search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேத்துப்பட்டில் காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருட்டு- அ.தி.மு.க. பிரமுகர் புகார்
    X

    சேத்துப்பட்டில் காரில் வைத்திருந்த ரூ.13 லட்சம் திருட்டு- அ.தி.மு.க. பிரமுகர் புகார்

    • ஆஸ்பத்திரிக்கு சென்று சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது.
    • போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அபிஷேக் ஜேக்கப், யாசின் ஆகியோருடன் சேத்துப்பட்டுக்கு காரில் புறப்பட்டார். யாசினின் காரில் 3 பேரும் வந்தனர். காரில் சதீசின் பணம் ரூ. 13 லட்சம் இருந்தது.

    சேத்துப்பட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நண்பர் ஒருவருக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காகவே 3 பேரும் ஒன்றாக காரில் வந்தனர்.

    இந்த நிலையில் தனது பணத்தை நாளை வாங்கி கொள்கிறேன் என கூறி விட்டு சதீஷ் வளசரவாக்கத்தில் இறங்கி விட்டார்.

    இதைத் தொடர்ந்து மற்ற இருவரும் சேத்துப்பட்டு மெக்கானிக்கல் சாலையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று காரை வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த ரூ. 13 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது. அதனை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.

    இதுபற்றி சேத்துப்பட்டு போலீசில் புகாார் அளிக்கபட்டுள்ளது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×