search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eswaran"

    • 50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது.
    • பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    திருச்செங்கோடு:

    தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. சட்டமன்ற உரைகளை பற்றியும், தொகுதியில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பதிலளித்து ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைப்பதை பற்றி சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன். ரோப் கார் என்பது சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டு திருச்செங்கோடு மலைக்கு ரோப் கார் அமைக்க முடியுமா என்பதை ஒரு குழு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இல்லை என்பதை அறிவித்த பின் இந்து சமய அறநிலையத்துறை மாற்று சாலையை அமைப்பதற்கு நெடுஞ்சாலை துறையிடம் கருத்துரு அனுப்பி இருக்கிறது. இது நெடுஞ்சாலைத்துறை ஆய்வில் தற்போது இருக்கிறது.

    50 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்த அரசு சார்பில் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டு செயல்படுகிறது. திருச்செங்கோடு புறவழிச்சாலை 50 சதவீதம் முடிக்கப்பட்டு மீதி பகுதிகளுக்கு ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்க இருக்கிறார். 9 கோடி ரூபாய் செலவில் வாரச்சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 5 கோடி ரூபாய் செலவில் தினசரி சந்தை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. 17 வழித்தடங்களில் புதிதாக பஸ்கள் விடப்பட்டு இருக்கின்றன.

    இன்னும் பல்வேறு பணிகள் தொகுதி முழுவதும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இன்னும் பல்வேறு மக்களுடைய கோரிக்கைகளை சட்டமன்றத்திலே பேசி அவற்றை நிறைவேற்றுகின்ற முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றேன்.

    எதுவுமே தெரியாமல் திருச்செங்கோட்டிலே வந்து பொய்யான கருத்துக்களை பேசி இருப்பது நியாயமா? என்னுடைய செயல்பாடுகளை கேள்வி கேட்க ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமை இருக்கிறது. அதே சமயம் பதில் சொல்ல வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது.

    என்னுடைய சட்டமன்ற உரைகளைப் பற்றியும் சட்டமன்ற உறுப்பினராக என் செயல்பாடுகள் பற்றியும் அண்ணாமலை என்னோடு விவாதிக்க தயாரா? தேதியையும், நேரமும், இடமும் குறிப்பிடுங்கள் விவாதத்திற்கு நான் தயார்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.
    • மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள்.

    சிவ மூலிகைகளின் சிகரம்-வில்வம்

    வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு.

    சிவ வழிபாட்டுக்கு எத்தனையோ மலர்கள் உகந்ததாக உள்ள போதிலும், வில்வ இலை தனித்துவம் கொண்டது.

    வில்வ இலையால் சிவனை அர்ச்சனை செய்து வழிபடும் போது கிடைக்கும் பலன்கள் ஏராளம். யார் ஒருவர் தினமும் சிவாலயத்துக்கு சென்று வில்வத்தை வழங்கி ஈசனை வழிபடுகிறாரோ, அவரது சகல பாவங்களும் நீங்கி விடும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

    வில்வமானது பாதிரி, வன்னி, மந்தாரை, மா ஆகிய மரங்களுடன் தேலோகத்தில் இருந்து வந்த 'பஞ்ச தருக்கள்' என்ற சிறப்பைப் பெற்றது.

    பாற்கடலில் இருந்து லட்சுமிதேவி தோன்றிய போது அவளது கரங்களில் இருந்து வில்வ மரம் தோன்றியதாக வராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே வில்வ மரத்தை மகாலட்சுமியின் வடிவமாக கருதுகிறார்கள்.

    இதனால் வில்வ மரத்தை வழிபட்டால், ஈசனின் கருணை கிடைப்பதோடு, லட்சுமி தேவியின் பரிபூரணமான அருளையும் பெறலாம். வில்வ மரத்தில் மட்டுமின்றி வில்வ இலைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்வதால், வில்வ இலைகளுக்கு தனிச்சிறப்பு உண்டு.

    வில்வங்களில் மகாவில்வம், கொடி வில்வம், சித்த வில்வம், கற்பூர வில்வம் உள்பட 21 முக்கிய வகைகள் உள்ளன. வில்வத்துக்கு கூவிளம், கூவிளை என்பவை உள்பட பல பெயர்களும் உண்டு.

