என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizenship Amendment Act"

    • JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    • குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

    மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த (சிஏஏ) சட்டம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தை தூண்டியதாக JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    இந்த மனுக்களை எதிர்த்து டெல்லி காவல்துறை 389 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதில், 2020 டெல்லி கலவரம் ஆட்சிகவிழ்ப்பை நோக்கமாகக் கொண்டது என்றும், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்றவும் முயற்சி நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கலவரம் ஒரு வகுப்புவாத சதி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்த சதித்திட்டத்திற்கு உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மூளையாக செயல்பட்டனர். அவர்கள், உரைகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கூட்டத்தைத் திரட்டினர்.

    கலவரம் நடந்த இடத்தில் அவர்கள் இருவரும் இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஆகிவிடாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட ஐந்து பேரின் ஜாமீன் குறித்து நாளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

    • பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்து தஞ்சம் புகுந்த சிறுபான்மையினருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
    • இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

    குடியுரிமை திருத்தக்க சட்டம் (CAA) மற்றும் புதிதாக செயல்படுத்தப்பட்ட வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின்கீழ் குடியுரிமை விதிமுறைகளை தளர்த்தி மத்திய அரசு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

     அதன்படி, டிசம்பர் 31, 2024 க்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள் மற்றும் பார்சிகள், பாஸ்போர்ட் அல்லது பிற ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மேலும் அவர்கள் இங்கு குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுவார்கள். 

    முன்னதாக CAA-வில், இந்த வரம்பு டிசம்பர் 31, 2014 வரை நிர்ணயிக்கப்பட்டது, ஆனால் இப்போது அது 10 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31, 2024 வரை தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

    மத ரீதியான தாக்குதல்கள் காரணமாக இந்தியாவிற்கு வந்து இதுவரை தங்கள் எதிர்காலம் குறித்து குழப்பத்தில் இருந்த அகதிகளுக்கு இதன் மூலம் நேரடி பலன் கிடைக்கும்.

    • 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
    • இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    டெல்லியில் 2020 ஆம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட ஏழு குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

    கலவரம் தொடர்பாக 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமீன் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே கலவரம் செய்ய சதி செய்துள்ளதாகவும், தேச விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்கப்படும் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

    இதன் பின் பேசிய உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமீன் வழங்க திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

    • சிஏஏ சட்டத்தை நிறைவேற்றுவோம் என 2019 பாராளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
    • 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்
    • மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

    "குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது
    • இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

    அதில், "குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம், இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக ஒன்றிய பாஜக அரசு மாற்றியது. இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிக்கும் சட்டத்தை பாஜக அரசு நிறைவேற்றியது.

    அதனை திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க.

    திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

    இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.

    அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

    • 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர்
    • நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்

    குடியுரிமை திருத்தச்சட்டத்தை மத்திய அரசு இன்று அமல்படுத்தியுள்ளதற்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,

    "10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் லட்சக்கணக்கான குடிமக்கள் ஏன் இந்திய நாட்டின் குடியுரிமையை துறந்தனர் என்பதையும் பாஜக அரசு விளக்க வேண்டும்.

    நாட்டின் குடிமக்கள் வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சூழ்நிலையில், குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் என்ன நடக்க போகிறது?

    பாஜகவின் தேர்தல் நேர திசைதிருப்பும் வேலைகளையெல்லாம் மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்களின் பொய்களுக்கெல்லாம் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
    • அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.

    சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.

    சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.

    இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.

    இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

    • குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
    • பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி குடியுரிமை திருத்த சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

    இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

    இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்துடன் இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

    குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

    இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடுத்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் விதிகள் மதிப்புமிக்க உரிமைகள் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட சில மதங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. அவசர கதியில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
    • அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

    குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அசாம் மாநில எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.

    எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சிகளுக்கு அம்மாநில காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அந்த நோட்டீசில், எதிர்க்கட்சிகள் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால், பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டாலோ, பொதுமக்களுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, எதிர்க்கட்சிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அசாம் மாநிலத்தில் எதிர்க்கட்சிகளாக உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உட்பட பல கட்சி தலைவர்களுக்கு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    அத்தகைய போராட்டங்கள் "சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலத்தில் கூடுதல் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சோனித்பூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் அதிக மக்கள் கூடுவதைத் தடை செய்யும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து காவல் நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கவுகாத்தி உட்பட கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலும் உள்ள முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், பதற்றமான பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கு முன்னதாக, குடியுரிமை திருத்தச்சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று கருதி, காவலர்களின் நீண்ட கால விடுப்புகளை அம்மாநில அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் குடியுரிமை திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அசாம் மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்தனர். பின்பு கொரோனா ஊரடங்கை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.
    • நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறி இருப்பதாவது:-

    "2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, பா.ஜ.க. ஆட்சி இந்தியாவின் மதச் சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின் மையை வளர்த்து, நமது இசுலாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இசுலாமியர் மீதான வெறுப்பைச் சட்டப் பூர்வமாக்க வழிவகுக்கிறது.


    இசுலாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது.
    • 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.

    திருவனந்தபுரம்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல் படுத்தமாட்டோம் என்று கேரளா, தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது. ஆனால் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றி பா.ஜனதாவுக்கு ஆதரவளித்தது.

    கேரளாவை சேர்ந்த 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. பாராளுமன்றத்தில் கேரளாவின் குரல் மவுனமாகிறது.

    பாராளுமன்றத்தில் காங்கிரசின் முக்கிய குரலாக இருக்க வேண்டியவர் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி. ஆனால் அவர் மக்களுக்காக பேசினாரா? மதச்சார்பற்ற இந்தியாவை அழிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.

    வயநாட்டில், வன விலங்குகள் தாக்குதலால் மக்கள் தொடர்ந்து உயிர் இழக்கிறார்கள். வனச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. இந்த விவகாரத்திலும் ராகுல்காந்தியால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×