search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coalition"

    • பாகிஸ்தானில் ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது
    • இந்த வருடம் அங்கு பொது தேர்தல் நடக்கவிருக்கிறது.

    கடந்த 2022ம் வருடம் பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தது.

    இதனையடுத்து அங்கு எதிர்கட்சி தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையில் புது அரசாங்கம் பொறுப்பேற்று கொண்டது. இந்த வருடம் அங்கு பொது தேர்தல் நடக்கவிருக்கிறது.

    இதற்கிடையே கடந்த மே 9 அன்று, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் அல் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடித்து, அரசு சொத்துக்கள் மற்றும் ராணுவ நிலைகள் தாக்கப்பட்டன. அங்கு ஒரு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில், இதனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெரீஃப் கூறியிருப்பதாவது:-

    தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவர் இம்ரான் கான், நாட்டின் தலைமையை கவிழ்க்கும் நோக்கில் செயல்பட்டார். அவர் கட்சியினர் நடத்திய வன்முறையால் மே 9, பாகிஸ்தான் வரலாற்றின் 'கருப்பு தினம்' என ஆகி விட்டது.

    கூட்டணி கட்சிகளின் ஆலோசனையுடன் ஆகஸ்ட் 12-ம் தேதிக்கு முன்னர் பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்படும். அடுத்த தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து காபந்து பிரதமர் குறித்த முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளை கைப்பற்றும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
    • எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை.

    சிவகாசி

    சிவகாசி பகுதியில் நடை பெற்ற பல்வேறு நிகழ்ச்சி யில் கலந்து கொள்ள வந்த விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டு நடை பெற்ற அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு ரூ.1,000 கொடுத் தும் அண்ணாமலையால் வெற்றி பெற முடியவில்லை. அவரை செந்தில்பாலாஜி தோற்கடித்தார். அதன் காரணத்தால் தான் தற்போது செந்தில் பாலாஜி பழிவாங்கப்பட்டுள்ளார்.

    செந்தில்பாலாஜி கைதுக்கு முழு காரணம் அமித்ஷாவும், அண்ணா மலையும் தான். ஓடிசா விபத்துக்கு பொறுப்பு ஏற்று ரெயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். வருகிற நாடாளு மன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி வைக்கும் பட்சத்தில் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக அண்ணாமலை நீடித்தால் தி.மு.க., காங்கிரஸ், கம்யூ னிஸ்டு கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளை எளிதாக கைப்பற்றும்.

    மதுரை எய்ம்ஸ் கல்லூரி தொடங்கப்பட்டு விட்டதாகவும், அதில் மாணவர்கள் படித்து வருவதாகவும் அமித்ஷா கூறியது மிகப்பெரிய பொய். நானும், மதுரை எம்.பி. வெங்கடேசும் சேர்ந்து எய்ம்சை தேடினோம் என் பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

    எய்ம்ஸ் கட்டுமான பணி தொடங்கவில்லை. இன்னும் டெண்டர் நிலையை கூட எட்டவில்லை என்பது தான் உண்மை. தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என்று அமித்ஷா பேசியதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் வழக்க மாக பேசுவது போல் இதுவும் பொய்யே. பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் இன்னும் 10 மாதங்களில் புதிய அரசு அமைந்தவுடன் தீர்க்கப் படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    பேட்டியின் போது சிவகாசி மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர்கள் ரவிசங்கர், கணேசன், நியாஸ், ஷேக் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
    • இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மக்களை காப்பாற்றுவது என்பது குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடந்து நடந்து வருகிறது.

    இதையொட்டி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    இதை தொடர்ந்து பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இயற்கை பேரிடரின்போது வெள்ளத்தில் சிக்கிய வர்களை மீட்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காண்பித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் கயிறு கள் பயன்படுத்தி எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும், நீரில் மூழ்கி மயக்க நிலை அடைந்தவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்தும் செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பவானி தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஓமலூரில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். #GKVasan #ADMK

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில் இரும்பாலை விரிவாக்க திட்டம், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. மாநில அரசை பொருத்தவரை முதல்வர் சேலம் மாவட்டத்தை பாலம் மாவட்டமாக மாற்றியுள்ளார்.

    பெங்களூர் பேருந்து நிலையம் போல் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு அடுக்கு பஸ் போர்ட் அறிவித்துள்ளார், விவசாய கால் நடை ஆராய்ச்சி நிலையம் 300 கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை ஏரிகளில் நிரப்பும் உபரி நீர் திட்டம் கொண்டு வர ஆலோசனைகள் பெற்று வருகிறார்.

