search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliamentelection"

    ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு வாக்கு பெட்டிகளை மாற்றுவது வழக்கமான நடைமுறைதான் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அளித்துள்ள பேட்டி விவரம்:-

    கேள்வி:- அரசு ஊழியர் மற்றும் அரசு சாரா ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவில் தாமதம் ஏதும் ஏற்பட்டதா? பலருக்கு இன்னும் ஓட்டு சீட்டே வரவில்லை என்று அரசு ஊழியர் சங்கம் கூறி இருக்கிறதே?

    பதில்:- இது சம்பந்தமான அனைத்து விவரங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளோம். அனைத்து தபால் ஓட்டு சீட்டுகளும் முறைப்படி வழங்கப்பட்டன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் இதை கவனித்து கொண்டார்கள்.

    தற்போது இதன் ஓட்டு பெட்டிகள் தேர்தல் கமி‌ஷன் வழிகாட்டுதல்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருக்கிறது. மேலும் இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருக்கிறது.

    கே:- தேர்தல் முடிந்த பிறகும் தேர்தல் தொடர்பான ஆவணங்களை தேர்தல் அதிகாரிகளே கைவசம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

    ப:- இது சம்பந்தமாகவும் கோர்ட்டில் விளக்கம் அளித்து விட்டோம். விசாரணை நிலுவையில் உள்ளது.

    கே:- ஓட்டு எந்திரங்களை தேனி தொகுதிக்கு மாற்றியது பற்றி என்ன கூறுகிறீர்கள்?


    ப:- தேர்தல் சாதனங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றுவது வழக்கமான நடைமுறைதான். தேர்தல் கமி‌ஷன் விதித்துள்ள விதிமுறைகள்படிதான் இவற்றை செய்தோம்.

    அரசியல் கட்சிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த கட்சிகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.

    கோவை மற்றும் திருவள்ளூரில் பயன்படுத்தாத ஓட்டு எந்திரங்கள்தான் இவ்வாறு மாற்றப்பட்டன.

    ஓட்டு எந்திரங்கள் மாற்றப்படும் போது முதல்கட்ட பரிசோதனை நடைபெறும். பின்னர் ஓட்டு எந்திரங்கள் ஸ்டிராங் அறைக்கு கொண்டு செல்லப்படும். எத்தனை ஓட்டு பெட்டிகள் என்ற விவரமும் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.

    கே:- தேர்தல் போலீஸ் டி.ஜி.பி. அசுதோஷ் சுக்லா சில அதிகாரிகளை மாற்றம் செய்ய கூறிய போதும், அதை செய்யவில்லை என்று கூறப்படுகிறதே? இதற்கு யார்தான் பொறுப்பு?

    ப:- எப்போது இது போன்ற பரிந்துரை வந்தாலும் அதுபற்றி தேர்தல் கமி‌ஷனுக்கு தகவல் அனுப்பி விடுவோம். தேர்தல் கமி‌ஷன் தான் இதில் முடிவு எடுக்கும்.

    இவ்வாறு சத்யபிரத சாகு கூறினார்.

    முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல, இந்த ஆட்சி 100 ஆண்டுகள் வரை தொடரும் என்று எச்.ராஜா பேசினார். #hraja #admk
    மானாமதுரை:

    மானாமதுரை அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய, நகர கழகம் சார்பில் தனி தனியாக கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பாராளுமன்ற வேட்பாளர் எச்.ராஜா, சட்டமன்ற இடைதேர்தல் வேட்பாளர் கீழநெட்டூர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது எச்.ராஜா பேசியதாவது:– 

    தற்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆட்சி 2 அல்லது 3 மாதங்கள் தான் நடக்கும் என்று கூறினர்.

    ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முன்னாள் முதல்–அமைச்சர் எனக்கு பிறகும் இந்த ஆட்சி 100 ஆண்டுகள் தொடரும் என்று சொன்னார். அவர் கூறியது போல, அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்த ஆட்சி 100 ஆண்டுகள் செயல்படும் என்றார்.

    தொடர்ந்து செந்தில்நாதன் எம்.பி. பேசியதாவது, பா.ஜ.க.வில் உள்ள முக்கிய சக்தி வாய்ந்த நபர்களில், எச்.ராஜாவும் ஒருவர். அவர் வெற்றி பெற்றால் சிவகங்கை தொகுதிக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார். இதேபோல சட்டமன்ற இடைதேர்தலில் நிற்கும் நாகராஜன் மிக எளிமையானவர். எனவே அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதில் ஒன்றிய செயலாளர் குணசேகரன், நகர செயலாளர் விஜிபோஸ், யூனியன் சேர்மன் மாரிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் விளத்தூர் நாடராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் அன்னாவாசல் கனேசன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். #hraja #admk
    திருமங்கலம் பகுதியில் ஏ.டி.எம்.களில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¼ கோடியை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #Parliamentelection #LSPolls

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக திருமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக தனியார் நிறுவன வாகனம் வந்தது.


