என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coup"

    • ஜப்பானின் முதல் பெண் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன.

    ஆட்சி மாறும் ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும் என்ற ஒரு சொல்லாடல் உண்டு. அதற்கேற்ப உலகெங்கிலும் பல நாடுகளில் ஆட்சி மாற்றங்களும் ஆட்சிக் கழிவிப்புகளும் இந்தாண்டு அதிகம் நிகழ்ந்தன. 

    அவ்வாறு இந்தாண்டு நிகழ்ந்தவற்றை இங்கு பார்ப்போம்.

    2025-ஆம் ஆண்டின் தொடக்கமே உலக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 20, 2025 அன்று அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்றார்.

    வர்த்தகப் போர் மற்றும் உலகளாவிய இறக்குமதி வரிகள்,கடுமையான குடியேற்றக் கொள்கைகள் என பல பரபரப்புகளை அவர் ஏற்படுத்தினார்.

    ஜெர்மனி: ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியின் ஆளும் கூட்டணி அரசு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 2025-ல் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

    ஓலாப் ஷோல்ஸின் (Olaf Scholz) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி வீழ்த்தப்பட்டது. பிரீட்ரிக் மெர்ஸின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் மகத்தான வெற்றியைப் பெற்றது.

    சிரியா: 2024 டிசம்பரில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் நீடித்து வந்த அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் இந்தாண்டு  தொடக்கத்தில் புதிய இடைக்கால அரசு அமைந்தது.

    சிரியாவின் அதிபராக அகமது அல்-ஷாரா பதவியேற்றார். கடந்த நவம்பரில் அமெரிக்கா சென்று வெள்ளை மாளிகையில் டிரம்ப்பின் ஆசி பெற்று திரும்பினார்.

    கனடா: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதை அடுத்து ஏப்ரலில் கனடாவிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    ஏற்கனவே ஆட்சியில் இருந்த ட்ரூடோவின் லிபரல் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. பின்னர் மார்க் கார்னி கனடாவின் பிரதமரானார்.

    ஆஸ்திரேலியா: இந்த ஆண்டு மே மாதத்தில் ஆஸ்திரேலியாவும் தேர்தலை நடத்தியது. தொழிலாளர் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது, ஆன்டனி அல்பானீஸ் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பெலாரஸ்: 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெலாரஸிலும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அலெக்சாண்டர் லுகாஷென்கோ இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். லுகாஷென்கோ தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சானே தகைச்சி 

    ஜப்பான்: இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் கீழ்சபைக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆளும் LDP கட்சி தோல்வியடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, ஷிகெரு இஷிபா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அதைத் தொடர்ந்து, LDP-யைச் சேர்ந்த சானே தகைச்சி பெரும்பான்மை வாக்குகளுடன் ஜப்பானின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

    நேபாள்: இந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கத்தில்,ஜென்-Z போராட்டங்களைத் தொடர்ந்து நேபாள அரசாங்கம் வீழ்ந்தது.

    சர்மா ஒலியின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிரான இளைஞர்களின் எழுச்சி போராட்டமாக மாறி வன்முறையாக மாறி கடைசியில் ஆட்சியே மாறியது.

    சார்மா ஒலி - சுஷீலா கார்க்கி 

    தற்போது அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி சுஷீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது.

    தாய்லாந்து: தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லை மோதலை அடுத்து, முன்னாள் கம்போடியத் தலைவர் ஹன் சென்னுக்கும் தாய்லாந்து பெண் பிரதமராக இருந்த பேதோங்தான் சினவத்ரா இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் கசித்தது.

    பேதோங்தான் சினவத்ரா

    இந்த சர்ச்சையில் தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தால் 2025 ஆகஸ்ட் 29 அன்று சினவத்ரா பிரதமர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதனையடுத்து, அனுடின் சார்ன்விரகுல், புதிய பிரதமராக 2025 செப்டம்பர் 7 அன்று பதவியேற்றார்.

    பிரான்ஸ்: 2025-ல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பட்ஜெட் வெட்டுகள் தொடர்பான பிரச்னையால் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்தார். 2025 அக்டோபர் நிலவரப்படி கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 6 பிரதமர்கள் பிரான்சில் மாறியுள்ளனர்.

    தான்சானியா: இந்த ஆண்டு, அக்டோபர் 20, 2025 அன்று தான்சானியாவில் தேர்தல்கள் நடைபெற்றன. சாமியா சுலுஹு ஹாசன் தேர்தலில் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக நாட்டின் அதிபரானார்.

    தான்சானியா வன்முறை

    இருப்பினும், அவரது தேர்தலைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இவற்றில் சுமார் 700 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    கேமரூன்: இந்த ஆண்டு அக்டோபரில் கேமரூனில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன, ஏற்கனவே இருந்த அதிபர் பால் பியா மீண்டும் ஆட்சிக்கு வந்தார்.

    இதுதவிர்த்து ஐரோப்பாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் வலதுசாரி கட்சிகள் அதிக எழுச்சி பெற்றுள்ளன. ஜெர்மனி தேர்தலில் வலதுசாரி வெற்றி இதற்கு எடுத்துக்காட்டாகும். 

     ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் 

    இந்த மாதம், தென் அமெரிக்க நாடான சிலியில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரியான கன்சர்வேடிவ் கட்சியின்தான்சானியாகம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜீனெட் ஜாராவை தோற்கடித்து 58 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.  

    • பெனின் ஆட்சியை பிடித்ததாக ராணுவ கிளர்ச்சி குழுவால் அறிவித்தது.
    • நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அதிபர் பத்ரிக் தாலோன் அறிவிப்பு

    பெனின் நாட்டில் அரசு ஊடகத்தை கைப்பற்றி, அதிபர் பத்ரிக் தாலோனை பதவியில் இருந்து நீக்கி ஆட்சியை பிடித்ததாக அறிவித்த ராணுவ கிளர்ச்சி குழுவால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், அந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.

    தொலைக்காட்ச்சி வழியே மக்களிடம் பேசிய பெனின் அதிபர் பத்ரிக் தாலோன், "நமது இராணுவமும் அதன் தலைவர்களும் தேசத்திற்கு விசுவாசமாக இருந்து வரும் கடமை உணர்வை நான் பாராட்ட விரும்புகிறேன். நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.

    • JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    • குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்ற திட்டமிடப்பட்டது.

    மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்த (சிஏஏ) சட்டம் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறியது.

    இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தை தூண்டியதாக JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

    இந்த மனுக்களை எதிர்த்து டெல்லி காவல்துறை 389 பக்க பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

    அதில், 2020 டெல்லி கலவரம் ஆட்சிகவிழ்ப்பை நோக்கமாகக் கொண்டது என்றும், சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியாவின் முஸ்லிம் சமூகத்தின் படுகொலையாக சித்தரித்து இந்த விவகாரத்தை உலகளாவிய பிரச்சினையாக மாற்றவும் முயற்சி நடந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

    கலவரம் ஒரு வகுப்புவாத சதி என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

    இந்த சதித்திட்டத்திற்கு உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் மூளையாக செயல்பட்டனர். அவர்கள், உரைகள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் கூட்டத்தைத் திரட்டினர்.

    கலவரம் நடந்த இடத்தில் அவர்கள் இருவரும் இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஆகிவிடாது என்றும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உட்பட ஐந்து பேரின் ஜாமீன் குறித்து நாளை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.

    • நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
    • நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்

    மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.

    அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

    பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

    நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.

    ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.

    ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.

    இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

    தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.

    அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    ×