    தற்போது மத்திய மாநில அரசுகள் இணக்கமான ஒத்த கருத்துடைய அரசாக உள்ளது. மத்தியில் உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

    மாநில அரசை பொருத்த வரையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சாமானியர்களுடன் பழகி வருவதால் அனைத்து தரப்பினர்களின் எண்ணங்களை உணர்ந்து அனைத்து துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்,

    சேலம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்ட மன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். #GKVasan #ADMK

    டெல்லியில் மொத்தம் உள்ள 7 பாராளுமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட தயக்கம் காட்டுவதால் மீண்டும் ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். #congress #aap #parliamentelection

    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு மே மாதம் 12-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் விருப்பம் தெரிவித்தார். ஆனால் முதலில் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

    இதனால் அதிருப்தி அடைந்த கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். அதோடு வேட்பாளர்கள் பெயரையும் வெளியிட்டார்.

    இந்த நிலையில் தனித்து போட்டியிட்டால் நிச்சயமாக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றி பெற இயலாது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் உணர்ந்தார். எனவே தனித்து போட்டியிட அவருக்கு தயக்கம் ஏற்பட்டது.


    மீண்டும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாமா? என்று ஆலோசித்து வருகிறார். இதற்காக அவர் சக்தி செயலி மூலம் டெல்லியில் உள்ள சுமார் 52 ஆயிரம் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    காங்கிரஸ் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது நல்லது என்று கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்ஆத்மியுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள் மட்டும் விட்டுக் கொடுக்க ஆம் ஆத்மி தலைவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் தரப்பில் 4 தொகுதிகள் கேட்கப்படுகிறது. இதனால் ஆம்ஆத்மி - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியாக உள்ளது.

    இதற்கிடையே காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளில் போட்டியிடவும் ஒரு தொகுதியை பொது வேட்பாளருக்கு கொடுக்கலாம் என்றும் சரத்பவார் யோசனை தெரிவித்துள்ளார். இதுபற்றியும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

    இந்த மாத இறுதி வரை டெல்லியில் வேட்பாளர்களை அறிவிக்க அவகாசம் உள்ளது. எனவே இரு கட்சி தலைவர்களும் நிதானமாக முயற்சித்து வருகிறார்கள். #congress #aap #parliamentelection

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுமக்களின் கருத்தை கேட்டிருக்கிறார். #ParliamentElection #RahulGandhi #AamAadmi
    புதுடெல்லி:

    டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி விரும்பியது.

    ஆனால் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். வேட்பாளர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார்.



    இதற்கிடையே ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் சார்பில் சில மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். பஞ்சாப், அரியானா உள்பட மேலும் சில மாநிலங்களிலும் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தை அந்த தலைவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

    இதையடுத்து ஆம்ஆத்மி கட்சியும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுடெல்லி மற்றும் சாந்தினிசவுக் உள்பட 3 தொகுதிகளை மட்டுமே விட்டுக்கொடுக்க இயலும் ஆம்ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் காங்கிரஸ் சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளை மட்டுமே ஆம்ஆத்மிக்கு கொடுக்க பேச்சு நடந்து வருகிறது. ஆனால் இதை ஆம்ஆத்மி ஏற்குமா? என்பது தெரியவில்லை.

    இதற்கிடையே டெல்லியில் காங்கிரசும், ஆம்ஆத்மியும் தலா 3 தொகுதிகளை எடுத்துக்கொண்டு ஒரு தொகுதியை திரிணாமுல் காங்கிரஸ் அல்லது தேசியவாத காங்கிரசுக்கு கொடுக்க புதிய சமரச திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரசும், ஆம்ஆத்மியும் ஆலோசித்து வருகின்றன.

    டெல்லியில் மே மாதம் 12-ந்தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இந்த மாதம் இறுதி வரை பேச்சு நடத்தி தொகுதி உடன்பாடு செய்து கொள்ள அவகாசம் இருக்கிறது.

    இதனால் இரு கட்சி தலைவர்களும் நிதானமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் உள்ள பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் காங்கிரசின் திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மியுடன் சேர்ந்தால் நல்லதா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலியை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் முடிவுக்கு ஏற்ப ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி தீர்மானிக்க ராகுல் திட்டமிட்டுள்ளார். #ParliamentElection #RahulGandhi #AamAadmi

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். #DMK #MKStalin
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 இடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    சட்டசபையில் உள்ள மற்ற கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டி உள்ளது. ம.தி.மு.க. 2 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளும், கம்யூனிஸ்டு கட்சிகள் 3 தொகுதிகளும் கேட்பதாக தெரிகிறது.

