என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Riots"

    • நேபாள இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர்.
    • நேபாள இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

    நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்நாட்டு ஜென் z இளைஞர்கள் செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதனால் போராட்டம் கலவரமாக மாறியது.

    இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.

    இதற்கிடையில், இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

    இந்நிலையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 19 பேர் பலியான சம்பவத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் ஆகியோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று ஜென் இசட் குழு வலியுறுத்தி உள்ளது.

    ஆனால் துப்பாக்கி சூட்டுக்கு தான் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று கே.பி.சர்மா ஒலி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

    ஊழல் குற்றச்சாட்டுகள், அரசியல் தலைவர்களுடைய வாரிசுகளின் ஆடம்பர வாழ்க்கை ஆகியவை நேபாளத்தில் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன.

    இதற்கிடையே அண்மையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட அந்நாட்டு ஜென் z இளைஞர்களை மேலும் கோபப்படுத்தியது. இதனால் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி போராட்டம் வெடித்தது.

    இளைஞர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போராட்டம் கலவரமாக மாறியது. 19 பேர் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து செப்டம்பர் 9 அன்று சமூக வலைத்தளங்களுக்கு தடை நீக்கப்பட்டது. ஆனால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். எனவே அன்றைய தினமே பிரதமர் சர்மா ஒலி பதவி விலகினார்.

    ஒட்டுமொத்தமாக கலவரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. 159 போராட்டக்காரர்கள், 10 கைதிகள், 3 போலீஸ் அதிகாரிகள் இதில் அடங்குவர்.

    தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை, இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.

    நீதிபதியாக இருந்தபோது ஊழலுக்கு எதிராக பல உத்தரவுகளை பிறப்பித்த சுசிலாவுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.

    இந்நிலையில் 2 நாட்கள் கழித்து இன்று, இடைக்கால பிரதமராக சுசிலா கார்கி அதிகாரபூர்வமாக கடமைகளை தொடங்கினார்.

    முதலாவதாக போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 19 பேருக்கு தியாகி அந்தஸ்தும், அவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

    முன்னதாக லாய்ன்சவுரில் அமைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தி விட்டு உள்துறை அமைச்சக கட்டிட அலுவலத்தில் தனது பிரதமர் கடமைகளை தொடங்கிய பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    பிரதமர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அலுவலகம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே கலவரத்தில் காயமடைந்த 134 போராட்டக்காரர்களுக்கும், 57 காவல்துறையினருக்குமான மருத்துவ செலவுகளை அரசு ஏற்றுள்ளது.  

    • பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர்.
    • நேபாள ராணுவம் அவர்களை மீட்டது.

    கலவரத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் இந்தியர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் ஆவர். நேற்று பசுபதிநாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து பேருந்தில் திரும்பிகொண்டிருந்த அவர்களை சோனாலி அருகே கும்பல் ஒன்று வழிமறித்தது.

    முதலில் மர்ம நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசி, பின்னர் பயணிகளின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடித்தனர். இதில் 8 பேர் காயமடைந்தனர்.

    சிறிது நேரத்திற்குப் பிறகு நேபாள ராணுவம் அவர்களை மீட்டு, இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தது.

    இந்திய அதிகாரிகள் அனைவரையும் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளனர்.

    • நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன்.
    • இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்.

    நேபாளத்தில் சமூக ஊடக தடைக்கு எதிராக செப்டம்பர் 8 இல் வெடித்த இளைஞர்களின் போராட்டம், ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறி அந்நாட்டு ஆட்சியை கவிழ்த்துள்ளது.

    அடுத்த நாளே சர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இது வழிவகுத்தது. அவரை தொடர்ந்து ஜனாதிபதியும் ராஜினாமா செய்தார்.

    சர்மா ஒலி தற்போது காத்மாண்டுவின் வடக்கே உள்ள சிவுபுரி ராணுவ முகாமில் தங்கியுள்ளார்.

    இந்நிலையில் பதவி விலகிய பின் அவர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியுள்ளார். அதில் தனது பதவி இழப்புக்கு இந்தியா மீதான தனது நிலைப்பாடே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் பிறந்ததை எதிர்த்ததால் தான் ஆட்சியை இழந்ததாகக் அவர் தெரிவித்துள்ளார். 

     மேலும், இந்தியா எல்லையில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதிகளான லிபுலேக், காலாபனி மற்றும் லிம்பியாதுரா ஆகியவை நேபாளத்திற்கு சொந்தமானவை என்று தான் வலியுறுத்தியதும் தனது பதவி இழப்புக்கு ஒரு காரணம் என்று அவர் தெரிவித்தார்.