    வில்வ இலைகள் மூன்று தளம், ஐந்து தளம், ஏழு தளங்களாக இருப்பதை காணலாம். பெரும்பாலும் மூன்று இலைகளுடன் இருப்பதை வில்வ தளம் என்பார்கள். சிவனை மகிழ்ச்சிப்படுத்த ஒரே ஒரு வில்வதளம் போதும் என்பார்கள்.

    மூன்று இலைகள் கொண்ட வில்வதளம் சிவபெருமானின் மூன்று கண்களைக் குறிப்பதாக சொல்வார்கள். மேலும் வில்வதளத்தில் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள்.

    வில்வத்தில் ஐந்து தளம், ஏழு தளங்களுடன் இருப்பவை அரிதானதாக கருதப்படுகின்றன. இவற்றை மகா வில்வம், அகண்ட வில்வம் என்று உயர்வாக சொல்வார்கள்.

    வில்வ மரங்கள் கிளை, கிளையாக இடையிடையே முட்களுடன் காணப்படும். இதில் வில்வ தளங்களை சிவன் என்றும், முட்களை சக்தி என்றும், கிளைகளை வேதங்கள் என்றும் வேரை முக்கோடி தேவர்கள் என்றும் நம் முன்னோர்கள் போற்றி வழிபட்டுள்ளனர். எனவேதான் சிவபூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் விலகும். தோஷங்கள் ஓடோடி விடும் என்பார்கள்.

    ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்தால், மூன்று ஜென்ம பாவங்கள் விலகும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் ஒரு வில்வ தளம் என்பது லட்சம் சொர்ண பூக்களுக்கு சமமானது.

    சிவனுக்கு வில்வ இலைகள் மிகவும் பிடிக்கும் என்பதால் சிலர் வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு லட்சார்ச்சனை, கோடி அர்ச்சனை செய்வார்கள். அத்தகையவர்களுக்கு சிவபெருமானின் அருள் மிக, மிக எளிதாக கிடைக்கும்.

    அதாவது வில்வத்தின் துணை கொண்டு சிவபெருமானை எளிதாக நாம் அணுக முடியும். வில்வத்துக்கு மட்டும் எப்படி இந்த சிறப்பு கிடைத்தது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கு சில காரணங்கள் உதாரணமாக கூறப்படுகின்றன.

    சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. இது கடும் வெப்பத்தைக் கொடுக்கக் கூடியது. இதனால் ஈசனை சாந்தப்படுத்தவும், குளிர்ச்சிப்படுத்தவும் முனிவர்கள், ரிஷிகள் வில்வ தளத்தை பயன்படுத்தினார்கள். வில்வம் குளிர்ச்சியூட்டும் குணமுடையது.

    வில்வ தளங்களால் ஈசன் குளிர்ச்சியை பெற்றார். எனவேதான் வில்வம், சிவபெருமானுக்கு பிடித்தமானதாக மாறியது.

    வில்வ இலைகளுக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இதை உண்டால் நமது உடலில் இருந்து அதிக சக்திகள் வெளியாகாது. ஜீரணம் செய்த சக்தி கூட சேமிப்பாகி விடும்.

    இதன் மூலம் சிவத்துக்குள் அதிக சக்தியை சேமிக்க செய்யும் ஆற்றல் வில்வ தளங்களுக்கு இருப்பதை நம் முன்னோர்கள் கண்டு பிடித்தனர். எனவே சிவார்ச்சனைக்கு மற்ற மலர்கள், இலைகளை விட வில்வ தளங்களை பயன்படுத்தினார்கள்.

    வில்வம் இத்தகைய முக்கியத்துவத்தை பெற்றதால் 'சிவமூலிகைகளின் சிகரம்' என்றழைக்கப்படுகிறது.

    மூன்று இலைகளைக் கொண்ட வில்வ தளத்தை சிலர் தனி தனியாக கிள்ளி பிரித்து விடுவ துண்டு. அப்படி செய்யக்கூடாது. மூன்று இலை கொண்ட வில்வ தளத்தை அப்படியே அர்ச்சனை மற்றும் வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.

    அப்படி வில்வதளத்தை பயன்படுத்தினால்தான், அதில் சேமிக்கப்படும் அதிர்வலைகள் நமக்கு கிடைக்கும். இந்த அதிர்வலை இடமாற்றம் எப்படி நிகழ்கிறது தெரியுமா?

