என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர்"

    • பெட்ரோல் பங்கு மீது சமூக விரோதிகள் குண்டு வீச்சு.
    • குண்டு வீச்சு மூலம் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது- டீலர்கள் சங்கம்.

    மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்க் மீது இரண்டு நாட்களுக்கு முன்னதாக குண்டு வீசப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மணிப்பூர் பள்ளத்தாக்குப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் காலவரையின்றி மூடப்படும் என பெட்ரோலிய டீலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக டீலர்கள் சங்கம் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில் "பெட்ரோல் பங்க் மற்றும் டீலர்களின் பாதுகாப்பு விசயத்தில் மாநில அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வியாழக்கிழமை இரவு நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு சம்பவம் மூலம், இன்னும் தீவிரமான மிரட்டல்களை எதிர்கொண்டு வருவது தெளிவாகிறது.

    உடனடி கவனமும் சுமுகமான தீர்வும் வழங்கப்படும் வரை, பள்ளத்தாக்கு பகுதிகளிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளும் இன்று முதல் காலவரையின்றி மூடுவதற்கு ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடந்தால், அரசாங்கம் பொறுப்புடைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

    கடந்த வியாழக்கிழமை அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் மொய்ராங் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மீது குண்டு வீசினர். ஆனால், அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    • வன்முறையில் குறைந்தது 260 பேர் கொல்லப்பட்டனர்
    • மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறையில் உள்ளது

    மே 2023 முதல் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் இடம்பெயர்ந்த 10,000 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என மணிப்பூர் தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் தெரிவித்துள்ளார்.

    2025-26 மணிப்பூர் பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ரூ. 573 கோடி மதிப்பிலான மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ், இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இதுவரை, 2,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,000 மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 4000 வீடுகள் மீள்குடியேற்றத்திற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. குடும்பங்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, மாநில அரசு, மாநில காவல்துறை, மத்திய ஆயுதக் காவல் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் ராணுவம் ஆகியவை இணைந்து கிராமங்களில் பாதுகாப்புச் சாவடிகளை (security posts) அமைத்து வருவதாகவும் கோயல் கூறினார்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் மணிப்பூரில் குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல குடும்பங்கள் வீடற்றவர்களாக மாறினர். இந்தாண்டு பிப்ரவரியில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில் வன்முறைகள் கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. 

    • இம்பாலில் இருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் செல்லும்போது தாக்குதல்.
    • காயம் அடைந்த மூன்று வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்த நிலையில், 3 பேர் காயம் அடைந்தனர்.

    வீரர்கள் இம்பாலில் இருநது பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆயுதமேந்திய ஒரு கும்பல் திடீரென வானத்தின் மீது தாக்கதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் மாலை 6 மணிக்கு நம்போல் சபால் லெய்கை என்ற இடத்தில் நடந்துள்ளது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயம் அடைந்த வீரர்கள் போலீஸ் மற்றும் பொதுமக்கள் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட சண்டை, வன்முறையாக வெடித்தது. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் மணிப்பூரில் இன்னும் முழுமையாக அமைதி திரும்பவில்லை. மணிப்பூர் கலவரத்திற்குப் பிறகு கடந்த வாரம் முதன்முறையாக பிரதமர் மோடி, அம்மாநிலத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூரில் தற்போது ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    • இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார்.
    • மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள மோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர்.

    வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்நிலையில், மணிப்பூரில் பிரதமர் மோடியின் கட்அவுட்டை சேதப்படுத்தியதாக 2 இளைஞர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து சூரசந்த்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையுடன் பயங்கர மோதலில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் அதிகரித்ததால் இரு இளைஞர்களும் விடுவிக்கப்பட்டனர். இளைஞர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் நிலைமை சீரானதாக போலீசார் விளக்கம் அளித்தனர். 

    • சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
    • கனமழையால் சாலை மார்க்கமாக செல்ல முடிவு செய்யப்பட்டது.

    பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு விமானத்தில் சென்றார். அங்கிருந்து சூரசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கனமழை பெய்த காரணத்தால் ஹெலிகாப்டரில் செல்வது பாதுகாப்பானது அல்ல என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால், சூரசந்த்பூரில் மக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என பிரதமர் மோடி திட்டவட்டாக தெரிவித்துள்ளார். இதனால் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டது. அதேவேளையில் சாலை வழியாக சென்றால் ஒன்றரை மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை மணி நேரம் ஆனாலும் பரவாயில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதனால் சாலை வழியாக பிரதமர் மோடி சூரசந்த்பூர் சென்றார். அவருக்கு சாலையின் இரு பக்கமும் மக்கள் அதிக அளவில் திரண்டு வரவேற்று அளித்தனர். மேலும், பேரணி நடைபெற்ற இடத்திலும் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மக்கள் திரண்டனர்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில் "மணிப்பூர் மக்களின் உறுதிக்கு சல்யூட். கனமழை பெய்த போதிலும் கூட, மிகப்பெரிய அளவில் திரண்டு வந்துள்ளனர். உங்களுடைய அன்புக்காக உங்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ஹெலிகாப்டர் கனமழை காரணமாக இங்கு வர முடியவில்லை. இதனால் நான் சாலை மார்க்கமாக வர முடிவு செய்துள்ளேன். இன்று சாலையில் நான் கண்ட காட்சிகளைப் பார்க்கும்போது, ஹெலிகாப்டர் மூலம் இல்லாமல், நான் சாலை வழியாக வந்தது நல்லது என்று என் மனம் சொல்கிறது.

