search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "En Mann En Makkal"

    • ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது.
    • நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும்.

    மதுரை:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் "என் மண் என் மக்கள்" நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதுரை வந்தார். மதுரை வீரபாஞ்சானில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்துக்கு வந்திறங்கிய அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற சிறு, குறு தொழில் முனைவோர் டிஜிட்டல் செயலாக்க திட்ட மாநாட்டை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக வாகன தொழில் நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாட்டின் பொருளாதாரத்தில் ஆட்டோமொபைல் தொழில் முக்கிய அம்சமாக விளங்குகிறது. ஒவ்வொரு தொழிலையும் மேம்படுத்த இந்திய அரசு தோளோடு தோள் கொடுத்து ஆதரவு அளித்து வருகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்தை ஆட்டோ மொபைல் தொழில் பகிர்ந்து கொள்கிறது. இது தேசம் தன்னிறைவுடன் திகழ்வதற்கு ஆதாரமான அம்சமாக இத்தொழில் விளங்கி வருகிறது. உற்பத்தியிலும் கண்டுபிடிப்புகளிலும் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் ஆட்டோ மொபைல் துறையின் பங்கு அளப்பரியது.

    குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் உலக அளவில் தமிழகம் தன்னிகரற்று சிறப்பாக விளங்கி வருகிறது. உலக அரங்கில் இத்தொழிலில் தமிழகம் தனது திறமையை நிரூபித்துள்ளது. இத்தொழிலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. ஆகையால் தான் 45 லட்சத்துக்கும் அதிகமான கார்கள், 2 கோடி மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சம் வர்த்தக வாகனங்கள், ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    ஒவ்வொரு வாகனத்திலும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் தயாரிப்பது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள்தான். உலகில் உள்ள பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் இந்தியாவில் தொழில் முனைவோர்களால் உற்பத்தி செய்யப்படும் உதிரி பாகங்களை பயன்படுத்துகின்றன. உலக அளவிலான விநியோக சங்கிலியில் நமது தொழில் முனைவோர்கள் முக்கிய அங்கமாக செயல்பட்டு அதை வலுவானதாக மாற்றி வருகின்றனர்.

    எனவே நாம் தரத்திலும், நீடித்த நிலையான உற்பத்தி இலக்கிலும் கவனம் செலுத்த வேண்டும். அதே வேளையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத "குறைவான கார்பன் வெளிப்பாடு, மாசற்ற உற்பத்தி" என்ற கொள்கையோடும் செயல்பட வேண்டும். கொரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் தொழில் முனைவோர்களின் பங்கு மிகவும் கவனிக்கத்தக்கதாக விளங்கியது. தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்காக முத்ரா, விஸ்வகர்மா போன்ற கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இதன் மூலம் பல லட்சம் தொழில் முனைவோர்கள் பயனடைந்து வருகின்றனர். சிறுதொழிலின் தரத்தை உயர்த்திட இந்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தொழில் நுட்பத்தையும், திறன்களின் தேவையிலும் தொழில் முனைவோர்கள் கவனம் செலுத்தி எதிர்காலத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களிக்க வேண்டும். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் மத்திய அரசு அதற்கென தனியான ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    ஒரு கோடி வீடுகள் பயன் பெறும் வகையில் இலவச மின்சாரம், கூடுதல் வருவாய் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் அவை மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற (சார்ஜிங்) மையங்களாகவும் திகழும் வாய்ப்பும் உருவாகும். ஆட்டோமொபைல் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்காக ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான பி.எல்.ஐ. திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் எல். முருகன், மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர்
    • எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது என்று மோடி பேசியுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா நடைபெற்று வருகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.

    அதில், "இன்று தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது" என்று மோடி பேசியுள்ளார்.

    மேலும், "எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்" என்று அவர் பேசியுள்ளார்.

    • 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார்.
    • நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும்

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

    இக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தமிழகத்தில் 39 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும. 400 பாஜக எம்.பிக்கள் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார். என் மண் என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா இது, ஆனால் நம் பணி இதனோடு முடியவில்லை. தேர்தல் வரை இன்னும் 60 நாட்கள் பாஜகவினர் வேலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

    மேலும், மஞ்சள் ஏற்றுமதியை பாஜக அரசு தான் ஊக்குவித்துள்ளது. அதனால் தமிழக மஞ்சள் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. அந்த தடையை உடைத்தது பாஜக அரசு தான் என தனது உரையை பேசி முடித்தார் அண்ணாமலை.

    • திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார்.
    • பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி வந்தடைந்தார். இதன்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திறந்த ஜீப்பில் பயணித்த பிரதமர் மோடி தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி வந்தார். அவருடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பயணித்தனர். பிரதமர் மோடி பயணிக்கும் வாகனம் மீது மலர்களை தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கூட்டத்தில் ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சூலூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவின் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்காக அவர் கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வந்தார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது.
    • அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் நிறைவு விழா நடைபயணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிகப்பெரிய ஆட்கள் பா.ஜ.க.வுக்கு வர உள்ளார்கள். பொறுத்து இருந்து பாருங்கள். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாகவும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கலாம். முக்கிய புள்ளிகளை கட்சிக்குள் கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளது. அதற்கு ஏற்கனவே கட்சிக்குள் இருக்கும் முக்கிய புள்ளிகளை சமாதானம் செய்ய வேண்டியது உள்ளது. அ.தி.மு.க.தான் கூட்டணி வேண்டாம் என்று கூறி கொண்டு பா.ஜ.க., பா.ஜ.க. என புலம்பி கொண்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.
    • மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது.

    பல்லடம்:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட 'என் மண், என் மக்கள்' நடைபயணத்தை நிறைவு விழாவாகவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவும் பல்லடத்தில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக பல்லடம் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் மலை எதிரில் உள்ள 1400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு இன்று 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இன்று பகல் 12 மணியளவில் பல்லடம் மாதப்பூரில் 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழா மற்றும் பா.ஜ.க.வின் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக திருப்பூர், கோவை, சேலம், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்தனர்.

    இன்று காலை முதல் பொதுக்கூட்டம் மைதானத்திற்கு பொதுமக்கள், பனியன் நிறுவன தொழிலாளர்கள் என ஏராளமானோர் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சாரை சாரையாக திரண்டு வந்தனர். அவர்களை பா.ஜ.க.வினர் உற்சாகமாக வரவேற்பு அளித்து மைதானத்திற்குள் அழைத்து சென்றனர். தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் அமருவதற்காக மைதானத்தில் ஏராளமான சேர்கள் போடப்பட்டு இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் பங்கேற்க திரண்டு வந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை செய்து மைதானத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மதியம் 1.30 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்தை வந்தடைகிறார்.

    அங்கு அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பிரதமரின் நிகழ்ச்சியானது பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 மணி வரை நடைபெற உள்ளது.



    முன்னதாக ஒத்திவைக்கப்பட்டு இருந்த திருப்பூர் தெற்கு, வடக்கு சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை மேற்கொள்ளும் வகையில் இன்று பகல் 11 மணியளவில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அண்ணாமலை தனது நடைபயணத்தை தொடங்கினார். சிறிது தூரம் வரை நடந்து சென்ற அவர், பின்னர் திறந்த வெளிவாகனத்தில் யாத்திரையை மேற்கொண்டார்.

    பி.என்.ரோடு வழியாக புஷ்பா சந்திப்பு, குமரன் ரோடு, வளம் பாலம், மத்திய பஸ் நிலையம் வழியாக சென்றார். அப்போது திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம் எதிரே உள்ள குமரன் நினைவு ஸ்தூபிக்கு அண்ணாமலை மரியாதை செலுத்தினார். மேலும் மாநகராட்சி அலுவலகம் அருகே காந்தி சிலை, வித்யாலயாவில் உள்ள தியாகி சுந்தராம்பாள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்கிறார். தொடர்ந்து பல்லடம் சாலை வழியாக மாதப்பூரில் பொதுக்கூட்டம் நடை பெறும் மைதானத்தை சென்றடைகிறார்.

    பாதயாத்திரை நிறைவு விழா நடைபயணம் என்பதால் திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


    அவர்கள் அண்ணாமலைக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாதப்பூர் வரை வழிநெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் கட்சி கொடி, தோரணங்கள், வரவேற்பு பேனர்கள் கட்டப்பட்டு இருந்தது. நடைபயணத்தின் போது பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் அண்ணாமலை கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    மதியம் 2 மணியளவில் பிரதமர் மோடி வருகை தந்ததும், பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதயாத்திரை நிறைவு விழா நடக்கிறது. இதில் பிரதமர் மோடி அண்ணாமலையுடன் திறந்த ஜீப்பில் 1 கி.மீ., தூரம் சென்று தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்களை சந்திக்கிறார். இதற்காக அங்கு பிரத்யேக சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேடை அருகே சென்றதும் அண்ணாமலையின் நடைபயணத்தை நிறைவு செய்து வைக்கிறார். பின்னர் பிரதமர் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி 4500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மத்திய சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கூட்டத்தில் பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என்று பா.ஜ.க.வினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினருடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    பொதுக்கூட்டம் மைதானம் 5 லட்சம் பேர் அமரும் வகையிலும், 10 லட்சம் பேர் வரை நின்று பங்கேற்கும் வகையில் தயார்ப்படுத்தப்பட்டு இருந்தது.

    வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு மேடையின் பின்புறம் பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உணவுக்கூடம், வாகன பார்க்கிங், கழிப்பிடம், தண்ணீர் விநியோகம் என 5 ஆயிரம் பா.ஜ.க. தொண்டர்கள் சேவைப்பணியில் ஈடுபட்டனர்.

    1.12 ஆயிரம் சதுர அடியில் 3 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள், பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது.

    பொதுக்கூட்ட மைதான வளாகத்திற்குள் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் சின்டெக்ஸ் டேங்குகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. இது தவிர 5 லட்சம் தண்ணீர் பாட்டில்களும் தயாராக வைக்கப்பட்டு இருந்தது.பொதுக்கூட்ட அரங்குக்கு வெளியே ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

    பொதுக்கூட்ட மைதானத்திற்குள் போதை பொருட்கள், நெகிழி பைகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு மேல் தொண்டர்கள், பொதுமக்கள், பொதுக்கூட்டம் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவு இடைவேளைக்கு பின்பே பொதுக்கூட்டம் தொடங்குகிறது. 10 தீயணைப்பு வாகனங்கள், 30 ஆம்புலன்ஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.


    பொதுக்கூட்ட மேடையானது தெற்கு நோக்கி இருக்கும் வகையில் 80 அடி நீளம், 60 அடி அகலம் கொண்டதாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது. மேடையின் மேல் பகுதியில் தாமரைசின்னம் பொறிக்கப்பட்டு வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் மோடி மற்றும் அண்ணாமலையின் படங்கள் இடம் பெற்றிருந்தது. 5 லட்சம் சேர்கள் போடப்பட்டு இருந்தது.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரில் இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண்,என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவும், பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.


    இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்தநிலையில், பல்லடத்தின் முக்கிய இடங்களில் மோடியை வரவேற்று இரவில் ஒளிரும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
    • நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.

    நீலகிரி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியிருப்பதாவது:-

    பாண்டிச்சேரி உட்பட அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்.

    நாடு முழுவதும் பாஜக 400 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நிற்பது உறுதியாகியுள்ளது.

    வேட்பாளர் யார் என்று கட்சி தலைமை, பாராளுமன்ற குழு அறிவிக்க உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி நாளை மறுநாள் (புதன்கிழமை) தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நெல்லை வரும் பிரதமர் மோடி, பாளை நீதிமன்றம் எதிரே பெல் பள்ளி மைதானத்தில் பா.ஜனதா நெல்லை பாராளுமன்ற தொகுதி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதற்காக தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக பாளை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் அவர் விழா மேடைக்கு செல்கிறார். பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு மீண்டும் ஜான்ஸ் பள்ளி மைதானத்திற்கு சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி நெல்லை மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலையில் ஒரு சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடத்தில் இருந்து 6 கிலோமீட்டர் சுற்றளவில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருச்செந்தூர் சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகள், சாலையோர பழக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    விழா மைதானம், ஹெலிகாப்டர் வந்திறங்கும் மைதானம் உள்ளிட்டவை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி நெல்லையில் 10 போலீஸ் சூப்பிரண்டுகள், 14 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 21 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இதற்காக காவல்துறையின் மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் இருந்து போலீசார் வருகின்றனர். இதுதவிர மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    பிரதமர் மோடி நெல்லைக்கு முதல் முறையாக வருகை தர இருக்கும் நிலையில் விழா மேடைக்கு அருகே உள்ள பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் தரை இறக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு ஹெலிகாப்டர் வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்திற்கு சென்று சோதனை செய்யப்பட்டது.

    • கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.
    • மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, ஜி.கே.வாசனை சந்தித்தார். அப்போது அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பாஜக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக இணைந்துள்ளது.

    கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார்.

    மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்.

    பாரம்பரியம் மிக்க கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் விலங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாளை பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன் பங்கேற்கிறார்.
    • பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    குறிப்பாக கூட்டணி அமைப்பதில் பல்வேறு கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து உள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாலை உடனான சந்திப்பிறகு பிறகு அவர் கூறியிருப்பதாவது:-



    பாஜக கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியை கேட்கிறது.

    நாளை பிரதமர் மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்கிறேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமர் ஆக்க தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×