    ஆயலங்களில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் மூல மூர்த்தியானது அஷ்ட பந்தனம், ராஜகோபுரம், கும்பாபிஷேகம் மூலம் எப்போதும் அதிர்வலைகளுடன் இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.

    பழமையான சிவாலயங்களில் ஈசனிடம் இருந்த வெளிப்படும் அதிர்வு அதிகம் இருப்பதை பலரும் அனுபவப்பூர்வமாக அறிவார்கள்.

    அத்தகைய அதிர்வு கொண்ட ஆலயங்களில், லிங்கத்தின் மீது போடப்படும் வில்வ தளங்கள், அந்த அதிர்வுகளை தம்முள் கிரகித்து வைத்துக் கொள்ளும். பூஜை முடிந்து அர்ச்சகர் அந்த வில்வ தளத்தை நம்மிடம் தரும்போது பக்தியுடன் வாங்கி சட்டை பை அல்லது கைப்பைக்குள் வைத்துப் பாருங்கள்.

    வில்வ இலைகளில் தேங்கியுள்ள ஈசனின் அதிர்வலைகள் நம் உடலுக்குள் ஊடுருவும். அந்த அதிர்வலைகள் அபார சக்தி கொண்டவை. அது நமது உடலிலும் உள்ளத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். வில்வ தளங்களுக்கு மட்டுமே இப்படி மூலவர் சிலையில் இருந்து நம்மிடம் அதிர்வலைகளை கொண்டு வந்து சேர்க்கும் ஆற்றல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வில்வத்தின் சிறப்பு பற்றி புராணங்களில் பல கதைகள் உள்ளன.

    ஒரு தடவை காட்டுக்கு வேட்டையாட சென்ற வேடனை புலி துரத்தியது. வில்வ மரத்தின் மீது ஏறியவேடன் தூக்கம் வராமல் இருக்க, இலைகளை பறித்து போட்டுக் கொண்டே இருந்தான். அது மரத்தடியில் இருந்த லிங்கம் மீது விழுந்தது.

    விடிந்த பிறகுதான் அவனுக்கு தான் ஏறியது வில்வ மரம் என்று தெரிந்தது. அன்றைய இரவு சிவராத்திரியாகவும் இருந்தது. வேடன் தன்னை அறியாமல் லிங்கம் மீது வில்வ தளங்களை போட்ட காரணத்தால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது.

    மகா சிவராத்திரி நாளில் வில்வாஷ்டகம் பாராயணம் செய்து வில்வம் சார்த்தி, சிவபெருமானை வழிபட்டால், ஏழு ஜென்ம பாவம் விலகும் என்பது ஐதீகம்.

    ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என்று உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என்று ஈசனிடம் கேட்க, ஈசனும் திருவைகாவூர் தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாக தவம் இயற்றியதால் திருவைகாவூர் என்ற தலம் வில்வராண்யம் என்று சிறப்புப் பெற்றது.

    இத்தகைய சிறப்புடைய வில்வ மரம் திருவையாறு, திருவெறும்பூர், ராமேஸ்வரம் உள்பட 30 க்கும் மேற்பட்ட ஆலயங்களில் தல விருட்சமாக உள்ளது. வீடுகளிலும் வில்வ மரம் வளர்க்கலாம்.

    வீட்டில் வில்வ மரம் வளர்த்தால் அஸ்வ மேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும். 108 சிவாலயங்களை தரிசனம் செய்த பலனும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும்.

    வில்வ மரம் வளர்ப்பவர்களை ஏழரை சனி நெருங்காது. வில்வ மரத்தை தினமும் பூஜித்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லைகள் மறையும். வெள்ளிக்கிழமைகளில் வில்வ மரத்தின் கீழ் அமர்ந்து லட்சுமி துதி சொல்லி நைவேத்தியம் படைத்து வழிபட்டால் அளவிட முடியாத அளவுக்கு அற்புதங்கள் நடக்கும்.

