search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election GK Vasan"

    ஓமலூரில் அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். #GKVasan #ADMK

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தை பொருத்த வரையில் இரும்பாலை விரிவாக்க திட்டம், ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டு வந்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதாக மத்திய அரசு உறுதி கொடுத்துள்ளது. மாநில அரசை பொருத்தவரை முதல்வர் சேலம் மாவட்டத்தை பாலம் மாவட்டமாக மாற்றியுள்ளார்.

    பெங்களூர் பேருந்து நிலையம் போல் தமிழகத்தில் முதன் முதலாக இரண்டு அடுக்கு பஸ் போர்ட் அறிவித்துள்ளார், விவசாய கால் நடை ஆராய்ச்சி நிலையம் 300 கோடி செலவில் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரை ஏரிகளில் நிரப்பும் உபரி நீர் திட்டம் கொண்டு வர ஆலோசனைகள் பெற்று வருகிறார்.

    தற்போது மத்திய மாநில அரசுகள் இணக்கமான ஒத்த கருத்துடைய அரசாக உள்ளது. மத்தியில் உள்ள அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றும்.

    மாநில அரசை பொருத்த வரையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் சாமானியர்களுடன் பழகி வருவதால் அனைத்து தரப்பினர்களின் எண்ணங்களை உணர்ந்து அனைத்து துறைகளிலும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்,

    சேலம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும், தமிழகத்தில் 40 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்ட மன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் கடுமையாக சரிவை சந்தித்து வருகிறது. இதனால் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். #GKVasan #ADMK

    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் தமாகா தேர்தலை சந்திக்கும் என்று ஜிகே வாசன் கூறியுள்ளார். #GKVasan

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறியதாவது-

    ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். கோவை மாவட்டத்தில் முக்கிய தொழிலான தென்னை விவசாயம் வெள்ளை ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மத்திய அரசு பட்ஜெட்டில் சிறு,குறு விவசாயிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.6 ஆயிரம் தொகையை உயர்த்திவழங்கவேண்டும், சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்கவேண்டும். பொள்ளாச்சிக்கு கூடுதலாக ரெயில்களை இயக்கவேண்டும்.

    2017-ம் ஆண்டில் கோவை மாவட்டத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டாலும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என புகார் உள்ளது. விடுபட்டவர்களுக்கு நிவாரண தொகை வழங்கவேண்டும். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சேமிக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கவேண்டும். பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் தென்னைநார் தொழிற்சாலைகள் அதிகமாக இயங்கிவருகின்றன. வறட்சியால் தற்போது மூலப்பொருட்கள் கிடைக்காமல் தென்னைநார் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளது.

    எனவே தென்னை நார் உற்பத்தியாளர்கள் பெற்ற கடனுக்கான வட்டிகளை தள்ளுபடிசெய்யவேண்டும். வால்பாறை தோட்ட தொழிலாளர்களுக்கு தினசரி கூலியை ரூ.500 ஆக உயர்த்தி வழங்கவேண்டும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியாக இருந்தாலும் கூட்டணி அமைத்துத்தான் தேர்தலை சந்திக்கும் நிலை உள்ளது. ஆகவே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தான் தேர்தலை சந்திக்கும்.

    ஆனால், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை தொண்டர்கள் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும். அது மக்கள் விரும்பும் கட்சியாக இருக்கும். அ.தி.மு.க. அரசு தனது செயல்பாட்டை இன்னும் உயர்த்தவேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார். #GKVasan

    ×