என் மலர்

    நீங்கள் தேடியது "அதிமுக"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
    • மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

    தருமபுரி:

    பொதுக்கூட்ட மேடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமிடம் தருமபுரி மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று தி.மு.க. வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேடு பகுதியில் கடந்த 16-ந் தேதி பொதுக்கூட்ட மேடையில் பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தையும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களையும் விமர்சித்தும் வீண் வதந்திகளை பரப்பியும் மக்களின் மத்தியில் வரவேற்பையும் நம்பிக்கையும் ஏற்படுத்திய திராவிட மாடல் ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    அப்போது தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடகம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், மேற்கு மாவட்டம் துணை அமைப்பாளர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் கோபால், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் கவுதம் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்கள் அணியினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை
    • அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம்

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வார்த்தைப்போர் நடைபெற்ற வந்தது. இறுதியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

    இதுகுறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், கூட்டணி குறித்து வெளிப்படையில் பேச வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வாய்மொழி உத்தரவிட்டு மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்த நிலையில், இன்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்கிறோம். ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதால் அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டு

    * ஒரு எம்.பி. 22 லட்சம் மக்களை கையாள்வது எளிதாக விசயம் கிடையாது. மக்கள் தொகையை மட்டுமே வைத்து தொகுதி வரையறை இருக்கக்கூடாது. அதில் பல்வேறு காரணிகள் இருக்க வேண்டும்.

    * என்னை பொறுத்த வரையில் எனக்கும், அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை.

    * தமிழக பா.ஜனதாவுக்கும்- அதிமுக-வுக்கும் இடையில் பிரச்சனை இல்லை. இதில் தெளிவாக இருக்கிறோம்

    * அதிமுகவில் உள்ள சில தலைவர்களுக்கும், எனக்கும் பிரச்சனை இருக்கலாம். ஏனென்றால் அவர்களுடைய பேச்சை வைத்து சொல்கிறேன்.

    * என்.டி.ஏ. கூட்டணியின் முக்கிய புள்ளியே பிரதமர் மோடிதான். அவரை 3-வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்பதுதான் பா.ஜனதாவின் நோக்கம். இதை அதிமுக ஏற்றுக் கொள்கிறது.

    * மத்தியில் பிரதமர் மோடியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியையும் அறிவிக்க வேண்டும் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதைப்பற்றி தேசிய தலைவர்கள் கூற வேண்டும். நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை.

    * என்னைப் பற்றி வரும் விமர்சனம் மற்றும் கருத்துக்கு பதில் அளிக்கமாட்டேன். ஆனால், என்னுடைய தன்மானத்தை கேள்விக்குறியாக்கும்போது பதில் பேசுவேன். நாளைக்கும் பேசுவேன். நாளைக்கு அடுத்த நாளும் பேசுவேன். அடுத்த வாரமும் பேசுவேன். தன்மாத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்ய நான் இங்கே வரவில்லை. அதில் தெளிவாக இருக்கிறேன். தன்மானம் முக்கியம். அதன்பின்தான் அரசியல். தன்மானம் விசயத்தில் பதில் அளிப்பது என்னுடைய கடமை மட்டுமல்ல. அது உரிமையும் கூட.

    * அவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. பதில் சொல்லவும் முடியாது. செல்லூர் ராஜூ பேசியதற்கு நான் எப்படி பதில் சொல்வேன். நான் பதில் சொல்ல முடியாது. தேசிய தலைமை, தேசிய தலைவர்கள் சொல்ல வேண்டும்.

    * அதேபோல் அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் பேசியுள்ளனர். அதற்கும் மத்தியில்தான் பதில் சொல்ல வேண்டும். யாரெல்லாம் மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்கள் அனைவரும் ஒரு மையப்புள்ளியில் இணைய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

    * தமிழகத்தில் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டிற்கு காரணம், ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம் உள்ளது. ஒவ்வொரு கட்சியின் சித்தாந்தமும் வேறுவேறு. அதனால் இதுபோன்ற மோதல் வருவது சகஜம்தான்.

    * அதிமுக கட்சி 1972-ல் உருவான சரித்திரம் வேறு. சனசங்கம் 1950 காலக்கட்டத்தில் உருவான கருத்து வேறு. 1980-ல் பா.ஜனதா கட்சியாக மாறிய சரித்திரம் வேறு. எல்லா பிரச்சனைகளையும், விசயங்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    * அறிஞர் அண்ணாவை நான் எங்கேயும் விமர்சித்தது கிடையாது. சனாதன தர்மம் விவகாரத்தில் பா.ஜனதா போன்று அதிமுக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் குரலும், திமுகவின் குரலும் ஒரே குரல்தான். அதில் எந்த மாறுபாடும் இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த சட்டத்தையே, அவர்கள் ஆதரித்து என்று பேசுவதில்லை. திமுக சொன்னால் சரி என்று கேட்டுக்கொள்கிறது.