    தே.மு.தி.க. எந்த கூட்டணியில் சேரும் என்பது முடிவாகவில்லை. எனவே தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுக்கும் முயற்சியும் நடந்து வருவதாக தெரிகிறது.

    இந்தநிலையில் இன்று தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த ஆலோசனையின் போது முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவும் உடன் இருந்தார். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து இதில் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

    கோவையில் இன்று மாலை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மாநாடு முடிந்து மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #MKStalin
    கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ParliamentElection
    புதுடெல்லி:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார்.



    ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு தமிழகத்தில் பிரசாரம் செய்ய அழைப்பு விடுத்தார். சுமார் அரைமணி நேர சந்திப்பிற்கு பின் கமல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ‘மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதல் எங்களுக்கு ஆதரவு அளித்து வருபவர் கெஜ்ரிவால். இதை அவரிடம் தேர்தல் சமயத்தில் நினைவூட்ட வந்தேன். இந்தமுறை ஆம் ஆத்மி தமிழகத்தில் போட்டியிடவில்லை. இதனால், அவர்கள் சார்பில் போட்டியிடும் எங்களுக்கு அந்த கட்சி ஆதரவு அளிக்கும்.

    இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என்றும் நட்பு மட்டுமே என்றும் கூற முடியாது. காரணம் எங்களுக்கு இடையில் வளர்ந்த நட்பே அரசியலினால் தான். எங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு முதல் குரல்கொடுத்து ஆரம்பித்தவரே அவர் தான். அவருக்கு நேரம் கிடைக்கும் போது தமிழகத்திற்கு வந்து எங்களுக்கு பிரச்சாரம் செய்ய அழைப்பு விடுத்தோம்.’

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தலைமையில் கூட்டணிகள் அமைந்தது போல கமலின் கட்சியும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

    இதுகுறித்து கமல் கூறும்போது, ‘தேவைப்பட்டால் தனித்து போட்டியிடுவோம். கூட்டணிக்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. எல்லோருடனும் கைகுலுக்கி விட முடியாது என்பதில் திண்ணமாக இருக்கிறோம். மக்களுக்கு உணவு பரிமாறும்போது எங்கள் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பேராசை தான் காரணம். எங்கள் அழுத்தமான முடிவை டெல்லி முதல்வர் பாராட்டினார்.’ என்றார்.

    நேற்று பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக எழுந்துள்ள புகார் மீதும் கமல்ஹாசன் கருத்து தெரிவித்தார். ‘அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு துணையாக, எங்கள் நாட்டைப் பாதுகாக்கும் படையினர் வரமாட்டார்கள் என நம்புகிறேன்.

    எனவே, அவர்கள் நாட்டை காப்பதற்கான கடமையை செய்துள்ளார்கள். ஒரு பெரிய நாடு தன்னைக் காத்துக்கொள்ள என்ன செய்யுமோ, அதையெல்லாம் அவர்கள் செய்து இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்.

    பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்து பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் டெல்லி தலைமையை சந்தித்து பேசிவிட்டு வந்ததாக செய்திகள் வெளியானது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சங்கடத்தை உருவாக்கியது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    ‘மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஏற்கெனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார். அப்போது தமிழக தேர்தல் குறித்து கமல் பேசியுள்ளார்.

    அதற்கு பிரகாஷ் காரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். தமிழகத்தில் தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம்.

    இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்து விட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #ParliamentElection


    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிக்காக தே.மு.தி.க.வுடன் பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #DMDK
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகளின் கூடாரத்தை இந்திய விமானப்படை அழித்துள்ளது சரியான பதிலடி. வீரம், திறமை நிறைந்த விமானப்படைக்கு ஒரு இந்தியனாக எனது நன்றி.

    ரஜினியுடன் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன். இதற்கு போன் வசதியும், மனதும் உண்டு.



    தே.மு.தி.க.வுடன் கூட்டணிக்காக பேச வாய்ப்பு இருந்தால் பேசுவோம். கூட்டணி குறித்து சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியோடுதான் போட்டியிடுவோம். தேவைப்பட்டால் தான் தனித்து போட்டி. அதுக்கும் தயாராக இருக்கிறோம். ஆனால் கருத்து வேறுபாடு உடையவர்களுடன் கூட்டணி கிடையாது.

    21 தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட தயாராக இருக்கிறோம். ரஜினி எங்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பாரா? அல்லது சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு அளிப்பாரா? என்று தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். பின்னர் ஆதரவு குறித்து பேசுவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இந்த மாதம் 28-ந்தேதி முதல் மார்ச் 7-ந்தேதி வரை விருப்ப மனு படிவம் வழங்கப்படும்.