    வாகனத்தில் இருந்தவர்களிடம் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அந்த ஆவணத்தில் உள்ள எண்ணும், வேனின் பதிவு எண்ணும் வித்தியாசமாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடியே 35 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வேனும், பணமும் திருமங்கலம் தாசில்தார் தனலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் அந்த பணத்தை திருமங்கலம் கருவூலத்தில் ஒப்படைத்தார்.  #Parliamentelection #LSPolls

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை மார்ச் 20-ம் தேதி திருவாரூரில் தொடங்க உள்ளார். #Parliamentelection #MKStalin

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    மனுதாக்கல் செய்ய 26-ந் தேதி கடைசி நாளாகும். 27-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்.

    29-ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். அன்று மாலை தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மோதும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யார்-யார்? என்ற முழு விவரம் தெரிந்து விடும்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய 4 கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி உருவாகியுள்ளது. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணிக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் போட்டி போட்டு அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டன. இதனால் அ.தி.மு.க., தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் அடைந்துள்ளனர்.

    வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருப்பவர்கள், தங்களது மனுதாக்கலை இந்த வாரமே முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். 21-ந்தேதி பங்குனி உத்திரம் சிறந்த தினமாக இருப்பதால் அன்று நிறைய பேர் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.

    மனுத்தாக்கலை முடித்து விட்டு பிரசாரம் செய்ய சுமார் 20 நாட்களே இருப்பதால் இப்போதே அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாகியுள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மற்ற தலைவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் ஆளாக சூறாவளி பிரசாரத்தை தொடங்க உள்ளார். நாளை (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிடும் மு.க.ஸ்டாலின் உடனடியாக நாளை மறுநாளே (20-ந்தேதி) பிரசாரத்தை தொடங்குகிறார்.

     


    மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை நடத்த உள்ளார். முதல் கட்ட பிரசாரத்தை திருவாரூரில் 20-ந்தேதி தொடங்கும் அவர் ஏப்ரல் 6-ந்தேதி நிறைவு செய்கிறார். ஒருநாள் கூட இடைவெளியின்றி அவர் 18 நாட்கள் தீவிர பிரசாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த 18 நாட்களில் மு.க.ஸ்டாலின் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 28 பாராளுமன்றத் தொகுதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார். அவரது முதல் கட்ட சுற்றுப்பயண விபரம் வருமாறு:-

    காலை 10 மணி- நாகை பாராளுமன்ற தொகுதி, திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- தஞ்சை பாராளுமன்ற தொகுதி, சட்டமன்ற தொகுதி மற்றும் தஞ்சை திலகர் திடலில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, தாத்தையங்கார்பேட்டை ரோடு, முசிறியில் பொதுக்கூட்டம்.

    காலை 10 மணி- சேலம் பாராளுமன்ற தொகுதி, சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி - தருமபுரி பாராளுமன்ற தொகுதி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டம்.

    காலை 10 மணி - தர்மபுரி பாராளுமன்ற தொகுதி, அரூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் அண்ணா சிலை அருகில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி- திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் பிரசார பொதுக்கூட்டம்.

    மாலை 5 மணி - வட சென்னை பாராளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி, இடம்: பெரம்பூர்.

    காலை 10 மணி- காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி, திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி, இடம்- திருக்குழுக்குன்றம்.

    மாலை 5 மணி - திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி, பூந்தமல்லி சட்ட மன்ற தொகுதி, இடம்-ஆவடி.

    மாலை 5 மணி - திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி.

    காலை 10 மணி- தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி - தேனி பாராளுமன்ற தொகுதி, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி.

    காலை 10 மணி - மதுரை பாராளுமன்ற தொகுதி, மாலை 5 மணி - விருதுநகர் பாராளுமன்ற தொகுதி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி.

    காலை 10 மணி - சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி, பரமக்குடி சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி, ஓசூர் சட்டமன்ற தொகுதி.

    காலை 10 மணி - வேலூர் பாராளுமன்ற தொகுதி, ஆம்பூர் சட்டமன்ற தொகுதி.

    மாலை 5 மணி- வேலூர் பாராளுமன்ற தொகுதி, குடியாத்தம் சட்டமன்ற தொகுதி.

    அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி காலை 10 மணி - அரக்கோணம் பாராளுமன்ற தெகுதி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி- தென் சென்னை பாராளுமன்ற தொகுதி.

    மாலை 4 மணி- நீலகிரி பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - திருப்பூர் பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - கோவை பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - ஈரோடு பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - கரூர் பாராளுமன்ற தொகுதி.

    மாலை 5 மணி - கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி.

    காலை 10 மணி - விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி.