    வில்வ மரத்துக்கு ஸ்ரீவிருட்சம் என்றும், வில்வ பழத்துக்கு ஸ்ரீபழம் என்றும் பெயருண்டு. எனவே வில்வ மரத்தை பார்த்தும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

    மருத்துவ ரீதியாகவும் நிறைய பலன்களை வில்வம் தருகிறது. தினமும் வில்வ மரத்தடியில் தியானம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஊளைச் சதை குறையும். வில்வ இலை பொடியை சாப்பிட்டால் கண் பார்வை தெளிவாகும். பல் வலி நீங்கும். சளி, இருமல், சைனசுக்கு வில்வ இலை பொடி சிறந்த மருந்தாகும்.

    கொழுப்பு கட்டுப்படும். ரத்த அழுத்த பிரச்சினை தீரும். சர்க்கரை நோய் குணமாகும். அல்சர் பிரச்சினை வரவே வராது. ஜீரணக்கோளாறுகள் சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். இதனால் தோல் சம்பந்தபட்ட எந்த வியாதியும் வராது.

    இன்னும் ஏராளமான மருத்துவ பலன் தரும் வில்வ தளத்தை பறிக்கும் போது பயபக்தியுடன் பறிக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அஷ்டமி, நவமி, சதுர்த்தி நாட்களில் வில்வம் இலைகளை பறிக்கக் கூடாது.

    வில்வ இலைகளை சுத்தம் செய்து எத்தனை தடவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். வில்வம் காய், பழத்தை யாகத்துக்கு பயன்படுத்தலாம்.

    வில்வதளத்தை பறித்த பிறகு 6 மாதம் வரை வைத்து வீட்டில் பூஜை செய்யலாம். உலர்ந்த வில்வமும் புனிதமானது.

    • தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது நல்ல தீர்வாக இருக்கும்.
    • தற்போது உள்ள இரட்டை தலைமை அந்தக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான தலைமையாக இருக்கலாம்.

    அனுப்பர்பாளையம்:

    1970-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து திருப்பூர் பெருமாநல்லூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 விவசாயிகள் உயிரிழந்தனர். அவர்களது நினைவிடம் பெருமாநல்லூர் ஈரோடு சாலையில் அமைந்துள்ளது.

    இந்நிலையில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய அமைப்பினர் மற்றும் பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்று நினைவஞ்சலி செலுத்தினர்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (கொ.ம.தே.க.) சார்பில் அதன் நிறுவனர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில் மலர்வளையம் வைத்து ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளும் இந்த நினைவு ஸ்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியின்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திறம்பட செயல்பட வேண்டுமானால் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பது நல்ல தீர்வாக இருக்கும். தற்போது உள்ள இரட்டை தலைமை அந்தக்கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கான தலைமையாக இருக்கலாம். ஆனால் மக்களுக்காக குரல் கொடுக்கும் போது ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே திறமையாக செயல்பட முடியும். எனவே அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

    தற்போது மத்திய அரசின் திட்டமான அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ள சூழ்நிலையில் அந்த திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கான திட்டத்தை நிறைவேற்றும் போது அதில் உள்ள குறைபாடுகளை எதிர்த்து போராடிய விவசாயிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். அதன்பிறகு அந்த சட்டத்தை திரும்பப் பெற்று இருக்கக்கூடிய மத்திய அரசு தற்போது அக்னிபாத் திட்டத்திற்கு நிலவிவரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு உயிர் சேதம் ஏற்படும் முன் அந்த திட்டத்திற்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள் என்று ஈஸ்வரன் பேசியுள்ளார்.
    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்  மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன்  வேலாயுதம் பாளையத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே இலவச மின்சாரத்தை வழங்கி விவசாயத்தையும். அதேபோல் விவசாயிகள் வாங்கிய கடன் தொகை ரூ.7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்து விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். இதன் மூலம் அதிக பயன் அடைந்தவர்கள் கொங்கு நாட்டு விவசாயிகள் தான். 

    அதேபோல் இந்த தேர்தலிலும் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்வதாகவும். நிலமற்ற ஏழைத்தொழிலாளர்கள் வாங்கியுள்ள 5 பவுனுக்கு உட்பட்ட நகை கடனையும் தள்ளுபடி செய்வதாகவும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிக்கு தான் விளை வித்த பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இடைத் தரகர்கள் பயன் பெறும் நிலை இருந்தது. அதை மாற்றுவதற்காக கருணாநிதி உழவர் சந்தை கொண்டு வந்தார். அவை மீண்டும் சரியாக செயல்பட தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். 