    *தேசிய கட்சிகள் அனுகக்கூடிய பிரச்சனைகளில் ஒரு விசத்தியாசம் உள்ளது. இதனால் தனிப்பட்ட முறையில் எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் இடையில் பிரச்சினை இல்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எடப்பாடி தரப்பில், ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
    • மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.

    இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது எடப்பாடி தரப்பில், ஐகோர்ட்டு முதல் சுப்ரீம் கோர்ட்டு வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க. உறுப்பினர் என கூறி வருகிறார். கட்சி லெட்டர் பேடை சட்ட விரோதமாக பயன்படுத்தி, ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்று வாதிடப்பட்டது.

    மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
    • தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட பாரதிய ஜனதாவைச் சார்ந்த மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, செயற்குழு உறுப்பினர் ரவி ஆகியோர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன், மாவட்ட அவைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட துணை செயலாளர் ராஜா மாவட்ட பொருளாளர் குமார், எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தே.மு.தி.க., பி.ஜே.பி.யை சேர்ந்த பலர் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளனர். இவர்கள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கும், அதனை தொடர்ந்து எடப்பாடியாரை தமிழகத்தின் முதலமைச்சராக வருவதற்கும் பாடுபடுவோம் என்று கூறியுள்ளார்கள்.

    அண்ணா காலத்திலே சனாதனம் ஒழிக்கப்பட்டது. பல்வேறு மாற்றங்கள் வந்தது. சீர்திருத்த திருமணங்களை அண்ணா செய்து வைத்தார். அதனை தொடர்ந்து இருமொழி கொள்கை கடைபிடிக்கப்பட்டது.

    இன்றைக்கு அ.தி.மு.க.வில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் தலைவராக உள்ளார். இதேபோல் தி.மு.க.வி.ல் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களையும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் தலைவராக முடியுமா?

    பா.ஜனதாவுக்கும், எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தி.மு.க.வில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கைகளை அடமானம் வைத்துள்ளது. நாங்கள் தேவரை தெய்வமாக வணங்குகிறோம். தேவருக்கு தங்க கவசத்தை அம்மா வழங்கினார்.

    கர்நாடகா தேர்தலில் பெண்களுக்கு 2000 ரூபாய் வழங்குவோம் என கூறினார்கள். தற்போது ஒரு கோடியே 30 லட்சம் பேருக்கு வழங்கி விட்டார்கள். ஆனால் தமிழகத்தில் 2 கோடியே 18 லட்சம் குடும்பங்கள் உள்ளது. இதில் ஒரு கோடி பேருக்கு வழங்கிவிட்டு மீதி பேருக்கு வழங்கவில்லை.

    மதுரை எம்ஜிஆர் விளையாட்டு திடலில் விளையாட்டு வீரர்கள் தங்க தங்க விடுதி, ஓய்வு அறை அமைக்க வேண்டும் என்று கூறினோம். இதுவரை எந்த நடவடிக்கை இல்லை. அதே போல் ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு திடல் அமைக்கப்படும் என உதயநிதி கூறினார். எனது தொகுதியில் ஜெயஹிந்த்புரத்திலுள்ள இடத்தை தேர்வு செய்து கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    இன்றைக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரையில் 2 நாள் முகாமிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் சென்னை சென்ற பின் தனது தந்தையிடம் சொல்லி மதுரைக்கு சிறப்பு நிதியை ஒதுக்க சொல்வாரா?

    மேலும் உதயநிதி கூட்டத்தில் காலி சேர்கள் இருக்கக்கூடாது என்று ஆயிரம் ரூபாய் கொடுத்து உட்கார வைத்துள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மோடிஜி கொண்டு வந்தார். ஆனால் காங்கிரஸால் கொண்டு வர முடியவில்லை. பிரதமர் மோடி நன்றாக தமிழ் பேசுகிறார். புதிய அவையில் கூட செங்கோல் வைத்து தமிழகத்தின் புகழை அறியச் செய்துள்ளார்.

    கடந்த 10 வருடம் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது எதையும் செய்யவில்லை. முல்லைப் பெரியாறு, கச்சதீவு பிரச்சனையை கூட தீர்க்கவில்லை.