    வழியெங்கும் மூவர்ணக் கொடியைக் கைகளில் ஏந்தியபடி அனைவரும் எனக்கு அன்பும் பாசமும் அளித்த இந்த தருணத்தை என் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மணிப்பூர் மக்களுக்கு நான் தலைவணங்கி வணக்கம் செலுத்துகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
    • மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநிலத்திற்கு சென்றுள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * 21 ஆம் நூற்றாண்டு வடகிழக்குக்கு சொந்தமானது.

    * வாய்ப்புகளின் நகரம் இம்பால். இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை துரிதப்படுத்தும் இடங்களில் ஒன்றாக இதைப் பார்க்கிறேன்

    * மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் மணிப்பூர் பெண்கள் முன்னணியில் உள்ளனர்

    * மணிப்பூரில் எந்த வகையான வன்முறையும் துரதிர்ஷ்டவசமானது

    * மணிப்பூரை அமைதி, வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும்

    * ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில், மணிப்பூரின் வீர மகன்கள் முக்கிய பங்கு வகித்தனர்

    * நேபாளத்தின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றதற்கு சுஷிலா கார்கிக்கு வாழ்த்துகள். இது பெண்கள் அதிகாரமளிப்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

    * மணிப்பூரில் வெள்ளப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அசு பல திட்டங்களில் செயல்படுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.
    • மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

    மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். வன்முறை ஏற்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் செல்ல தயக்கம் காட்டுவது ஏன்? என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தன.

    இந்த நிலையில் 8500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மற்றும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கான இன்று மணிப்பூர் சென்றார். சூரசந்த்பூரில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    * மணிப்பூர் வீர் நிறைந்த பூமி.

    * இம்பாலில் இருந்து சாலை வழியாக சூரசந்த்பூருக்குச் செல்லும் வழியில் எனக்குக் கிடைத்த அன்பை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

    * இன்று திறக்கப்பட்ட திட்டங்கள் மணிப்பூரில் உள்கட்டமைப்பு, சுகாதாரம் அடிப்படையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்.

    * 2014 முதல், மணிப்பூரில் இணைப்பை மேம்படுத்துவதற்கு நான் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

    * இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். வளர்ச்சியின் பலன்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம்.

    * மணிப்பூரில் ரெயில்வே, சாலை இணைப்பு திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரித்துள்ளது:

    * வளர்ச்சிக்கு அமைதி மிக முக்கியம்

    * உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அனைத்து அமைப்புகளும் அமைதிப் பாதையில் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

    * வன்முறை துரதிர்ஷ்டவசமானது, இடம்பெயர்ந்த மக்களிடம் பேசினேன், மணிப்பூர் புதிய விடியலை நோக்கிப் பார்க்கிறது என்று சொல்லலாம்.

    * மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். நான் இந்த மாநில மக்களுடன் இருக்கிறேன்.

    * மத்திய அரசின் அமைதிக்கான தொடர்ச்சியான முயற்சிகள் மலைப்பகுதி மற்றும் பள்ளத்தாக்கு குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தன.

    * முன்னதாக, டெல்லியில் எடுக்கப்பட்ட முடிவுகள் மணிப்பூரை எட்ட பல தசாப்தங்கள் ஆனது, ஆனால் இப்போது மணிப்பூர் நாட்டின் மற்ற பகுதிகளுடன் சேர்ந்து முன்னேறி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • நீங்கள் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.
    • உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு 2 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். 

    இந்நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,

    "மணிப்பூரில் உங்கள் 3 மணி நேர வருகை இரக்கம் அல்ல. இது கேலிக்கூத்து, அடையாளவாதம் மற்றும் காயமடைந்த மக்களுக்கு ஒரு பெரிய அவமானம்.

    இன்று இம்பால் மற்றும் சூரசந்த்பூரில் உங்கள் ரோடு ஷோ என்று அழைக்கப்படுவது, நிவாரண முகாம்களில் உள்ள மக்களின் அழுகையைக் கேட்பதிலிருந்து கோழைத்தனமாக தப்பிப்பதைத் தவிர வேறில்லை!