    இப்படி விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல் படுத்திய தி.மு.க., கொங்கு நாட்டில் வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை இனி மாற்றிக் காட்டுவோம். செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ததாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

    ஏழை மக்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய், சிலிண்டர் விலை மற்றும் கேபிள் கட்டணம் குறைப்பு,  கடன் தள்ளுபடி என்று தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ள  திட்டங்கள் மூலம் ரூ.5 லட்சம் வரை ஒரு குடும்பம் பயன்பெற உள்ளது. எனவேரூ.1000,ரூ.2000க்கு ஆசைப்பட்டு ரூ.5 லட்சத்தை இழந்துவிடாதீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மதங்களுக்கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்டனத்திற்குரியது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு, மே. 15-

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஈரோட்டில் இன்று நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.

    மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் மதங்களுக் கிடையே பிரச்சனை வரும் வகையில் பேசியது கண்ட னத்திற்குரியது.

    அரசியல் கட்சி தொடங்கிய ஒருவர் இப்படி பேசியது வருத்தமாக உள்ளது. நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பது அனைவரின் ஆசை. தேர் தலில் வாக்குகளை பெறும் நோக்கில் பேசியது ஏற்று கொள்ள கூடியது அல்ல.

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது கமல ஹாசன் பேசியதை விட குற்றம். ஊடகத்தின் கவனத் தை ஈர்க்க இவ்வாறு பேசி யுள்ளார். தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்டும் இவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும்.

    தேர்தலுக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி யினருக்கும் தெரியும்.தமிழ கத்தில் தேர்தல் முடிவுகளை தெரிந்து கொண்டதால் தி.மு.க.வை கூட்டணிக்கு போட்டி போட்டு அழைக் கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
    நாமக்கல்:

    தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்த நிலையில் நேற்று தி.மு.க. கூட்டணியின் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு கொ.ம.தே.க. மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல் தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வேட்பாளர் சின்ராஜை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

    அப்போது அவர், லாரி தொழிலுக்கு இடையூறாக உள்ளது ஆள்பற்றாக்குறை. இதனை கருத்தில்கொண்டு ஒரு வண்டிக்கு 2 டிரைவர் இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, ஒரு டிரைவர் முறையை அமல்படுத்த பாடுபடுவோம் என்றார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்பதற்கு தற்போது நடந்த செயல்வீரர்கள் கூட்டமே சாட்சி. இந்த கூட்டத்துக்கு தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் வருவது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

    திருமணிமுத்தாறு திட்டம் இந்த பாராளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டும். திருமணிமுத்தாறு திட்டத்திற்கு குரல் கொடுத்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். எதிர் அணியில் இருப்பவர்கள் எங்காவது திருமணிமுத்தாறு திட்டத்தை பற்றி குரல் கொடுத்து இருப்பார்களா?. பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் நேர்மையான அதிகாரியை நியமித்து கைது செய்ய வேண்டும். இந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக திருச்செங்கோட்டில் உள்ள பரமத்திவேலூர் சாலையில் தேர்தல் அலுவலகத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திறந்து வைத்தார். 
    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கொங்கு மக்கள் கட்சி கூட்டணி பற்றி பேசி வருகிறது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #kongumakkalkatchi #dmk #parliamentelection

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அம்மம் பாளையத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.எஸ். ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது குறித்து எங்கள் கட்சியின் 5 பேர் கொண்ட குழுவின் முதல்கட்ட பேச்சு வார்த்தை முடிந்தது. 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்னும் 2 நாட்களில் பேசப்பட்டு நல்ல தகவல் தெரிவிக்கப்படும்.

    தி.மு.க. கூட்டணி போட்டியிடும் 40 தொகுதிகளிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இரவு- பகல் பாராமல் கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம்.

    தற்போது அ.தி. மு.க-பா.ம.க. இடையேயான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். அ.தி.மு.க. வின் வாக்குகளை டி.டி.வி. தினகரன் பிரிப்பார்.