    இதில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் மட்டும் இல்லாது உறுப்பினர் அல்லாதவர்கள், சிறந்த எம்.பி. ஆக வரவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் விருப்ப மனு அளிக்கலாம். விருப்ப மனுவை ரூ.10 ஆயிரம் கட்டி பெற்றுக் கொள்ளலாம்.

    அரசியலில் விமர்சனம் இயல்பு. கூட்டணி வைப்பது இயல்பு. ஆனால் கருத்து ஒத்துப்போவது என்பது மிக முக்கியம்.

    ‘பி டீம்’ என்பதற்கு சரியான பதிலடியாக மீண்டும் கெட்ட வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். செயலின் மூலம் பதிலடி இருக்கும்.

    அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணி பணத்திற்காகத்தான் என்று எழும் விமர்சனத்திற்கு மக்களின் எண்ணம் எதுவோ அதுவே எனது எண்ணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #DMDK

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GKVasan
    சிவகங்கை:

    சிவகங்கையில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டு விட்டது. த.மா.கா ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும். மேலும் மக்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்துகள் கேட்கப்பட்டு இன்னும் 2 நாட்களில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

    த.மா.கா பலம் பெற வேண்டும். நாடு வலிமையடைய வேண்டும், மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் கூட்டணி அமைக்கப்படும்.

    நம்முடைய நாட்டை பாதுகாக்கும் வீரர்களை கோழைத்தனமாக தாக்குதல் நடத்தி கொலை செய்தது பயங்கரவாதத்தின் உச்சக்கட்டம். இதற்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிரான மன நிலையில் உள்ளதை காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #GKVasan
    மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran

    சேலம்:

    சேலம் மாவட்டம் கருமந்துறையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஒருவரது இல்ல திருமண விழாவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    எங்கள் புரட்சி பயணத்திற்கு எத்தனை பிரச்சினைகள் வருகின்றன. சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடவா போகிறது. இன்று ஆட்சியில் இருப்பவர்கள் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட, அவரது படத்தை திறக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களுடன் கூட்டணி வைக்கின்றனர்.

    ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக தனித்து நின்று தான் 41 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 80 சதவீத இளைஞர்கள் நம்மோடு இருக்கிறார்கள். மக்களோடு நாம் இருப்பதால் கூட்டணி தேவையில்லை. பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மகத்தான வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலுடன் நிறைய கட்சிகள் காணாமல் போகும்.

    தொடர்ந்து வாழப்பாடியில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், பாராளுமன்ற தேர்தலில் எந்த தேசிய கட்சியுடனும் அ.ம.மு.க. கூட்டணி இல்லை. 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எப்படி எங்களது கவனம் உள்ளதோ? அதே போல தான் 21 சட்டமன்ற தொகுதிகளிலும் எங்களது கவனம் இருக்கும். 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க பார்க்கிறார்கள் என்றார். #TTVDhinakaran

    அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன்? என்பது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அ.திமு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி பாட்டாளி மக்கள் கட்சிதான். பாராளுமன்ற மக்களவைக்கானத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு திராவிட கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக இருந்தது.

    அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011-ம் ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய வினாக்கள் எழுந்தன.

    2011-ம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளின் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன். மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

    அடுத்து அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடி பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக்கட்சி இருக்கும்? என்ற வினாவுக்கு கிடைக்கும் விடைதான், யாருடன் கூட்டணி என்ற வினாவுக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன்.

    அ.தி.மு.க. மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் இல்லை என்று பதிலளிக்க முடியாது. ஆனால் கல்வித்துறை சீர்த்திருத்தங்கள் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த பல்வேறு யோசனைகளை அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்டது.



    7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரைத்தது. பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது. கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக் கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை கொள்கை அளவில் கைவிட்டது.

    விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது என பா.ம.க. சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அ.தி.மு.க. அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி உள்ளது.

    அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவற்கும், அ.தி.மு.க. அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் வி‌ஷயத்தில் இணைந்து செயல்படவும் அ.தி.மு.க.வும்., பா.ம.க.,வும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திற்கு பல நன்மைகளை பெற்றுத்தரும் என்று பா.ம.க. நம்புகிறது. கூட்டணி வி‌ஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்துகொண்டாலும் கூட, அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    அதன்படி 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்த கூட்டணியில் இணையும் அனைத்து கட்சிகளின் வெற்றிக்காக மிகக் கடுமையாக உழைக்கவும் பா.ம.க. தீர்மானித்துள்ளது.

    தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பா.ம.க. பாடுபடும். அதேநேரத்தில் பா.ம.க. அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது.

    கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பா.ம.க. விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #LSPolls #ADMK #PMKConstituencies

    ×