    864 நாட்கள் தொடரும் வன்முறையில் 300 உயிர்களை இழந்தோம். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 67,000 இடம்பெயர்ந்தனர்.

    நீங்களோ 46 வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டீர்கள், ஆனால் உங்கள் சொந்த குடிமக்களுடன் அனுதாபத்துடன் இரண்டு வார்த்தைகள் பேச ஒரு முறை கூட செல்லவில்லை.

    மணிப்பூருக்கு உங்கள் கடைசி வருகை ஜனவரி 2022. அதுவும் தேர்தலுக்காக!. உங்கள் "இரட்டை இயந்திரம்" மணிப்பூரின் அப்பாவி வாழ்க்கையை புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கியுள்ளது.

    நீங்களும் அமித் ஷாவும் காட்டிய திறமையின்மை மற்றும் மக்களுக்கு இழைத்த துரோகம் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதன் மூலம் விசாரணையில்லாமல் மூடி மறைக்கப்பட்டது.

    வன்முறை இன்னும் தொடர்கிறது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு பாஜகவுக்கு இருந்தது. இப்போது மத்திய அரசு மீண்டும் தடுமாறி வருகிறது.

    மறக்க வேண்டாம், தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை கண்காணிப்புக்கு உங்கள் அரசுதான் பொறுப்பு.

    தற்போது செல்லும் வழியில் பெட்ரோல் நிரப்புவதற்கான நிறுத்ததிற்கு நிற்பது போல் மணிப்பூர் வந்திருப்பது உங்கள் வருத்தத்தை காட்டவில்லை. குறைந்தபட்சம் இது குற்றவுணர்ச்சியின் வெளிப்பாடு கூட இல்லை.

    நீங்கள் உங்களுக்காக ஒரு மகத்தான வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்கிறீர்கள். அடிப்படை அரசியலமைப்பு பொறுப்புகளை நீங்கள் கைவிட்டதால் இன்னும் துன்பப்படுபவர்களின் காயங்களுக்கு இது ஒரு கொடூரமான அடியாகும்!" என்று தெரிவித்துள்ளார். 

    • பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை.
    • வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதன் முதலில் கம்ப்யூட்டர் தொடர்பான பாலிசியை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. மேலும் ஐ.டி. பாலிசியை கொண்டு வந்தார்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள துணை ஜனாதிபதிக்கு ஏற்கனவே வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளோம். அவர் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட வேண்டும். ஜனநாயகத்தை காப்பவராக குறிப்பாக தமிழ்நாடு உரிமைகளை ஜனநாயகத்தை பாதுகாக்கும் மிகப்பெரிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர் சிறப்பாக செயல்பட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

    கூட்டணி பற்றி பேசுவதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அவருடைய கட்சி உடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது அவருக்கு பாதுகாப்பாக இருக்கும்.

    மணிப்பூரில் 2027-இல் தேர்தல் வருகிறது. அது பிரதமருக்கு மணிப்பூரை நினைவுபடுத்துகிறது. பலமுறை பாராளுமன்றத்தில் மணிப்பூர் பிரச்சனை குறித்து பேசிய பின்பும் போகவில்லை. இப்பொழுது தேர்தல் வர இருப்பதால் பிரதமர் மணிப்பூர் செல்கிறார்.

    வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார்.
    • மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்வதாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவை பகிர்ந்து திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

    அவரது பதிவில், "இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருந்த போதிலும், இந்தியப் பிரதமர் இறுதியாக மணிப்பூருக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பதை நான் கவனிக்கிறேன். இரக்கம் வெளிப்படையாகத் தோல்வியடைந்துள்ளது, ஆனால் 2027 தேர்தல் ஏற்பாடுகள் அவருக்கு மணிப்பூரை நினைவூட்டுவதில் வெற்றி பெற்றுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.

    • மணிப்பூரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இனக்கலவரம் நடந்தது.
    • மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    இதனையடுத்து, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். இங்கிருந்து சாலை மார்க்கமாக சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் சென்றுள்ளார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

    • மிசோரம் தலைநகர் முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
    • பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    வடகிழக்கு மாநிலமான மிசோரமிற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொண்டார். மிசோரம் தலைநகரான ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    மிசோரம் தலைநகரை முதல் முறையாக இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கும் ரூ.8,070 கோடிக்கு மேல் மதிப்புள்ள பைராபி-சாய்ராங் புதிய ரெயில் பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதனையடுத்து, மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக இன்று பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். மணிப்பூரில் ரூ.8,500 கோடிக்கு மேல் மதிப்புள்ள அவர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி செல்வதால் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 

    ×