    கடந்த 2009-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது அ.தி.மு.க.வுடன் 7 தொகுதிகளில் நின்று போட்டியிட்ட பா.ம.க. தோல்வியை தழுவியது. அதுபோல இந்த முறையும் பா.ம.க. தோல்வியை தழுவும். இந்த கூட்டணி குறித்து பா.ம.க-அ.தி.மு.க.வின் தொண்டர்களிடையே சலசலப்பு இருந்து வருகிறது.

    ஏழைகளுக்கு ரூ. 2 ஆயிரம், ரூ. 6 ஆயிரம் வழங்கும் நிதி திட்டங்களை கடந்த 3 வருடங்களுக்கு முன்பே மத்திய - மாநில அரசுகள் வழங்கி இருந்தால் அது நல்ல ஆட்சி என்று கூறலாம். ஆனால் இப்போது தேர்தலையொட்டி வழங்குவது மக்கள் விரோதத்தைதான் சம்பாதிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மாவட்ட அவைத் தலைவர் பிரபாகரன், துணை பொதுச் செயலாளர் சக்தி நடராஜ், தங்கவேல், பொருளாளர் கே.சி. பாலு, மாநில நிர்வாகிகள் சூரியமூர்த்தி, விஷா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #kongumakkalkatchi #dmk #parliamentelection

    கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கொமதேக ஈஸ்வரன் கூறியுள்ளார். #Eswaran #Parliamentelection

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தை பொருத்த வரை தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி என இரு முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வரும் நிலையில் 3-வது கூட்டணியாக சில கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் கொ.ம.தே.க. எந்த அணியில் இடம் பெற உள்ளது? என்று மதில்மேல் பூனையாக உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கொ.ம.தே.க. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. பாரதிய ஜனதா அணியுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமையாதபட்சத்தில் கொ.ம.தே.க தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் ஓட்டுகள் வாங்கினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    இப்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொ.ம.தே.க. நிலைப்பாடு என்ன? என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, “தேர்தல் கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை. இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார். #Eswaran #Parliamentelection

    ராகுல் பிரதமராக முக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Eswaran #MKstalin #Rahulgandhi
    அந்தியூர்:

    அந்தியூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இரண்டு மாதங்களுக்கு முன்னர் காவிரியிலும் பவானியிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தற்போதுவரை கொங்கு மண்டலம் முழுவதும் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை.

    தமிழக அரசு குடிமராமத்து பணிகள் மூலம் நிலத்தடி நீர் மேம்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு அல்லாமல் நிலத்தடி நீர் மிகவும் கீழே சென்று கொண்டுதான் இருக்கிறது. குடி தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனை வராத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற நிலையில் விவசாயிகளுக்கு எதிரானது மத்திய அரசு என விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு இருக்கிறது.

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் விசாரணையின்றி கைது செய்யலாம் என சட்ட திருத்தம் கொண்டு வந்திருப்பது மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

    இந்த இரண்டு காரணங்களால் தான் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி தோற்றதற்கு காரணம், இதனை அதன் தலைவர்களும் தற்போது உணர்ந்திருக்கின்றனர்.

    விவசாயிகளை வாழ வைக்கின்ற வகையில் எந்த ஒரு முயற்சியும் மத்திய அரசு எடுக்காதது வேதனையளிக்கிறது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரையிலும் எந்த ஒரு நிதியையும் மத்திய அரசு அறிவிக்காமல் இருக்கிறது.

    மேகதாது அணை அதேபோல் கேரளாவில் புதிய அணை கட்ட ஆய்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து அதன் மூலம் மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான அரசாகவே செயல்படுகிறது.

    எனவே விவசாயிகள் வாழ வைக்கின்ற வகையிலும் தமிழகம் பயன்பெறும் வகையிலும் மத்திய அரசு முடிவு எடுக்கவில்லை என்றால் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் மிக குறைவான வாக்குகளை பெறும்.

    ராகுல் பிரதமராக ஸ்டாலினால் முன்மொழியப்பட்டு இருக்கிறார். நாங்கள் கூட்டணி கட்சி என்ற வகையில் திமுக எடுத்த முடிவிற்கு ஆதரவு அளிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Eswaran #MKstalin #Rahulgandhi
    கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய இயக்குனர் ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என்று ஈஸ்வரன் கூறியுள்ளார். #eswaran #DirectorRanjith

    கோவை:

    கோவையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார், யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது.

