    இந்த தேர்தலில் எங்களுக்குள் (தி.மு.க) எந்த பிரச்சனையும் வராது. தொகுதி பங்கீட்டில் எந்தவிதமான காலதாமதமும் இல்லை.

    பொதுவான நோக்கமான பா.ஜ.க தமிழகத்தில் நுழைய கூடாது என்ற அடிப்படையில் இணைந்து உள்ளோம். அதற்காக தொகுதிகளை விட்டு கொடுக்க தயாராக உள்ளோம்.

    சிலிண்டர் எரிவாயு பிரச்சனை அத்தியாவசியம் என்பதால் துரித நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மாற்று வழிகளை மத்திய அரசு யோசித்து உள்ளது. தமிழகத்தில் உரிய பாதிப்பு இல்லாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • 2016 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் சில கட்சிகள் மட்டும் அங்கம் வகித்தது.
    • காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது.

    தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

    திமுக கூட்டணி, அதிமுக - பாஜகவின் என்டிஏ கூட்டணி, புதுவரான விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் என அவரவர் அணியை தேர்தலை நோக்கி அனைவரும் தயார்படுத்தி வருகின்றனர்.

    பாஜக, அதிமுக, அன்புமணி பாமக, டிடிவி தினகரனின் அமமுக, என்டிஏ கூட்டணியாக களம் காண உள்ள நிலையில் ஆட்சியில் உள்ள திமுக நடப்பு சட்டமன்றத் தேர்தலில் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    தற்போது திமுகவின் கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    2016 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகள் மட்டும் அங்கம் வகித்தது.

    அந்த தேர்தலில் தே.மு.தி.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், த.மா.கா. ஆகிய கட்சிகள் மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கி சந்தித்தது.

    ஆனால் தேர்தல் முடிவு மக்கள் நலக்கூட்டணியை சிதறவிட்டது. இந்த கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கை கோர்த்தன.

    2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தற்போது மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது.

    இதில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம், லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், , ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம், திராவிட தமிழர் கட்சி ஆகிய 26 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்த 26 கட்சிகளில் 16 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தி.மு.க. வழங்கும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே கூட்டணியில் இடம்பெற்ற தேசிய கட்சியான காங்கிரசுக்கு திமுக, 28 சட்டமன்ற தொகுதியையும், ஒரு மாநிலங்களவை சீட்டையும் ஒதுக்கி உள்ளது.

    தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக என கூட்டணியில் இடம்பெற்ற மற்ற பிரதான கட்சிகளுக்கு திமுக அடுத்தடுத்து எத்தனை சீட் என்று உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதற்கிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வரும் நிலையில் அவர் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பாரா அல்லது தேர்தலை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்புமணி பாமக. என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ளதால் அந்த பக்கம் ராம்தாஸ் செல்ல வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

    மறுபுறம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா புதிய கட்சியை தொடங்கி உள்ளார். கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவத்துடனான கட்சிக்கொடியை அறிமுகம் செய்த அவர் விரைவில் கட்சி பெயரை அறிவிப்பதாக கூறியுள்ளார்.

    இதற்கு மத்தியில் அதிமுக விஸ்வாசியாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அதிமுக ஏற்க மறுத்த நிலையில் திமுகவில் ஐக்கியமாகி உள்ளார். மொத்தத்தில் தமிழக தேர்தல் களம் எப்போதும் எக்கச்சக்க ட்விஸ்ட்களை சந்தித்து வருகிறது.

    எல்லாவற்றையும் தாண்டி இந்த தேர்தலில் புதுவரவு விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அரசியல் வட்டாரங்களிலும், மக்கள் மத்தியிலும் சிறப்பு கவனம் இருந்து வருகிறது. 

    • காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன்.
    • அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம்.

    தஞ்சாவூர்:

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லத் திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். இவ்விழாவில் துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * காங்கிரசுடன் வெற்றிகரமாக கூட்டணி ஒப்பந்தத்தை முடித்து கொண்டு வந்திருக்கிறேன்.

    உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி... தனித்து விடப்பட்ட தவெக - என்ன செய்யப்போகிறார் விஜய்?

    * அனைவரும் பாராட்டும் வகையில் தேர்தல் கூட்டணியை முடித்துள்ளோம்.

    * தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரே கூட்டணி 4 தேர்தல்களை சந்திப்பது இதுவே முதல் முறை.

    * ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு அமைந்த கூட்டணி அடுத்த தேர்தலில் நீடித்தது இல்லை என்பதும் வரலாறு என்றார்.