    மேலும் அவரது அறிக்கையில், "நான் சற்று பிடிவாத குணம் கொண்டவன். இல்லையென்றால், இந்த சவால்களுக்கு மத்தியில் நான் எப்போதோ விட்டுக்கொடுத்திருப்பேன். சமூக ஊடக நிறுவனங்கள் எங்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    ராமர் நேபாளத்தில் தான் பிறந்தார், இந்தியாவில் அல்ல என்று நான் கூறினேன். இந்தப் பிடிவாதங்களில் நான் சமரசம் செய்திருந்தால், எனக்குப் பல நன்மைகள் கிடைத்திருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே போராட்டக்காரர்கள் பல அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைத்ததுடன், நாடாளுமன்றம், பிரதமர் மற்றும் அதிபர் மாளிகைகளையும் சூறையாடினர்.

    வன்முறையில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 13,500-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பி ஓடியதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது. 

    • நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
    • பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.

    அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.

    இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.

    ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.

    அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நேபாளில் பிரதமர், ஜனாதிபதி பதவி விலகியதை அடுத்து போராட்டம் தணிந்தது.

    நாடு முழுவதும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது. 

    • பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.
    • அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.

    இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.

    ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு செவ்வாய்க்கிழமை சரிந்தது.

    அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

     இந்த சூழலில், நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 3 பேர் முன்னிலையில் உள்ளனர்.

     அவர்களில் முதலாவது, காத்மாண்டு மேயர் மற்றும் பிரபல ராப் பாடகர் பாலேந்திர ஷா. அவருக்கு சமூக ஊடகங்களில் இளைஞர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

    அடுத்தது சுமனா ஸ்ரேஸ்தா (40). அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) எம்பிஏ பட்டம் பெற்ற இவர், நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக முன்பு பணியாற்றினார். நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பற்றிப் பேசி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

    மூன்றாவதாக முன்னாள் பத்திரிகையாளரும் இரண்டு முறை துணைப் பிரதமருமான ரவி லாமிச்சானே (49) பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், கூட்டுறவு சேமிப்பு முறைகேடு வழக்கில் ஏப்ரல் மாதம் அவர் கைது செய்யப்பட்டது அவருக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.   

    • பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
    • அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள், கலவரம், சஞ்சய் ராவத்

    அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை மேற்கோள் காட்டி, உத்தவ் பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் மத்திய அரசுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    செவ்வாயன்று, நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த கலவரங்களின் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் சஞ்சய் ராவத் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை நேரடியாக டேக் செய்தார்.

    அந்த பதிவில், "இன்று நேபாளம் இப்படித்தான் இருக்கிறது. இந்த நிலைமை எந்த நாட்டிலும் நிகழலாம். ஜாக்கிரதையாக இருங்கள்! பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம்," என்று எழுதியுள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடை மற்றும் அரசின் ஊழலுக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. பிரதமர் ஒலி பதவி விலக போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை அடியொற்றி நாட்டின் ஜனாதிபதியும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.   

    • அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
    • , முன்னாள் நேபாள பிரதமர் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தனர்.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

    தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இதற்கிடையே நிதியமைச்சர் பிஷ்ணு பிரசாத் பவுடேலை போராட்டக்காரர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்கள் அவரை தெருக்களில் துரத்திச் சென்று தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

    முன்னாள் நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா மற்றும் அவரது மனைவி, தற்போதைய வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா தியூபா ஆகியோரையும் போராட்டக்காரர்கள் குறிவைத்து தாக்கினர். தாக்குதலில், முன்னாள் நேபாள பிரதமர் மனைவியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்த நிகழ்வும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.  

    • நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.
    • இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

    தலைநகர் காத்மாண்டுவில் பாராளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர்.

    இதன் தொடர்ச்சியாக பிரதமர் சர்மா ஒலி மற்றும் அவரை தொடர்ந்து ஜனாதிபதி ராம் சரண் பவ்டெல் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

    இந்நிலையில் நேபாளத்தில் அமைதி திரும்ப பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில், "இன்று அமைச்சர்கள் குழு கூடி நேபாளத்தில் ஏற்பட்டவை குறித்து விரிவாக விவாதித்தது.

    நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதை உடைக்கிறது. பல இளைஞர்களின் உயிரிழப்புகளால் என் இதயம் மிகவும் வருத்தமடைந்துள்ளது.

    நேபாளத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிகவும் முக்கியம். அமைதியையும் ஒழுங்கையும் கைக்கொள்ளுமாறு நேபாளத்தின் அனைத்து சகோதர சகோதரிகளையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.   