    மோடி மீண்டும் பாரதப் பிரதமராக வருவார். தமிழகத்திலும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும். பா.ஜ.க.வுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
    • விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார்.

    கொடைக்கானல்:

    முன்னாள் முதல்வர் அண்ணா குறித்து பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி இல்லை எனவும், தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்றும் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

    இது தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அளவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க கூட்டணி குறித்தும், அண்ணாமலை குறித்தும் தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். தான் கொடைக்கானலில் இருப்பதை இணையதளத்தில் பதிவு செய்ததைதொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் செய்தியாளர்கள் அவரை சந்திக்க திரண்டனர்.

    ஆனால் அவர் யாரையும் சந்திக்கவில்லை. விடுதியில் தங்கியிருந்து தனக்கு நெருக்கமான ஒருசில அரசியல் கட்சியினரிடம் மட்டும் ஜெயக்குமார் பேசி வருகிறார். தற்போது அவர் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் வந்துள்ளதாகவும், கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள் யாரும் அவரை சந்திக்க வேண்டாம் எனவும் உதவியாளர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம்.
    • தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் என்னை அங்கீகரித்துள்ளது.

    அதிமுக சின்னம், பெயர் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த மனுவில், அஇஅதிமுக பெயர், அண்ணா படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்க வேண்டும்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சின்னத்தை பயன்படுத்துவதால் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்படுவதாக மனுவில் ஈபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

    என்னை பொதுச் செயலாளர் என தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் பயன்படுத்த கூடாது என்றும் ஈபிஎஸ் கூறியுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஒரு மாநாடு எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அமையும். இந்த மாநாட்டில் இளைஞரணியினர் உள்பட மூத்த முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இளைஞரணி மாநாட்டை வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதுரைக்கு நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரிடம் நீங்கள் நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பான ரகசியம் என்ன? என்று கேளுங்கள் என கூறியுள்ளார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கோரி ஒரு செங்கலை மட்டும் வைத்து சென்றீர்கள். அந்த செங்கலையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் ரகசியத்தை சொல்லுங்கள்.

    நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி. சனாதனம் குறித்த எனது பேச்சை பா.ஜ.க.வினர் திரித்து பரப்பினர். சனாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துக்களை அ.தி.மு.க.வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்கவில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அழைக்கவில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு. நேற்று கூட புதிய பாராளுமன்ற விழாவில் குடியரசு தலைவரை அழைக்கவில்லை. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும்.
    • கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

    கோவை:

    பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். கூட்டணி பற்றி எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம்.

    ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும். கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் தற்போது கூட்டணிக்குள் இருக்கும் சலசலப்பு சரி செய்யப்படும்.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது. அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, "எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளாது. அவமதிப்பதை பா.ஜ.க. ஒரு போதும் ஆதரிக்காது என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன்.
    • செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன்.

    மதுரை:

    மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு பேசியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தேன். ஆனால் ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் அரசியல் விஞ்ஞானியாக கலாய்க்கப்பட்டு வருகிறேன். எனது சொந்தக்கதை, சோகக்கதையை இப்போதும் சொல்ல விரும்புகிறேன், நீங்களும் கேளுங்கள்.

    மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியதால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் நடைபெற்றது.

    அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் தண்ணீரில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும் ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன்.

    அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. எனவே இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கலாம், அதற்குள் மழை வந்துவிடும் பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் எதிர்பார்த்த மழை இல்லை.

    இந்த நிலையில் 4 நாட்கள் கழித்து கலெக்டர் என்னை செல்போனில் அழைத்தார். நாம் வைகை அணைக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம் என்றார்.

    இது தொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை பொறியாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர்களும் இது சாத்தியமானது தான். ராஜஸ்தான் பல்கலைக்கழகம் இதனை பரீட்சார்த்த முறையில் வெற்றிகரமாக செய்துள்ளது என்று தெரிவித்தனர்.

    நானும் கட்சி நிர்வாகிகளுடன் 15-க்கும் மேற்பட்ட கார்களில் வைகை அணைக்கு சென்றேன். அங்கு சென்றதும் அதிகாரிகள் அணையின் உள் பகுதியில் தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும் அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம் அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன.

    இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை அரசியல் விஞ்ஞானி என்று நெட்டீசன்களால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக ரிஸ்க் எடுத்தேன். அதற்காக ரஸ்க் ஆகி விட்டேன்.

