என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள்
    X

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள்

    • நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
    • தாய் தந்த தலைமகனே, ஒற்றை தலைமை ஏற்க வா! என்கிற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பல இடங்களில் 2 பேரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர்களுக்கு ஆதரவாக ஒற்றை தலைமை குறித்து வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தென்காசியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், தென்காசியின் முக்கிய சிக்னல்கள், பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    அவற்றில் தாய் தந்த தலைமகனே, ஒற்றை தலைமை ஏற்க வா! என்கிற வாசகம் எழுதப்பட்டு உள்ளது.

    இதேபோல் நெல்லையில் சந்திப்பு பஸ் நிலையம், கொக்கிரகுளம் சுலோச்சன முதலியார் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நிகழ்கால பரதனே, ஒற்றை தலைமை ஏற்க வா என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.

    Next Story
    ×