    • நேபாளத்தில் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.
    • இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் மன்னராட்சிக்கு ஆதரவான போராட்டங்களின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காக, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம் 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாளம் மன்னராட்சியில் இருந்து மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

    இதனையடுத்து முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷாவின் ஆதரவாளர்கள் மன்னராட்சியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். போலீசார் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்டனர். 110 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் அழைப்பின் பேரில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனையடுத்து காத்மாண்டு நகர மேயர் முன்னாள் மன்னருக்கு நேபாள ரூபாய் 7,93,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

    • கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா உரையாற்றினார்.
    • நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது.

    நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சியை கொண்டுவரவும், இந்து ராஷ்டிரமாக அதை உருவாக்கவும் கோரி போராட்டம் வெடித்துள்ளது.

    இன்று நேபாள் தலைநகர் காதமாண்டுவில் குவிந்த போராட்டக்காரர்களுக்கும் நேபாள பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. மன்னராட்சி மற்றும் இந்து ராஷ்டிரத்துக்கு ஆதரவான ராஷ்ட்ரிய பிரஜாதந்திரக் கட்சி (RPP) மற்றும் பிற குழுக்களும் போராட்டங்களை நடத்தின.

    காதமாண்டுவின் டிங்குனே பகுதியில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் படங்களை ஏந்தியபடி, 'ராஜா வா, நாட்டைக் காப்பாற்று', 'ஊழல் அரசாங்கத்தை ஒழிக்க வா' மற்றும் 'முடியாட்சியை மீண்டும் விரும்புகிறோம்' போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

    பிரிகுதி மாண்டப் (Bhrikuti Mandap) என்ற பகுதியில் மன்னராட்சியை ஆதரிப்போரும், மக்களாட்சியை ஆதரிப்போரும் ஒரே நேரத்தில் இன்று போராட்டம் நடத்தினர்.

    போராட்டக்காரர்கள் பாதுகாப்பு வளையத்தை உடைத்து காவல்துறையினர் மீது கற்களை வீச முயன்றபோது நிலைமை மோசமடைந்தது. பதிலுக்கு, கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ரப்பர் தோட்டாக்களையும் பயன்படுத்தினர்.

    மோதல்களின் போது, போராட்டக்காரர்கள், வீடுகள் மற்றும் பல்வேறு கட்டிடங்களுக்கு தீ வைத்தனர். மோதலுக்கு இடையில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் காயமடைந்தனர்.

    நிலைமை மோசமடைந்துள்ளதால் காத்மாண்டுவின் திங்குனே, சினமங்கல் மற்றும் கோட்டேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாடுகளை மீறியதற்காக பல இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நேபாளத்தில் 2008 ஆம் ஆண்டு பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் 240 ஆண்டுகால மன்னராட்சி முடிவுக்கு வந்தது. 80 சதவீத இந்துக்களை கொண்ட நேபாள் அதிகாரபூர்வமாக அதுவரை மன்னராட்சியின் இந்து ராஷ்டிரமாக இருந்து வந்தது. ஆனால் பாராளுமன்ற அறிவிப்பின் மூலம் மதச்சார்பற்ற, கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக நேபாள் மாறியது.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19 அன்று குடியரசு தினத்தன்று முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, பொதுமக்களிடம் தனக்கு ஆதரவளித்து முடியாட்சியை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.


    தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மீதும் நேபாள மக்களுக்கு அதிருப்தி முன்னாள் மன்னர் மீது பெரிய அளவிலான ஆதரவு பெருகியது. இதன் உச்சமாக தற்போது அவரது ஆதரவு குழுக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

    வரலாற்றில் மன்னராட்சியை ஒழிக்க உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்துள்ளன.ஆனால் மக்களாட்சியை ஒழித்து மன்னராட்சியை கொண்டு வர நேபாளத்தில் போராட்டம் நடப்பது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

    • குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித போர்வை எரிக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் கலவரம் வெடித்தது. குல்தாபாத்தில் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு போலீஸ் காவல் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் அடுத்த சில நாட்களில் முக்கிய பண்டிகைகள் அணிவகுத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக 29-ந் தேதி சத்ரபதி சம்பாஜியின் நினைவுநாள் வருகிறது. இதைத்தொடர்ந்து 30-ந் தேதி மராட்டிய புத்தாண்டான 'குடிபட்வா' விழாவும், 31-ந் தேதி ரம்ஜான் மற்றும் ஜூலேலால் ஜெயந்தி மற்றும் ஏப்ரல் 6-ந் தேதி ராம நவமி போன்ற விழாக்களும் வருகிறது.

    மேற்கண்ட நாட்களில் இந்து அமைப்புகள் ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிராக போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    எனவே சத்ரபதி சம்பாஜிநகரில் அசம்பாவிதத்தை தவிர்க்கவும், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 144 தடை உத்தரவு விதித்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டு உள்ளார்.

    ×