    இவ்வாறு செல்லூர் ராஜூ கலகலப்பாக பேசினார்.

    அவரது பேச்சை ரசித்து கேட்டுக்கொண்டிருந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் இதனை கேட்டு சிரித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அண்ணாமலையை பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது.
    • அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணா பற்றி கடந்த 11-ந்தேதி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அ.தி.மு.க. தரப்பில் அண்ணாமலை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    தி.மு.க. தரப்பிலும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கோவையில் கடந்த 17-ந்தேதி அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பற்றி கடுமையாக விமர்சனம் செய்தார். இது அ.தி.மு.க.வினருக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    அண்ணாமலை பேசிய வீடியோ பதிவை முழுமையாக பார்த்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கடும் கோபம் அடைந்தார். இதையடுத்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து அண்ணாமலைக்கு அதிரடியாக பதில் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

    அதன்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 18-ந்தேதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் "பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எல்லை மீறி செல்கிறார். அவரிடம் அரசியல் தலைவருக்கான பக்குவம் இல்லை. அவர் தலைவ ராக இருக்கும்வரை பா.ஜ.க. வுடன் கூட்டணி கிடையாது. இப்போது எங்கள் கூட்டணியில் பாரதிய ஜனதா இல்லை" என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    இதற்கு பாரதிய ஜனதா துணைத் தலைவர்கள், நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அ.தி.மு.க. தலைமையை விமர்சித்தும், தங்களால் தனியாக நிற்கவும் முடியும் என்றும் ஆவேசமாக பதிவிட்டனர். இது அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை மேலும் பிளவுப்படுத்தும் வகையில் இருந்தது.

    அண்ணாமலை தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து பா.ஜ.க. மீது தொடர் தாக்குதலை நடத்தினார்கள். இதை அறிந்த பாரதிய ஜனதா மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.-பா.ஜ.க. மோதலுக்கு சில புதிய காரணங்கள் கூறப்பட்டன. டெல்லியில் கடந்த 14-ந்தேதி மத்திய மந்திரி அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியபோது தொகுதி பங்கீடு பற்றி பேசப்பட்டதாகவும், அப்போது அ.தி.மு.க. 27 இடங்களிலும், பாரதிய ஜனதா 13 இடங்களிலும் போட்டியிடலாம் என்று அமித்ஷா கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.

    அமித்ஷாவின் இந்த தொகுதி பங்கீடு கணக்கை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை என்றும் அதனால்தான் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வைத்தார் என்றும் தகவல்கள் வெளியானது.

    இதை அறிந்த பா.ஜ.க. மேலிட தலைவர்கள் உடனடியாக இந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தனர். எடப்பாடி பழனிசாமியுடனும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடனும் சமரச பேச்சு நடத்தினார்கள்.

    அப்போது அ.தி.மு.க. தரப்பில் நிபந்தனை ஒன்று வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையை பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து விலக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அ.தி.மு.க. நிபந்தனையை பா.ஜ.க. மேலிட தலைவர்கள் ஏற்கவில்லை.

    இது தொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அண்ணாமலையிடம் விளக்கம் கேட்டனர். அப்போது தனது பேச்சில் எந்த தவறும் இல்லை. தனது பேச்சை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க.வுடன் ஏற்பட்டுள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வர பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி சமூக வலைதளங்களில் அ.தி.மு.க.வை விமர்சிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டது. மேலும் கூட்டணி தொடர்பாக இனி தமிழக பா.ஜ.க. தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றும் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர்கள் அமைதியாகி விட்டனர். இதனால் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் சற்று இறங்கி வந்துள்ளனர். பாரதிய ஜனதாவுடன் இப்போதைக்கு மோதல் போக்கை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் ஒருமித்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

    இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு ஒன்றை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பிறப்பித்துள்ளார். பாரதிய ஜனதா பற்றி சமூக வலைதளங்களில் கேலி கிண்டல் செய்ய வேண்டாம். அண்ணாமலையை கண்டித்து போஸ்டர் ஒட்ட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி தனது வாய்மொழி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பாரதிய ஜனதா பற்றியோ, கூட்டணி பற்றியோ அ.தி.மு.க. நிர்வாகிகள் யாரும் விமர்சனம் செய்து பேசக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். வாய்மொழியாக அவர் பிறப்பித்த இந்த உத்தரவின் அடிப்படையில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் யாரும் இன்று கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

    இதனால் அ.தி.மு.க.-பாரதிய ஜனதா இடையே ஏற்பட்ட மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்து இருப்பதாக தெரிகிறது.