    அம்பேத்கார் உருவ படம் முன்பாக இளைஞர்கள் சில சமுதாய பெண்களை கொச்சை படுத்தி பேசியது அச்சமுதாயத்தினை கொதிப்படைய செய்துள்ளது.


    திரைப்பட இயக்குநர் ரஞ்சித் தேச தந்தை காந்தி இல்லை எனவும், அம்பேத்கர் என்றும் பேசுகிறார். கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா இயக்குநர் ரஞ்சித் சினிமா பாணியில் பேசுகிறார். அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் அவரை கைது செய்ய வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய அளவில் கலவரம் உருவாகி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது.

    மேகதாது அணை விவகாரத்தில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை உடன் வைத்து போராடுவது சங்கடமான வி‌ஷயம். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுக்கு கர்நாடகா அரசியல் தான் முக்கியம்.

    மேகதாது பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது. அவர் கர்நாடக பிரதிநிதிகள் யாரையும் சந்திக்க கூடாது. நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #eswaran #DirectorRanjith

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதியளித்தது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #MekedatuDam #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி தண்ணீர் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென்று தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தமிழகத்திலிருக்கும் கொஞ்சநெஞ்ச விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். கஜா புயல் பாதிப்பில் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் இந்த செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MekedatuDam #Eswaran
    புயல் எச்சரிக்கை ஏற்பாட்டை அனைத்து தலைவர்களும் பாராட்டியதால் அரசு மெத்தனமாக இருந்து விட்டது என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கஜா புயல் வருவதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு சிறப்பாக இயங்கிய தமிழக அரசு, புயலுக்கு பின் நடக்கின்ற நிவாரண பணிகளில் கவனம் செலுத்தாதது வேதனைக்குரியது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகளோடு பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு எந்திரத்தில் போர்க்கால நடவடிக்கைகள் இப்போதைய அவசியம். விழிப்புணர்வு ஏற்படுத்தியதை எதிர்க்கட்சி தலைவர் உள்பட அனைத்து கட்சிகளும் பாராட்ட தான் செய்தார்கள்.

    தமிழக அரசிடமிருந்து எவ்வளவு முதற்கட்ட உடனடி இழப்பீடு வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு வைக்காததே அரசு செயல்பாடுகளின் சுணக்கத்தை எடுத்துரைக்கிறது. பிரதமரையோ அல்லது மத்திய அமைச்சர்களையோ அழைத்து வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டிருக்க வேண்டும்.

    இதுவரை மத்திய அரசின் சார்பில் சேதங்களை மதிப்பிட பார்வையாளர்கள் குழுவை நியமித்ததாக கூட அறிவிப்பு இல்லை. எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாக பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. தமிழக அரசின் சார்பில் கூட மீட்பு பணிகளை மேற்கொள்ள நிதி இதுவரை ஒதுக்கப்பட்டதாக தெரியவில்லை.


    தேவையான நிதியை உடனடியாக ஒதுக்காமல் அமைச்சர்களும், முதலமைச்சரும் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று அறிவிப்பது ஏற்புடையதல்ல. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கின்ற புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வெறுப்பையும், கோபத்தையும் தமிழக அரசு சம்பாதித்து கொண்டிருக்கிறது.

    உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை என்றால் வி‌ஷக் காயச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகம், கஜா புயலால் அழிவை சந்தித்திருக்கின்ற பகுதிகள் எதிர்பாராத அளவிற்கு உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

    தென்னை, மக்கா சோளம், கண்வலி விதை போன்ற அனைத்து விவசாய பயிர்களும் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரைமட்டமாயிருக்கிறது. அதை பற்றி தமிழக அரசிடமிருந்து எந்த இழப்பீடு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் விவசாயிகளின் வேதனையின் அளவு அதிகரித்திருக்கிறது.

    அனைத்து கட்சி தலைவர்களும் முதல் நாளில் பாராட்டியதை கேட்டு தமிழக அரசு கொஞ்சம் அசந்துவிட்டதோ... என்ற சந்தேகம் எழுகிறது. விழித்தெழுங்கள் கடமையை செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNGovt #Gajacyclone #Eswaran
    ×