    • தமிழகத்தில் 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிக்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது. விழாவின் போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையேற்று பல்வேறு இயக்கங்களில் இருந்து தி.மு.க.வில் இணைகின்ற நிகழ்ச்சி வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதன் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு தொடங்கி உள்ளோம்.

    தமிழகத்தில் 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். நாட்டு மக்களுக்கும், அடித்தள மக்களுக்கும் எது தேவையோ அதை அறிந்து புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை பொதுமக்கள் தெரிவித்து உள்ளார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் அ.தி.மு.க.வில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறினார்.

    • சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும். எங்களது சாதனைகள் மக்கள் மனதில் இருக்கிறது.
    • பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குறைந்த கட்சி தான் உள்ளது. அவர்கள் கூட்டணியை ஆரம்பித்து பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. அதனால் அ.தி.மு.க. கூட்டணியுடன் தி.மு.க. கூட்டணியை ஒப்பிடக்கூடாது. நாங்கள் கூட்டணி கட்சிகளுடன் சமூகமாகத்தான் பேசுவோம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூட்டணியை சரியான பாதையில் கொண்டு செல்வார்.

    த.வெ.க.வுடன் காங்கிரஸ் திரைமறைவு பேச்சுவார்த்தை என்பதெல்லாம் கிளப்பி விடுகின்ற விஷயம். எங்களைப் பொறுத்தவரை தெளிவாக இருக்கிறோம். இது அரசியல் கட்சி, இங்கு வந்தால் அரசியல் அந்தஸ்து கிடைக்கும் என்பது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும். அவர்கள் அரசியல் அந்தஸ்தை இழக்க விரும்ப மாட்டார்கள். தமிழ்நாட்டில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் அவர்கள் வரமுடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.

    விஜய்யும் யாரும் செல்லாததால் காங்கிரஸ் கட்சியின் மதிப்பை விஜய் புரிந்திருக்கலாம். அவ்வளவு தான், ஆள் இல்லாத வீட்டில் என்ன வேணாலும் கொண்டாடலாம். த.வெ.க. ஆளில்லா வீடு. சாதனைகளை செய்துதான் வாக்குகளை வாங்க முடியும். எங்களது சாதனைகள் மக்கள் மனதில் இருக்கிறது. அதன் மூலமாக நாங்கள் வாக்குகள் வாங்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் அ.தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்யக்கூடிய சூழ்நிலை சில தொகுதியில் உருவாகி இருக்கிறது.

    பிரதமர் மோடி வேண்டுமென்றால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பகல் கனவு காணலாம். எங்களது கனவு உண்மையான கனவு. எங்களது நினைவும் உண்மையான நினைவு. 200 நிச்சயம், அது தமிழ்நாடு சரித்திரத்தின் வரலாறாக இருக்கும். நாங்கள் வீடு வீடாக பிரசாரத்தை தொடங்கி விட்டோம். இதுவரை இந்திய சரித்திரத்தில் இல்லாத வகையில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே வீடு வீடாக சென்று மகளிர் பரப்புரையை மேற்கொண்டுள்ள ஒரே இயக்கம் தி.மு.க.தான். ஒவ்வொரு வாக்காளரையும் ஒரு முறையல்ல, இரு முறை சந்தித்து விட்டு வந்திருக்கிறோம்.

    எங்களைப் பொறுத்தவரை தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். 118 இடங்களுக்கு மேலே வெற்றி பெற்றால் தனி பெரும்பான்மை தான். தி.மு.க. 120 இடங்களில் வெற்றி பெற்று விடும். இந்த தேர்தலில் எந்த சவாலும் எங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றார். 

    • இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
    • கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம்.

    சென்னை:

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். மேல்சபை எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

    தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். 

    • அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
    • டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.

    பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.

    எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.

    திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.

    வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.

    நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.

    வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.

    அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார். 

    • தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன்.
    • மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.

    தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில்,

    தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டுள்ளது.

    • திமுக-தேமுதிக கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது.
    • 10 ஆண்டுகள் கழித்து திமுகவில் தேமுதிக கூட்டணி நடந்திருக்கிறது.

    திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதை பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.

    வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதை இன்று உறுதிப்படுத்தியுள்ளோம்.

    கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

    இந்த கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது. 10 ஆண்டுகள் கழிந்து அது நடந்திருக்கிறது.

    திமுக-தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×