    மாலை 5 மணி - ஆரணி பாராளுமன்றத் தொகுதி.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயண அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மு.க.ஸ்டாலின் 2-வது கட்ட பிரசாரத்தை 7-ந்தேதியே தொடங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் 16-ந்தேதி நிறைவுபெறுகிறது. எனவே மு.க.ஸ்டாலினின் 2-வது கட்ட பிரசாரத்துக்கு 7-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 10 நாட்களே அவகாசம் உள்ளது.

    இந்த 10 நாட்களில் மீத முள்ள பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல் தொகுதிகளில் ஆதரவு திரட்ட மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். #Parliamentelection #MKStalin

    உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்வதில் மோடி அரசு தீவிரம் காட்டுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Modigovernment #playingpolitics #jawansdeadbodies #MamataBanerjee
    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் கைப்பற்றியே தீர வேண்டும். மோடி அரசை வீழ்த்த வேண்டும் என நாம் அனைவரும் சபதமேற்க வேண்டும் என இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

    தற்போது மத்தியில் நடைபெறும் ஆட்சி கைகளில் ரத்தக்கறை படிந்த மோடி, அமித் ஷா என்ற அண்ணன் - தம்பிக்கு சொந்தமான ஆட்சியாக மாறிவிட்டது. இந்த ஆட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் எதுவும் மந்திரிகளுக்கு கூட தெரியாத வகையில் இந்த அண்ணன் - தம்பியின் முடிவாக ஆகிவிட்டது.

    புல்வாமாவில் தாக்குதல் நடக்கலாம் என உளவுத்துறையின் மூலம் மத்திய அரசுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், நமது வீரர்களின் உயிரை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    பாராளுமன்ற தேர்தலின்போது போர்போன்ற பதற்றநிலையை உருவாக்க வேண்டும் என்ற மனநிலையில் நமது வீரர்கள் சாகட்டும். அவர்களின் பிணங்களை வைத்து அரசியல் செய்யலாம் என மத்திய அரசு இந்த தாக்குதலுக்கு இடம் அளித்தது எனவும் மம்தா குற்றம்சாட்டினார். #Modigovernment #playingpolitics #jawansdeadbodies #MamataBanerjee
    கூட்டணி பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கொமதேக ஈஸ்வரன் கூறியுள்ளார். #Eswaran #Parliamentelection

    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தை பொருத்த வரை தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. கூட்டணி என இரு முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வரும் நிலையில் 3-வது கூட்டணியாக சில கட்சிகள் இணைந்து போட்டியிடவும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் கொ.ம.தே.க. எந்த அணியில் இடம் பெற உள்ளது? என்று மதில்மேல் பூனையாக உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கொ.ம.தே.க. பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

    இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் கொ.ம.தே.க. பாரதிய ஜனதா அணியுடன் கூட்டணி அமைக்குமா? அல்லது தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி அமையாதபட்சத்தில் கொ.ம.தே.க தனித்து போட்டியிட்டது. போட்டியிட்ட பகுதிகளில் கணிசமான அளவில் ஓட்டுகள் வாங்கினாலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

    இப்போது பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொ.ம.தே.க. நிலைப்பாடு என்ன? என்று கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் கேட்டபோது, “தேர்தல் கூட்டணி பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. கூட்டணி பற்றி எதுவும் கூறுவதற்கு இல்லை. இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார். #Eswaran #Parliamentelection

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் பாஜகவுடன் சேரவேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    புதுச்சேரி:

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று புதுச்சேரிக்கு வந்தார். தனது துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அவர்,  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:



    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விருப்பப்படி பாராளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைய அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி சேரவேண்டும்.

    தமிழகத்தின் நலனை கருதி அ.ம.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரனுக்கு மத்திய மந்திரி பதவி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP #RamdasAthawale #ADMK #AMMK
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். #amitshah #bjp #parliamentelection
    அகர்தலா:

    திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 300 தொகுதிகளில் வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எந்தவித சவாலும் இல்லை. நாங்கள் 300 இடங்களில் எளிதில் வெற்றி பெறுவோம்.

    மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 50 இடங்கள் வரை கைப்பற்றுவோம்.

    அனைத்து மாநில பா.ஜனதா தலைமையிடம் கருத்து அறிந்த பிறகு அதற்கு ஏற்ற வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.

    ராமர் கோவில் விவகாரத்தில் சட்டப்படி முடிவு மேற்கொள்ளப்படும். காங்கிரசின் மெகா கூட்டணியால் மக்களுக்கு எந்தவித பலனும் கிடைக்க போவதில்லை.

    இந்த தேர்தலில் வளர்ச்சி, பாதுகாப்பு, நாட்டின் சுயமரியாதை ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம்.

    இவ்வாறு அமித்ஷா கூறினார்.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 282 இடங்களை கைப்பற்றி இருந்தது. #amitshah #bjp #parliamentelection
    ×